Thursday, November 8, 2018

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்...!⛔*

*🌐உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்...!⛔*

*● பூண்டு ●*

5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில்  கெட்ட கொழுப்பு  கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள்  பழத்தை குறிப்பிடலாம்.


*● கொள்ளு ●*

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து,  நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

*● கறிவேப்பிலை ●*

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

*● மிளகு ●*

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும்.  உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

*● சீரகம் ●*

ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக்  கொழுப்பு தங்காது.

*● இஞ்சி ●*

ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

*● சோற்றுக் கற்றாழை ●*

சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு  எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்🔵🔴

      ☘☘☘

கலாநிதியிடம் ஸ்டாலின் நடத்திய விசாரணை!*

*டிஜிட்டல் திண்ணை: கலாநிதியிடம் ஸ்டாலின் நடத்திய விசாரணை!*

மாறன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கலைஞர் எடுத்த திடீர் முடிவில்தான் 2007ஆம் ஆண்டு சன் டிவிக்குப் போட்டியாகக் கலைஞர் டிவி தோன்றியது. இப்போது அதே கலைஞர் டிவியின் நிர்வாகம் முற்றிலும் சன் டிவியின் கைக்குப் போகிறதா என்பதுதான் இன்று தமிழ் தொலைக்காட்சி உயர் வட்டாரங்களில் விவாதிக்கப்படும் தலைப்புச் செய்தி. இதுபற்றி தொலைக்காட்சி வட்டாரங்களில் விசாரிக்கும்போதுதான் தொலைக்காட்சி நிர்வாகம் பற்றி மட்டுமல்ல வேறு பல ஆச்சரியமான உண்மைகளும் வெளிவருகின்றன.

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் விஜய்யை தளபதி என்ற அடைமொழி கொடுத்தே அழைத்திருந்தனர். இது திமுக தரப்பை டென்ஷனாக்கியது. மேலும், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் கலைஞருக்கு நடந்த புகழ் வணக்க விழாவில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய வே.மதிமாறன், ‘தமிழ்நாட்டுக்குத் தளபதி என்றால் அது ஸ்டாலின் மட்டுமே...வேறு யாரும் இல்லை’ என்று பேசினார். இந்தப் பேச்சு அடங்கிய வீடியோக்கள் யு ட்யூப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதற்குப் பின்னாலும் சன் தரப்பு இருப்பதாகத் திமுகவினரே குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கும், கலாநிதி மாறனுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு உரசலும் சேர்ந்து, சர்கார் மூலம் வெடித்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் கலாநிதி மாறனை அழைத்தார் ஸ்டாலின். கலைஞர் டிவிக்குப் புதிய இயந்திரங்கள் வாங்கவும், பொலிவுபடுத்தவும் 100 கோடி ரூபாய் தேவை என்றும், அதை கலாநிதி மாறனால் முதலீடு செய்ய முடியுமா என்றும் கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு மாறன், ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. சிபிஐ விசாரணை வேறு இருக்கிறது. அதனால் யோசித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். சில நாட்கள் கழித்து, ‘கலைஞர் டிவியை நிர்வாகம் செய்ய சன் டிவியில் பணியாற்றும் அனுபவம் மிக்க பத்துப் பேரை அனுப்புகிறேன். அவர்கள் கலைஞர் டிவியை செம்மையாக நடத்துவார்கள். என்னிடம் இருக்கக்கூடிய நவீன இயந்திரங்களையும் தருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் கலாநிதி. இதற்கு ஸ்டாலின் முதல்கட்டமாய் சம்மதம் சொல்லி வைக்க, இத்தகவல் கலைஞர் டிவி சீனியர்களுக்குத் தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கலைஞர் டிவிக்கு சிஇஓவாக மீண்டும் சரத்குமாரை நியமிக்க வேண்டும் என்பதே ஸ்டாலின் விருப்பம். ஆனால் இந்த மூவை அறிந்துகொண்ட கலாநிதி மாறன், ‘சரத் வேண்டாம். நாங்கள் நியமிக்கும் ஆட்களே போதும்., சரத் ஏற்கனவே சன் டிவியில் நிதியைச் சரியாகக் கையாளவில்லை. கலைஞர் டிவியிலும் தாத்தாவுக்கு (கலைஞருக்கு) தெரியாமல் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார். அதனால் சரத் வேண்டவே வேண்டாம்’ என்று மறுத்திருக்கிறார். ஆனால் சரத் மீது ஸ்டாலினுக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததால் இந்த விஷயம் பற்றி மேலும் சிலரிடமும் விசாரித்திருக்கிறார்.

