Friday, May 26, 2017

இதில் 1 டீஸ்பூன் சாப்பிடுங்கள்: 20 நாட்கள்.. 15 கிலோ எடை குறையுமாம்

வாசனை மிகுந்த மசாலா பொருட்களில் ஒன்றான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிலும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆய்வு

தினமும் சீரகத்தை சாப்பிட்டு வருவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சீரகமானது மாரடைப்பைத் தடுத்து, ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து, ரத்த சோகை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க சீரகத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதை காலையில் தினமும் குடிக்க வேண்டும்.சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பல்வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் சாப்பிட

சாப்பிட்ட உடன் செய்யும் சில செயல்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இப்போது எந்த விஷயங்களை சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.
http://www.kalvikural.com/2017/04/dont-do-this-after-eating.html?m=1

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா??

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வண்டு வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி ஆச்சி மசாலா பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

இல்லவே இல்லை...!

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான் நஞ்சுதான்...

டி.வி.விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவுமில்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்கு சமூக கௌரவமாக மாறி விட்டது...
அதை விடக் கொடுமை..
நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி
உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும்
அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உணவு முறை , நோய், நலம், மருத்துவம் , சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம் வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்...!

உண்மையை உணர்வோம்

*குப்பை உணவு... தொப்பை வயிறு... சப்பை உயிரு...*

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பலவிதமான சோதனைகளையும், ஸ்கேன்களையும் செய்து பார்த்த மருத்துவர், ’உடலில் எந்தக் கோளாறும் தெரியவில்லையே!’ என்று குழம்பியிருக்கிறார். இதற்கிடையே நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது. இந்த நாட்களில் தொடர்ச்சியாக வலி நிவாரணி ஊசி போட்டே சமாளித்திருக்கிறார்கள். வலி நிவாரணியின் தீவிரம் குறையும் போதெல்லாம் அவள் துடிதுடித்துப் போயிருக்கிறாள்.

கடைசியாக எந்தச் சோதனையும் நோயைக் கண்டு சொல்லாததால் குழம்பிப் போன மருத்துவர்கள், எதற்கும் ஒரு முறை வயிற்றைச் சுத்தம் செய்து பார்த்து விடுவோமென்று எனிமா கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வயிற்றிலிருந்து கட்டி கட்டியாக கறுப்பு நிறக் 'களிம்பு' போன்ற பொருள் கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அதைச் சோதனைக்கனுப்பிப் பார்த்த போது, அவ்வளவும் அந்தச் சிறுமி தினசரி தின்னும் நொறுக்குத் தீனிகளின் 'கழிவு' என்று தெரிய வந்துள்ளது. மகளைச் செல்லமாக வளர்ப்பதாகக் கருதிக் கொண்டு பெற்றோர் அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

லேய்ஸ், குர்குர்ரே, சீட்டோஸ், கிண்டர் ஜாய், சீஸ் பால் மற்றும் கடைகளில் பல வண்ணங்களில் சரம் சரமாகத் தொங்கும் அத்தனை நொறுக்குத் தீனிகளும் தான் அவள் வயிற்றை நிறைத்துள்ளது. அது சரியாக செரிமானமாகாமல் இரைப்பையிலும், குடலின் உட்சுவரிலும் ஒரு பிசினைப் போல் படிந்து போயிருக்கின்றது. தொடர்ந்து உள்ளே வரும் உணவுப் பொருள் எதையும் செரிக்க விடாமல் செய்ததோடு, கடுமையான வலியையும் தோற்றுவித்திருக்கின்றது.

குழந்தைகளைக் கவர்வதற்கென்றே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் பெரும்பாலானவை தின்பண்டங்களுக்காகவும், அதனை சாப்பிட்ட பின்  பற்களை எந்த பற்பசையைக் கொண்டு தேய்க்கலாம் என்பதற்காகவுமே காட்டப்படுகின்றது. சுமார் 50% விளம்பரங்கள் 'ஜங்க் புட்' என்று சொல்லப்படும் 'குப்பை உணவுகளைக்' கடை விரிப்பதாகவும்,  ஒரு வாரத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் தொலைக்காட்சிகளின் முன் செலவழிக்கும் குழந்தைகள் ஆண்டொன்றுக்கு சுமார் 30,155 விளம்பரங்களைக் காண்பதாகவும், அமெரிக்கச் சிறார்களில் 60% பேர் 'ஒபசிட்டி' எனப்படும்  'அதீத உடற்பருமன் நோய்க்கு' ஆட்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கின்றது.

