Sunday, October 7, 2018

மூலிகை முதலுதவிகள்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍇🍇🍓🍓

*மூலிகை முதலுதவிகள்*

’முதலுதவி செய்ய மூலிகை அறிவு’ என்பது அன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாய் குடும்பத்தலைவிக்கு நிச்சயம் உண்டு. தொழிற்புரட்சி காலத்திற்குப் பின் இங்கிலீஷ் மருத்துவம் வேகவேகமாக உலகெங்கும் காலூன்றிய போது, நாட்டு மருத்துவம் முழுமையும் நசுங்கி விடாமல் காப்பாற்றப்பட்டதற்கு, பாட்டி வைத்தியமாய் அது வீட்டில் பெண்களால் பாதுகாக்கப்பட்டதும் முக்கியக் காரணம். மூலிகை என்றதும் பலரும் நினைப்பது, ’ஏதோ ஏழு கடல் தாண்டி ஏழு மலைகள் தாண்டி எடுக்கும் விஷயம்’ என்று. நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும், அருகாமை நிலத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், ’சைரன் இல்லாத 108 வேன்’ மாதிரி, பல மூலிகைகள் முதலுதவி செய்யக் காத்திருக்கின்றன. விருப்பமான உணவு தயாரிக்கும் வித்தை மாதிரி, முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கைமருந்தாய்க் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய்த் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐயய்யோ! கைமருந்தா!?’ அது ஆபத்தாச்சே!' என்ற மேல்தட்டு மனோபாவம் மாற வேண்டும். எது அவசரம், எது ஆரம்பம், எது சின்ன சிரமம் என்ற அடிப்படை அறிவு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.

கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்துப் பார்க்கலாமா?
🍑🍑🍑
ஆடாதொடை - எந்த உரமும் போடாமல், எந்தப் பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்தச் செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்தச் செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்துக் கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வரத் தயங்கும், நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியைக் கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
🍎🍎🍎
அதிமதுரம் - இனிப்புச் சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும். திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலிக் கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
🍒🍒🍒
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செரியாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்துக் கசாயமாக்கிச் சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10 மி.லி. அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
🍍🍍🍍
சீரகம் - லேசான கிறுகிறுப்பு அதிகப் பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளைக் கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிடக் குறையும்.
🍊🍊🍊
வாய்விடங்கம் - வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சேர்த்துக் கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு, மதிய வேளையில் மோரில் பெருங்காயத் தூள் போட்டு சாப்பிடத் தீரும்.
🍅🍅🍅
கடுக்காய் - விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
🥒🥒🥒
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்து வரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு, வெந்தயம், பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாகக் கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
🍋🍋🍋
சாதிக்காய் - தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய்த் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட, தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
🍓🍓🍓
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்தப் பட்டையை தேநீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
🍏🍏🍏
இந்தப் பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்த்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்தக் கிச்சனில் இந்தப் பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருடத்திற்கு முன் ’ஓட்ஸ்’ என்றால் எத்தனை பேருக்குத் தெரிந்தது? ஆனால் தினையோ கம்போ பற்றிப் பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?” என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
🍇🍇🍇
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களைக் கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்
🍊🍊🍊🍊🍊
🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல* *குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🥦🥦🥦🥦🥦🥦

ரத்த ஓட்ட மண்டலம் சரி செய்யக் கூடிய உணவு முறைகள்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋

