Tuesday, November 27, 2018

இரும்புச் சத்து அதிகம் இரத்தத்தில் இருந்தால் ? உடல் துருப்பிடித்து விடும் ,! ஆம் !

*சிவப்பு இரும்பு -2*
-------------------------------------
    உடலில் இருக்கும் இரும்புச் சத்து அளவில் குறைந்து போனால் இரத்த சோகை (அனீமியா) என்கிறோம் ,
       இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவில் குறைந்து இருப்பதால் இரும்புச் சத்து மாத்திரைகள் ,உணவு ஆகியவை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது , ஆனால் இரும்புச் சத்து அதிகம் இரத்தத்தில் இருந்தால் ?

    உடல் துருப்பிடித்து விடும் ,!
       ஆம் !
    ஜோக் இல்லை .அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்து உடலில் சேர்ந்த உடல் நமது மூளை மெக்கானிசம் இதற்கு மேல் வேண்டாம் என கழிவுகளாக வெளியேற்ற ஆரம்பித்து விடும் .
          ஆனால் எது தேவையான ஆணி ,எது தேவை இல்லாத ஆணி என்று தெரியாமல் மொத்தமாக ஊட்டச்சத்து பானம் ,மாத்திரைகள் என்று எடுத்துக் கொள்வதால் இரும்பின் அளவு அதிகரித்து விடுகிறது .பின்னர் தான் தெரிகிறது தேவை இல்லாத ஆணிகள் தான் அதிகமாக நாம் எடுத்திருக்கிறோம் என்று ,
     அதிகமான இரும்புச் சத்து உடல் நிராகரித்து விடுகிறதே?   அதில் என்ன பிரச்சினை என்று தானே கேட்கிறீர்கள்?.
    இருக்கிறது , 
குறிப்பிட்ட
அளவுக்கு மேலே  சேரும் இரும்பு சத்தினை வெளியேற்றும்  வேலையை தொடர்ந்து செய்து நமது உடலின் உள் உறுப்புகள் டயர்டாகி விடுகின்றன ,
பின்னர் வெளியேறும் வேலை தடைபடுகிறது,

அளவுக்கு அதிகமான இரும்புச் சத்து ஹீமோகுரோமடோடிஸ் (hemochromatosis)எனப்படுகிறது ,இது உடலில் மந்த தன்மை ,இரத்த கசிவு,இரத்த நாள அடைப்பு ஆகியவை மட்டுமின்றி சமயத்தில் உயிருக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துமாம், இதை மருத்துவம் சொல்கிறது,
  இதற்கு தீர்வு ?
அளவுக்கு அதிகமாக உள்ள இரும்புச் சத்து தானே பிரச்சினை ? எனவே ஊட்டச்சத்து பானம் ,மாத்திரைகள் தவிர்க்கலாம் .இது முதல் வழி,
     இயற்கையான வழியில் கிடைக்கும் இரும்புச் சத்து உடலுக்கு ஏற்றது, உதாரணமாக முருங்கையில் ஏராளமாக இரும்பு சத்து உள்ளது ,
  வாழ்வியல் ,உணவு நடைமுறைகளை சரிசெய்வது இரண்டாவது வழி,
   ஒவ்வொரு மனிதருக்கும் உடலில் இரும்புச் சத்து தேவைக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது .அதற்கு இடையூறு இல்லாத  உணவு மற்றும் பழக்க வழக்கத்தை பின்பற்றுதல் மூன்றாவது வழி,
   மூளை மெக்கானிசம் தான் இரத்தத்தில் இரும்பு சத்தின் அளவை தீர்மானிக்கிறது, எனவே மூளையின் செயல் பாட்டை ஊக்குவிக்கும் பயிற்சி சிறந்தது 
    சில மூலிகைகளின் தூபம் (புகை)மூளையின் செயல் பாட்டை ஊக்குவிக்கும். அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் இதற்கான பொருள்கள் கிடைக்கும் .🙏

*available*
மூலிகை தூபபொடி

more details 👇

*9865287123*  *8883151449*

https://www.facebook.com/commerce/products/1899854156756343/?notif_id=1522236313193537&notif_t=commerce_product_review&ref=notif

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!


சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத  மருந்து கடுக்காய்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண்,  குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,  கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய  நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய  அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடலில் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே  இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய  பொக்கிஷமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் திராட்சை..!

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் திராட்சை..!





திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. 

 

திராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. 

 

சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன்  சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

 

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. 

 

திராட்சையை அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு  வெளியாகும். 

 

சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும்  உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

 

மார்பகப் புற்று நோய் தாக்கப்பட்ட பெண்களுக்கு, அருமருந்தாக உள்ளது திராட்சைப் பழம்! பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  குறைகிறது.

 

திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.


*********************

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீக்கும் ஆடாதோடை...!

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீக்கும் ஆடாதோடை...!





ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.

ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள்  மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம்  சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

 

எந்த வகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.  

 

மனித  உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை  வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல்பட்டால் தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த  நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக  வைத்திருக்க உதவுகிறது.

 

ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும்.  

 

இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா  தோடைக்கு உண்டு.

 

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.  

 

நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

உடல் எடையைக் குறைக்க உதவும் கருணைக்கிழங்கு

உடல் எடையைக் குறைக்க உதவும் கருணைக்கிழங்கு







கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில்  கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கருணைக் கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்தவதில்லை. கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம்  சிறப்பாக செயல்படவும் மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

 

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து உடல் உறுப்புகளுக்கு பலம்  தருவதாகவும் இருக்கிறது.

