Monday, May 23, 2016

.இயற்கை மருத்துவம்

தேன்னும் லவங்கப் பட்டையும் .......... உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!
அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

**தேனும் லவங்கப் பட்டையும்**
இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

**அற்புத மருந்து இதோ!**
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

**சிறுநீர்குழாய் கிருமிகள்**

2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**
2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

**ஜலதோஷம்**
சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

**வயிற்று அல்சர்**2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

**வாயு தொல்லை**இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

**எதிர்ப்பு சக்தி வளரும்**
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

**அஜீரணம் **
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

**நீண்ட ஆயுள்**
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

**தொண்டையில் கிச் கிச்!**
1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.

**முகப்படுக்கள் அடியோடு மறைய!**
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

**சரும நோய் தீர**சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

**எடை குறைய வேண்டுமா?**
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.

அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

**புற்று நோய்க்கு அருமருந்து**
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

**அயர்ச்சி**
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

**வாய் துர்நாற்றத்தை போக்க!**
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.

**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**
தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம் போய்விடுமாம்.
பெண்களுக்காக…

1. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
2. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
3. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
4. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு! 
5. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!
6. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
7. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
8. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
9. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
10. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
11. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
12. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
13. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
14. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
15. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
16. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
17. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
18. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
18. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
20. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
21. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
22. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!
23. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
24. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
25. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
26. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
27. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
28. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
29. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
30. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
31. வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
32. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
33. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
34. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
35. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
36. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
37. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
38. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
39. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!
40. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
41. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
42. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
43. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
லப்… டப்..!
44. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
45. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
46. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
47. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
48. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்
49. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
50. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
51. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
52. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!
53. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
54. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
55. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
56. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
57. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
58. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
59. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
60. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
61. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
62. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
63. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
64. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
65. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
66. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
பொதுவானவை
67. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
68. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
69. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
70. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
71. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
72. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
73. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
74. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
75. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.
நன்றி: விகடன்.
தினம் இரண்டு சப்போட்டா
சாப்பிடுங்கள்!
தினமும் இரண்டு சப்போட்டா பழம்
சாப்பிட்டால் உச்சிமுதல்
உள்ளங்கால் வரை பலன்
கிடைக்கும் என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.
100 கிராம் சப்போட்டாவில்அட
ங்கியுள்ள சத்துக்கள்
புரதம்1.0 கிராம், கொழுப்பு 0.9
கிராம், நார்ச் சத்து2.6 கிராம்,
மாவுப்பொருள் 21.4 கிராம்,
கால்சியம் 2.1 மில்லிகிராம்,
பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம்,
இரும்புச்சத்து 2.0 மில்லி கிராம்,
கரோட்டின் 97 மைக்ரோகிராம்,
ரிபோஃபிளோவின் 0.03 மில்லி
கிராம், நியாசின்0.02 மில்லி கிராம்
மற்றும் விட்டமின் சி 6.1
மில்லிகிராம் உள்ளது.
மருத்துவ பயன்கள்
சப்போட்டாபழம், ரத்த ஓட்டத்தை
சீராக்கி,கொழுப்பை நீக்குகிறது.
வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல
நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும்
தீர்வு தருகிறது,
எலும்புகள்வலுவடையும்
இரவில்உறக்கம் வராமல்
கஷ்டப்படுபவர்களுக்கு
அருமருந்து இந்த சப்போட்டா.
இதை சாறாக்கி அருந்தலாம்.
பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க்
ஷேக்,என்று விதவிதமாய் இதைத்
தயாரித்துச் சாப்பிடலாம்.
இதயம் சம்பந்தமான
கோளாறுகளுக்குஏற்ப
பாதுகாக்கும் தன்மையும்
சப்போட்டா பழத்திற்கு உண்டு என
அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு
ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது
.
சப்போட்டா பழத்தை அடிக்கடி
சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல்
புற்று நோய் ஏற்படாது. சருமத்தை
மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா
பழத்திற்கு உண்டு
உடம்பில் உள்ள தேவையில்லாத
கொழுப்பை குறைத்துவிடும்
ஆற்றல் இதற்கு உண்டு.
பச்சை மிளகாய் சாப்பிடுங்கள்!
கார உணவுகள் சாப்பிடவேண்டுமெ
ன்று ஆசைப்பட்டால்
காரப்பொடிகைளை அதிகம்
தூவிவிட்டு சாப்பிடுவதை
தவிர்த்துவிட்டு பச்சை மிளகாயை
சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய் காரம் மிகுந்தது
தான் என்றாலும், உடலுக்கு
ஆரோக்கிய நன்மைகளையும்
வழங்குகிறது.
100 கிராம் பச்சை மிளகாயில்
அடங்கியுள்ள சத்துக்கள்
கலோரி 40, சோடியம்9 மிகி,
பொட்டாசியம் 322 மிகி,
கார்போஹைட்ரேட் 9 கிராம்,
நார்ச்சத்து 1.5 கிராம், விட்டமின்ஏ,
சி பி6, டி, பி12, விட்டமின் ஈ
மற்றும் கால்சியம் போன்ற
சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
உணவில் காரத்திற்காக
சேர்க்கப்படும் மிளகாய் கூட
கொழுப்புகளை கரைத்துவிடும்
தன்மையுடையது. ஏனெனில்
இதில் கொழுப்புகள் குறைவாக
இருப்பதோடு, உடலில் இருக்கும்
கலோரிகளையும் கரைத்துவிடும்.
பச்சை மிளகாயை உணவில்
சேர்த்துக்கொண்டால், உணவு
செரிமானம் வேகமாக நடைபெறும்.
பச்சை மிளகாய்,மூளைக்குள்
என்டோர்ஃபின்ஸை உற்பத்தி
செய்யும். இது உங்கள்
மனநிலையை நன்றாக
வைத்திருக்கும்.
பச்சை மிளகாயை உட்கொண்டால்,
நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்
இடர்பாடு குறைகிறது.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரிய
ா குணங்கள் அடங்கியுள்ளது.
இந்த குணத்தினால் தொற்றுக்கள்
ஏற்படாமல் காக்கிறது. அதுவும்
முக்கியமாக சருமதொற்றுகள் நீங்க
உதவி புரிகிறது.
பச்சை மிளகாயில் இயற்கையாகவே
இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
எனவே பெண்கள் உட்கொள்வது
நல்லது.
“குழந்தைகளின் தொண்டை சதை வளர்ச்சி சரியாக அனுபவ வைத்தியம்”
சில குழந்தைகளுக்கு தொண்டையில் சதை அதிகமாக வளர்ந்து தொண்டையையே மூடிவிடும் மூச்சு விட கூட சிரமப்படுவர் தயவுசெய்து அறுவை சிகிச்சை செய்யாதீர்கள் , 
இதற்கு அமுக்கராங் கிழங்கு, சுக்கு, இரண்டும் 50 கிராம் அளவு எடுத்து பொடித்து சிறிதளவு பால் விட்டு அரைத்து 250மி.லி பாலில் போட்டு கொதிக்க வைத்து குழம்பு பருவத்தில் எடுத்து காதின் அடிபாகத்தில் தொண்டையின் இருபாகங்களிலும் மேல் பூச்சாக தப்பளம் இளஞ்சூடுடன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு வர சதை வற்றும்.
நன்றி! 
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
தீத்திபாளையம்,கோவை 
+919894285755
டூத் பேஸ்ட்’ எனும் உயிர்க்கொல்லி!

குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி
ரிப்போர்ட்!

பல் நம் உயிரின் முக்கிய ஆதாரம் என்றால்
நம்புவீர்களா? 

நீங்கள் நம்பினாலும் சரி;
நம்பவில்லையென்றாலும் சரி அதுதான்
உண்மை. 

மூளை சம்பந்தமான, இதயம்
சம்பந்தமான நோய்களில் கூட பற்களுக்கு
மிக முக்கியப் பங்கு இருக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பல்லை
வைத்து லட்சக்கணக்கான கோடி வர்த்தகம்
இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதுதான்
இப்போதுள்ள பகீர் தகவல்.

