Thursday, August 16, 2018

காபி_மருத்துவம் #Healthy_Coffee

#காபி_மருத்துவம்

#Healthy_Coffee

#7_நாள்...

#_7_வகையான_காபிகள்

#ஏராளமான_பலன்கள்..!

காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர். கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. காபி கொடுத்து விருந்தினரை உபசரிப்பதில் தொடங்குவது, நம் விருந்தோம்பல் பண்பாடு.

உற்சாகமூட்டும் பானம் என்பதையும் தாண்டி, இதற்கெனவே சில மகத்துவங்கள் உண்டு.

#உடலில்……!!!! ????

எனர்ஜி லெவலை அதிகரிக்கும்;

கொழுப்பைக் குறைக்கும்;

அல்சைமர்,

டிமென்ஷியா பிரச்னைகளில் இருந்து காக்கும்...

என பெரிய பட்டியலே
உள்ளது.

வழக்கமான காபியைத் தாண்டி சில ஆரோக்கியமான வகைகளையும் அருந்தலாம்; அவற்றையும் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஏழு நாள்... ஏழு காபி... என வாரம் முழுக்க அருந்த அருமையான வகைகள்... அவற்றைச் செய்யும் முறைகள்... பலன்கள்!

1)#கருப்பட்டிகாபி...

தேவையானவை...

கருப்பட்டி - 1/4 கப், காபித்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை...

முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும். அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.

#1பலன்கள்...

சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.

2)#தாமரைப்பூகாபி...

தேவையானவை...

வெண்தாமரை அல்லது செந்தாமரை - 1, மிளகு - 5, கிராம்பு -2, ஏலக்காய் - 2, பால் - 1/4 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப்பூவைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதி வரும்போது கிராம்புப் பொடி, மிளகு, ஏலக்காய் சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவுக்கு வந்ததும் அதை வடிகட்டவும். அதில் பால், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவும்.

#2பலன்கள்...

ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இது, புற்றுநோய் வராமல் காக்க்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது.

3)#செம்பருத்திப்பூகாபி...

தேவையானவை...

செம்பருத்திப் பூ - 1, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, மிளகு - 5, பால் - 1/2 கப், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

செம்பருத்திப்பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிடவும். இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்துச் சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகவும்.

#3பலன்கள்...

செம்பருத்திப்பூவில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பலமாக்கும். சருமத்தைப் பாதுகாக்கும்.

4)#சுக்குகாபி...

தேவையானவை...

சுக்கு - 1 அங்குலத்துண்டு, ஏலக்காய் - 2, பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - 1/2 கப்.

செய்முறை...

சுக்கு, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். இதை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். மாலையில் பருக ஏற்ற பானம்.

#4பலன்கள்...

கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். சளி, கபம் ஆகியவற்றை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

5)#பேரீச்சம்விதைகாபி...

தேவையானவை...

பேரீச்சை விதைப்பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.

#5பலன்கள்....

பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும். இது ரத்த உற்பத்திக்கும் தாது உற்பத்திக்கும் உதவக்கூடியது. சருமத்தைப் பாதுகாக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும்.

6)#முருங்கைப்பூகாபி....

தேவையானவை....

முருங்கைப்பூப் பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டுப் பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை....

முருங்கைப் பூவைச் சுத்தம்செய்து உலர்த்திப் பொடி செய்துகொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் இந்தப் பொடியையும் பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கி அருந்தவும்.

#6பலன்கள்....

முருங்கையில் வைட்டமின் ஏ, பி6, பி9, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும், உடலுக்கு வலுவைத் தரும். எலும்புகளை வலுவாக்கும். உடல்வலியைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

7)#ஏலக்காய்காபி ...

தேவையானவை:

காபித்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் - 4.

செய்முறை...

ஒரு சிறு கிண்ணத்தில் காபித்தூளையும் சர்க்கரையையும் போடவும். அதில் 1/4 டீஸ்பூனுக்கும் குறைவான நீரைச் சேர்த்து, ஒரு கரண்டியால் பேஸ்டாக ஆகும் வரை நுரை பொங்க அடிக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலையும் தண்ணீரையும் சேர்க்கவும். அதில், ஏலக்காயை விதை நீக்கிப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய் வாசனை போகாமல் இருக்க, அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும். இரண்டு கப்களில் காபி-சர்க்கரைக் கலவையை சமமாக ஊற்றவும். அவற்றில், பால்-ஏலக்காய் கலவையைச் சேர்த்து, மேலே சிறிது காபி பொடி தூவிப் பருகவும்.

#7பலன்கள்...

ஏலக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன. ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. அசிடிட்டி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நிவாரணம் தரும். சிறுநீரகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை விரட்டும் நச்சு நீக்கியாகச் செயல்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

தைராய்டு_கர்ப்பம் #அடைவதை_பாதிக்குமா?

#தைராய்டு_கர்ப்பம் #அடைவதை_பாதிக்குமா?

தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன.

1⃣ ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை.

2⃣ ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை.

3⃣ கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை.

#ஹைப்போதைராய்டிசம் #அறிகுறிகள்

அதிகமான சோர்வு,

தளர்ச்சி,

எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை,

உடல் எடை அதிகரித்தல்,

மனஉளைச்சல்,

மறதி ஏற்படுதல்,

மலச்சிக்கல்,

முடி உதிர்தல்,

சரும வெளியே தள்ளிவரும் நிலை,

மாதவிலக்கு தைராய்டு அறிகுறிகள் வறட்சி,

மாதவிலக்கு குளறுபடிகள்,

குழந்தையின்மை,

உள்ளுக்குள் குளிர்ச்சி ஏற்படுதல்,

கொலஸ்ட்ரால் அளவில் வித்தியாசம் தோன்றுதல்.

#ஹைப்பர்தைராய்டிசத்தின் #_அறிகுறிகள்

அதிக சோர்வு,

அதிக கோபம்.

அதிக பசியும்,

அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் நிலை.

இதய துடிப்பு அதிகரித்தல்,

உடல் நடுக்கம்,

மூச்சுவிட சிரமப்படுதல்,

அடிக்கடி மலம் கழிக்க தோன்றும் நிலை,

கை-கால் நடுக்கம்,

அதிக உடல்சூடு,

வியர்வை,

கண்கள் கோளாறு,

கருச்சிதைவு

போன்றவை தோன்றும்.

🌀 எல்லா தைராய்டு நோய்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும்:

✔️ சரியல்ல. ஹைப்போதைராய்டிசம் தவிர்த்து பெரும்பாலான தைராய்டு நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டியதில்லை. 

🌀 தைராய்டு நோய் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்: 

✔️ பாரம்பரியத்தாலும், வாழ்வியல் நடைமுறைகளாலும்தான் பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் காரணமாக ஒருவருக்கு உடல் எடை அதிகரித்தால் தைராக்சின் சரியான அளவில் கொடுத்து, உடல் எடையை கட்டுப்படுத்திவிடலாம்.

🌀 தைராய்டு நோயாளிகள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை சாப்பிடக்கூடாது: 

✔️ சரியல்ல. மேற்கண்ட இரண்டு காய்கறிகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். அதனால் முட் டைக்கோஸ், காலிபிளவர் இரண்டையும் முற்றிலுமாக தவிர்க்கவேண்டியதில்லை.

🌀 தைராய்டு நோய் இல்லற வாழ்க்கைக்கும், கர்ப்பத்திற்கும் தடையாக இருக்கும்: 

✔️ சரியல்ல. டீன்ஏஜ் பெண்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்த தவறான நம்பிக்கையால் பெற்றோர் பெருந்துயரத்திற்கு உள்ளாகிறார்கள். சரியான சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயால் குடும்ப வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வராது.

கர்ப்பமாவதற்கும் தடை ஏற்படாது.

🌀 கர்ப்பகாலத்தில் தைராய்டு நோய்களுக்கான மருந்தை சாப்பிடக்கூடாது:

✔️ சரியல்ல. கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியதிருக்கும். தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலத்திற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தைராய்டு நோயாளிகள், ஹார்மோன் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை கட்டாயம் பெறவேண்டும்.

#தைராய்டுசுரப்பி_உற்பத்தி #செய்யும்_ஹார்மோன்கள் #எவை?

தைராய்டு சுரப்பி மூன்று வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, T3 – ட்ரை அயோடோதைரோனைன், T4 – டெட்ரா அயோடோதைரோனைன், கால்சிடோனின்.

#டி_எஸ்_எச்
#என்றால்என்ன?

