Tuesday, November 27, 2018

தானத்தில் சிறந்த தானம்: இன்று தேசிய கண் தான தினம்...*

*தானத்தில் சிறந்த தானம்: இன்று தேசிய கண் தான தினம்...*

*08-09-2018*

👁ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் லட்சக்கணக்கானோர் பார்வைஇன்றி தவிக்கின்றனர்.

👁ஆனால் கண் தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானம் அளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

👁இறப்போரில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. இதற்கு முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

*கார்னியா குறைபாடு*

👁கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில் பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாட்டால் சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, தானம் கிடைக்கும் கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

*யார் தரலாம்*

👁அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டி.பி., ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே கண் தானம் செய்ய முடியாது. கண்தானம் செய்ய விரும்புவோர் கண்தான வங்கி, அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

*1.50 கோடி*

👁உலகில் மொத்தம் உள்ள பார்வையற்றவர்களில் பாதி பேர் நம்நாட்டில் உள்ளனர். இங்கு 1.50 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் 'கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2020ல் 1.06 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பார்வை இழப்பில் 75 சதவீதம் தடுக்கக் கூடியது.

*50 ஆண்டு*

👁நம்நாட்டில் 2017ல் 1,285 கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. தானம் மூலம் 2017ல் 1,844 கார்னியா பெறப்பட்டுள்ளது. இதுவே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம். கடந்த 52 ஆண்டுகளில் 26 ஆயிரம் கார்னியாக்கள் தானம் பெறப்பட்டுள்ளன.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...