இதற்கிடையே தன்னைப் பற்றி சிலரிடம் ஸ்டாலின் சந்தேகப்பட்டு விசாரிப்பதை அறிந்த சரத்குமார் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக சபரீசன் மூலம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.

‘என் மேல அவங்க முறைகேடு புகார் உங்களிடம் சொல்லியிருக்கிறதா கேள்விப்பட்டேன். வேணும்னா அப்போது சன் டிவியில் இருந்த ஆடிட்டர்தானே இப்ப கலைஞர் டிவிக்கும் இருக்கிறார். அவரிடம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார் சரத். ஆடிட்டரும் சரத் பற்றி நல்ல விதமாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுடனான சந்திப்பில் இன்னொரு விஷயத்தையும் அவரிடம் கொட்டியிருக்கிறார் சரத்.

‘கலைஞர் டிவியோட நிர்வாகத்தை நீங்க சன் டிவிக்கிட்ட கொடுக்குறதுங்குறது உங்க தலைவர் பதவியையே அவங்ககிட்ட கொடுக்கறது மாதிரிதான். பல வருஷம் முன்னாடி என்கிட்ட கலாநிதி மாறன் சாதாரணமா பேசிக்கிட்டிருந்தபோது, ‘எப்படியாவது நம்ம தயாநிதியை திமுகவுக்குத் தலைவராக்கி சிஎம் ஆக்கணும்குறதுதான் என்னோட லட்சியம். திமுக மாவட்டச் செயலாளர் ஒவ்வொருத்தரும் நம்மளோட கேபிள் பிசினஸால மாசம் இருபது லட்சத்துக்கு மேல சம்பாதிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் சில விஷயங்களை செஞ்சுகொடுத்தா அவங்க நம்ம பக்கம் வந்திருவாங்கன்னு கலாநிதியே என்கிட்ட சொன்னாரு. அப்படிப்பட்டவங்க கிட்டயா கலைஞர் டிவி நிர்வாகத்தைக் கொடுக்கப் போறீங்க?’ என்று சரத் நேரடியாகவே ஸ்டாலினிடம் சொல்ல, ஸ்டாலின் அதிர்ந்துவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் சர்கார், தளபதி என்று ஸ்டாலினை விஜய் மூலம் வம்பிழுக்கும் காட்சிகள் அரங்கேற ஸ்டாலின் மீண்டும் கலாநிதி மாறனை அழைத்தார்” என்று வாட்ஸ் அப் மெசேஜை செண்ட் செய்தது.

மிகவும் நீண்ட மெசேஜ் என்பதால் மீதியை அடுத்த மெசேஜாக டைப் செய்தது வாட்ஸ் அப்.

“சர்கார் விழாவுக்குப் பின் கலாநிதியைத் தன் வீட்டுக்கு அழைத்தார் ஸ்டாலின். அதை ஏற்று கலாநிதி அங்கே சென்றபோது வீட்டில் ஸ்டாலின், உதயநிதி, மருமகன் சபரீசன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

கலாநிதி மாறன் வந்ததும் உதயநிதிதான் இந்த டாப்பிக்கை ஆரம்பித்திருக்கிறார். ‘சர்கார் ஃபங்க்‌ஷன் பார்த்தேன். தளபதின்னா அது அப்பாதானே...? நீங்க புதுசா இப்ப தளபதின்னு விஜய்யை ப்ரமோட் பண்றீங்களே? அப்பாவுக்கு எதிராவா?’ என்று கேட்டிருக்கிறார் உதயநிதி. அதற்கு கலாநிதி, ‘ச்சே... ச்சே... அப்டியெல்லாம் இல்லப்பா... அன்னிக்கு நடந்த ஃபங்ஷன்ல ஃபிசிகலாதான் நான் இருந்தேன். அன்னிக்கு ஃபுல்லா ஏதோ ஒரு ஞாபகத்துலயே இருந்துட்டேன். அங்க என்ன நடந்ததுன்னே நான் கவனிக்கலை’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உதயநிதி விடவில்லை. ’கலைக்கு நிதியை வாரி வாரி கொடுக்கும் வள்ளல்னு விஜய் உங்களைச் சொன்னப்ப சிரிச்சீங்களே?’ என்று கேட்க கலாநிதி மாறன் மீண்டும் அதையே சொல்லியிருக்கிறார்.

