Wednesday, October 24, 2018

சாப்பிட்டவுடன் படுக்காதே’ என வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘ஏன் படுக்கக் கூடாது?’ எனக் கேட்டால், ‘அது உடலுக்கு நல்லது அல்ல…’

‘சாப்பிட்டவுடன் படுக்காதே’ என வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘ஏன் படுக்கக் கூடாது?’ எனக் கேட்டால், ‘அது உடலுக்கு நல்லது அல்ல…’ என்று மட்டும் சொல்வார்கள். நாம் உட்கொள்ளும் உணவை செரிமானத்துக்கு உகந்ததாக மாற்ற, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இந்த அமிலம் உணவுக்குழாயில் பயணிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, மேல்நோக்கியும் பின்னோக்கியும் அமிலங்கள் போகும். இதனால், உணவுக்குழாய் பாதிக்கப்படும். இதற்காகத்தான் சாப்பிட்டவுடன் படுத்தால், உடலுக்கு நல்லது அல்ல என நம் பெரியவர்கள் சொன்னார்கள்.

இன்று, புற்றுநோயாளிகளில் 10 சதவிகிதம் பேர், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றம், மது, புகை போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மிருதுவான சவ்வினால் ஆன, குழல் போன்ற ஒரு பகுதி ஈசோபேகஸ். வாயில் மென்ற உணவை, வயிற்றுக்குக் கொண்டுசெல்லும் குழாய் இது. சாப்பிட்டவுடன் படுப்பதால், உணவுக்குழாயில் புண் (Esophagus reflux) ஏற்படுகிறது.

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது?

வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.

மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகள்

நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம்.

ஆஸ்பிரின், முஸ்லின் போன்ற மாத்திரைகள் உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கிவிடும். அப்போது, ரத்த வாந்தி வர வாய்ப்புகள் அதிகம்.

உணவுக்குழாயைக் காக்க…

காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை,  பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்னையைச் சரிசெய்யும்.

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!

உணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் நீர் அருந்த வேண்டும்.

சீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்னை வராது.

நீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

“காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலை கடுக்காய்… ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.

கற்றாழை: காலையில் முதல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.

வெள்ளரி: வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இஞ்சி: இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்.

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!

தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, இஞ்சி – சிறிதளவு, கற்றாழை – 3-4 துண்டுகள், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை - என்ன செய்வது?*

*அதிகம்பகிருங்கள்.*
*ஆபத்துக்குஉதவும்*

*திடீரென்று கார் பிரேக் பிடிக்கவில்லை - என்ன செய்வது?*

முதலில் மோட்டாரில் கெட்டிக்காரன் எவனுமில்லை என்பதில் இந்த பதிவினை ஆரம்பிக்க விரும்புகிறேன்...
எனது கார் ஒன்றில் சமீபத்தில் 70km/hr வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை!

முன்னும் பின்னும் பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன!!!

முதலில் நான் பதட்டப்படாமல் பிரேக் பெடலை பம்ப் செய்து பார்த்தேன், பிரேக் ஆயில் குறைவு ஏதும் இருந்தால் பம்ப் செய்தால் பிரேக் பிடித்து விடும்...

பம்ப் செய்வது என்பது பிரேக் பெடலினை திருபத்திரும்ப வேகமாக மிதித்து ரிலீஸ் செய்வதுதான்.
பம்ப் செய்தும் பிரேக் பிடிக்கவில்லை!

பின் சாலையின் சூழலை வேகமாக பார்த்து இடைவெளிகளையும் வாகனங்கள் செல்லும் வேகத்தையும் கணித்துக்கொண்டு வேகமாக கியரை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே முதல் கியருக்கு கொண்டு வந்தேன்....

அதே சமயம் வாகனத்தை பிற வாகனங்களில் மோதிவிடாமல் இடைவெளிகளை நோக்கி திருப்பி ஹெட்லைட் அமத்தியமத்தி எரியவிட்டு ஹாரனை அடித்து சாலையில் அனைவருக்கும் எச்சரிக்கை சமிக்கைகள் செய்துகொண்டே  ஓட்டினேன்...

