Saturday, October 13, 2018

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம்நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

13..சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

14. .சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

15..சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

16. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

17. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

18. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்துவர, நல்ல பலன் கிடைக்கும்.

19. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகிவர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

20. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

21. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

22. மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

23. சிறிது தனியாவுடன், சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால், அதிகம் மது உண்ட போதை தணியும்.

24. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

25.மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

26. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

27. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.

31. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

32. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
[11/10, 7:28 am] ‪+91 80725 26724‬: இதயம் பலவீனமானவர்கள் சாப்பிட வேண்டிய பழம்

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.

எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

இதை அடிக்கடி உண்ணும்போது நன்கு பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும். மன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.

கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் தோலில் அதிக அளவு உள்ள ஊட்டச் சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகின்றன என்று புதிய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செறிந்துள்ளது.

இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் பட படப்பு நீங்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

பேரிக்காய் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின்பு படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிடக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்....

சுகர்னு docter கிட்ட போராங்க ..

சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார்.

அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார்.

அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க* சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் *ஒரு வருஷத்துல உயிர்* போய்டுது.

*இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.*

1.
*தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*.

2.
*மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே  போகுதேனு அவன் யோசிக்கல*.

3.
*ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*.

4.
*வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*.

*TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை*. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகற வரைக்கும்
*அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா* இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான,

முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

*சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்*..

*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும்  அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

ஏன் தொப்புள் கொடியை உடனே நீக்கக்கூடாது?

ஏன் தொப்புள் கொடியை உடனே நீக்கக்கூடாது?

நவீன யுகத்தில், குழந்தை பிறந்த உடனே, அதன் தொப்புள் கொடியை துண்டித்து விடுகின்றனர்.

ஆனால், அப்படிச் செய்வதால், அந்த குழந்தை வளரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, இயற்கை மருத்துவ முறைகள் தெரிவிக்கின்றன.

ஒரு குழந்தையின் தொப்புள் கொடி என்பது, அந்த குழந்தை பிறந்தபோதும், தாய் அதனை வாரியணைத்து தொப்புள் கொடியுடனேயே பால் கொடுக்கும் அளவுக்கு தகுந்த நீளத்துடன், இயற்கையால் படைக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு நீளம் எதற்காக இருக்கிறது என்றால், குழந்தைகள் பிறந்து வெளியுலகத்திற்காக தன்னை தயார் செய்து கொள்ளும் வரை தாயின் பாதுகாப்பு வேண்டியே. அதனால்தான் தொப்புள் கொடி கர்ப்பப்பையிலிருந்து பிரிந்து வர தாமதம் ஏற்படும். அதுவரை குழந்தை தனது தாயிடம் பால் குடிக்கும் அளவிற்கு இயற்கை ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால், இன்றைய நவீன மருத்துவத்தில், இதை புரிந்து கொள்ளாமல், குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புள் கொடியை வெட்டி விடுகிறார்கள். தொப்புள் கொடியில் நச்சு இருப்பதாகக் காரணம் கூறுகின்றனர்.

உண்மையில், அந்த சிறிது நேரம் தொப்புள் கொடியை வெட்டாமல் வைத்திருந்தால் ஏற்படும் நன்மை ஏராளம். அதைப்பற்றி நவீன மருத்துவம் செய்யும் வியாபாரத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அதாவது தொப்புள் கொடியை குழந்தை பிறந்த உடனேயே வெட்டி தொப்புள் கொடியை பாதுகாக்கும் வங்கியில் வைத்து விடுவார்கள். அதற்கான தொகையை உங்களிடம் வாங்கிக் கொள்வார்கள்.

வருங்காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்த தொப்புள் கொடியிலிருந்து மருந்துகள் தயாரிக்கும் ஆராய்ச்சி நடக்கிறது. ஏனெனில் தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் நோய்களை குணப்படுத்தும் வல்லமையை கொண்டுள்ளன.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் ஸ்டெம் செல்கள் தொப்புளில் இருந்து குழந்தைக்கு தானே சென்று விடும். மேலும் ஸ்டெம் செல்கள் இறங்கிய பிறகுதான் கர்ப்பப்பையில் இருந்து தொப்புள் கொடி தானாகவே, விடுபடும்.