‘உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா’, ‘உங்க
பேஸ்ட்டுல துவர்ப்பு இருக்கா’,
‘தேய்ச்சுக்கிட்டே இருங்க…’ ’உங்க பேஸ்ட்டுல
காரம் இருக்கா…” இப்படி அடுக்கடுக்கான
விளம்பரங்களை கேட்டு கேட்டு அதில்
ஏமாந்து இன்று, கொஞ்சம் கொஞ்சமாய்
நம்முடைய பற்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

பற்களை சுத்தமா வச்சுக்கலனா…
உயிருக்கே ஆபத்து என்கிற ரேஞ்சுல
பில்டப் கொடுத்து, நமக்கெல்லாம் உயிர்
பயத்தைக் காட்டி, இவர்களின் கேடுகெட்ட
பற்பசையை நம்மிடம் திணிப்பதன் மூலம்
நடக்கும் பிசினஸ் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சம்
கோடிக்கு மேல்.

இதுக்கே இப்படி வாயைப் பிழந்துட்டா
எப்படி?

நம்மோட உடம்புல மிக மிக வலுவான
எலும்பு எது தெரியுமா? 

அது பல்தான்.

நாம தேய்க்கிற இந்த கண்ட கண்ட
பற்பசையினால, இந்த வலுவான பல்லானது
கொஞ்சம் கொஞ்சமா வலுவிலந்து எனாமல்
கரையத் தொடங்கும். 

அதற்கு
அடுத்தக்கட்டமாக பற்களில் சொத்தை,
அடுத்தபடியாக ஈறுகளில் வலு குறைவு
இவை அத்தனையும் ஏற்படும்.

வழக்கமா சாக்லேட் சாப்ட்ற
குழந்தைங்களுக்குத்தானே சொத்தை
வரும். 

ஆனா, இப்போ பெரியவங்களுக்கெல்லாம் சொத்தை வருதே அது எப்படி? 

நாம் சாக்லேட் சாப்பிட்டாலும்,
சாப்பிடாவிட்டாலும் சொத்தை வருவதை
தவிர்க்கவே முடியாது. 

அதுதான்
உண்மை. 

ஏனெனில் நாம் தேய்க்கும் பற்பசை
மூலமாகவும் மிக எளிதாக சொத்தைப் பல்
வரும் என்கிறார்கள் சித்த மருத்தவ
நிபுணர்கள். 

இன்னொரு விஷயம்
தெரியுமா… பல்லுக்கு வலு சேர்க்கும்
எந்த ஒரு உட்பொருளும் நாம்
விளம்பரங்களைப் பார்த்து வாங்கி
பயன்படுத்தும் எந்த ஒரு பற்பசையிலும்
இல்லை என்பதுதான் இதில்
மறைந்திருக்கும் பேருண்மை.

மாறாக பற்களை கெடுக்கும் அத்தனை
வேதிப்பொருளும் கணிசமான அளவில்
மேற்க்கண்ட பற்பசைகளில் அடங்கியிருக்கிற
து என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஏங்க இப்படியெல்லாம் பண்றாங்க… 

இப்படி
பற்பசைல கலப்படமும் அளவுக்கதிகமா
வேதிப்பொருள் கலக்கறதுனால யாருக்கு
என்ன நன்மைன்னு தானே கேட்குறீங்க…

சுத்தி வளைச்சுப் பார்த்தா, பற்பசைங்கற
அம்சமே, நம் பற்களை பதம் பார்க்க பல்
மருத்துவ முதலாளிகளால்
கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

30 வருஷம் முன்னாடி வரைக்கும், இத்தனை
பேஸ்ட் வகையறாக்கள் சந்தையில்
கிடையவே கிடையாது. 

மக்கள் கரிச்
சாம்பலையும், செங்கல் பொடியிலும்தான்
பல் தேய்த்து வந்தார்கள். 

அதற்குப்பிறகு வந்த
விளம்பரத்தால் தான் இன்று இச்சமூகம் பல்
பலகீனத்தால் சிக்கி சீரழிந்து வருகிறது.

பல் மருத்துவ வர்த்தகம் செழிக்க
வேண்டுமென்றால், கோடி கோடியாய்
சம்பாதிக்க வேண்டுமென்றால், நோயாளிகள் பெருக வேண்டும். 