*ரத்த ஓட்ட மண்டலம் சரி செய்யக் கூடிய உணவு முறைகள்*

இரத்தஓட்ட மண்டலம். நாம் எடுக்கக்கூடிய உணவுகள், முறையானதாக, ஒழுங்கானதாக, ஆரோக்கியமானதாக, சமச்சீரானதாக சரியான உணவாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய இரத்த ஓட்ட மண்டலமானது நம் உடம்பில் இருக்கக்கூடிய ராஜ உறுப்புகள் என்று சொல்லக்கூடிய மூளை, கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை முறையாக மேம்படுத்தக்கூடிய வேலைகளை இரத்த ஓட்ட மண்டலம் செவ்வனே செய்யும்.
🥒🥒🥒
arokkiyam1நம் உடல் திறனை மேம்படுத்தும், செயல் திறனை மேம்படுத்தும் ஒரு வேலையை செய்யவேண்டும் என்றால் கூட நம்முடைய இரத்த ஓட்ட மண்டலம் எந்த அளவிற்கு ஒழுங்காக முறையாக சுழல்கிறதோ அதைப்பொறுத்துத்தான் நம்முடைய வேலைத்திறனை நாம் கணக்கிட முடியும், கண்டறிய முடியும். இரத்த அளவை மிகுதிப்படுத்தக்கூடிய உணவுகளை ஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து சரியாக எடுக்கக்கூடிய ஒரு சூழல் உண்டாக வேண்டும். நாம் செரிமானமண்டலக் கோளாறுகளைப் பற்றிப் பேசும் பொழுது அதில் மந்தமான உணவுகளை சாப்பிடக்கூடாதென்று கூறியிருந்தேன். அவ்வகையான மந்தமான உணவான மாவுப்பொருட்களைத்தொடர்ந்து எடுக்கும்பொழுது கண்டிப்பாக உடம்பில் இருக்கக்கூடிய இரத்த அளவு குறையும். இரத்த அளவை குறைப்பதில் முக்கியமான உணவுப்பொருள் மாவுப்பொருள். இரும்புச்சத்துள்ள உணவுகள், புரதச்சத்துள்ள உணவுகள், சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகள், சில கனிமங்களான துத்தநாகம், பொட்டாசியம், குரோமியம் போன்ற உள்ளடக்கிய உணவுகள், தாதுக்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும்பொழுது மட்டும்தான் இரத்தப்பிணிகள் இல்லாத சூழல் உண்டாகும். இரத்தத்தில் அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுதுதான் நோயில்லாத சூழலை உருவாக்க முடியும்.
🍇🍇🍇
arokkiyam9இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளில் பிரதானமானது பழங்கள்தான். ஆப்பிள் பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், பப்பாளிப்பழம், சில நேரங்களில் தக்காளியைக் கூட சாறாக செய்து சாப்பிடலாம். இரத்தத்தை ஓரளவிற்கு மிகுதிப்படுத்துவதில் தக்காளியும் உண்டு. வில்வப்பழம் என்பது நாட்டு மருந்து கடைகளில் தேனூரலாக கிடைக்கும். தேனில் ஊரவைத்த வில்வப்பழத்தை சாப்பிடலாம். தேனில் ஊரவைத்த கடுக்காய் முரப்பாய் சாப்பிடலாம், தேனில் ஊரவைத்த நெல்லிக்காய் முரப்பாயைத் தொடர்ந்து சாப்பிடலாம். இஞ்சியைத் தேனில் ஊரவைத்து அதையும் தொடர்ந்து சாப்பிடும் பொழுது இரத்த ஓட்ட அளவை நாம் மிகுதிப்படுத்த முடியும். எந்த ஒரு மனிதனுக்கு இரத்த அளவு மிகுதியாக இருக்கிறதோ, எந்த ஒரு மனிதனுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதோ அவனுடைய மூளையின் சிந்தனைத்திறன் ஒழுங்காக இருக்கும், நினைவாற்றல் அதிகமாக இருக்கும். யார் ஒருவருக்கு நினைவுத்திறன் குறைகிறதோ, நினைவு இழப்பு இருக்கிறதோ அதாவது அடிக்கடி பார்த்திருக்கிறோம், பேசியிருக்கிறோம், ஆனால் தங்களது பெயர் மட்டும் சட்டென்று நினைவிற்கு வரவில்லை என்று சொல்கிறோம் என்றால் கண்டிப்பாக இரத்தம் தலைக்கு ஏறவில்லை, பித்தம் தலைக்கு ஏறிவிட்டது என்று அர்த்தம். ஆக ஒரு மனிதனுக்கு நினைவாற்றல் கோளாறு உண்டாவதற்குக் காரணம் இரத்தத்தில் பித்தம் அதிகமாவது. பித்தம் குறையக்கூடிய சூழல் எப்பொழுது வரும் என்றால் இரத்த அளவு அதிகமாகும்பொழுது இரத்தத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் நிறைந்து இருக்கும் பொழுதுதான் பித்தம் குறைய ஆரம்பிக்கும். இரத்தத்தில் பித்தம் அதிகமாகிவிட்டது என்றால் கல்லீரல் சோர்வாகிவிடும். கல்லீரல் சோர்வு அதிகமாகிவிட்டாலே எதிர்மறை எண்ணங்கள், நினைவாற்றல் குறைந்துபோவது, கழுத்து சார்ந்த நடுக்கு வாதம் உண்டாவது, parkinson disease என்று சொல்லக்கூடிய நோய்கள் உண்டாவது, முடக்குவாதம் உண்டாவது கை-கால் வலி, மூட்டில் நீர்கோர்வை உண்டாவது, இடுப்பு எலும்பு வலி உண்டாவது, விரல் கணுக்கலில் வலி உண்டாவது இது எல்லாவற்றுக்குமே காரணம் என்னவென்றால் இரத்த அளவு குறைந்து பித்த அளவு அதிகரிப்பதுதான். பித்த அளவு அதிகரிப்பதனால் வாய்வு அதிகரிக்கக்கூடிய தன்மைதான் இவையனைத்து நோயும் உண்டாவதற்கு காரணமாக அமைகிறது. வாய்வுதான் வலியாக உண்டாகக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும். வலி என்றாலே வாய்வு, எனவே வாய்வுதான் வலியாக உண்டாகும். எனவே இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும்.