அப்போது குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சில அடிப்படை சத்துக்களை தடுத்து வருங்காலத்திற்காக எனச் சொல்லி அதை பாதுகாக்கும் காரணம் வியாபாரம் மட்டுமே.

எனவே, இனி நமக்கோ அல்லது நமது உறவினர்களுக்கோ பிறக்கும் குழந்தைக்கு, தொப்புள் கொடி தானாகவே விடுபடும்வரை காத்திருந்து அதன்பின் அதனை துண்டியுங்கள்…

🚶🏽‍♂HAROON SB

புற்றுநோய்க்கு ‘சாம்பார்ல’ இப்படி ஒரு விஷயம் இருக்குனு தெரியுமா..? .

புற்றுநோய்க்கு ‘சாம்பார்ல’ இப்படி ஒரு விஷயம் இருக்குனு தெரியுமா..?
.
குடல் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது என்பது உங்களில் எத்தனை பேரிற்கு தெரியும்?
.
ஆம், தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
.
புற்றைத் தடுக்கும் மஞ்சள்
மணிப்பால் மருந்தியல் கல்லூரியும், மணிப்பால் பல்கலைக்கழகமும் இணைந்து தென்னிந்தியர்களின் முக்கிய உணவான சாம்பாரில் குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர்.
.
மருந்தியல் ஆய்வாளர்கள் வி.கங்கா பிரசாத், அல்பி பிரன்சிஸ், கே. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘பார்மகோக்னாஸி மேகசின்’ எனும் மருந்தியல் இதழில் சமீபத்தில் வெளியாயின.
.
உலகளவில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளில் அதிக அளவு மஞ்சள் உட்கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
.
உணவும் மருந்தும்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதியான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
.
“அதிக அளவு மஞ்சள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் கொண்ட வெங்காயம் சேர்த்த உணவுப் பொருட்களில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது” என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.
.
மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் ‘பாலிப்ஸ்’ எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம்.
.
இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.
.
சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாலாவின் மகிமை
.
மும்பை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் முதன்மை ஆய்வாளர் ஒருவர் கூறும்போது சாம்பாரில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு மசாலாப் பொருளும் தனித்தன்மை உடையதாக உள்ளது.
சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன.
.
செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்.
.
“பொதுவாக சாம்பார் அதிகளவு காரம் இல்லாத உணவாக இருப்பதால் குடலின் உட்புறம் பாதுகாக்கப்படுவதுடன், குடல் புற்றுநோயை உண்டாக்கும் டைமெத்தில்ஹைட்ராக்சின் எனும் காரணியை, சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுகின்றன” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் எஸ்.வி.எஸ்.எஸ்.பிரசாத்.
மலச்சிக்கல் இல்லை!!
.
இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்றுநோயின் தாக்கம் வட இந்தியர்களுக்குத்தான் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப்பதே.
.
இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.
.
“இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள்.
பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட்களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர்.
.
ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு.
.
அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு” என்கிறார் புற்றுநோய் மருத்துவர் டி.பி.எஸ்.பண்டாரி.
.
காய்களும் ஒரு காரணம்
அதேபோல, ருசிக்காக மட்டுமல்லாமல் சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளுக்காகவும் இரைப்பைக் குழாய் நிபுணர்களால் மக்களுக்கு அது பரிந்துரைக்கப்படுகிறது.
.
“பொதுவாக இந்திய உணவு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது.அதிலும் சாம்பாரில் கேரட், பாகற்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி போன்ற காய்கறிகள் சேர்த்துச் சமைக்கப்படுகின்றன.
.
காய்கறிகளில் உள்ள சத்துகளும் சாம்பார் மூலமாகக் கிடைப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க இவை உதவுகின்றன. அதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.பொதுவாக அதிக அளவு கொழுப்புச் சத்து, குறைந்த அளவு நார்ச்சத்துக் கொண்ட சக்கை உணவை (Junk food) உட்கொண்டால் குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்” என எச்சரிக்கிறார் குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் விமலாகர் ரெட்டி.
.
சாம்பார் மிகவும் பிரபலமான உணவாக இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் மிளகு, பெருங்காயம் போன்ற மசாலாப் பொருட்கள்தான்.
.
சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்ற ஆராய்ச்சி தற்போது முதல்கட்டத்தில்தான் உள்ளது.
என்றாலும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...