DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Friday, December 7, 2018
10 நாளில் தொப்பைக்கு விடுதலை
https://youtu.be/Sk1_yQiY9Mw
தொப்பை இருப்பதால் அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் பாதிக்க படுகிறது.. தொப்பை இருப்பவர்களுக்கு பின்னாளில் சர்க்கரை வியாதி. மாரடைப்பு.. போன்ற பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது... தொப்பையை குறைக்கும் எளிய வழிகளை அறிய லிங்கை தொடருங்கள்.. மிகவும் பயனுள்ள வீடியோ.. மிஸ் பண்ணிடாதீங்க.
...
இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது
இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது. ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது. கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது. ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது. கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
நாள்தோறும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றம்–1*
*நாள்தோறும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றம்–1*
நாம் தொடர்ந்து ஒரு சில உணவுபொருட்களை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் அதனால் ஏற்பட கூடிய பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக, பழ வகைகள், காய்கறிகள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாகவே பாதாம், அத்திப்பழம், முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிடுவது ஏராளமான பயன்களை தர வல்லது.
இந்த வகையில், தினமும் 2 வாழை பழம் சாப்பிட்டு வந்தால், பல மாற்றங்கள் உடலில் ஏற்படுமாம். எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதை இப்போது பார்ப்போம்...
மஞ்சள் நிற பழம் என்றால், நம் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இந்த வாழைப்பழம் தான். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த பழத்தின் முழு தன்மைக்கும் முக்கிய காரணம். வாழைப் பழத்தில், பொட்டாசியம், வைட்டமின்–எ, வைட்டமின்–சி, கால்சியம், பாஸ்பரஸ், போலேட், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளதாம்.
ரத்த சோகைக்கு...
பலருக்கு எப்போதும் சோர்வாகவும், உடல் முழுவதும் வெளுத்து போனது போன்றும், சுவாச பிரச்சினையாகவும் இருக்க கூடும். இவை ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதாலே ஏற்படுகிறது. இதை ரத்த சோகை என்போம். தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்தலாம்.
வாழைப்பழத்தில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை மிக சீக்கிரத்திலே குறைய பல வாய்ப்புகள் உள்ளதாம். இவற்றில் உள்ள ஸ்டார்ச், அடிக்கடி பசி எடுப்பதை தவிர்க்கிறது. அத்துடன் உங்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இது குறைகிறதாம்.
எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருப்பது போன்றும், ஜீரணம் ஆகாதது போன்றும் இருப்பது அதிகமாகி விட்டது. இதனை சரி செய்ய, வெறும் 2 வாழைப்பழம் போதும். உங்களின் குடல் சார்ந்த பலவித பிரச்சினைகளுக்கு, வாழைப்பழம் சிறந்த தீர்வை தருகிறது. மேலும், மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த தினமும் 2 வாழைப்பழமே போதும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
கெட்டக் கொலஸ்ட்ராலை குறைக்கும் மல்லிப்பொடி!
கெட்டக் கொலஸ்ட்ராலை குறைக்கும் மல்லிப்பொடி!
இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. மல்லி பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லிப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால்தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர, மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.
மல்லி பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால், மல்லிப் பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.
மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை போக்கும் சக்தி கொண்டது மல்லி பொடி. மல்லி எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
கெட்டக் கொலஸ்ட்ராலை குறைக்கும் மல்லிப்பொடி!
கெட்டக் கொலஸ்ட்ராலை குறைக்கும் மல்லிப்பொடி!
இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. மல்லி பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லிப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால்தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர, மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.
மல்லி பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால், மல்லிப் பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.
மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை போக்கும் சக்தி கொண்டது மல்லி பொடி. மல்லி எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் வெற்றிலை...!
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் வெற்றிலை...!
வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். தாம்பூலம் தரிப்பதால் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கிவிடும்.
தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம்.
கொழுந்து வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டலாம்.
வெற்றிலைச் சார்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
உங்கள் காரில் இருந்து வாந்தியை சுத்தம் செய்தவதற்கான அல்டிமேட் கையேடு
உங்கள் காரில் இருந்து வாந்தியை சுத்தம் செய்தவதற்கான அல்டிமேட் கையேடு
காரின் உட்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வது எப்போதும் அவசியமான ஒன்றாகும். காரின் உட்புறம் எந்த நேரத்தில் அசுத்தமாகும் என்பது உங்கள் கட்டுபாட்டில் இருக்காது. இருந்தாலும், காரின் உட்புறத்தில் திடீரென ஏற்படும் அசுத்தம் அல்லது பாதிப்புகளை எதிர் கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். காரில் பயணம் செய்யும் குழந்தைகள் காரின் உள்ளேயே வாந்தி எடுத்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த வாந்தியை சுத்தம் செய்வது கடினமான செயல் என்ற போதும், இதை எப்படி எளிதாக செய்வது என்பது குறித்த டிப்ஸ்கள் இந்த கட்டுரையில்
உங்கள் காரில் உள்ள வாந்தியை எப்படி சுத்தம் செய்வது?