அப்போது சபரீசன் ஒரு மெயிலின் ப்ரிண்ட் அவுட் பேப்பரை எடுத்து கலாநிதி மாறனிடம் காட்டினார். ‘அந்த விழாவுல விஜய் என்ன பேசணும்னு நாலு நாள் முன்னாடியே ஒரு டிராஃப்ட் எடுத்து உங்களுக்கு அனுப்பிருக்காங்க. நீங்க ஓகே சொன்னபிறகுதான் விஜய்யே பேசியிருக்காரு’ என்று சொல்ல கலாநிதி மாறனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.

அதன் பிறகு ஸ்டாலின், ‘அப்பா திருவாரூர்லேர்ந்து வந்து கஷ்டப்பட்டாரு, வளர்ந்தாரு. என்னையும் ஆளாக்கினாரு. ஒரே குடும்பம்னு உங்களையும் ஆளாக்கினாரு. அப்பா உங்களை நிறைய அனுசரிச்சாரு. ஆனா, நான் அப்படி இல்லைங்குறத புரிஞ்சுக்கங்க. உங்களை நம்பி நான் திமுக தலைவராகல. தயாநிதி மாறனுக்கு சீட் கொடுக்கறதும்கூட இப்ப என் கையில இருக்கு. இனிமே ஜாக்கிரதையா நடந்துக்கங்க’ என்று கலாநிதி மாறனிடம் மிகக் கோபமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்” என்று மெசேஜை செண்ட் செய்து விட்டு லாக் அவுட் ஆனது வாட்ஸ் அப்.

கிறிஸ்தவம்* *ஆதாரத்துடன்*

*கிறிஸ்தவம்* *ஆதாரத்துடன்*

*ஐயப்பன்* --ஆணுக்கும் (சிவன்), பெண் வேடமிட்ட ஆணுக்கும் (விஷ்ணு) பிறந்தவன் தானே என என்னிடம் கேட்டதற்கு நான் கொடுத்த விளக்கம்.

ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சர்ச்க்கு வந்தால் தீட்டு என்று பைபிள் சொல்கிறது. .. லேவியராகமம் 21: 8-16

யாக்கோபிடம் கர்த்தர் சண்டை போட்டுக் கொண்டு தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது பற்றி அறிய ... ஆதியாகமம் 3 2: 25 முதல் 31 வரை .

எனது பகைவர்கள் எங்கே? தனக்கு அரசனாக விரும்பாத மக்கள் எங்கே? என்பகைவர்களை அழைத்து வந்து அவர்களை கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன் (இயேசு) ... லூக்கா 19:27

உடலுறவு கொண்ட பிறகு தனது மனைவி கன்னி தானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. .. .உபாகமம் 22:13-21

மருமகளுடன் மாமனார் உறவு கொள்ளும் அசிங் கியமான செய்தி பைபிளில் வருகிறது .இது பாவம் இல்லயா? கிறிஸ்தவ வீட்டில் இப்படி தான் நடக்குமா ? ஆதியாகமம் 38:14- 19

தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் பைபிள் சொல்கிறது. ... முதலாம் கொரிந்தியர் 7:36
அண்ணியுடன் உறவு கொள்ளும் கதைகளும் கர்த்தர் (குட்டி சாத்தான் இயேசு) செய்த கொலைகளும் ஆதாரம் பைபிள் ஆதியாகமம் 36 : 6 - 10

நீ உன் அண்ணன் பொண்டாட்டியை அனுபவித்து குழந்தை பெத்துக்கோ னு ஏசு சொல்கிறார் .. ஆதியாகமம் 38:8-10
வாரிசுகளை அதிகமாக்க அக்காளும் தங்கச்சியும் அப்பாவுடன் உறவு கொள்ளும் கேவலம் பைபிள் சொல்கிறது இது கேவலம், அசிங்கம் இல்லையா? ... ஆதியாகமம் 19:31 - 37

அண்ணனும் தங்கையும் உடலுறவு செய்யும் கேவலங்கள் பைபிளில் .. இரண்டாம் சாமுவேல் 13:1-15

