Thursday, December 20, 2018

நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு* 🥗🥗

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🌻🌻🌷🌷🌼🌼

*நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு*
🥗🥗🥗🥗🥗

*எனக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும்! இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே!” என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, ‘அது போன மாசம், இது இந்த மாசம்' எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.*
🍒🍒🍒🍒🍒🍒

*உணவே அடிப்படை*

*ஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு ‘ஹச்-ஹச்’ எனத் தும்மாமலும், `லொக்-லொக்’ என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா?*
🍋🍋🍋🍋🍋🍋
*ஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை? இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி.*
🍏🍏🍏🍏🍏🍏

*எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது எப்படி?*

*நோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும். ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Menta# Stress) ஏற்படும்போது, ‘Cortisol’ ஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.*
🍊🍊🍊🍊🍊🍊

*நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது’ என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.*

🍑🍑🍑🍑🍑🍑
*கருப்பட்டி*

*சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.*
🍅🍅🍅🍅🍅🍅

*சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது.*
🥑🥑🥑🥑🥑🥑
*சுக்குக் காபி, இஞ்சி டீ*

*குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல `சுக்கு, இஞ்சினு’ தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்” எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல்! இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்!*
🍇🍇🍇🍇🍇🍇
*மஞ்சள் மகிமை*

*மஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cel# membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது.*
🥒🥒🥒🥒🥒🥒
*வண்ண வண்ணப் பழங்கள்*

*பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற `சிட்ரஸ்’ வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.*
🍉🍉🍉🍉🍉🍉
*பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.*
🍎🍎🍎🍎🍎🍎
*தீனிகளுக்கு விடை கொடுப்போம்*

*மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.*
🍍🍍🍍🍍🍍🍍
*பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.*
🥕🥕🥕🥕🥕🥕
*பொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.*
🌞🌞🌞🌞🌞
*சத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்!*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளை சம்பா:பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும்.

இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.

புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது.
இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று சொல்லலாம். கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்?
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.
இதற்கெல்லாம் மேலாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய, பல மருத்துவக் குணங்கள் இந்த அரிசியில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த உணவே மருந்து.
எப்படி உபயோகபடுத்தலாம்.

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள் கறைத்து  உடல் எடை குறைக்கிறது இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

மூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம் 👉

https://www.facebook.com/1911957129069543/posts/2194571917474728/

மூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்
👉அனைவரும் பகிருங்கள்

http://daily1tips.com/doc-1st/archives/11350

.

SEARCH

Daily one tips Tamil

TIPSமூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை – 10 கிராம்இஞ்சி தூள் – 10 கிராம்தேன் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய நெல்லிக்காய் – 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில்

மூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை – 10 கிராம்இஞ்சி தூள் – 10 கிராம்தேன் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய நெல்லிக்காய் – 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.

வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்றுவலி, வெள்ளைபோக்கு, மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் மருத்துவம் செய்யும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

SEARCH

Daily one tips Tamil

TIPSமூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை – 10 கிராம்இஞ்சி தூள் – 10 கிராம்தேன் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய நெல்லிக்காய் – 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.

வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்றுவலி, வெள்ளைபோக்கு, மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் மருத்துவம் செய்யும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

வாகை பூக்கள்- தேவையான அளவுமொட்டுகள்-தேவையான அளவுதேன்-2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்கும் போது அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வாகை பூக்கள் மற்றும் மொட்டுகளை போட்டு கொதிக்க விடவும். மென்மையான பதம் வந்ததும் வடிகட்டி இளஞ்சூட்டில் தேன் கலந்து தொடர்ந்து பருகி வர மேற் சொன்ன பிரச்னைகள் நீங்கும்.

MODI. New KAMARAJAR

https://youtu.be/NrAnga2J3Lk

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???*

*திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???*

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்..

அவர் ஒரு ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டும் கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போக வேண்டும் போல அவரின் அடி வயிறு முட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்து விடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும் தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர் தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

"நான் இப்போது புறநகர்ப் பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணி போல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.

அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..

போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக் குள்ளாக்கும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈஎன்டி மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா கவலைப்படாதே.. சரி, நான் சொல்வது போல செய், வந்து விடும்!" என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும் போது உன் ரெண்டு கைகளை அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பது போல ஆக்சன் செய் இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈஎன்டி மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடி விட்டார்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத் தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம்.

அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன
Excellent article just read
--- just forwarded as recd.
Shared: Nature medicine group 🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂

குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?

குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?

முக்கியமாக இது பெண்களுக்கானது...

இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை.

இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல்.

என்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது.

தனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது.

இதனை எப்படி கண்டு பிடிப்பது? இதற்கென்று ஆப்ஸ்கள் உள்ளன.

அதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது.

கூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.

இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.

1.Detect by Radiotion Meter

2.Detect Infrared Camera

3.How to Use

4.Manual Camera Detection

இதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...
37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.

தனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள,  முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)

Detect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்

அதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

மூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.

அதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு.

மேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆப்ஸை பெற: http://bit.ly/2BSyM8L

-மோ.கணேசன், பத்திரிகையாளர்.

(பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்...)

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...