Tuesday, March 28, 2017

மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!! 

சிறிய மஞ்சள் நிறப் பூக்களை இது பெற்றிருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பழங்கள் பவழ நிறமுடையதாகவும் இருக்கும். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்க கூடிய இச்சீந்தில் கொடி வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலினுடைய இலை, தண்டு, வேர் அத்துனையும் மருந்தாகிப் பயன் தரக்கூடியது. சீந்தில் உடலுக்கு மிக வலிவைத் தரக்கூடியது. 

இது தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. சீந்தில் கொடி தீநீர் முறைசுரம் (விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் சுரம்), சோர்வு, செரியாமை, வளிநோய்கள் என்னும் வாத மிகுதியால் ஏற்பட்ட நோய்கள், சிரந்திப் புண்கள் ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. வலியைப் போக்க கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியது. கடுப்பு தரும் விட்டு விட்டு வருகின்ற வலியை விரட்டக் கூடியது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. 

கல்லீரலைப் பாதுகாக்கக் கூடியது. அல்லது பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. உள்ளலை ஓட்டக் கூடியது. வெப்பத்தை தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறு களை வேரறுக்கக் கூடியது. பலம் தரவல்லது. சிறுநீரப் பெருக்கியாகச் செயல்படுவது, சீந்தில் கொடியின் சாறு கடுமையான காய்ச்சலின் போது காயச்சலைத் தணிக்கப் பயன்படுகிறது. சீந்தில் கொடி தீ நீர்வாத சுரத்தையும் பித்த சுரத்தையும் தணிக்கக் கூடியது. 

இதன் மாவு (சீந்தில் கொடியினின்று தயாரிக்கப்படும் சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேறும் அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. மேலும் வயிற்றுப் போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்த வல்லது.  சீந்தில் கொடியின் தண்டுப் பகுதியில் ஆல்கலாய்ட்ஸ் என்னும் வேதிப்பொருட்களான பெர்பெரின், கசப்புச் சுவைகள் எனப்படும் கொலும்பின், சேஸ்மான்தின், பால்மரின் மற்றும் டினோஸ்போரான், டினோஸ்போரிக் ஆசிட் மற்றும் டினோஸ்போரால் ஆகியன அடங்கியுள்ளன. 

நவீன வலி நீக்கும் மருந்தான சோடியம் சாலிசிலேட் என்னும் மருந்தில் ஐந்தில் ஒரு பங்கு வீரியத்தை சீந்தில் பெற்றிருக்கிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக் கின்றன. சீந்தில் கொடியினின்று எடுக்கப்படும் சத்துவம் இன்று நவீன மருத்துவமும் கண்டு அஞ்சுகின்ற ஈகாலி என்னும் எஸ்செரிச்சியா சாலி என்று சொல்லப் பெறுகின்ற நுண்கிருமிகளையும் கொன்று வெளியேற்றும் வல்லமையுள்ளது. இந்த ஈகாலி என்னும் கிருமி இரையறைப் பகுதியில் புண்களை ஏற்படுத்துவதோடு வயிற்றில் தாங்கவொண்ணாத வலியையும், அடிக்கடி வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தி உடலை மெலியச் செய்வதோடு பெருந்துன்பத்துக்கு ஆட்படுத்துகிறது. 

இது மட்டுமின்றி காசநோய் என்று சொல்லப் பெறும் என்புறுக்கி நோய்க்குக் காரணமாக அமை கின்ற மைக்கோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ் என்னும் கிருமிகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது என்பதும் நவீன ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீந்தில் சத்துவத்தை உள்மருந்தாக கொடுத்து சோதித்துப் பார்த்ததில் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரையின் அளவும் சிறுநீரில் கலந்து வெளியாகும் சர்க்கரையின் அளவும், ரத்தத்தில் பரவியுள்ள கொழுப்புச்சத்தின் அளவும் கணிசமான அளவுக்கு குறைந்து வந்ததும் தெரிகின்றது.

சீந்தில் மருந்தாவது எப்படி? 