கல்லை கும்பிட்டால் பாவம் பாவம் என்று அலறும் கிறிஸ்தவர்களே தான் பெற்ற மகளையே அவளது அப்பன் திருமணம் செய்தால் பாவம் இல்லை என்று பைபிள் வசனம். 1 கோரிந்தியர் 7:36

கிறிஸ்தவர்களே உங்களுக்கு பகிரங்க சவால் .உங்கள் அம்மா அப்பா, அக்கா, தங்கை மகள், மனைவி முன்னால் புனித பைபிளில் உள்ள உன்னத பாட்டு 1-8 அதிகாரம் சத்தம் போட்டு வாசிக்க முடியுமா? இதில் தில் இருக்கா?

ஆண்களின் ஆடையை பெண்கள் அணிந்தால் ஏசுவுக்கு அருவருப்பானவர் பாவம் என்று பைபிள் சொல்கிறது.
ஜீன்ஸ் பேண்ட், சர்ட் கிறிஸ்தவ பெண்கள் அணிவதே இல்லையா? உபாகமம் 22 அதிகாரம் 5வது வசனம்

Jesus என்றால் தமிழல் ஏசு என்று கூறும் மூடர்களே ஏசு என்றால் தூய தமிழ் அகராதி படி "திட்டு " "திட்டுதல்" ஏசுதல் என்று அர்த்தம்
ஏசு என்றால் தமிழர் / இந்திய காலாச்சாரத்தை அழிக்க வந்த குட்டிச் சாத்தான்.

கடவுளை கொன்று புதைத்து சமாதி கட்டி வணங்குபவன் இஸ்லாமியன்
கடவுளை பிறர் கொல்லும் போது வேடிக்கை பார்த்து ரசித்து விட்டு மூன்று நாள்கழித்து வணங்குபவன் கிறிஸ்தவன்.
கடவுளை கோவில் கட்டி பாதுகாத்து பல கோடி அபரணங்களை தந்து அழகூட்டி வணங்குபவன் இந்து
இவர்களில் யார் உண்மையான மனிதன்.
கேவலமான இந்த மதம் தேவையா? சிந்தியுங்கள் சொந்தங்களே இந்துவாக இந்தியனாக இருங்கள்.

சந்தனத்தின் மருத்துவக்குணங்கள்*

*சந்தனத்தின் மருத்துவக்குணங்கள்*

500 மில்லி நீரில் ஒருத்தேக்கரண்டி சுத்தமான சந்தனப்பொடியை போட்டு கொதிக்க வைத்து  250 மில்லி அளவாக சுருக்கி வடிகட்டி …

மூன்று வேளையும் உணவிற்கு அரைமணி நேரம் முன்பு அல்லது உணவிற்கு பின் 75 மில்லி அளவாக குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், ஆண்மைக்குறைவு,உடல் வெட்டைச்சூடு,இரத்த மூலம், வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தூக்கமின்மை,பித்தகாய்ச்சல், இரத்த சுத்தமின்மை போன்ற நோய்கள் குணமாகும்.

படர்தாமரை,தேமல்,உடல் எரிச்சல் போன்ற நோய்கள் இருப்பவர்கள் சந்தனத்தூளை எலுமிச்சை சாற்றில் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் வெயிலில் நின்று பின் குளித்து வந்தால் அதிகப்பட்சம் ஒரு மாதத்தில் குணமாகி விடும்.

கண்கட்டி,உடலில் சூடுக்கட்டி,வேர்க்குரு, முகப்பரு போன்றவை  இருப்பவர்கள்  எலுமிச்சைச்சாறு அல்லது நீரில் குழைத்து இரவு தூங்கும் போது அல்லது காலையில் குளிப்பதற்கு அரை மணி முன்பு போட்டு வந்தால் நான்கைந்து நாளில் கட்டி கரைந்து விடும்.

500 மில்லி செக்குத் தேங்காய் எண்ணெயில் 50 கிராம் சுத்தமான சந்தனத்தூளை கலந்து வைத்துக் கொண்டு தினமும் குளிப்பதற்கு அரைமணி முன்பு தலையிலும் முகத்திலும் தேய்த்து குளித்துவர உடல்சூடு,வியர்வை நாற்றம்  போகும், முகப்பொலிவு அதிகமாகும்.