பல்
சிகிச்சையைப் பொறுத்தவரையில் அவ்வளவு எளிதாக நோயாளிகள்
வரமாட்டார்கள். 

அப்படியானால்
நோயாளிகளை உருவாக்கினாலேயொழிய இந்த வர்த்தகம் செழிக்காது என்ற
உண்மை கண்டறியப்பட்டதன் வெளிப்பாடு தான், பற்பசை என்கிற விஷயம்
பிறக்க காரணமாய் போனது.

ஒரு நேரம் தேய்க்காதீங்க… ரெண்டு நேரம்
தேய்ங்க.. 

அப்போதான் உங்க ஆரோக்கியம்
கூடும் என்று அவர்கள் பரப்புகிற
விளம்பரத்தை அடிபிசகாமல் பின் தொடர்கிற
நம்மவர்கள் பற்பசையை நுறை வரும்
அளவிற்கு தேய்த்து கண்ணாடி முன்
நின்று பல் வெள்ளையாய் தெரிந்த பிறகே
மனம் திருப்தியடைகிறார்கள். இவர்களின்
திருப்திதான், அவர்கள் வர்த்தகத்திற்கு
கிடைத்த வெற்றி. 

எந்த பற்பசை வச்சு பல்
தேய்ச்சா பல் வெள்ளையாகுதோ அதுதான்
டாப்பு என்ற நம்முடைய
மேதாவித்தனம்தான், அவர்களின் பிசினஸ்
தந்திரம்.

அந்த வெள்ளை பற்பசை.. 

கொஞ்சம்
கொஞ்சமாய் நமது எனாமலை கரைக்கத்
தொடங்குகிறது. 

இவையெல்லாம் ஓரிரு
வாரத்தில் நடந்துவிடாது. சில வருடங்கள்
ஆகலாம்.. 

கொஞ்சம் கொஞ்சமாக நமது பல் கூச்சம் ஏற்படும், சொத்தை என்கிற
பிரச்சினை ஏற்படும், அதன் விளைவாக பல்
மருத்துவரைப் பார்க்க பயணப்படுவோம்.

அதாவது இது எப்படியென்றால், உங்கள் பல்
பிரச்சினைக்கு காரணம் நாம்தானே தவிர,
நாம் தேய்க்கும் பற்பசை அல்லவே அல்ல
என்று கற்பூரத்தை அடித்து சத்தியம்
செய்யும் அளவிற்கு, மெது மெதுவாய்
பாதிப்பை ஏற்படுத்தும்.

பல் சார்ந்து ஏற்படும் பிரச்சினைக்கு
அடிப்படைக் காரணம் 80 சதவீதம்
பற்பசையினால்தான் என்ற பெரிய உண்மை,
100 சதவீதம் நமக்கு தெரியாத வகையில்
சந்தேகமே ஏற்படாத வகையில்
தயாரிக்கப்பட்ட அற்புத உயிர்க்கொல்லிதான் இந்த பற்பசை.

ஒரு விஷயத்தை கூர்ந்து
கவனித்திருந்தால் உங்களுக்கே
புரிந்திருக்கும். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக,
பல் மருத்துவமனைகளின் எண்ணிக்கை
நகரங்களில் மட்டுமல்லாது
கிராமப்புறங்களில் பெருகியிருக்கிறது.

அதுபோல, பெரிய பெரிய கார்போரேட்
நிறுவனங்கள் எல்லாம், பல் மருத்துவத்தில்
காலடி எடுத்து வைத்திருக்கிறது
என்பதை கூர்ந்து பார்த்தால் நீங்களே
உணர்வீர்கள்.

மருத்துவக் காப்பீடு என்ற பெயரில் பல
ஆயுள் காப்பீட்டு நிறுவனம் புதிதாக
கிளம்பியிருப்பார்கள். அவர்களிடம் போய், பல் மருத்துவத்திற்கு காப்பீடு உண்டா
என்று கேட்டுப் பாருங்கள், கிடையவே
கிடையாது என்பார்கள். 