  பிறகு ஹேன்ட் பிரேக்கை (எமர்ஜென்சி பிரேக்/ பார்க்கிங் பிரேக்) மெதுவாக இழுத்தேன்...

வாகனம் கட்டுப்பாட்டிற்குள் வந்து நின்றது...

செய்யக்கூடாதவை :
வண்டி பிரேக் பிடிக்கவில்லை என்றவுடன் பதட்டப்பட்டு வேகமாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தால் வயர் கட்டாகிவிடும்...

படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வந்தபின்தான் ஹேன்ட் பிரேக்கை இழுக்க வேண்டும்...

ஹேன்ட் பிரேக் ஒன்றுதான் சேதாரத்தை குறைக்க ஒரே வழி......

இதுபோன்ற சூழல்களில் சீட் பெல்ட் போடாமல் இருந்தால் ஸ்டெரிங்கில் நெஞ்சு அடிபடவோ, கண்ணாடியில் தலை அடிபடவோ வாய்ப்புகள் இருக்கிறது!

சிலர் தங்கள் வாகனங்களில் ஹேன்ட் பிரேக் பழுதாகி பிடிக்காமல் இருப்பதை சரி செய்யாமல் இருப்பர்!

ஹேன்ட் பிரேக் அவசர காலங்களில் உயிரை காக்கக் கூடியது என்பதை உணர்ந்து பழுதுபார்க்கவும்..

எக்காரணம் கொண்டும் வண்டி ஓட்டும் போது எதிர்பாராத சூழல்களில் பதட்டப்படாமல் இருக்கவும்..

முடிந்த அளவு முன் செல்லும் வண்டிக்கு பின்னால் போதிய இடைவெளியில் வண்டியை ஓட்டவும்.

அவசர காலங்களில் உயிரை காக்கக் இந்த இடைவெளி ரொம்ப முக்கியம்...

தினமும் உங்கள் வண்டியில் பிரேக் ஆயில் அளவு, பிரேக் ஆயில் டியுப், டயரின் காற்றளவு, தேய்மானம் ஆகியவற்றை சரி பார்க்கவும்..

கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்துகொண்டு வண்டியை ஓட்டவும்...

மறந்துவிடாதீங்க வண்டி ஒட்டிக்கிட்டு போகும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால்....

1) பதட்டப்படாமல் இருத்தல்

2) சாலையின் சூழலை நன்கு பார்த்தல்

3) ஹார்ன் அடித்து எச்சரிக்கை செய்தல்

4) கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வருதல்

5)மெதுவாக ஹேன்ட் பிரேக்கை இழுத்தல்

6)ஓரமாக வண்டியை நிறுத்துதல் வேண்டும்...

ஷேர் பண்ணுங்க உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கு எப்பொழுதாவது உதவலாம்!

🙌🏻 🤝🏻

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த

"ஒரு மாதத்தில் தொடர்ந்து எத்தனை நாள் சாப்பிட வேண்டும்"

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு

இன்றைய மருத்துவ குறிப்புகள் :

மாதுளை:

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு.

இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க மாதுளம் பழத்தை, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

மூலத்தால் உண்டான புண் குணமாக மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவி வந்தால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி, ரத்தக் கசிவும் நிற்கும்.

காதில் சீழ் வருவது நிற்க மாதுளம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, அதை சூடுபடுத்தி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் காதில் சீழ் வருவது நிற்கும்.

சளித்தொல்லை நீங்க மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவந்தால் சளித் தொல்லை தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

எலும்பு மற்றும் பற்கள் உறுதியாக மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.

positive மற்றும் negative ஆற்றலை உருவாக்கிடவும் முடியும் .தடுக்கவும் முடியும் .

*பாதுகாப்பு கவசம்*
--------------------------------------
இன்சூரன்ஸ்  எடுத்து இருக்கிறீர்கள் ,
ஏன் என்று கேட்டால்
எல்லாம் ஒரு பாதுகாப்புக்காக என்பீர்கள்.
முழுமையான பாதுகாப்பு தானா இது ?