உலகளவில் குப்பை உணவுச் சந்தையின் தோராய மதிப்பு சுமார் ரூ. 6521 பில்லியன். அமெரிக்காவில் விளம்பரங்களுக்காக மட்டுமே சுமார் 83.2 பில்லியன் ரூபாயைக் குப்பை உணவு தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வலுவுடன் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டங்களையே கால் தூசுக்கு மதிக்கும் குப்பை உணவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு *இந்தியா என்பது திறந்த மடம் தான்...* ஆகையால் இனிமேலாவது திருந்தி சத்தான ஆரோக்கிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்போம்.

*சத்து உணவு... சக்தி உயிரு... சுத்தி தெளிவு*

இயற்கையின் வழியில் நாம் யார்? நமது உடல் எதனால் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது? நமது உணவு எது? அந்த உணவை எப்படி உண்பது? எப்பொழுது உண்பது? உண்ணக்கூடாத உணவு எது?...

*2017 ஏப்ரல் 29, 30 மற்றும் மே1* ம்தேதிகளில் மதுரை நாகமலை அடிவாரம் புல்லூத்து *பாய்ஸ் டவுனில்* நடைபெறவுள்ள *பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல்* நிகழ்ச்சிகளில் முதல் நாள் 29.04.2017 (சனிக்கிழமை) மதியம் 3:00 மணிக்கு... லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களில் தங்கிய மிகச்சிறந்ததொரு *உண்மையான பேலியோ டயட்* (இறைச்சி உணவுகள் அல்ல) புத்தகத்தை எழுதியுள்ள *உணவியல் வல்லுனர் மற்றும் சுத்திமுறை நிபுணர் "புதின் சுரேஷ்"* அவர்கள் உண்மையான, ஆரோக்கியமான, அவசியமான, அடுத்த தலைமுறையினருக்கு அடிப்படைத் தேவையான உணவு பழக்கவழக்கங்களை, உணவு வகைகளை, உணவு முறைகளை, உண்ணும் நெறிகளை உயிரோட்டத்துடன் உணர்த்தவுள்ளார்.

நமக்கு நாமே உணவியல் விதிகளை வகுத்துக் கொண்டு, பண்டைய கால உணவு வகைகளைப் பகுத்து உண்டு, *உண்மையான பேலியோ டயட்டின் (சிறு தானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், முளை கட்டிய பயிர் வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள்) உளவியல் கூறுகளை தெரிந்துகொண்டு,*
சரிவிகித உணவை சமச்சீராக சாப்பிடும் முறையை புரிந்துகொண்டு,
சீரண மண்டலத்தை சிறப்பானதாக்க தெளிவுகொண்டு,
கழிவுகள் தேக்கமே உடல் உறுப்புகளின் அழிவுகளுக்கான அறிகுறி என்பதை அறிந்துகொண்டு,
*ஆரோக்கிய வாழ்வியலை நோக்கி பசுமைப்பாதையில் பயணிப்போம்...* வாருங்கள்...

*மைக்கேல்ராஜ்,* கோயம்புத்தூா்.
நிறுவனர்- *பசுமைப்பாதை.*
98430 85615, 98430 85616.

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋

*தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
 
*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

*இணையப்பகிர்வு*

இஞ்சிப் பால்

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

*♨சாம்பார் நல்லதா? மருத்துவம் குறிப்பிடும் சத்துக்கள், எச்சரிக்கைகள்! HealthTips*

சாம்பார் நமக்கு பிரதான உணவு அல்ல... ஆனால், இது இல்லாத விருந்து களை கட்டுவதில்லை. சுவையாக இருந்துவிட்டால், பொது இடமாக இருந்தாலும் கூச்சப்படாமல் இரண்டாவது முறை வாங்கிச் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஈர்க்கும் சுவையோடு அட்டகாசமான சுவையில் சாம்பார் அமைந்துவிட்டால் போதும்... இட்லியோ, பொங்கலோ, வடையோ வழக்கமாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு கூடுதலாக உள்ளே இறங்கும். `சாம்பார் வடை’, `சாம்பார் இட்லி’ என்கிற சிறப்பு அயிட்டங்கள் (!) எல்லாம் ஹோட்டல் மெனு கார்டில் இடம் பெற இதன் சிறப்புகள்தான் காரணம். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் உணவு விற்பன்னர்கள். தென்னிந்திய மற்றும் இலங்கை சமையல் முறைகளில்தான் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் புகழ்பெற்று, நீக்கமற நிறைந்திருக்கிறது சாம்பார்.

