♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦
♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன? நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா? நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்.
♦கழுத்து மற்றும் முதுகுவலி உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக (side lying) அல்லது நேராக மல்லாக்க படுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம் தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்.
♦தலையணை பொதுவாக தலையணை மிக முக்கியம். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். பொதுவாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும்.
♦முதுகின் கீழ்ப்பகுதி வலி? ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். நான் நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முற்றிலுமு் பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது நல்லது.
♦உட்காரும் நிலை நீங்கள் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும்