Friday, October 19, 2018

பல் வலி

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.

ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம்.

அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு
இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு
பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு
ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு
கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

வெங்காயம்
பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை
வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்
பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்
காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு
இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்
சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்..

ஆனால் அன்றாடம் ஏற்படுகிற பல்வலி ஏற்பட்டது எனில் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பல்வலி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் அதிகரித்து மிகுந்த துன்பத்தை தரும்.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் இயற்கையான நிவாரணிகளைக் கொண்டு பல்வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த இயற்கை முறைகள் பற்களுக்கு பாதுகாப்பு தருகின்றது.

பொதுவாக பல்வலி வருவதற்கு பல் சொத்தை விழுவது ஒரு காரணமாக இருக்கிறது. 90% த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல் சொத்தை இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல் பராமரிப்பு என்பது இன்று மிகவும் முக்கியமாக மக்களிடம் பரவி வருகிறது. உணவு உண்ட பின்பு வாய் கொப்பளிப்பது, காலையிலும் மாலையிலும் பல் தேய்ப்பது என்பது மிகவும் தேவையாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பல்லுக்கு தேவையான ஃபுளூரின் நீரிலிருந்து கிடைக்கிறது. ஃபுளூரின் ஒரு மனிதனுக்கு 1.5 மி.கிராம் தேவை அதனைவிட குறையும்போது பல் சொத்தை விழுவதும் அதற்குமேல் கூடுகின்ற போது பல்லில் களிம்பு போன்ற நிலை ஏற்பட்டு பல் கேடுறுவதும் நிகழ்ந்து வருகிறது.

நாம் பயன்படுத்தும் பற்பசைகள் 500 ppm என்ற அளவில் இருந்து வருகிறது. அதனை தான் நாம் பயன்படுத்துகிறோம். மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும்போது தினமும் காலையும் மாலையும் இருவேளை பல்தேய்ப்பதற்கு அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் எளிய முறைகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்குவதில் கிராம்பும் ஒன்றாகும். கிராம்பு பல்வலியை போக்கக்கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிர்ப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கிராம்பு தைலத்தை ஒரு காட்டன் துணியில் நனைத்து பல்வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல்வலி குணம்பெறும். பல்வலியால் அவதிபடுபவர்கள் அரை டம்ளர் நீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை ஒருசில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் சில கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல்வலி தீரும்.

பூண்டை பயன்படுத்தினாலும் பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பூண்டு ஆன்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பு உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பூண்டையும் கிராம்பையும் சேர்த்து சில துளிகள் உப்புடன் சேர்த்து பல்வலி உள்ள இடத்தில் தடவினால் பல்வலி குணம்பெறும். பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிட்சை முறையாகும்.

மேலும் கோதுமைப் புல்லும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு செயல்படும் ஒன்றாகும். இது பல்வலிக்கு தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிறது. கோதுமைப்புல் பல்வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுக்கிறது.

கோதுமைப்புல்லில் இருந்து சாறு எடுத்து அதை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல்வலியைப் போக்கலாம்.

சின்ன வெங்காயம் பல்வலியை குணப்படுத்தக் கூடிய கிருமி நாசினி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல்வலி வருகிறது என்று அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். மெல்லமுடியவில்லை என்றால் வெங்காயத்தை பசைபோல் அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் தருகிறது.

கொய்யா இலைகளுக்கு பல்வலியை தீர்க்கும் தன்மை உள்ளது. பல்வலி வரப்போகிறது என அறிந்ததும் கொய்யா இலைகள் ஒன்று இரண்டை வாயில் போட்டு மென்றுவிடலாம். மேலும், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நிலையில் சிலதுளி உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்யலாம். நன்கு கொப்பளித்து நலம் பெறலாம்.

மிளகு கலந்த உப்பு பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். சம அளவு உப்பு, மிளகு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசைபோல் அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்த முறையை தினமும் தொடர்ந்து சில நாட்கள் செய்துவந்தால் பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தொடர்ந்து இந்த எளிய சிகிட்சை முறைகளை செய்து பலன் பெற முடியும்.

மருந்து இல்லாமல் எளிய முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இந்த முறைகள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறைகளாகும். அவற்றை நாமும் கடைபிடித்துப் பார்ப்போம். நலமோடு வாழ முயல்வோம்

பல் வலி

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.

ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம்.

அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு
இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு
பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு
ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு
கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

வெங்காயம்
பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை
வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்
பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்
காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு
இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்
சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்..

ஆனால் அன்றாடம் ஏற்படுகிற பல்வலி ஏற்பட்டது எனில் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பல்வலி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் அதிகரித்து மிகுந்த துன்பத்தை தரும்.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் இயற்கையான நிவாரணிகளைக் கொண்டு பல்வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த இயற்கை முறைகள் பற்களுக்கு பாதுகாப்பு தருகின்றது.

பொதுவாக பல்வலி வருவதற்கு பல் சொத்தை விழுவது ஒரு காரணமாக இருக்கிறது. 90% த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல் சொத்தை இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல் பராமரிப்பு என்பது இன்று மிகவும் முக்கியமாக மக்களிடம் பரவி வருகிறது. உணவு உண்ட பின்பு வாய் கொப்பளிப்பது, காலையிலும் மாலையிலும் பல் தேய்ப்பது என்பது மிகவும் தேவையாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பல்லுக்கு தேவையான ஃபுளூரின் நீரிலிருந்து கிடைக்கிறது. ஃபுளூரின் ஒரு மனிதனுக்கு 1.5 மி.கிராம் தேவை அதனைவிட குறையும்போது பல் சொத்தை விழுவதும் அதற்குமேல் கூடுகின்ற போது பல்லில் களிம்பு போன்ற நிலை ஏற்பட்டு பல் கேடுறுவதும் நிகழ்ந்து வருகிறது.

நாம் பயன்படுத்தும் பற்பசைகள் 500 ppm என்ற அளவில் இருந்து வருகிறது. அதனை தான் நாம் பயன்படுத்துகிறோம். மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும்போது தினமும் காலையும் மாலையும் இருவேளை பல்தேய்ப்பதற்கு அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் எளிய முறைகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்குவதில் கிராம்பும் ஒன்றாகும். கிராம்பு பல்வலியை போக்கக்கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிர்ப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கிராம்பு தைலத்தை ஒரு காட்டன் துணியில் நனைத்து பல்வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல்வலி குணம்பெறும். பல்வலியால் அவதிபடுபவர்கள் அரை டம்ளர் நீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை ஒருசில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் சில கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல்வலி தீரும்.

பூண்டை பயன்படுத்தினாலும் பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பூண்டு ஆன்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பு உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பூண்டையும் கிராம்பையும் சேர்த்து சில துளிகள் உப்புடன் சேர்த்து பல்வலி உள்ள இடத்தில் தடவினால் பல்வலி குணம்பெறும். பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிட்சை முறையாகும்.

மேலும் கோதுமைப் புல்லும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு செயல்படும் ஒன்றாகும். இது பல்வலிக்கு தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிறது. கோதுமைப்புல் பல்வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுக்கிறது.

கோதுமைப்புல்லில் இருந்து சாறு எடுத்து அதை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய்தொற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல்வலியைப் போக்கலாம்.

சின்ன வெங்காயம் பல்வலியை குணப்படுத்தக் கூடிய கிருமி நாசினி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல்வலி வருகிறது என்று அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். மெல்லமுடியவில்லை என்றால் வெங்காயத்தை பசைபோல் அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் தருகிறது.

கொய்யா இலைகளுக்கு பல்வலியை தீர்க்கும் தன்மை உள்ளது. பல்வலி வரப்போகிறது என அறிந்ததும் கொய்யா இலைகள் ஒன்று இரண்டை வாயில் போட்டு மென்றுவிடலாம். மேலும், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நிலையில் சிலதுளி உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்யலாம். நன்கு கொப்பளித்து நலம் பெறலாம்.

மிளகு கலந்த உப்பு பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். சம அளவு உப்பு, மிளகு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசைபோல் அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்த முறையை தினமும் தொடர்ந்து சில நாட்கள் செய்துவந்தால் பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தொடர்ந்து இந்த எளிய சிகிட்சை முறைகளை செய்து பலன் பெற முடியும்.

மருந்து இல்லாமல் எளிய முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இந்த முறைகள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறைகளாகும். அவற்றை நாமும் கடைபிடித்துப் பார்ப்போம். நலமோடு வாழ முயல்வோம்

மகளிர் மருத்துவம்*

*மகளிர் மருத்துவம்*

*திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :*

1. *வெள்ளைபடுதல்* -

அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. *பிறப்புறுப்பில் புண்* -

மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. *சீரற்ற மாதவிலக்கு* -

அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. *மாதவிலக்குக் கால வயிற்றுவலி* -

முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. *உடல் நாற்றம்* -

ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

*திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.*

1. *கர்ப்பகால வாந்தி* -

அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. *பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண்* -

வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. *பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு* -

சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. *தாய்ப்பால் பற்றாக்குறை* -

பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்*

*♨ எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்*

எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும்.

இத்தகைய எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும்.

பிரண்டை

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை. மேலும் இவை உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

காய்கறிகள்

கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது.

கீரைகள்

அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

எள்

இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகு

கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...