எந்நேரமும் உங்கள் பாதுகாப்பிற்கு என்ன  செய்தாலும் positive மற்றும் negative அதிர்வுகள்  உங்களை சந்திப்பதை தவிர்க்க முடியாது ,

ஆம் !

positive and negative vibration  உலகம் முழுவதும் உண்டு ,இதைத் தான் நேர் மறை ஆற்றல் மற்றும் எதிர் மறை ஆற்றல் என்று வழக்கில் பயன்படுத்துகிறோம் ,இதையெல்லாம் பற்றி நமது முன்னோர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளனர்,
    நேர் மறை ஆற்றலை அதிகம் செய்யவும் ,எதிர் மறை ஆற்றலை விலக்கிடவும் எளிய வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்தார்கள் .
      இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் positive மற்றும் negative  ஆற்றலை உருவாக்கிடவும் முடியும் .தடுக்கவும் முடியும் .
       கண் திருஷ்டி,ஏவல் ,பரிகாரம் என்று மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பது கண்கூடாக தெரிகிறது ,திருஷ்டி பொம்மை ,திருஷ்டி பூசணி எல்லாம் பரிகாரமே,
    மற்றவர்களின் எதிர்மறையான பார்வை மற்றும் எண்ணத்தினால் வரும் பாதிப்புகளை தவிர்க்கவே மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணம் பார்த்தோம் .இது போல் ஏராளமான மாற்று வழிகள் நமது முன்னோர் பயன்படுத்தினர் ,

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு:

1. வெண்கடுகு - 250 கிராம்
2. நாய்க்கடுகு - 250 கிராம்
3. மருதாணி விதை - 250 கிராம்
4. சாம்பிராணி - 250 கிராம்
5. அருகம்புல் பொடி - 50 கிராம்
6. வில்வ இலை பொடி - 50 கிராம்
7. வேப்ப இலை பொடி - 50 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை  அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை.
பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

குடும்பத்தில் அமைதி,வளம், உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். 

ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும்  positive தன்மை பொருந்தியவை. யார் வேண்டுமானாலும்  பயன்படுத்தலாம் ,

      நன்மை தரும் இந்த மூலிகைகளை நாளும் பயன்படுத்தி நன்மை பெறுவோம்,

இது போன்று  மேலும் 18 மூலிகைகள் கொண்டு நாம் தூப பொடி தயார் செய்கிறோம்,

தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்க.

*மேலும் விபரங்களுக்கு--
*8883151449*   (cont)
மற்றும்
*9865287123*(whatsapp only )
More details 👇👇👇
Ramkumar:
New Facebook Link

https://www.facebook.com/Shree-Nandhi-179077666049665/

மன அமைதிக்கான சில சிந்தனைகள்..

மன அமைதிக்கான சில சிந்தனைகள்..

.1)தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்குபிரச்னைகள் வருகின்றன.அதில்தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.2)நல்ல மனிதர்களுடனும்,அனுபவம் வாய்ந்தபெரியவர்களுடனும் ஆலோசனை கேளுங்கள்.3)ஒருபோதும் மூடர்களின்செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள்.நல்ல மனிதர்களின் அனுபவ அறிவு நிறைந்தவர்கள்நட்பை இழந்துவிடாதீர்கள்.4)உங்கள் மனதை எது பாதித்தாலும் அதைதொலைவில்வையுங்கள்.நினைவில்கொண்டுவராதீர்கள்.5)வீட்டிலிருப்பவர்களுடனும்,நண்பர்களுடனும்பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்ஒதுக்குங்கள்.அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.6)எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள்.உங்கள் மனதில்கூட பாவஎண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள்.நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.7)நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள்.ஒருவேளை மனதிற்குபிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம்நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடைகொடுத்து அனுப்புங்கள்.8)வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம்,அரசு ஆஸ்பத்திரி,முதியோர் இல்லம் சென்றுஉங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.உடல்ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக நன்றி கூறுங்கள்.9)தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளமுற்படுங்கள்.நேரத்தை விரயம் செய்யும்எதையும் அனுமதிக்காதீர்கள்.நேரத்தில்உறங்கி,நேரத்தில் எழுங்கள்.10)உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும்அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும்.ஒருசெயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்துகொள்ளுங்கள்.இதன்விளைவு எதில்கொண்டுசேர்க்கும் என ஆராயுங்கள்.உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம்ஒதுக்குங்கள்.11)எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்தமாதிரிநடக்கும் என எதிர்பார்க்காதீர்கள்.இவ்வுலகில்எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில்உங்களை ஏமாற்றத்தில்கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும்.செல்போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள்.வீணடிக்காதீர்கள்.12)எதிலும் நேர்மையாக இருங்கள்.தர்மத்தின்வழிப்படி நடக்க மறவாதீர்கள்.இறைவனை சதாசர்வ காலமும் துணைவனாக வையுங்கள்.மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும்பேசாமல் இறைவனை நினைத்து அவரிடம்மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள்.அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும்.வாழ்த்துக்கள்.

