Saturday, August 11, 2018

மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு

நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை.
உதாரணமாக,
      இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.

ஆனால்
.. அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக
15 வாட்ஸ்
கொண்ட
2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம்
உபயோகித்தால் மாதம்
4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.

அதுபோல
40 வாட்ஸ் திறன் கொண்ட
2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால்,
    மாதம் 12 யூனிட் செலவாகும்.
.
750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.

150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும்
12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.
.
2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட
1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம்
உப யோகப்
படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.
.
அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால்
மாதம் 30 யூனிட் செலவாகும்.

75 வாட்ஸ் திறனுள்ள
2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால்,
மாதம் 36 யூனிட் செலவாகும்.
.
400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும்
ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால்
மாதம் 12 யூனிட் செலவாகும்.
100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.
.
500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,
300 வாட்ஸ்
வெட் கிரைண்டர் தினமும்
ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.

200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும்,
740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால்,
மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.
.
7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால்
மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.
    இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக
உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’

ஆப்ரேஷன் செய்யாதே😃 அனைத்து நோய்களும் குணமாக தற்போது மருந்து வந்துவிட்டது😃

😃 ஆப்ரேஷன் செய்யாதே😃
அனைத்து நோய்களும்  குணமாக தற்போது மருந்து வந்துவிட்டது😃

கிட்னி பெயிலியர்
- மூளைக் கட்டி -
காது ஓட்டை -
இருதய ஓட்டை -
இரத்தக் குழாய் அடைப்பு _
பிளட் உறைதல் -
அல்சர் - கட்டிகள் -
சதை வளர்ச்சி -
டான்சில் -
மூட்டு தேய்மானம் _
எலும்பு தேய்மானம் -
சீழ் பிடித்த உறுப்பு -
  எலும்பு முறிவு -
விரைவாதம் -
ஹெர்னியா -
கருப்பை கட்டி -
ஓவரி கட்டி -
பிலோபியன் அடைப்பு -
உடல் உள் உறுப்புக்களின் வீக்கம் மற்றும் சுருங்கி போதல் மற்றும் கடினமாதல் -

தைராய்டு -
சைனஸ்

எதுவானாலும் அணுகவும் முன் அனுமதி பெற்று நேரில் வரலாம் கொரியர் மூலமும் மருந்து பெறலாம்😃 முகவரி😃யூத் கிளினிக் & யூத் லேப் செல்வி தியேட்டர் அருகில் செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்😃 செல் .9994568294😃 நம் வெப்சைட் பாருங்கள் www.youthclinic.in  பயனுள்ள நியுஸ் உங்கள் குருப்பிற்கு அனுப்பவும்

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..!

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..! உங்களுக்கு தெரியுமா..???

உலகமே கைக்குள் என்ற நிலைமை வந்துவிட்டது. விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் புதிது புதிதாக வரும் நோய்களை வெல்ல எந்த அறிவியலாலும் முடியவில்லை.

இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தை முறையாகச் செய்தால் நிச்சயம் வெல்ல முடியும் என்று பலருக்குத் தெரியவில்லை. மூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 

உதாரணமாக கறிவேப்பிலையைக் குறிப்பிட்டாலும் சமீப காலங்களில் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை எல்லாவிதமான காய்ச்சலையும் விரட்டுவதில் இதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் கலந்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும்.
பன்றிக்காய்ச்சலுக்கும், எலிக்காய்ச்சலுக்கும்... ஏன் வவ்வால் மூலம் பரவியதாகச் சொல்லப்பட்ட நிபா வைரஸ் காய்ச்சலுக்கும்கூட இந்த கறிவேப்பிலை மருந்து நல்ல நிவாரணம் தரும். பலருக்கும் இந்த மருந்து பலனளித்தது, பலன் தந்து கொண்டிருக்கிறது.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் கோலை வீசி விட்டு குலுங்கிக் குலுங்கி நடப்பானாம்.

