எனக்குத் தெரிந்து தியானம் செய்பவர்களில், 100 கு 95 நபர் உண்மையான தியானம் செய்வதே இல்லை.
...
நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள்: "கடந்த 5 வருடங்களாக தியானம் செய்கிறேன். தினமும் 20 நிமிடம் தியானத்தில் அமர்கிறேன். ஆனால், என்னால் அந்த தியான நிலை அடைய முடியவில்லை. எங்கு தவறு நிகழ்கிறது?" என்று கேட்கிறார்கள்.
...
நண்பர்களே..!
ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.
நம் யோக கலாச்சாரத்தில் அழகாக 8 விஷயங்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
அதற்குப் பெயர் - அஷ்டாங்க யோகம்.
...
யமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
பிரத்தியாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
...
இந்த 8 நிலைகளில் (நண்பர்களே கவனமாக படியுங்கள்) 7வது நிலையில் தான் தியானம் இருக்கிறது.
எப்படி எடுத்த உடன் 10th standard பரிச்சை எழுதிவிட முடியாதோ, அது போல் எடுத்த உடன் தியானம் செய்துவிட முடியவே முடியாது.
அது நீங்கள் 5 வருடம் அல்ல, 50 வருடம் செய்தாலும், சும்மா உட்கார்ந்தே இருக்க வேண்டியது தான். ஆனால், உண்மையான தியான நிலையை அடைய அதற்கு மேலே உள்ள 6 படிகளில் ஏறிச் சென்றால் தான் தியானத்தை அடைய முடியும்.
"வாருங்கள் உங்களுக்கு தியானம் சொல்லித் தருகிறேன்", என்று கூவும் நிறுவனங்கள் எல்லாம் வியாபார சந்தைகளே.
யமம் என்றால் என்ன என்றெல்லாம் நான் சில நாட்களுக்கு முன்பு போஸ்ட் செய்திருக்கிறேன்.
யமம் கடை பிடிக்காத மனிதனால் அதற்கு அடுத்த படிகளில் நிச்சயமாக ஏற முடியாது.
....
நண்பர்களே... நம் மூச்சுக் காற்று இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று நமக்கு ஞானத்தில் எட்டாத காரணத்தால் தான் இறைவன் அதை அனிச்சை செயலாக வைத்திருக்கிறான்..
...
இந்த மூச்சுக் காற்றினால் ஆரோக்கியம் மட்டும் அல்ல, நீங்கள் ஞானி ஆக முடியும், உங்கள் குண்டலினியை மேலே எழச் செய்ய முடியும்.
...
இதைத் தான் "பிராணாயாம பயிற்சி" என்று நம் யோகக் கலையில் சொல்லி வைத்தார்கள்.
...
ஆனால், இந்தப் பிராணாயாமத்தை செய்யும் முன்னர் "நாடி சுத்தி" என்ற ஒரு exercise செய்ய வேண்டும். நாடி சுத்தி செய்யாமல், பிராணாயாமத்தின் 100% பலனை உள் வாங்க முடியாது.
...
நாடி சுத்தி என்றால் என்ன?
...
இது மிகப் பெரிய விஞ்ஞானம் ... சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.
..
நாம் மிகவும் மேலோட்டமாக தான் மூச்சு விட்டு கொண்டிருக்கிறோம். oxygen நுரையீரலின் உட்பகுதி வரை சென்று சேர்வதை நாம் சரியாக செய்வது இல்லை.
இடப்பக்கம் வலப்பக்கம் உள்ள நுரையீரல்களுக்கு சரியாக oxygen சென்று சேர்வது இல்லை.
...
இரண்டாவது, நாம் மேலோட்டமாக மூச்சு விட்டு விட்டு நுரையீரலை சுருக்கி வைத்துவிட்டோம். அதை விரிவடைய செய்ய நாடி சுத்தி செய்தாக வேண்டும்.
அதைச் செய்த பின்னர் பிராணாயாமம் செய்யும் பொழுது 100% oxygen நுரையீரலுக்கு எடுத்து செல்கிறோம்.
(அந்த oxygen ஐ பிராணாயாமம் மூலம் மூளைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்று பிறிதொரு போஸ்டில் விளக்குகிறேன்).
...
நாடி சுத்தி எப்படி செய்வது?
...
1. முதலில் உங்கள் மூச்சு காற்றை நன்றாக வெளியேற்றி விடுங்கள்.
2. இப்போது உங்கள் 2 நுரையீரலில் மூச்சுக் காற்று இல்லை.
3. இப்போது உங்கள் வலது கட்டை விரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை உள் இழுங்கள்.
4. இழுப்பதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. முழுமையாக உள்வாங்கிய பிறகு, உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் கொண்டு இடது நாசியை அடைத்து கொண்டு, மிக மிக மிக மெதுவாக இழுத்த காற்றை வலது நாசி வழியாக வெளியே விடுங்கள்.
6. இப்படி வெளியே விடுவதற்கு 16 நொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. முழுமையாக வெளியே விட்ட பின், அதே வலது நாசி வழியாக 8 நொடி காற்றை உள் இழுக்க வேண்டும்.
8. எட்டு நொடிகள் வலது நாசியில் உள்ளிழுத்த காற்றை, கட்டை விரலால், வலது நாசியை அடைத்துக் கொண்டு, இடது நாசி வழியாக மிக மிக மெதுவாக 16 நொடிகளில் வெளிவிட வேண்டும்.
9. இந்த ஒரு cycle தான் ஒரு சுத்து நாடி எனப்படும்.
...
இதை 4 சுற்றுகள் செய்தால், "நாடி சுத்தி" செய்தது ஆகும்.
...
முதலில் 4 சுற்று செய்யுங்கள்.. படிப்படியாக 8 சுற்று செய்யுங்கள்... நிறைய நேரம் எடுக்கும்... பொறுமை வேண்டும்...
,,,
நண்பர்களே,, எவனொருவன் ஒரு நாளைக்கு 50 நாடி சுத்தி செய்கிறானோ அவன் நினைப்பதெல்லாம் நடக்கும்... (My personal experience )
...
அடுத்த போஸ்டில் பிராணாயாமம் எப்படி செய்வது என்று பேசலாம்.
நன்றி.ண