சீந்தில் கொடியினின்று இலைகளைப் பிரித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரண்டு வேளையும் நீரோடு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சீந்தில் தண்டுகளைக் காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியோடு நான்கு டம்ளர் நீர்விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சுண்டும்படி எடுத்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வயிற்று பொருமல், செரிமானமின்மை, காய்ச்சல் ஆகிய துன்பங்கள் விலகும். 

நல்ல குணம் கிடைக்கின்ற வரையில் தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைத்து மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பிலியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருக்க நீர் தெளிந்துவரும் அந்த தெளிந்த நீரை இருத்தி விட்டு வேறு புதிதாக நீர் சேர்த்து கலக்கி வெயிலில் இட்டு சுண்ட வைக்க வேண்டும். இப்படிப் பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். 

இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இதை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடுஞ்சுரத்துக்குப் பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம் அல்லது நம்மை துன்புறுத்தும் வலி, காமாலை, இருமல், மூர்ச்சை, வாந்தி, கோழைக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு தருவதாக அமையும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி இளஞ்சுட்டோடு புண்களின் மேல் போட்டு வர வீக்கம் கரைந்து வலியும் குறைவதோடு புண்களும் ஆறி விடும். 

சீந்தில் பற்பாடகம், சந்தனம், விலமிச்சு, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றைக் சூரணமாக சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தீநீராக்கி கொடுக்க பித்தத்தால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும். சீந்தில் கொடியை நசுக்கி 35 கிராம் அளவு எடுத்துக் குளிர்ந்த நீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு ஊறிய பின் வடிகட்டி சிறிது இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப் பொடி சேர்த்து 50 மி.லி. வீதம் தினம் இரண்டு அல்லது 3 முறைகள் குடித்து வர காய்ச்சல், செரியாமை, மஞ்சள் காமாலை, ஈரல் வீக்கம், ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு ஆகியன கட்டுக்குள் அடங்கி வரும். 

சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்து அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர், ரோஜாப்பூ ஆகியன வகைக்கு 10 கிராம் அளவு சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஓரிரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி வைத்துக் கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினம் காலை வேளையில் கொடுத்து வர முறைக் காய்ச்சல், வயிற்று உப்பிசம், நீண்ட நாட்பட்ட செரியாமை, வயிற்றைப் பாதித்து துன்பம் செய்கின்ற பல்வேறு நோய்களும் விலகிப் போகும். 

சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினம் இருவேளை 50 மி.லி. குடித்து வர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். சீந்தில் எந்த சிரமமுன்றி வளரக்கூடியது. வீடுகளில் கூட பயிரிட்டு படரவிட்டு பயன்படுத்த இயலும்.
*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா? 

எப்படி தெரிந்து கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது 
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது. 
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, 

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் 
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது. 

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்" 
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது. 

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140, 
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, 
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.

இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்". 

Our Body mechanism is beyond சயின்ஸ். 

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்", 
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் 
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின் 
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".

அப்படியானால், 
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது, 
எப்படி தெரிந்துக் கொள்வது? 
வரும் முன் காப்பது எப்படி? 
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

படித்தில் உணர்ந்தது 

சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!
தொப்பை வருவதற்கு முக்கிய காரணம்?

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பு: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

3. தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

4. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

5. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

6. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

7. சிட்ரஸ் பழங்கள்: பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

8. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

9. கிரீன் டீ: அனைவருக்குமே கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த கிரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்து வாருங்கள்.

10. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

11. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

12. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

13. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் இதற்கான பலன் உடனே தெரியும்.

14. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

15. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும்.

"நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."
உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...

"உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."
எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...
இயற்கை வேளாண்மையில் விளைந்த நல்ல உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...

சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்* 
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...

: 🌾🌾🌾
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
.

ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

💎💎💎💎💎💎💎
🌺🌿தகவல்:  🌿வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியயனுக்கு  கொடு என்பார் 🌿 

🌿ஒரு வாரத்துக்கு இரு முறை (எண்ணெய் தேய்த்துக் குளித்தல்)

 1) ஒரு நாளைக்கு இரு முறை (மலம் கழித்தல் )

3)ஒரு மாதத்துக்கு  இரு முறை (உடலுறவு வைத்துக் கொள்ளல்)

4)ஒரு வருடத்துக்கு இரு முறை (பேதிக்கு மருந்து சாப்பிடுதல்)
இப்படி வாரத்துக்கு இரு முறை குளிக்க வேண்டிய எண்ணெய்க் குளியலை வருடத்துக்கு ஒரு முறை குளிக்கிறோம்.எண்ணெய் என்பதற்கே பொருள் எள் + நெய் என்று பொருள் . அதையே நல்ல என்ற அடை மொழியோடு அழைப்பதால் அதன் சிறப்பை உணரலாம். ”வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்கு கொடு ”என்பார்கள். அதாவது நல்ல பொருட்களை வாணிகனிடம் இருந்து வாங்கி உபயோகிக்காமல் வியாதிகளை உண்டாக்கிக் கொண்டு வைத்தியனிடம் போய் மருந்துகளுக்காக பொருள் செலவிட வேண்டாம் என்று பொருள்.

நல்லெண்ணெய் கடையில் வாங்கி உபயோகிக்காதீர்கள் . அதில் மினெரல் எண்ணெய் கலக்கப்படுகிறது.எள் 20 கிலோ வாங்கி  நான்கு நாள் அதன் தண்ணீர்ச் சத்து குறையும் வரை வெய்யிலில் வைத்து , பின் ஒரு கிலோ கருப்பட்டியுடன் மரச் செக்கில் (இயந்திரச் செக்கிலேயே மரச் செக்கு இருக்கிறது ) ஆட்டி எடுத்தால் , பத்து லிட்டர் எண்ணெய் கிடைக்கும். இதைக் குளிக்கவும் , சமையலுக்கும் பயன்படுத்தினால் மிக்க நலம் கிடைக்கும்.

ஆண்கள் புதன் கிழமையும் சனி கிழமையும் , பெண்கள்  செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். முதலில் நல்லெண்ணெயில் சில மிளகு , சீரகம் ,வெள்ளைப் பூண்டு , சின்ன வெங்காயம் , ஒரு உடைக்காத மிளகாய் இவற்றைப் போட்டு புகையாமல் காய்ச்சி , உடலெங்கும் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து , அதன் மேல் (கடலை மாவு + பச்சைக் கற்பூரம் + இரு எலுமிச்சம் பழச்சாறு அரை மணி நேரம் ஊற வைத்ததை ) தேய்த்து கால் மணி நேரம் காய விட்டுப் பின் இதமான வெந்நீரில் குளிக்க மிக்க சுகமாக இருக்கும்.

இதன் பின்னர் பால் சாம்பிராணி அல்லது சிங்கப்பூர் சாம்பிராணி,   காய வைத்த துளசி இலை ,  நிலவேம்புக் குடிநீருக்காக உபயோகிக்கும் பொடி இவற்றைத் தணலில் போட்டுப் புகை பிடிக்க எந்த நோயும் அண்டாது.

எண்ணெய் தேய்த்து குளிக்க இயலாதவர்கள் பாக்கு மட்டைத் தட்டில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கால்களை வைத்து உட்கார்ந்து இருக்க , அரை மணி நேரத்தில் கண்ணில் எண்ணெய் விட்டது போல பசபசப்புத் தட்டும் , அத்துடன் காலைட எடுத்துவிட்டுத் துடைத்துவிடவும். இதுவும் எண்ணெய்க் குளியலின் பயனைக் கொடுக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று , வெய்யிலில் அலையக் கூடாது , உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது ,உறங்கக் கூடாது, லாகிரி வஸ்துக்களை (பொடி , புகையிலை , வெற்றிலை பாக்கு, சாராயம்)புசிக்கக்கூடாது,காரமான உணவுப் பொருட்களையும் , மாமிசமும் புசிக்கக் (உண்ணக் ) கூடாது.