 

கருணைக்கிழங்கு சிறிது காரல் தன்மையுள்ளதால் கிழங்கை வேக வைக்கும் போது சிறிது புளியிட்டு வேக வைத்தால் காரல் தன்மை குறையும். கருணைக்கிழங்கை சிறிது நாள் வைத்திருந்து சமைக்கும் போது காரல் தன்மை குறையும்.

 

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும். கருணைக்கிழங்கு ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. உடலுக்கு உறுதியளிக்கக் கூடியது, பசியை  உண்டாக்கும் இயல்புடையது. 

 

பெண்களை வாட்டி எடுக்கும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக் கிழங்கை சாப்பிட்டால் உடல்வலி காணாமல்  போய்விடும்.

***********************

இந்தியா இனி மெல்லச் சாகும்"*

⚖📝🔨😢

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"*

ஆனோடு ஆண் இணைவதும்
பெண்ணோடு பெண் புனைவதும்
தனிப்பட்ட விருப்பமென்ற
தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு,

நாளை
உங்கள் மகன்
வந்து நிற்பான்..
எனக்கு
உங்கள் மருமகளை பிடிக்கவில்லை
நல்ல மருமகனை
பாருங்கள் என்று...

நாளை மறுநாள்
உங்கள்
மகள் வந்து நிற்பாள்..
எனக்கு உங்கள் மருமகனை
பிடிக்கவில்லை
நல்ல மருமகளை
பாருங்கள் என்று...

அதற்கு
அடுத்த நாள்..
இவர்களுக்காக
நீங்கள்
எங்கு போய்
நிற்பீர்கள்?...

தலைமை நீதிபதிகளாக
யோசித்தீர்களே!
நல்ல ஒரு தகப்பனாக
யோசித்தீர்களா?...

உங்கள் முன்
வந்து நின்று
இறைவன் வாதிட மாட்டாரென்று
எழுதி விட்டீர்கள்
தீர்ப்பொன்று
இதுதான்
இனி
நியதியென்று...

இதுதான்
"என் நியதி" என்று
ஏதேனில்
ஆண்டவர்
சொல்லியிருந்தால்?.,

ஆதாமிற்கு
ஓர் ஆதாமையும்
ஏவாளுக்கு
ஓர் ஏவாளையும்
எடுத்து அன்று
ஆண்டவர்
கொடுத்திருந்தால்?..,

திருந்தாத
இந்த கூட்டமேது?
தீர்ப்பு எழுதிய
நீங்களேது?...

சோதோம் கொமோரா என்று
சொர்க்கம் போல்
இருந்த தேசம்
ஆகாயத்து
அக்கினியால்
அழிந்த கதை
தெரியுமா?...

பெண்ணோடு
பெண் கூடி
ஆணோடு
ஆண் கூடி
பெரும் பாவம்
செய்ததினால்
அழிந்ததையா
அத்தேசம்...

ஐயோ
என் இந்தியாவே..!
இனியும் நீ
தாங்குவாயோ?...
ஹார்மோனின் குறைபாடு
கற்பனையின் மாறுபாடு
இவைகளை
கலைத்தெறியும்
கல்வி முறை
காணவில்லையோ
இந்திய தேசத்திலே...

இறையின் விதியை
மீறி விட்டாய்!
இயற்கையதை
மாற்றி விட்டாய்!.,
இனி வரும் அழிவிற்கு
பெரும் தீர்ப்பு
நீ எழுதி விட்டாய்!...

பண்பாடு
கலாச்சாரம்
பறந்து இனி
விரைந்தோடும்..
வீட்டிலொரு
பெண்ணிருந்தாள்..
இனி பெண் தேடும்
நிலையாகும்...

அடுக்குமோ
மா பாதகம்!!
இனி இந்த தேசம்
அழியாமல்
என்ன செய்யும்??!...

எதிர்த்து வாதிட
யாருமில்லை
என்றுதானே
இப்படியொரு
தீர்ப்பினை
எழுதிவிட்டீர்கள்
என் இந்தியாவிற்கு...

நம்
தேசத்து மலர்களில்
இனி
மகரந்தச் சேர்க்கையில்லை.,

இத்தேசத்தின் மாண்பைச் சொல்ல
இனி எந்த
வார்த்தையுமில்லை..

தீர்ப்பை
எழுதிவிட்டீர்கள்.,

இனி
கொஞ்சங்காலம் தான்..

உங்கள்
மீசைகளை
பிடித்திழுக்க
பேரன்கள்
பிறப்பதில்லை..

பட்டுப் பாவாடை
சட்டைகளோடு
பேத்திகள்
நடப்பதில்லை...

இனி
எந்திரத்தில்
பொம்மை வாங்கி
எங்கள்
சந்ததியென்று
சொல்லிக் கொள்ளுங்கள்...

இறையையும்
இறையன்பையும்
மறந்த தேசம்.,

நல்
இயற்கையை
துறந்த தேசம்..

பாவ
இச்சையில்
மகிழும் தேசம்..

இந்தியா
இனி
மெல்லச் சாகும்..

இந்திய
தேசத்திற்காய்
கண்ணீருடன்..

உங்களில் ஒருவன்..

சளி FEVER head ache குறைய*

*சளி குறைய*

தாமரைப்பூ, ரோஜாமொட்டு, கோரைக்கிழங்கு இவைகளை சம அளவு எடை எடுத்து 1 லிட்டர் தண்ணீரை அரை லிட்டராக வற்றக் காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தை இவற்றோடு கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் கலந்து குடித்தால் சளி, இருமல் குறையும்.

*தலைவலி குறைய*

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

*பித்தக் காய்ச்சல் குறைய*

திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

*சுபம்*

எளிய இயற்கை 55 வைத்தியம் ::-

எளிய இயற்கை வைத்தியம் ::-

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா?
ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும

்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...