1.*மூட்டுபிடிப்பு,மூட்டு வலி,போன்றவை குணமாக*:
சரக்கொன்றை மரவிதையை கரைத்து பற்றுப்போட மூட்டுபிடிப்பு,மூட்டு வலி,போன்றவை குணமாகும்.
2.*கல்லீரல் வீக்கம் குறைய கெட்ட ஏப்பம், வாய்வு தொந்தரவு போன்றவையும் குறைய*:
சரக்கொன்றை பூவை எடுத்து சம அளவு மணத்தக்காளி இலைகளை சேர்த்து விழுது போல நன்றாக அரைத்து சிறிது சாப்பிட்டு வயிற்றில் சிறிது பூசி வந்தால் கல்லீரல் வீக்கம், கெட்ட ஏப்பம், வாய்வு தொந்தரவு ஆகியவை குறையும்.
3.*சிறுநீரகக் கல் குறைய*:
நீர்முள்ளி காய்நத சமூலம், நெருஞ்சில் சமூலம், சுரைக் கொடி சமூலம், வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு , கடுகுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீரில் வெளியேறும்.
*குறிப்பு*:
மூலப்பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
சுபம்