நோயணுகா விதிகள் பற்றி தேரையர் கூறுவதைக் கேளுங்கள்.🌿🌺 

பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில்குளிப்போம்;
பகலில் புணரோம்; பகலில் துயிலோம்;பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும்விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையிற்படுப்போம்;

மூலஞ்சேர் கறிநுகரோம்; மூத்த தயிர்உண்போம்;
முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும்அருந்தோம்;
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழியஉண்ணோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும்மிடத்தே;

உண்பதிரு போதொழிய மூன்றுபொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம்கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றிமருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர்அருந்தோம்;

மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப்புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல்செய்யோம்;
நண்புபெற உண்ட பின்னர் குறுநடைபயில்வோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும்மிடத்தே;

ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந்தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரைநுகர்வோம்;
கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும்பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப்புறுவோம்;

வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத்தவிர்ப்போம்;
விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்காலிடுவோம்;
நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில்நுகரோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும்மிடத்தே;

பகத்தொழுக்கு மாதர் அசம்கரம்துடைப்பமிவை தூள்;
படநிற்கோம்; தீபனமாந்தர் மரநிழலில்வசியோம்;
சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ்செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோகமழுக்காடை;

வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலைவிரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிடமசைகோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும்மிடத்தே.

இதன் பொருள்....🌿🌺 

நாட்டு மாட்டின் பாலுணவை உண்போம்.

நல்ல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.

பகலில் உடலுறவு கொள்ள மாட்டோம்.

தன் வயதை விட மூத்த பெண்ணோடும், பொது மகளிரோடும் உடலுறவு கொள்ளமாட்டோம்.

காலை இளம்வெயிலில் அலையமாட்டோம்.

மலம் சிறுநீர் ஆகியவற்றை அடக்க மாட்டோம்.

படுக்கும் பொழுது இடது கைப்புறம் ஒருக்களித்துப் படுப்போம். அப்போதுதான் வலப்புறம் சூரிய கலையில் மூச்சு ஓடும்.அது பன்னிரண்டங்குலம் ஓடுவதால் மூச்சு விரயம் ஆகாது .உடலும் கஷ்டப்படாது .

நன்றாக நாள்பட்ட ( மூத்த )புளித்த தயிர் உணவை விரும்பி உண்போம்.

முதல் நாள் சமைத்த கறியை அடுத்த நாள் உண்ணமாட்டோம்.

பசிக்காதபோது உண்ண மாட்டோம். பசித்தபொழுது மட்டும் உண்போம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உண்போம்.ஒரு போது உண்பவன் யோகி, இரு போதுண்பவன் போகி , முப்போதுண்பவன் ரோகி(வியாதியுள்ளவன்), நான்கு போதுண்பவன் துரோகி ( உடலுக்கு துரோகம் செய்பவன் ).

பகலில் தூங்க மாட்டோம், இரவில் நன்றாகத் தூங்குவோம்.

மாதம் ஒருமுறை மட்டும் உடலுறவு கொள்வோம்.

மண்ணில் விளையும் கிழங்குகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்குகளைப் புசிக்க மாட்டோம்.

உணவு உண்ணும்பொழுது தாகம் அதிகரித்தாலும் இடையில் நீர் அருந்த மாட்டோம்.

பிஞ்சு வாழைக்காய்களையே கறி சமைத்து உண்போம். மிக முற்றிய காய்களை உண்ண மாட்டோம்.

உணவு உண்டபின் சிறிது தூரம் நடப்போம்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்வோம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு ( நசியம் ) மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுப்போம்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மையிடுவோம்.

மணம் வீசும் மலரை இரவில் நுகர மாட்டோம்.

ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க மாட்டோம்.

தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்க மாட்டோம்.

இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்க மாட்டோம்.

பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ள மாட்டோம்.

அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்ய மாட்டோம்.

நம்மிடம் இரக்க உள்ள தெய்வங்கள், பித்ருக்கள், குரு ஆகியோரை எப்பொழுதும் வணங்குவோம்.

பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம்.