ஆயிரத்தில்
ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு என்று
வரும் விபத்திற்கும், உடற் பாகங்கள்
இழப்பிற்கும்தான் அவர்கள் காப்பீடு
வழங்குவார்களே தவிர (இதில் நடக்கும் சதி
இன்னொரு கட்டுரையில்…), 

இன்னும் 10
ஆண்டுகளில் இந்தியாவில் வாழும்
ஒவ்வொருவருக்கும் பல் சார்ந்த நோய் என்ற
ஒன்று தவிர்க்கவே முடியாது
எனும்பட்சத்தில் எப்படி அதற்கு காப்பீடு
வழங்குவார்கள்.

பற்பசை என்பது நம்மை சுவைத்து
சுவைத்து சாப்பிடும் ’ஸ்லோ பாய்சன்’.

இது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பல்லை
சேதப்படுத்தும், உங்கள் ஆயுளோடு
விளையாடும் இந்த விளையாட்டிற்கு
நீங்கள் அளிக்கப்போதும் தண்டம்தான்
மருத்துவ சிகிச்சை என்பது. 

சென்னையில்
சூத்தைப் பல் சிகிச்சை, மற்றும் ரூட் கெனால் சிகிச்சைக்காக வாங்கப்படும்
கட்டணம் ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை.

அம்மாடியோவ்… என்றுதானே வாயைப்
பிளக்கிறீர்கள்…

நான் கரெக்ட்டா வாக்கிங் போறேன்…

பாகற்காய் சூப் தவறாமல் குடிச்சுடுவேன்.


கரெக்ட்டா டயட் கண்ட்ரோல் பண்றேன்.
இருந்தாலும் சர்க்கரை அளவு அவ்வளவா
குறையலேயே என்று குறைப்பட்டுக்
கொள்பவர்கள், உடனடியாக பற்பசையினால்
பல் தேய்ப்பதை நிறுத்திவிட்டு ஆலையும்,
அல்லது வேம்பையும் வைத்து பல்
தேய்த்துப் பாருங்கள் நீங்கள் ஆச்சர்யப்படும்
அளவிற்கு சர்க்கரை உங்கள் கட்டுக்குள்
வந்திருக்கும்.

இப்படி உங்கள் பற்களை சேதப்படுத்தி,
உங்களை பல் மருத்துவமனைக்கு வரவழைத்து அதன் மூலம் மருத்துவம் என்ற
பெயரிலும், மருந்து என்ற பெயரிலும்
சம்பாதிக்கும் தொகை ரூ.1 லட்சம்
கோடிக்கும் மேல் (இது குறைந்தபட்சம் ஓர்
ஆண்டுக்கானது). 

இவ்வளவு சிகிச்சைப்
பெற்று உங்கள் பல் சரியாகிவிடுமா
என்றால், அதுவும் கேள்விக்குறிதான்.

நம் உடல் நலத்தை கெடுக்கும் எமன்
வெளியேயோ, சாப்பிட்டிலோ இல்லை,
விளம்பரம் என்ற பெயரில் பாரம்பர்யமாய் நாம்
செய்துவந்த விஷயத்தை மறந்து
செயற்கையாய் தேடிப்போன விஷத்தால்
விளைந்ததே என்பதை மட்டும் நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போ இதற்கெல்லாம் என்னதான்யா
தீர்வுன்னுதானே கேட்குறீங்க…

அடுப்புக்கரிதான். இது எனாமலை
பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நம்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்
அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.

 (அதனால்தான்
இப்போ உங்க பேஸ்ட்டுல சாம்பல்
இருக்கான்னு, புதுசா விளம்பரம்
பண்ணிட்டு இருக்காங்க…
(அதுக்குள்ளேயும் விஷமம் இருக்கு
மறந்துடாதீங்க…))
அடுப்புக்கரி சாம்பல், அல்லது வேம்பு
குச்சு, மூலிகைப் பல்பொடி, அல்லது நாட்டு வைத்தியரை அணுகினால் நாம் வாழ்வியலோடு குறிப்பாக நம் பல்லுக்கு
முழு ஆரோக்கியத்தை தரும் பல் பொடியை
எழுதித்தருவார்கள். 50 ரூபாய்க்கு மூணு மாசம் வரும் அந்த பல்பொடி, உங்கள்
பல்லுக்கு 100 சதவீதம் (99 சதவீதமெல்லாம்
கிடையாது) பாதுகாப்பு
அளிக்கக்கூடியது.