வெள்ளை முடி விரைவில் கருப்பாக சித்த மருத்துவ எண்ணெய்.

வெள்ளை முடி விரைவில் கருப்பாக சித்த மருத்துவ எண்ணெய்.
 
ஒற்றைச் செம்பருத்திப் பூ 10, 20 சேகரித்து. சிறு சிறு துண்டுகளாக்கி அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பின்னர் அந்த பூவிதழ்கள் மூழ்கும் அளவுக்கு கால் லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி கொள்ளவும். இந்த கலவையை நன்கு கலக்கி பாத்திரத்தின் மேல் வாய் மெல்லிய துணி கொண்டு மூடி கட்டி சூரிய ஒளியில் நான்கைந்து நாட்கள் வைத்து பூவிலுள்ள சத்துக்கள் அனைத்தும் எண்ணொய்யில் இறங்கி என்னை கருப்பாக மாறிவிடும். எண்ணொய்யை மட்டும் வடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரம் செய்து வைத்து .

தினமும் குளித்து முடித்தவுடன் இந்த எண்ணெயைத் தடவி வந்தால். முடி உதிர்தல், நரைமுடி, கூந்தல் நன்றாக பளபளப்பாகும்.

கற்றாழை நன்கு பருமான மடல் ஒன்றை கொண்டு வந்து அதன் மேல் பாகத்தை மட்டும் சிறு கத்தி கொண்டு இரண்டாகப் பிளக்க வேண்டும் வெந்தயத்தை அதனுள் வைத்து நன்றாக மூடி இறுக்கிக் கட்டிக் கொள்ளவும். சூரிய ஒளியில் நான்கைந்து நாட்கள் காயவைத்து எடுத்துக் கொண்டு. வெந்தயத்தை மட்டும் நன்றாக அரைத்து நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி கொள்ளவும்.

என்னை சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வடித்து. ஊற்ற வைத்து கொண்டு. இதை காலை மாலை என தொடர்ச்சியாக தடவி வர வேண்டும். இளநரை முடி உதிர்தல் இவை விரைவில் குணமாகும்.

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.
மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கையின் மருத்துவம்:
நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.
முடி உதிர்தல்:
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.
நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
காது வலி:
காது வலிக்கு வில்வ இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட வேண்டும். காது வலி விரைவில் நீங்கும். மேலும் இதனை செய்வதால் நமக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.
உடல் சோர்வு:
வில்வ இலையை கசக்கி அந்த சாறுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீனும். மேலும் இந்த வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக இருக்கும் பித்தம் நீங்கும்.
வாய் புற்றுநோய்:
இந்த வில்வ இலையானது விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள வேதி பொருட்கள் நம் வாயில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது வாய் நாற்றதையும் நம்முடைய நாக்கில் ஏற்படும் புண்களையும் நீக்கும்.
மேலும் சில நன்மைகள்:
வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் நம் தலை வலி நீங்கும்.
இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது.
மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...