🍎🍎🍎
arokkiyam4நிறைய கீரைகள் எடுக்கக்கூடியவர்களுக்கு இரத்த ஓட்ட அளவு நன்றாக இருக்கும். அதில் சிறந்ததாக நாம் சொல்ல வேண்டும் என்றால் முருங்கைக்கீரை, பருப்புக்கீரை, மனத்தக்காளிக்கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை இந்த கீரைகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்த அளவு அதிகமாக இருக்கும். உணவில் இஞ்சி, சின்ன வெங்காயம், மலைப்பூண்டு போன்ற உணவுப்பொருட்களை அதிகம் எடுக்கக்கூடியவர்களுக்கு இரத்த அளவு அதிகமாக இருக்கும். இரத்த ஓட்ட மண்டலத்திற்கும் செரிமான மண்டலத்திற்கும் ஒழுங்கான தொடர்பு உண்டு, முறையான தொடர்பு உண்டு. உங்களுடைய செரிமான மண்டலம் ஒழுங்காக இருந்தால் கண்டிப்பாக இரத்த ஓட்ட மண்டலமும் ஒழுங்காக இருக்கும். ஏனென்றால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இரத்த ஓட்ட அளவை அதிகரிக்கவேண்டும், இரத்தத்தை அதிகப்படுத்தவேண்டும் என்றால் செரிமான மண்டலத்தை எவ்வாறு பேணிபாதுகாக்கக்கூடிய முறைகளை நான் இதற்கு முந்தைய கட்டுரையில் கூறியதில் எதையெல்லாம் தொடர்ந்து செய்கிறீர்களோ அதைவைத்துத்தான் உங்களுடைய இரத்த ஓட்ட அளவு இருக்கும். நம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது மிக முக்கியமானது. ஆண்களுக்கு கிட்டத்தட்ட 16லிருந்து 17 மில்லிகிராம் அளவு இருக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கு குறைந்தது 12லிருந்து 14 வரையிலும் இருக்க வேண்டும்.
🍋🍋🍋
arokkiyam5இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதைத்தான் இரத்த சோகை என்று சொல்லுவோம். சோகை வியாதி வந்தாலே உடல் மாறுபடக்கூடிய சூழல் உண்டாகும். இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாய்வுக்கோளாறு, வயிறு உப்புசம், மலச்சிக்கல், தலைவலி, தலைபாரம், தும்மல், மூக்கடைப்பு இப்படி பல்வேறு வியாதிகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு சோகை அதிகமாக இருந்தால் மாதவிடாய் தள்ளிப்போவது, தாய்மைக்கே அடையாளம் கருப்பைஅந்தக் கருப்பையில் கட்டி வருவது, கருப்பை சிதிலமடைந்துபோவது, கருப்பையில் சதை வளர்வது, ஒழுங்கான முறையாக மாதவிடாய் வராமல் போவது, அப்படியே மாதவிடாய் வந்தாலும்கூட தொடர்ந்து வருவது அதாவது 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் வருவது என்று இப்படி பல்வேறு பிரச்சனைகள் பெண்களுக்கு இரத்த சோகை அடிப்படையில் வரும். ஆக இரத்த ஓட்ட மண்டலத்தை ஒழுங்காக முறையாக சரிசெய்து கொள்ளும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை சரியாகும். எப்பொழுதுமே இரத்தத்தை மிகுதிப்படுத்தக்கூடிய உணவுகளை வயதறிந்து நோயின் தன்மையறிந்து விடாமல் தொடர்ந்து சாப்பிடவேண்டும். இந்த மாதிரி இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய மருந்துகளும் சித்தமருத்துவத்தில் நிறைய உண்டு.
🍊🍊🍊
arokkiyam7இதில் சிறந்தது அன்னபேதி செந்தூரம். இது நாட்டுமருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் பக்குவமாக பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. இந்த அன்னபேதி செந்தூரத்தை 200 மில்லி கிராம் அதாவது 4 சிட்டிகை அளவு தேனில் குழைத்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளில் தொடர்ந்து சாப்பிடும்பொழுது மிக அற்புதமான பலன் கிடைக்கும். உடம்பில் இரத்த ஓட்ட அளவு அதிகமாகும். அதேபோல் அயச்செந்தூரம், அயக்காந்த செந்தூரம், காந்த செந்தூரம். இவையெல்லாமே இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய செந்தூரங்கள். இன்னும் சில நேரங்களில் பஸ்பங்களையும் கையாளக்கூடிய தன்மை உண்டு. பஸ்பங்களில் விசேசமானது சிலாசத்து பஸ்பம், முத்துச்சிப்பி பஸ்பம், குங்கிலிய பஸ்பம் போன்றவை இரத்தத்தை அதிகப்படுத்தும். அதாவது எலும்பை வலுப்படுத்தி, எலும்புக்கு உள்ளே இருக்கக்கூடிய இரத்தத் தட்டுக்களை அதிகப்படுத்தி அதனடிப்படையில் இரத்த செல்களை அதிகப்படுத்தக்கூடிய தன்மையை பஸ்பங்கள் செய்யும். இந்த பஸ்பம், செந்தூரங்கள் போன்றவற்றை பக்குவமாக, பாரம்பரியமாக இருக்கக்கூடிய மருத்துவர்களின் மேற்பார்வையில் தனிநபர்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
🍒🍒🍒