என்றும் இளமையுடன் வாழ திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது காலையில் இஞ்சியை சாறு எடுத்து குடிப்பது, டீயில் இஞ்சி சேர்த்துக் குடிப்பது, இஞ்சித் துவையல் செய்து சாப்பிடுவது, இஞ்சி ஜூஸ் குடிப்பது என அன்றாட நிகழ்வுகள் அமைய வேண்டும்.

இதேபோல் சுக்குடன் மிளகு, தனியா சேர்த்துப் பொடியாக்கி மாலை நேரத்தில் டீக்குப் பதிலாக அந்தக் கலவையை கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிப்பதன்மூலம் செரிமானக் கோளாறில் தொடங்கி இதயம் தொடர்பான நோய்கள், சளித்தொல்லை என நிறைய நோய்கள் சரியாகும்.

இதேபோல் இரவில் கடுக்காயை (விதையை நீக்கிவிட்டு) இரவில் கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும், மூல நோய் விலகும்.

வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு என எல்லாமே மருந்துதான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? சிலர் கேட்கலாம், அப்படியானால் தினமும் அந்த மருந்துகள் இல்லாமல் எங்கள் வீட்டில் சமையலே செய்வதில்லை. ஏன், எங்களுக்கு சுகர் வருகிறது, பிரஷர் வருகிறது, புற்றுநோய் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

நீங்கள் அந்த மருந்துகளையும் சாப்பிடுகிறீர்கள். கூடவே, பட்டை தீட்டிய அரிசியைச் சாப்பிடுகிறீர்கள், பல்வேறு ரசாயனங்களைப் போட்டு பிளீச் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை தினம் தினம் சாப்பிடுகிறீர்கள், கல் உப்புக்குப் பதில் அயோடின் சேர்த்த உப்பு என்று யார் யாரோ சொல்வதைக் கேட்டு பொடி உப்பைச் சேர்க்கிறீர்கள், பெட்ரோல் எடுத்ததுபோக மிச்சமாகிப்போன குருடாயிலில்  தயாரித்த எண்ணெய்களில்தானே தினம் தினம் வறுக்கிறீர்கள், பொரிக்கிறீர்கள், வடை செய்கிறீர்கள், பூரி போட்டு சாப்பிடுகிறீர்கள். இப்படி விஷமாகிப்போன உணவுகளை ஒவ்வொருவேளையும் சாப்பிடும்போது நீங்கள் எத்தகைய விலைஉயர்ந்த மருந்துகளைச் சாப்பிட்டாலும் நோய்கள் வரிசைகட்டி நிற்கத்தான் செய்யும்.

இதுமட்டுமல்ல வாரம் ஒருநாள்தான் நான்வெஜ் என்று சொல்லிக்கொண்டு ஊசி போட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் சிக்கனைச் சாப்பிடுகிறீர்கள். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தைச் சாப்பிடுகிறீர்கள், பூச்சிமருந்தில் முக்கி எடுத்த திராட்சைப்பழத்தைச்  சாப்பிடுகிறீர்கள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவரைச் சாப்பிடுகிறீர்கள். இவற்றில் உள்ள விஷங்கள் உங்களை பாதிக்காமல் என்ன செய்யும்?

இன்னும் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஒவ்வாத உணவுகளை வேண்டி விரும்பிச் சாப்பிடுகிறோம். டீக்கடையில் தேயிலையில் கலப்படம், அன்றாடம் அருந்தும் பாலில் கலப்படம் என எல்லாம் கலப்படம், ரசாயனம்... அவ்வளவும் நமக்கு நோயை வரவேற்க காரணமாகிறது.

இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முதலில் நம்மிடையே பொதுவான விழிப்புணர்வு வேண்டும். முன்பைக்காட்டிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும் செயலாக்கத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனா அந்த விழிப்புணர்வு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராமிலேயே நின்றுவிடுகின்றன.