இவற்றில் கூறியுள்ளவாறு நம் வாழ்வில் கடைபிடித்தால் எமன் நம்மிடம் வர அஞ்சுவான். நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம். நன்றி நண்பர்களே!!
*கேழ்விரகில் உள்ள நண்மைகள்*


மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.
ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும். பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்.

இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ் வரகு மிகவும் சத்தான தானி யங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது. இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

*எடை இழக்க :*

கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.

*ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :*

கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

*நீரிழிவு நோயைக் குணப்படுத்த :*

கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

*ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :*

கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

*ரத்த சோகையைக் குணப்படுத்த :*

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

*சோர்வைப் போக்க :*

கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

*புரதச்சத்து/அமினோ அமிலங்கள் :*

உடலின் இயல்பான செயல் பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
பிற ஆரோக்கிய நிலைமைகள் :
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :
கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது. ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான். அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.

*அதனால் ஏற்படும் மாற்றம் நோய் :*

எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.
#தயிர்_உங்களுக்கு_கிடைத்தால் #என்ன_வெல்லாம்_செய்யலாம்..?

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோக -மாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
 கல்லீரல் எனும் கடவுள்

உள்ளுக்குள் ஓர் கடவுள் 
=====================================

மதுவை குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும். உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்.

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.

இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்லவதற்கு. ஆமாம், ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறினால் அடுத்த நொடி மரணம் தான்.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். இது மட்டும் கெட்டுவிட்டால் அந்த விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சேர்க்கும்.

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கல்லீரல் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான் அதன்பின் அது எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

இத்தகைய கல்லீரல் பாதிப்பிலிருந்து விடுபட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

# மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.

# பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு தான் விழுங்க வேண்டும்.

# பசியை நன்கு உணர்ந்தபின்னரே நமக்கு பிடித்த உணவை மட்டும் போதும் என்கிற உணர்வு வரும்வரை உட்கொள்ள வேண்டும். உணவை நிதானமாக மென்று அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு விழுங்க வேண்டும். சிறிது நேரம் களித்து தண்ணீரை வாய் வைத்து அருந்தலாம்.

# நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தூக்கம் வந்தால் தூங்க செல்வது அல்லது ஓய்வு எடுப்பது நல்லது.

# முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை தற்காலிக நிவாரணத்தையும் நிரந்தர துன்பத்தையும் தரக்கூடியவை.

# இரவு முடிந்தவரை விரைவாக தூங்க செல்லவேண்டும்.

# தூங்கும் இடம் இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். கொசு தொந்தரவிருந்தால் காற்று வரக்கூடிய கொசுவலையை ஜன்னலில் மாட்டிக்கொள்ளலாம். குறிப்பாக கொசுவிரட்டிகள் உபயோகப்படுத்தக் கூடாது.

இவற்றை பின்பற்றுவதால் பித்தம் நல்ல முறையில் சுரந்து நம் ரத்த குழாயில் படிந்துள்ள LDL (Low-density lipoprotein) கெட்ட கொழுப்புக்களையும் இலவசமாகவே கரைத்துவிடும். இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப்படும். பித்த நரையும், மன அழுத்தமும் இன்றி ஆரோக்யமான வாழ்க்கையை வாழ முடியும்...

வாழ்க வளமுடன்
CHENNAI
We have recently come across a lab where CT scan, MRI and other tests are done just at 30% of the market rates. It is run by a Jain charitable trust. Though run by trust it has many modern equipments and best facilities. Their address is:
Lalchand Leeladevi Munoth Medical Center,
8 Lynwood Lane,
Mahalingapuram,
Chennai.
Ph- 044-28251122.
I request all to share this post to the maximum extent so that anyone in need can benefit from it.
This is a full-fledged, state of art  lab with all modern amenities. Please make use of the same and spread the word as MRI costing Rs 8000 to 10000 is done here at Rs 2500  to 3500 only
Please share!!
*கிட்னி* *failure* *டயாலிசிஸ்* *மாற்று* *வழி* 

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு 

இதுக்கு மாற்று வழி என்ன ? 