மேலும் மிகச் சாதாரனமாக இரத்தத்தை அதிகப்படுத்த ஒரு அற்புதமான விசயம் என்னவென்றால் வெட்பாலை விதை. இந்த வெட்பாலை விதை என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வெட்பாலை விதையை வாங்கி நன்றாக தண்ணீரில் அவித்தால் நெல் அவித்தது போல் இருக்கும். அதில் மேல் இருக்கக்கூடிய மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடிய பருப்பை தேனோடு சேர்த்து நன்றாக காய்ச்சி வைத்துக்கொண்டு அதை சிரப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு அந்த வெட்பாலைத்தேனை காலை, இரவு என இரண்டு வேளை ஒரு வாரம் சாப்பிட்டால் போதும் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு குறைவாக இருந்தாலும் ஒரே சீரான சமநிலைக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு அற்புதமான விசயம் சித்தர்கள் சொன்ன வெட்பாலை விதையில் இருக்கிறது. ஆக இந்த வெட்பாலை விதையை தேனாக செய்து சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும்.
🥕🥕🥕
இரத்த சோகை வரும்பொழுது சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நகர்புற வாழ்க்கையில் நிறைய நபர்களுக்கு கண்டிப்பாக இரத்த சோகை சார்ந்துதான் சிறுநீரக நோய்கள் வருகிறது நோய்கள் வந்தவுடன் மருந்தை தேடாமல் நோய்களை வராமல் இருக்க இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த வாழ்க்கையை வாழ முயற்சிப்போம் வருங்கால சந்ததியினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ வாழ்க்கை முறையை புரியவைப்போம் இதுவே நாம் இயற்கைக்கு செய்யும் மிகப்பெரியகைமாறு

கட்டுரை சித்தமருத்துவர் அருண் சின்னையா

🍊🍊🍊🍊🍊
🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல* *குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🥦🥦🥦🥦🥦🥦

நீங்கள் வாங்கும் ரெடிமேட் இட்லி தோசை மாவு விஷம் என்று தெரியுமா உங்களுக்கு ??*

*எச்சரிக்கை செய்தி..*

🏮 *நீங்கள் வாங்கும் ரெடிமேட் இட்லி தோசை மாவு விஷம் என்று தெரியுமா உங்களுக்கு ??*

🏮 *கடையில் விற்கும் ரெடிமேட் இட்லி தோசை மாவு ஒரு உயிர்கொல்லி ஸ்லோ பாய்ஸன் என்று பலருக்கும் தெரிவதில்லை.!*

🔰 தெரிந்து கொள்ளுங்கள்

🏮 *1 வாரம் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, கலக்கபடுகின்றது..*

🏮 *மாவு சீக்கிரம் கெட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர்*

🏮 *இதனால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்*

✍🏻 *ஒரு நாளைக்கு 3  மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால்சிறு நீரகத்தில் கல் உண்டாகும்..*

✍🏻 *நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும்.! ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.!*

🍚  *நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண் (அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.!*

👉🏽 *நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன், பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலமும், உங்களை நீங்களே பாதுகாப்பதும் கூட.*

🥗 *முடிந்தால் உங்களது வீட்டிலேயே மாவை தயார் செய்யுங்கள்..*

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு...

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு...

இன்று பெரும்பாலானவர்களின் முக்கியமான ஒரு பிரச்சனை எதுவென்றால் மூட்டு வலிதான். அதுவும் நாற்பது வயது வந்துவிட்டது என்றால் சொல்லவே வேண்டாம். சர்க்கரை, பிரஸர், மூட்டுவலி என வரிசையாக வந்துவிடும். நமது வருமானத்தின் ஒரு பகுதியை டாக்டர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை உருவாகி விடும். இது தவிர்க்க இயலாத ஒரு சூழலை உருவாக்கி விட்டது.
மருத்துவர்களை நம்பி போனால் ஆளுக்கு ஒரு ஆபரேஷன் செய்ய சொல்கிறார்கள். சரி ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடுமா என்று கேட்டால் அதற்கும் மருத்துவர்களிடம் சரியான பதில் இல்லை.
இப்படி பெருகி போன மூட்டு வலி நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு இல்லையா என்று கேட்டால்...
நிச்சயம் இருக்கிறது என்று பதில் இருக்கிறது.
இது குறித்த விழிப்புணர்வும் அது குறித்த தகவல் பலருக்கும் சென்று சேரவில்லை.
என்ன செய்வது இப்படி மூட்டு முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, எலும்பு தேய்மானம் ,ஜவ்வு விலகல், ஜவ்வு தேய்மானம், விபத்தினால் ஏற்பட்ட எலும்பு பிரச்சனைகள் என அடுக்கி கொண்டே போகும் அணைத்து எலும்பு சம்பந்தமான நோய்களுக்கும் ஒரே தீர்வு வாத வள்ளி கிழங்கு தான்.இது என்ன வாத வள்ளி கிழங்கு? இத்தனை நாள் இது பற்றி எந்த ஒரு வைத்தியரும் சொல்லவில்லையே?

காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை கற்ப மூலி என்றும் வாத வள்ளி கிழங்கு என்றும் கூறியுள்ளார் இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....
உடல் புத்துணர்ச்சி என்பது மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை அறிவோம் இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது
உடல்,மனம்,புத்தி புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வு வாத வள்ளி கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றன ....
ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும் அதனால்  நீண்ட நேரம் தாம்பத்தியம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.தேவையெனில் *******************************************
தேவைக்கு அழைக்க 98430 93824 *******************************************
எப்படி சாப்பிடுவது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம்.இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு அழைக்கவும்....
98430 93824

மற்றவர்களுக்கும் இதனை பகிருங்கள்...

Permanent remedy for joint pain ...

One of the most important problems for most people today is the joint pain. If it is forty years old, do not say it. Sugar, Praser, and Root. Doctors will be forced to build a portion of our income. This has created an inexorable environment.
If you trust the doctors, they tell him to perform a surgery. If you say OK if you do it right, doctors do not have the right answer.
Asked if there is a permanent solution to these increased arthritis patients ...
There is an answer that is sure.
There is no awareness of this and many of the information has not been reached.
What is to do is the same solution for knee pain, hip pain, heel pain, bone deterioration, jaw dropping, jaw's wear and bone problems that are caused by accidental bone problems. What is the root of this tapioca? Which doctor did not say so much about this day?

Kilangi Natar, Pogar, Vallalar etc. It is known as Koolali and Vatti Valiyalai. These days 48 days, if you get rid of 4448 cases of biting and bruising, the body will get damaged by the true saints'
Vallalar mentions it as the most important herbal remedy in which the mother milk (also contains lauric acid) is immune to 4448 and does not know whether it is good or not. The rheumatoid arthritis will certainly be fine especially for the pain of the menstrual periods. Many people in my friendship circle have a lot of calorie deficiencies for alopecia pills. You will see the progress in your body. It is especially important for the child to lose weight and the lack of limbs is a great lack of limp and for those who seek English medicine Excellent food supplements ....
Body Rejuvenation is the most abundant nutrients available to the brain and the oxygen is known to me in this experience
The physical, mental and intellectual rejuvenation is due to the micronutrients in the tapioca tuber that occurs when the body's micronutrients get the nutrients.
For those who want to get a healthy baby, take these tubers for three months and then try for a baby. It is a very good result and the mineral salts are silicon gold. Magnesium iron calcium is densely converted so it is possible to stay longer for long periods of pregnancy. And the intellect is very good. ******************************************** *********************************
Call for demand 98430 93824 ********************************************** *************************
How to eat
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++
Raw tapioca can be used for ten days and can be used for ten days. It is a daily dose for 10 days, followed by severe knee pain, heel pain, knee mucus weakness and muscular dysfunction. It can be drank by allowing you to get rid of the stomach's flesh in the winter, the pain that appears throughout the body,
The way Siddhars showed that a zone can cure bone and rheumatic diseases to get it to drink ....
Call this amazing rhyme tuber need ....
98430 93824

pl share to all

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...