அதாவது பார்க்க, பகிர, கருத்து சொல்ல என முடிந்துவிடுகிறது. வீட்டுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் விளைவாக ஓட்டல் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். அங்கே சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவில் தொடங்கி உங்களுக்கு பார்சல் போட்டு கொடுக்கப்படும் பாலித்தீன் பேப்பர் வரை எல்லாம் உயிர்க்கொல்லிகள்.

சிந்திப்போம். நோய்களை வெல்ல எளிய வழிகள் நிறைய இருக்கின்றன.

தலை வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி (இழைத்து) நெற்றியில் பற்று போடுங்கள்,

ஜலதோஷம் வந்தால் மணத்தக்காளி சூப் குடியுங்கள்.

மூக்கில் நீர் வடிந்தால் நொச்சியிலையை கொதிக்க  வைத்து ஆவி (வேது) பிடியுங்கள்.

சளி பிடித்தால் வெள்ளைப்பூண்டு பாலில் (சிறிது நீர் சேர்த்து) வேக வைத்து மிளகுப்பொடி, மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் குடியுங்கள் குணம் கிடைக்கும்.

இவை மட்டுமல்ல கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர்முன் அமர்ந்து வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என வலிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதுமட்டுமல்ல ஆண்மைக்கே சவால் விடும் பிரச்னைகளும் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.

இவைதவிர பொதுவாக நமது உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாய்வுக்கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், புற்றுநோய் என  நோய்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கை நிறைய காசு இருக்கிறது. ஆனால் அவற்றைக் கொண்டு நோய்களை விரட்ட முடியவில்லை. நோய்களை விரட்ட சரியான ஆட்களும் இல்லை. நோய்களுக்கேற்ப மருத்துவர்களும் பெருகிவிட்டார்கள், ஆனால் அவர்களிலும் பலர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கையில் கிடைத்ததை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கோ தயாரித்த மருந்துகளைக் கொடுத்து நம்மை சோதனை எலிகளாக்கி எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதனால் நோய் குணமாவதற்குப்பதிலாக பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படுகின்றன. அன்றைக்கு 100 மில்லி கிராம் குரோசினைச் சாப்பிட்டால்  காய்ச்சல் விலகியது. இன்றைக்கு 600-ஐத் தாண்டியும் நம்மிடம் சவால் விடுகிறது காய்ச்சல்.

எது வந்தால் என்ன? இயற்கையாக நம்மைச் சுற்றி மிக எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நோய்களை வெல்லலாம். 

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

பூட்டிய அறையில் தூங்கினால் வரும் உடல் உபாதைகள்

பூட்டிய அறையில் தூங்கினால் வரும் உடல் உபாதைகள் :

ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவுகொண்ட சிறிய அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏ.சி. போட்டு தூங்குகிறார்கள். ஏ.சி. இல்லாதவர்கள் கூட கொசுக் கடிக்கு பயந்து கதவு ஜன்னல் எல்லாவற்றையும் சிக்கென்று அடைத்து தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.

பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து போகிறது. அப்படி குறையும்போது நுரையீரலால் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும், இது தொடர்ந்தால் மனிதன் மூர்ச்சையாகி விடுவான். உடலில் உள்ள உயிர் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். அதனால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்யத் தொடங்கும்.

அது நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்யும். தண்ணீரில் இரு மடங்கு ஆக்ஜிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் உள்ளன. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் ‘இரண்டாவது நுரையீரல்‘ என்று அழைக்கிறார்கள்.

சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும். அந்த கழிவுநீரை வெளியேற்ற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

இந்த தள்ளாட்டத்தால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவமாக படிகிறது. சிறுநீரகத்திலும் இந்த படிமம் படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.

ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத்தீட்டு‘ என்று அழைத்தார்கள். அதனால் காற்று தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம். சிறுநீரகத்தை காப்போம்.

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!

பள்ளியிலிருந்து  திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”

ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...