நாட்டு மருந்து கடைக்கு சென்று *இந்து* உப்பு என்று கேளுங்கள், ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் 

இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் , 15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் 

இதை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா? 

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், வட மாநிலத்தில் பெரும்பாலும் 80% இந்த உப்பு தான் சாப்பிடுகிறார்கள் 

*இந்து* உப்பு என்றால் என்ன ?

இமாலய மழை பகுதியில்  பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே *இந்து* உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது 

கடைகளில் கிடைக்கும் உப்பு ? 

அதுவும் நல்ல உப்பு தான் , அது மோசம் என்று அர்த்தம் இல்லை , அதில் pure white ஆக காட்டுவதற்கு பயன்படுத்து ஒரு கெமிக்கல் உள்ளது , 

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து *இந்து* உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் 
--------------------

இது whats app புரளி தகவல் அல்ல.

 நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்று சொல்லும் அறிவின்மை அற்ற பதிவு இல்லை இது.

நான் சொல்லும் இந்த தகவல் உண்மையானது, நம்பி பயன் படுத்துங்கள், நன்மை அடையுங்கள்.

என்னை போல *இந்து* உப்பு உங்களுக்கு நம்பிக்கை அளித்தால், இந்த தகவலை copy paste செய்யுங்கள்.
👁👁👁👁👁👁👁👁      கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி
👁👁👁👁👁👁👁
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.


ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள். 

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi 
 use/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
 PONDICHERRY

PHONE: 0413-2233659
 EMAIL: auroeyesight@yahoo.com
.
அருமையான தகவல் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள்.👍👌🙏👁👁👁👁👁👁👁👲🎅👷👮👲👳 
Forward from another Whatsapp group
சிறுநீர் பாதையில் எரிச்சல் ,குத்தல்,அடைப்பு நீங்க...
👍🏻👍🏻👍🏻   💐💐💐
வெள்ளரிகாயை சிருக அரிந்து மிக்சியில் இட்டு சாறு 150 மிலி உடன் வெள்ளை முள்ளங்கி சாறு 50 மிலி
உடன் சிறிது மிளகுதூள் சேர்த்து தினசரி காலை வெறும்வயிற்றில் இந்த 200 மிலி சாறை அருந்திவர
மேற்சொன்ன பிரச்சனைகள் தீரும் .

🏌கரு.கார்த்திகேயன்⛳
பேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா? 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

 பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.


மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.

இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.


இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள் :-

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.
*மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்*

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா? 

எப்படி தெரிந்து கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது 
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது. 
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, 

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் 
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது. 

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்" 
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது. 

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140, 
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, 
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
*கொழுப்பு அளவு,
*உப்பு அளவு
பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.

இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்". 

Our Body mechanism is beyond சயின்ஸ். 

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்", 
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் 
"Master check-up"
என்பது இந்த நூற்றாண்டின் 
"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".

அப்படியானால், 
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது, 
எப்படி தெரிந்துக் கொள்வது? 
வரும் முன் காப்பது எப்படி? 
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

படித்தில் உணர்ந்தது 

சிந்திப்பவர் மட்டுமே.....
அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும், அறியாமையில் இருந்தும்,
விடுதலை பெறுவர் ... !!!
*இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்... ஆனால் இஞ்சியை பயன்படுத்தும் போது இயற்கையான மருந்து உள்ளது இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் பயனளிக்கூடியதாகும்*

*இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால் உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பீர்கள்*

*முக்கியமாக இஞ்சிப் பால் குடித்தால் இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும். வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.*

*ஆரோக்கியமான நுரையீரல்:*👇🏾

*நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால் சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.*

*சளி:*👇🏾👇🏾

*சளித் தொல்லையால் அவதிபடுபவர்கள் சளித்தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்*

*வாய்வு தொல்லை:*👇🏾

*வாய்வு தொல்லையால் அவதிபடுபவர்கள் வாய்வு தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்* 

*புற்றுநோய்க் கட்டி:*👇🏾

*பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால் சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.*