நல்ல சந்தனத்துளை குளியல் பொடியாக சிறுவர்களும் பெரியவர்களும் உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் வாசனை,அழகு அதிகரிக்கும்.

சந்தனத்தூளை தொடர்ந்து முகப்பவுடராக பூசிவர முகத்தில் மினுமினுப்பும் ஒளியும் அதிகரித்து காணப்படும்.!

சந்தனத்தூளை பல்பொடியாக பயன்படுத்தி வந்தால் பல் உறுதியாகும் வாய்ப்புண்,நாக்குப்புண்,உதடு வெடிப்பு,ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.!

நாட்டு மருந்துக்கடைகள்,காதி கிராப்ட்,சந்தனப்பொருட்கள் செய்யும்  இடங்களில் சந்தனத்தை கட்டையாகவோ சீவலாகவோ விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.!

சுத்தமான சந்தனத்தூள் தேவைக்கு அழைக்கவும்
AUM HERBALS
9629131089,9629368389
www.aumherbals.com

கொழுப்பைக்* *குறைக்கும்* , *புற்றுநோய்* *தடுக்கும்* *சிவப்பு* *அவல்* !

✍ *இயற்கை* *வாழ்வியல்* *முறை* 🌾🌾🌾🥜🥜🥜

*கொழுப்பைக்* *குறைக்கும்* , *புற்றுநோய்* *தடுக்கும்* *சிவப்பு* *அவல்* ! 

அவல்... தமிழர்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான இடம்பெற்றிருக்கும் ஒன்று. ‘ஹெல்தியான காலை மற்றும் மாலை உணவு’ என்று இதைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். இது, அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இரண்டில் எது பெஸ்ட், அவல் தரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன, எப்படிச் சாப்பிடலாம் என்பதையெல்லாம் விளக்குகிறார் உணவியலாளர் கற்பகம்.
🍏🍏🍏

வெள்ளை அவல்

இது, தூயமல்லி போன்ற வெள்ளை நிற அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
🍎🍎🍎
பலன்கள்...

* எளிதில் செரிமானமாகும்.

* உடனடி எனர்ஜி தரும்.

* சமைப்பதற்கு எளிதானது.

* உடல்சூட்டைத் தணிக்கும்.

* செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.
🍇🍇🍇
* உடல் எடையைக் குறைக்கும்.

* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
🍐🍐🍐
சிவப்பு அவல்

இது, பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவதுதான்.
🍋🍋🍋
பலன்கள்...

* நீண்ட நேரத்துக்குப் பசிக்காது.

* உடலை உறுதியாக்கும்.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

* குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* பசியைப் போக்கும்.

* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

* உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும்.
🍒🍒🍒
* ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.

* மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்கும்.

* புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும்.

*🥒🥒🥒 வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

* பட்டை தீட்டப்படாத அரிசியில் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. 

நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள், நெல்லை வாங்கி, 2 மணி நேரம் ஊறவைத்து, இடித்து அவலாக்கிப் பயன்படுத்தலாம். சத்துகள் சேதாரமில்லாமல் அப்படியே கிடைக்கும். இன்று சிறுதானியங்களின் அவல்கூட கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். நெல் அவலை விட தானிய அவலில் சத்துகள் அதிகம். சுவையும் வித்தியாசமாக இருக்கும். 
🍉🍉🍉
சிவப்பு அவல்

எப்படிச் சாப்பிடலாம்?

* பச்சையாக அப்படியே சாப்பிடலாம்.

* வேர்க்கடலை, காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்து உண்ணலாம்.

* வெந்நீர், பால், ஜூஸ், தயிரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

* நெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம்.

* பாயசம், புட்டு, கஞ்சி, உப்புமா... என சமைத்துச் சாப்பிடலாம்.

*  நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து குழந்தைகளுக்குத் தரலாம்.
இந்த உணவு ஒவ்வொரு உடல் அமைப்புக்கு ஏற்றதுபோல் மாறுபடும் மருத்துவர் ஆலோசனை பெற்று பின்பற்றவும்

🍓🍓🍓🍓🍓🍓
🍋🍋🍋🍋🍋
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்*
🌻🌻🌻🌻🌻🌻

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல் # 1

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல் #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...