முதலில் செய்ய வேண்டியது கையில் கையுறை அணிவதுடன், முகத்தில் முகமூடி ஒன்றை அணித்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் வாந்தி வாடையுடன் இருக்காது. இருந்தாலும், அசுத்தமாக உள்ள காரின் உள்ளே செல்லும் போது அங்குள்ள வாடை காரணமாக மயக்கம் ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. காரின் உள்புறத்தை சுத்தப்படும் பணிகளை முழுமையாக செய்து முடிக்கும் வரை கையுறை மற்றும் முகமூடிகள் அணிந்திருக்க வேண்டும். நீங்கள் அணியும் முகமூடிகளில் நல்ல மணம் வீசு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்து கொள்வது நல்லது
இரண்டாவதாக, நீங்கள் கார் அப்ஹோல்டிரி கிளினரை பயன்படுத்த வேண்டும். இந்த கிளினர்களில் கெமிக்கல் கலந்து இருப்பதால், அந்த திரவங்கள், சீட்களில் படர்ந்து விட வாய்ப்புள்ளது. இதனால், நீங்கள் அருகில் உள்ள ஒர்க் ஷாப் அல்லது உள்ளூர் ஷாப்களில் விற்பனை செய்யப்படும் கிளீனிங் கெமிக்கலை வாங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிளீனிங் செய்யும் போது, நீங்கள் சீட்கள் மற்றும் சீட் கவர்களையும் செக் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை லெதர் பொருத்தப்பட்டிருந்தால், நீங்கள் நல்ல லெதர் கன்டெய்னர்களை வாங்க வேண்டியது அவசியமாகும். லெதர் கன்டெய்னர்கள் சாதாரண கிளீனிங் பொருட்களை விட சிறிதளவு விலை அதிகமாக இருந்தாலும், இதன் மூலம் கிளீனிங் வேலைகளை சிறப்பாக செய்து கொள்ள முடியும்.
காரில் இடம் பெற்றுள்ள முக்கிய பாகமான கார்பெட் இருக்கிறது. இது அதிகமாக மற்றவர்கள் கண்ணில் படும், எனவே கார்பெட்களை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். காரின் உள்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள கார்பெட்கள் பெரிதும் உதவும் என்பதால் இதை முழுமையாக கிளீனிங் செய்ய, கார்பெட்களை காரில் இருந்து அகற்றி, கார்பெட் கிளீனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது சிறப்பான பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், விரைவாக காய்ந்து விடும். உங்கள் காரில் உள்ள கார்பெட்டை உங்களால நீக்க முடியவில்லை என்றால், அதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியமாகும்.
கார்பெட் கிளீனிங் செய்ய பல்வேறு நிறுவனங்களில் கிளீனிங் பொருட்கள் கிடைக்கின்றன. இதில் உங்கள் காரின் கார்பெட் கலருக்கு பொருந்தும் வகையிலான கிளீனர்களை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும். கார்பெட்டை கிளீன் செய்யும் போது, முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அரைகுறையாக சுத்தம் செய்தால், கார்பெட்டின் சில இடங்களில் கரை படர்ந்து விடும். தேவையான பொருட்களை தயாராக வைத்து கொண்ட பின்னர் நீங்கள் சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்கலாம்.
வாந்தியில் உள்ள திடப்பெருட்கள் கெமிக்கல் எதுவும் பயன்படுத்தாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு கையில் ஷாப்பிங் பேக் ஒன்றை வைத்து கொண்டு, மற்றொரு கையில் திடப்பொருட்களை அகற்ற உதவும் ஏதாவது ஒரு பொருளை வைத்து இந்த பணியை செய்ய வேண்டும். திடப்பொருட்களை அப்படியே எடுத்து மற்றொரு கையில் உள்ள ஷாப்பிங் பேக்கில் போட்டு அகற்ற வேண்டும். இதே போன்று, மூன்று அல்லது நான்கு முறை செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு திடப் பொருட்களையும் அகற்றி, பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக்கில் போட்டு, அதை மூடி குப்பை தொட்டில் போட்டு விட வேண்டும். இதன் மூலம் பெரும்பாலான வாந்திகள் அகற்றப்பட்டு இருக்கும், இருந்தாலும், வாடை மற்றும் கரைகள் இன்னும் படிந்திருக்கும்.