பிட்யூட்டரி சுரப்பி டி.எஸ்.எச். என்ற ஹார்மோனைச் சுரந்து, அதன்மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டித் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. டி.எஸ்.எச். என்பது தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன்.

#மனிதர்களுக்கு_இருக்க #வேண்டிய_சராசரி #_ஹார்மோன்களின்
#அளவு__எவ்வளவு?

T3 – சீரம் ட்ரைஅயோடோதைரோநைன் ஹார்மோன் அளவு 80 – 230 ng/dl.

T4 – சீரம் தைராக்சின் ஹார்மோன் அளவு 5 – 14ng/dl.

TSH அல்லது சீரம் தைரோட்ரோபின் அளவு 0.4 – 6 miu/L.

#பரிசோதனை

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் (ஃபாஸ்டிங்) மேற்கண்ட ரத்தப் பரிசோதனை, தைராய்டு ஸ்கேன் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்யலாம்.

#தவிர்க்கவேண்டியவை

முட்டை கோசு, காலிஃபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், நூல்கோல், கடுகு, டீ, காபி, இனிப்புப் பலகாரங்கள், கேக், பிரெட் வகை, உலர் பழங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள், வெள்ளை சீனி, தேன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

#சேர்க்கவேண்டியவை

தேங்காய், பூண்டு, வெங்காயம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, அமுக்கரா, காளான், பசலைக் கீரை, சிவப்பு அரிசி, பல்வேறு தானியங்கள், பார்லி, ஓட்ஸ், தக்காளி போன்றவற்றோடு சரிவிகித பாரம்பரிய உணவு முறை. பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.

புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

#புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

தற்போது உலகில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோய்க்கு அக்காலத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், பலர் இறந்தனர். ஆனால் தற்போது பல நவீன மருத்துவ வசதிகள் இருப்பினும் மக்கள் புற்றுநோய்க்கு பயப்படுகின்றனர். ஏனெனில் இத்தகைய புற்றுநோயில் ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு புற்றுநோய்களும் உள்ளன.

மேலும் புற்றுநோய்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் என்ற சில உள்ளன. உதாரணமாக, கருப்பை, மார்பகம் போன்றவை பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள். ஆனால் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அந்த புற்றுநோய்க்கான அறிகுறி ஒரே மாதிரி மற்றவருக்கு இருக்காது. ஒவ்வொருவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் மாறுபடும்.

இங்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை
பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#மார்பகபுற்றுநோய்

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்குத் தான் இந்த மார்பக புற்றுநோய் மிகப்பெரிய அளவில் தாக்கும். மேலும் இது பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரகூடியது[/b]

#சருமபுற்றுநோய்

சரும புற்றுநோயானது சருமத்தில் அதிகப்படியான அளவில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் இருந்தால் ஏற்படும். எனவே தான் வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு போதிய பாதுகாப்புடன் செல்லுமாறு கூறுகின்றனர்.

#கருப்பைபுற்றுநோய்

இந்த புற்றுநோயும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான ஒன்று. இந்த நோயில் கருப்பைக்குள் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கருப்பை புற்றுநோயானது பெண்கள் கருத்தரித்தால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால், இது அதிகம் தாக்காது.

#உணவுக்குழாய் #_புற்றுநோய்

உணவுக்குழாய் புற்றுநோயானது புகைப்பிடிப்போருக்கு அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி, காரமான மற்றும் சூடான உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் இது ஏற்படும். ஆனால் இந்த புற்றுநோய் வந்தால் உயிர்பிழைப்பது சற்று கஷ்டமாக இருக்கும்.[/b]

#புரோஸ்டேட்புற்றுநோய்

இது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய். இது அதிகப்படியான அளவில் அசைவ உணவுகளின் கொழுப்பு உடலில் சேர்வதால் மற்றும் புகைப்பிடிப்பதால் புற்றுநோயை தூண்டும்.

#இரத்தபுற்றுநோய்

இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகமானால் ஏற்படுவது தான் இரத்த புற்றநோய். இது பெரும்பாலும் 10 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும்.