*இரத்த குழாய் அடைப்பு*:👇🏾

*குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.*

*தொப்பை:*👇🏾👇🏾

*தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.*

*இஞ்சிப் பால் குடிக்கக்கூடாதவர்கள்:*👇🏾

*வாய்ப்புண், அல்சர், மூலம் உள்ளவர்கள் இஞ்சிப் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்சனை தீவிரமடையக்கூடும்.*

*இஞ்சிப் பால் செய்முறை:*👇🏾

*1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால் இஞ்சிப் பால் ரெடி!*                                                  உங்கள் ஆரோக்கிய நலனில் அக்கரையுடன் இயற்கை மருத்துவம் சிறந்தது!!!!!
உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…!

பானத்தின் பெயர்: அற்புத பானம் 

தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1.

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:

* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது

* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது

* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது

* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

* பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.

* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது

* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.

* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது

* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது

* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது

* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது

* பக்க விளைவுகள் ஏதுமில்லை

* சத்து மிகுந்தது – எளிதில் உடலில் சேரக் கூடியது

* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது

* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்

– காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

– சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்

– அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்

– அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள் – அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்.


ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள் ... !!!

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் ...

     உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். 

இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது ... !!
!

    ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.

அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 
1) முன் மடல் (frontal lobe) 

2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate) 

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)

தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.
அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்
பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

நியூரோபிளாஸ்டிசிடி
நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.
ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்
ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம் ... !!!

நன்றி http://spiritualcbe.blogspot.in/
உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.

கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
உடல் எடையை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை : -
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு,கொள்ளு சூப் ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.சளி காணாமல் போகும்
முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !!

முருங்கைக்கீரை:

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக 
நிரூபிக்கப்பட்டுள்ளது.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.  ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும்.

மருத்துவக் குணங்கள்

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.

சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய
புரதத்துக்கு இணையானது.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.

ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட,  நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.

தினமும் சாப்பிட வேண்டிய அளவு
பெண்கள்    100 கிராம்
ஆண்கள்    40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள்    50 கிராம்

முருங்கைச் சத்து முழுமையானது!

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4  மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

முருங்கைக்கீரை சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்கீரை (இளம் காம்புடன் சேர்த்து) - 2 கப், பூண்டு- 5பல், சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்  (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.

எப்படி சமைக்கக்கூடாது?

முருங்கைக்கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைக்க  கீரையை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சமைப்பதால் பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோட்டின் சிதைந்து விடும். முருங்கைக்கீரையை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை கூட்டு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு-  1 கப், முருங்கைக்கீரை - 2 கப், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 3, உப்பு, மஞ்சள் தூள்- சிறிதளவு.

தாளிக்க...

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் அலசி வைத்துள்ள கீரையை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வேக வைத்து, இறக்கி, உப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 2 கப், இஞ்சி- 1 துண்டு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1 கப், முருங்கைக்கீரை - 1 கப், பச்சை மிளகாய் - 3, கடூகு, சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி  சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல்    64 கிலோ
கலோரிகள்
கால்சியம்    185 மி.கி.
பாஸ்பரஸ்    112 மி.கி.
இரும்பு    4 மி.கி.
புரதம்     9.40 கிராம்
கொழுப்பு    1.40 கிராம்
நார்ச்சத்து    2 கிராம்
தண்ணீர்    78.66 கிராம்

முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல்

 தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை - 3 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல்  - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5

சேர்த்து அரைக்கவும்.

 தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.

 ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.

 கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.

 கீரை சேர்த்து வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.

பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.

வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.

வாழைப்பூ---முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைப்பூ --ஒரு கப்
முருங்கைக்கீரை ---ஒரு கப்
தேங்காய்த்துருவல்---ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் --ஒரு டீஸ்பூன்
கடுகு --  கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு--தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ---1
பெருங்காயத்தூள்---கால் டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரை நன்றாக அலசி போடவும், வாழைப்பூ சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும், தண்ணீர் வடிந்தது, அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்கீரையுடன் போடவும், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.🌺

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...