இவற்றை சுத்தம் செய்ய கெமிக்கல்களை பயன்படுத்தும் முன்பு, நீங்கள் திடப் பொருட்களை அகற்றும் போதும் அந்த பகுதியில் எதுவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக என்பது உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற திடப் பொருட்களை அகற்றும் போதும், இரும்பால் செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்துவதை விட பிளாஸ்டிக்களால் உருவாகப்பட்ட கருவிகளை பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும். ஏன்என்றால், இரும்பாலான கருவிகள், காரின் உள்பகுதியை கிழித்து இருந்தால், கெமிக்கல் கொண்டு சுத்தம் செய்யும் போது உட்புறத்தில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்.
இதற்கு அடுத்ததாக, உறிஞ்சும் தன்மை கொண்ட துண்டு துணியால், வாந்தி பரவிய பகுதிகளில் அழுத்தி எடுக்க வேண்டும். வாந்தி எடுத்த இடங்களில் இந்த துணியால் போதுமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும். காரில் அதிகளவு ஈரப்பதம் இல்லாத அளவில் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும், துணிகளில் எந்தவித தூசும் இல்லாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இந்த துணிகள் ஏற்கனவே பயன்படுத்தவைகளாக இல்லாமல், புதிய துணிகளை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.
பெரிய அளவிலான துணிகளை பயன்படுத்துவது, எல்லா பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் அகற்ற உதவுவதோடு, கரைகளையும் அகற்ற உதவும். அடுத்ததாக, கடுமையான வாடையை அகற்ற வேண்டும். இதற்கு எளிமையான வழி, ஒரு பேக்கிங் சோடாவை எடுத்து அசுத்தமான இடத்தின் மீது, அடர்த்தியாக பூச வேண்டும். இதே நிலையில் 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். ஏன்என்றால், மொத்த வாடையும் இதனால் முழுவதுமாக அகற்றப்பட்டு விடும். இந்த பேக்கிங் சோடாகள் இயற்கையிலேயே வாடைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும், சுத்தம் செய்யும் பகுதியில் எந்த கரையையும் விட்டு செல்லாது. இதுமட்டுமின்றி இது எளிதில் கிடைக்க கிடைப்பதுடன், குறைந்த விலையிலும் கிடைக்கும்.
உங்கள் காரின் உள்அலங்காரங்களை பொறுத்து, நீங்கள் பேக்கிங் சோடாவை உலந்த நீரிலோ அல்லது வினிகரிலோ கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் இதில் உள்ள கெமிக்கலின் அளவுவை குறைக்கலாம். இவை இரண்டுமே காரின் உட்புறத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும். பேக்கிங் சோடா பூசி, 30 நிமிடங்கள் கழித்து, ஈரமான துணியை பயண்படுத்தி அழுக்கு பகுதியை துடைக்க வேண்டும். இதற்கு உடல் ரீதியான திறன்கள் தேவைப்படும். இதனால் உங்களுக்கு தோல்பட்டையில் வலி ஏற்பட்ட வாய்ப்புள்ளது. ஆனாலும் இது கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.
இதை செய்து முடித்ததும், காரை சுத்தம் செய்யும் பணிகளில் உங்களது முக்கியமான வேலைகள் நிறைவு பெற்று விட்டது. தற்போது நீங்கள், சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி அசுத்தமான இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்த பணியின் போது முழு பக்கெட் தண்ணீரையும் காரின் உள்ளே ஊற்றி விட கூடாது. இதனால் சீட்கள் தேவையின்றி ஈராமாகி விடும். சிறிய கப்களை பயன்படுத்தி இந்த சுத்தப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால் உங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றதாகவே கருதப்படும். சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின்னர் உங்கள் காரை முறையாக வெண்டிலேட் செய்வது அவசியம். கார் முழுமையாக ஈரப்பதம் இன்றி காய, காரின் கதவுகளை திறந்து விட்டு காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே செல்லுமாறு நிறுத்தி வைக்க வேண்டும்.
வாந்தியால் ஏற்பட்ட வாடை அல்லது கரை எதுவும் எஞ்சி இருந்தால், இப்படி காரின் கதவுகளை திறந்து வைப்பதன் மூலம் விரைவாக அகற்றி விட முடியும். காரின் உள்ளே இருக்கும் வாந்திகளை சுத்தம் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதையும், அதற்கு வலுவான மனநிலை மட்டுமின்றி அதிக திறனும் தேவை என்பதை தற்போது நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.
மனிதர்களை பொறுத்தவரை இதுபோன்று விபத்துகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி காரை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள, சில மணி நேரங்களையும், பணத்தையும் செலவிட வேண்டியது அவசியமாகும்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...