#கர்ப்பப்பை
#வாய்புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது வைரஸால் ஏற்படுவது. இது பெண்களின் கருப்பையை தாக்குவதால், இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். ஏனெனில் இது நினைத்து பார்க்க முடியாத அளவில் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

#நுரையீரல்புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய் தான் இருப்பதிலேயே அதிக நபர்களை தாக்கி, உயிரைப் பறித்த புற்றுநோய். இது புகைப்பிடிப்பதால் அதிகம் வருவதுடன், அதிகப்படியான காற்று மாசுபாட்டின் காரணமாகவும் தாக்கக்கூடியது.

#கருப்பைக்
#குரியபுற்றுநோய்

இது பெண்களைத் தாக்கும் புற்றுநோய். இது கருப்பை சுவருக்கு வெளியே வீரியம் மிக்க கட்டிகள் வளர்வதால் ஏற்படும். இதுவும் மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது.

#சிறுநீர்ப்பைபுற்றுநோய்

சிறுநீர்ப்பையில் கெமிக்கல்கள் அதிகம் சேர்ந்தாலோ அல்லது அதிகம் புகைப்பிடித்தாலோ தாக்கக்கூடியது. மேலும் இதனை சரிசெய்ய அதிகம் செலவாகும். ஆகவே வருமுன் காப்பதே மேல்.

#மலக்குடலுக்
#குறியபுற்றுநோய்

மலசிக்கல் மற்றும் மூலநோயல் வரும்
இது 50 வயதிற்கு மேற்பெட்ட ஆண்களை அதிகம் தாக்கக்கூடியது.
இப்போது சிறு வயது ஆண் மற்றும் பெண்களுக்கு அதிகமாக இருக்கு
இந்த வகையான புற்றுநோய் குடல் மற்றும் மலக்குடலுக்கு சேதம் விளைவிக்கும்.

#நிணநீர்
#சுரப்பிபுற்றுநோய்

தற்போது நிணநீர் புற்றுநோய் பொதுவாக ஏற்படுகிறது. இந்த புற்றுநோய்க்கான காரணம்
#ஆட்டோஇமூன் தான் இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
இது எச்.ஐ.வி நோயாளிகளை பெரிதும் பாதிக்கிறது.

#கணையபுற்றுநோய்

கணைய புற்றுநோய் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளையும், காய்கறிகளை குறைவாகவும் உட்கொள்வதால் வரக்கூடியது. அதிலும் #நீரிழிவுநோய் இருந்தாலோ அல்லது கணைய #அழற்சி இருந்தாலோ, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

#வயிற்றுபுற்றுநோய்

ஆல்கஹால், புகைப்பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், வயிற்று புற்றுநோய் வரும். இந்த புற்றுநோய் வந்தால், கடுமையான
#வயிற்றுவலியை உண்டாக்கி, பல மக்களை அழிக்கும்.

#வாய்புற்றுநோய்

அளவுக்கு அதிகமாக
சூயிங் கம் மெல்லுவதாலோ அல்லது புகைப்பிடிப்பதாலோ,
வாய் புற்றுநோய் தாக்கக்கூடும்.

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில்  காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.

செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம்,  முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும். காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும். காலிபிளவரை  பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும்.  இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது. எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு  இருந்தால் அவைகள் சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.  உன்னதமான இதய ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள்  பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள்  எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

#புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

தற்போது உலகில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோய்க்கு அக்காலத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், பலர் இறந்தனர். ஆனால் தற்போது பல நவீன மருத்துவ வசதிகள் இருப்பினும் மக்கள் புற்றுநோய்க்கு பயப்படுகின்றனர். ஏனெனில் இத்தகைய புற்றுநோயில் ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு புற்றுநோய்களும் உள்ளன.

மேலும் புற்றுநோய்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் என்ற சில உள்ளன. உதாரணமாக, கருப்பை, மார்பகம் போன்றவை பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள். ஆனால் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அந்த புற்றுநோய்க்கான அறிகுறி ஒரே மாதிரி மற்றவருக்கு இருக்காது. ஒவ்வொருவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் மாறுபடும்.

இங்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை
பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#மார்பகபுற்றுநோய்

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்குத் தான் இந்த மார்பக புற்றுநோய் மிகப்பெரிய அளவில் தாக்கும். மேலும் இது பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரகூடியது[/b]

#சருமபுற்றுநோய்

சரும புற்றுநோயானது சருமத்தில் அதிகப்படியான அளவில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் இருந்தால் ஏற்படும். எனவே தான் வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு போதிய பாதுகாப்புடன் செல்லுமாறு கூறுகின்றனர்.