வருங்கால சந்ததி ஆரோக்கியமா இருக்க
வேண்டுமா? 
பற்பசையை முற்றிலுமாகத் தவிர்ப்போம்;

பாரம்பர்ய முறையை கடைபிடிப்போம்...
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!
.
‪#‎கிண்டர்‬ ஜாய் சாக்லேட்
இந்தியாவில் குழந்தைகள் கிண்டர் ஜாய் சாக்லேட்டை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வகை சாக்லேட் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது விட்டது. ஏனெனில் இதுவும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கிறது என்பதால் தான்.
.
‪#‎டி‬-கோல்டு டோட்டல்
.
இது மற்றொரு பிரபலமான சளி, இருமல் பிரச்சனைக்கு இந்திய மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் மாத்திரை. ஆனால் இந்த மாத்திரை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால்.
.
‪#‎ஜெல்லி‬ மிட்டாய்
.
இந்த வகையான மிட்டாய்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அங்கு இந்த வகை மிட்டாய்கள் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் இந்த வகை மிட்டாய்கள் குழந்தைகளுக்கு தீவிர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பல ரிபோர்ட்டுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் இவை இந்தியாவில் ஏராளமாக விற்கப்படுகிறது.
.
‪#‎லைஃப்பாய்‬ சோப்பு
.
உங்களுக்கு ஒன்று தெரியுமா, நாம் பயன்படுத்தும் லைஃப்பாய் சோப்புக்களானது வெளிநாடுகளில் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்யப்பட்டுவிட்டது. மேலும் வெளிநாடுகளில் ஒருசில மிருகங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலோ இதனை தான் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம். 
.
‪#‎ரெட்‬ புல்
எனர்ஜி ட்ரிங்ஸ் என்று விற்கப்படும் ரெட் புல் பிரான்ஸ், டென்மார்க் போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இந்த பானமானது இதய நோய், மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தானாம். ஆனால் இந்தியாவில் இதனை நிறைய மக்கள் ஆற்றலை அதிகரிக்கும் என்று நினைத்து டப்பா டப்பாவாக வாங்கி குடிக்கிறோம்.
.
Share It ..
 தக்காளி விதைகள்

சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. 

இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். 

அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். 

இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. 

ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். 

மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.

BY
M.SARAVANAKUMAR@SK
அக்கிப் புண் !!!
கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம்
அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள்
அதற்கு அக்கி எழுதுதல் என்று பெயர்
பலருக்கு முதுகுப் பகுதியில் அக்கி எனப்படும் கண்ணுக்குத்தெரியாத வேர்க்குரு போன்ற நீர் வடியும் சிறு சிறு கொப்புளங்கள்
அதிகப் படியான வெயிலின் தாக்குதலால் ஏற்பட்டு அரிப்பு எரிச்சல் நீர் வடிதல் போன்ற துன்பங்களைத் தரும்
இதை எளிதாகப் போக்க மிகச் சிறந்த எளிய அனுபவ நிரூபணமான வீட்டு மருந்துஇருக்கிறது
மருந்து போட்ட ஓரிரு நாட்களிலேயே குணமடைவதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்

மருந்து
பசலைக் கீரை இலைகளை அரைத்துப் பிழிந்து எடுத்த சாறு
நாட்டுப் பசு வெண்ணெய்
ஆகிய இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பசை போல செய்து
அக்கிப் புண்கள் மீது இரவில் பூசி
காலையில் மிதமான வெந்நீரில் குளித்து வர
மூன்று நாட்களில் அக்கி பரிபூரணமாகக் குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

தகவல் :- திரு.பொன்.தங்கராஜ்

____________ 


கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.

தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.

அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னா மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாத நாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.

காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க. மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க. முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சா இஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.

ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேக வச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியை பார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும் செய்யலாம்.

__________

 வெரிகோஸ் வெயின்" (varicose veins) "

பிரச்னைக்கு தீர்வு...



நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. 
 *
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
 *
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
 *
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
 *
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
 *
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 *
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
 *
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்

BY
M.SARAVANAKUMAR@SK

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...