சாம்பாருக்கும் மராத்திய மன்னர் சாம்பாஜிக்கும்கூட (Sambhaji) தொடர்பு உண்டு என ஒரு கதை இருக்கிறது. சாம்பாஜி, மராத்தியப் பேரரசர் சிவாஜியின் மூத்த புதல்வர். வட இந்தியாவில் ரொட்டி, சப்பாத்திக்கு `தால்’ (பருப்பில் செய்வது) சேர்த்துக்கொள்வார்கள். ஒரு நாள், தலைமை சமையல்காரர் வெளியே சென்றுவிட்டார். ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்த சாம்பாஜி, தால் தயாரித்திருக்கிறார். அதில் புளி போட்டிருக்கிறார். அரண்மனை சமையல்காரர்கள், பொதுவாக பருப்பில் (தால்) புளி சேர்ப்பதில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். `அதனால் என்ன... ருசியாக இருக்கிறதே!’ என அவர் சுவைத்து மகிழ்ந்திருக்கிறார். அது சாம்பாஜி தயாரித்த சாம்பார் எனக் குறிப்பிடப்படுகிறது. இதில் எத்தனை வகைகள் இருந்தாலும் தஞ்சாவூர் சாம்பாருக்குத் தனிச்சுவை இருக்கிறது என்பது உணவியலாளர்களின் கருத்து. அதிலும் வெங்காயமோ, பூண்டோ சேர்க்கப்படவில்லை என்றால், சூப்பைப்போல வெறுமனேகூட இதைச் சுவைக்கலாம். `தக்காளி, வெங்காயம் இல்லாமல் சாம்பாரா?’ என்பார்கள். ஆனால், வெறும் தக்காளியில் சாம்பாரைச் செய்பவர்களும் நம்மில் உண்டு. கன்னடத்தில் `சாம்பாரு பதார்த்தா’ என்பதன் பொருள், வாசனைப் பொருட்கள், கறிகாய்கள், பருப்பு சேர்த்து செய்யப்படும் ஒரு குழம்பு என்பது. ஆனாலும், `சாம்பு’ என்கிற தமிழ்ச்சொல்லில் இருந்துதான் இது வந்தது என்கிறார்கள் சில வரலாற்று ஆசிரியர்கள். இங்கே புளிக்கரைசலில் காய்கள், பருப்பு, துருவிய தேங்காய், வாசனைப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நாம் சாம்பாரைத் தயாரிக்கிறோம். ஒரு காயைக்கொண்டும் தயாரிக்கலாம்; பல காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.

செய்முறையில்தான் எத்தனைவிதம்? ஒன்றுமில்லை... நம் அண்டை மாநிலம் கர்நாடகாவுக்கும் நமக்குமே சின்னச் சின்ன வித்தியாசங்கள் உள்ளன. நாம் சாம்பார் பொடி சேர்ப்போம்; அவர்கள் விழுதாகச (பேஸ்ட்) சேர்க்கிறார்கள். விருந்தில் சாம்பாருக்குப் பிறகுதான் ரசம் பரிமாறப்படும்; அவர்களோ ரசத்துக்குப் பிறகுதான் சாம்பாரை ஊற்றிக்கொள்கிறார்கள். நம் பாரம்பர்யத்தில் கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய்தான் இதற்கு முக்கியமான காய்கறிகள். கேரளா போன்ற பிற மாநிலங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்குப் பிறகு, இங்கிலீஷ் காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். சைவப் பிரியர்களின் பிரதான உணவு வகையான இதை அசைவப் பிரியர்களும் தங்கள் பங்குக்கு சில மாற்றங்களுடன் ருசி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். `மீன் சாம்பார்’, `சிக்கன் சாம்பார்’ எல்லாம் இங்கே பிரபலமாகத் தொடங்கிவிட்டன... அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யம். தஞ்சையை மராட்டியர்கள் ஆளத் தொடங்கிய காலத்தில்தான் சாம்பாரே தயாரானது என்கிறவர்களும் உண்டு. ஷாஹுஜி (Shahuji) தஞ்சையை ஆண்ட இரண்டாம் மராத்திய அரசர், இவர் காலத்தில்தான் இது தயாரிக்கப்பட்டது என்கிறார்கள்... அதாவது, 17-ம் நூற்றாண்டில்! இது, உண்மை என்பதைப் போலவே பிரபல உணவு வரலாற்றியலாளர் கே.பி.அச்சயாவின் குறிப்பும் இருக்கிறது. தஞ்சாவூரில் மராத்திய மன்னர்களின் ஆட்சி காலத்துக்கு முன்னதாக, இதைப் பற்றிய ஒரு வார்த்தை இல்லை என்கிறார் அவர். ஆனால், கி.பி. 1530-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு கல்வெட்டுகளில் ஒன்றில், `சம்பாரம்’ என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சாம்பாரைத்தான் குறிப்பிடுகிறது எனச் சொல்கிறார்கள். தெலுங்கில் `ஹூலி’ (Huli) என்றால் புளி சேர்க்கப்பட்ட சாம்பார். மராத்தியர்களின் தமிழக வருகைக்கு முன்னதாகவே ஆந்திராவில் இது இருந்திருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரமாக `ஹுலி’யைச் சொல்கிறார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா... என மாநிலத்துக்கு மாநிலம் இதன் செய்முறை வேறுபட்டாலும் நம்மில் இதை ருசிக்காதவர்கள் யாரும் இல்லை.

`இட்லிக்கோ, தோசைக்கோ தொட்டுக்கொள்ள எந்த ஹோட்டலில் நல்ல சாம்பார் கிடைக்கும்?’ எனத் தேடி ஓடுகிறவர்கள் இருக்கிறார்கள். கடைகளில் இதை மட்டும் வாங்கிப் போய் வீட்டில் இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். சரி.. சாம்பாரில் என்ன இருக்கிறது, அது நம் உடலுக்கு நன்மைதான் செய்கிறதா? என டயட்டீஷியன் அனிதா பாலமுரளியிடம் கேட்டோம்... ``சாம்பார் கலோரி நிறைந்தது. ஒரு கப் சாம்பாரில் 308 கலோரிகள் உள்ளன. பொட்டாசியம் 265 மி.கி., கொழுப்பு 9 கிராம், பொட்டாசியம் 265 மி.கி., நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 3 கிராம், புரோட்டீன் 15 கிராம், சோடியம் 14 மி.கி உள்ளன. அதோடு இரும்புச்சத்தும் வைட்டமின் சியும் இருக்கின்றன. சாம்பாரில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்றான துவரம் பருப்பு அதிக புரோட்டீன் கொண்டது. நமக்கு எந்தப் பருப்பு பிடிக்குமோ, அதைக்கொண்டு சாம்பார் தயாரிக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். சிறிது பச்சைப்பட்டாணியைச் சேர்த்தால், சத்துக்கள் கூடுதலாகக் கிடைக்கும். நார்ச்சத்தைத் தொடர்ந்து உட்கொள்வது நம் உடல்நலத்தை மேம்படுத்தும். சாம்பாரில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைச் சேர்த்து சமைக்கலாம். அது செரிமானம் சீராக நடைபெற உதவும்.

கார்போஹைட்ரேட் குறைவு என்பதால், இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே, சர்க்கரைநோய் உள்ளவர்கள்கூட, பொருத்தமான மளிகைப் பொருட்களைக்கொண்டு இதைச் செய்து சாப்பிடலாம். ஆனால், அவர்களும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடாமல், காலையில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதைப் பயன்படுத்துவது சிறந்தது. இட்லியோடு சேர்த்துச் சாப்பிடும்போது, சத்துக்கள் கிடைக்கும். சாம்பாரில் நம் உடலுக்கு நன்மை தரும் என மருத்துவர் பரிந்துரைக்கிற உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முருங்கைக்காய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி, முள்ளங்கி... என எந்தக் காயையும் சேர்த்து தயாரிக்கலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், அதிக காய்கறிகளைச் சேர்த்த சாம்பாரை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால், சாம்பாரில் சேர்க்கப்படும் புளி, உப்பு ஆகியவை அளவோடு இருக்க வேண்டும். அதிகப் புளி சேர்த்தால், அலர்ஜி, பல் எனாமல் பாதிக்கப்படுவது, பித்தப்பைகளில் கற்கள் உருவாவது, நாளங்களில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். சாம்பாரை உணவகங்களில் வாங்குவதைவிட, வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடுவதுதான் நல்லது. அதேபோல இதில் அதிக மசாலா சேர்ப்பதைத் தவிர்க்கலாம். கடைகளில் விற்கும் சாம்பார் பொடியை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. நாமே அரைத்துச் சேர்க்கும் பொடிதான் சிறந்தது. கடைகளில் விற்கப்படும் பொடிகளில் கலப்படம் இருக்கலாம். அது நம் உடலுக்கு பல பிரச்னைகளைக் கொண்டு வந்துவிடும். சாம்பார் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடும்போது எந்தத் தீமையையும் தராது என்று உறுதியாக நம்பலாம்’’ என்கிறார் அனிதா. எனவே வீட்டு சாம்பாருக்கு முன்னுரிமை கொடுப்போம்... இட்லி-சாம்பாரை ஒரு வெட்டு வெட்டுவோம்! - பாலு சத்யா

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...