#கருப்பைபுற்றுநோய்

இந்த புற்றுநோயும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான ஒன்று. இந்த நோயில் கருப்பைக்குள் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கருப்பை புற்றுநோயானது பெண்கள் கருத்தரித்தால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால், இது அதிகம் தாக்காது.

#உணவுக்குழாய் #_புற்றுநோய்

உணவுக்குழாய் புற்றுநோயானது புகைப்பிடிப்போருக்கு அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி, காரமான மற்றும் சூடான உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் இது ஏற்படும். ஆனால் இந்த புற்றுநோய் வந்தால் உயிர்பிழைப்பது சற்று கஷ்டமாக இருக்கும்.[/b]

#புரோஸ்டேட்புற்றுநோய்

இது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய். இது அதிகப்படியான அளவில் அசைவ உணவுகளின் கொழுப்பு உடலில் சேர்வதால் மற்றும் புகைப்பிடிப்பதால் புற்றுநோயை தூண்டும்.

#இரத்தபுற்றுநோய்

இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகமானால் ஏற்படுவது தான் இரத்த புற்றநோய். இது பெரும்பாலும் 10 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும்.

#கர்ப்பப்பை
#வாய்புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது வைரஸால் ஏற்படுவது. இது பெண்களின் கருப்பையை தாக்குவதால், இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். ஏனெனில் இது நினைத்து பார்க்க முடியாத அளவில் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

#நுரையீரல்புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய் தான் இருப்பதிலேயே அதிக நபர்களை தாக்கி, உயிரைப் பறித்த புற்றுநோய். இது புகைப்பிடிப்பதால் அதிகம் வருவதுடன், அதிகப்படியான காற்று மாசுபாட்டின் காரணமாகவும் தாக்கக்கூடியது.

#கருப்பைக்
#குரியபுற்றுநோய்

இது பெண்களைத் தாக்கும் புற்றுநோய். இது கருப்பை சுவருக்கு வெளியே வீரியம் மிக்க கட்டிகள் வளர்வதால் ஏற்படும். இதுவும் மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது.

#சிறுநீர்ப்பைபுற்றுநோய்

சிறுநீர்ப்பையில் கெமிக்கல்கள் அதிகம் சேர்ந்தாலோ அல்லது அதிகம் புகைப்பிடித்தாலோ தாக்கக்கூடியது. மேலும் இதனை சரிசெய்ய அதிகம் செலவாகும். ஆகவே வருமுன் காப்பதே மேல்.

#மலக்குடலுக்
#குறியபுற்றுநோய்

மலசிக்கல் மற்றும் மூலநோயல் வரும்
இது 50 வயதிற்கு மேற்பெட்ட ஆண்களை அதிகம் தாக்கக்கூடியது.
இப்போது சிறு வயது ஆண் மற்றும் பெண்களுக்கு அதிகமாக இருக்கு
இந்த வகையான புற்றுநோய் குடல் மற்றும் மலக்குடலுக்கு சேதம் விளைவிக்கும்.

#நிணநீர்
#சுரப்பிபுற்றுநோய்

தற்போது நிணநீர் புற்றுநோய் பொதுவாக ஏற்படுகிறது. இந்த புற்றுநோய்க்கான காரணம்
#ஆட்டோஇமூன் தான் இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
இது எச்.ஐ.வி நோயாளிகளை பெரிதும் பாதிக்கிறது.

#கணையபுற்றுநோய்

கணைய புற்றுநோய் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளையும், காய்கறிகளை குறைவாகவும் உட்கொள்வதால் வரக்கூடியது. அதிலும் #நீரிழிவுநோய் இருந்தாலோ அல்லது கணைய #அழற்சி இருந்தாலோ, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

#வயிற்றுபுற்றுநோய்

ஆல்கஹால், புகைப்பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், வயிற்று புற்றுநோய் வரும். இந்த புற்றுநோய் வந்தால், கடுமையான
#வயிற்றுவலியை உண்டாக்கி, பல மக்களை அழிக்கும்.

#வாய்புற்றுநோய்

அளவுக்கு அதிகமாக
சூயிங் கம் மெல்லுவதாலோ அல்லது புகைப்பிடிப்பதாலோ,
வாய் புற்றுநோய் தாக்கக்கூடும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...