Sunday, July 29, 2018

மருத்துவமணை நாடாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் , நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஈன்ற

உணர்வென்றும் அறிவியலென்றும்!

மரு.கோ. பிரேமா BHMS,
27/7/2018.

கடந்த சனிக்கிழமை திருப்பூரில் மருத்துவமணை நாடாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் , நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஈன்ற ஒரு மணிநேரம் பின் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைய அவசரநிலைக்கு மருத்துவமணை செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது நடந்து முடிந்து ஐந்து நாட்கள் பின்னர் வெளிவருகிறது செய்தி யாதெனில், அம்மாவட்ட சுகாதார நிலையத்தில் குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் இந்த மரணத்தை வீட்டு பிரசவத்தினால் ஏற்பட்டதால் தான் என்று சந்தேகிக்கும்படி புகார் கொடுத்து விசயம் இப்போது ஒரு முக்கிய விவாதப்பொருளாக மாறிவிட்டது.

எப்படி இவர்கள் வீட்டில் பிரசவம் பார்க்கலாம்? மருத்துவ பயிற்சி பெற்றவர் உடனிருந்துதான் ஒருவர் பிரசவிக்கவேண்டும் என்றும் இதை சுற்றி நயமாக ஒரு புதிய வாழ்வியல் விதியை உட்புகுத்துகிறார்கள்.

முதலில் மக்கள் ஏன் விரும்பி வீட்டில் பிரசவம் பார்க்க விளைகிறார்கள், ஏன் மருத்துவமணையை புறந்தள்ளுகிறார்கள் என்ற அடிப்படை கேள்வியை வைக்காமல் அதை விவாதிக்காமல் வெறும்  சட்டவிதிகளை வைத்து மட்டும் இந்த மாற்றங்களை ஒடுக்கிவிடலாம் என்றென்னுவது மடமை.

அலோபதி விபத்துகளுக்கும் அவசரசிகிச்சைகளுக்கும் தேவையானது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், இதற்கு மட்டும் தான் தேவை.
மற்றவற்றில் அவர்களின் மருத்துவ முறைகள் நன்மையைவிட தீங்கையே ஏற்படுத்துகிறது. ஆதலினால் அதில் இருந்து ஒதுங்குவதே அறமாகும். ஆனால் விடுமா வணிக ஆசை?

அலோபதி மருத்துவத்துறையின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் நம்பிக்கையின்மையும் தான் இன்றைய விவாதததிற்கு காரணம் என்றால் அதை இல்லை என்று சொல்ல முடியுமா?
எனில்?
அறமற்ற பல மோசடிகளை அனுதினமும் அலோபதி மருத்துவமணைகளில் நடப்பதுவே மக்களை மாற்று வழிக்கு தேடவைக்கிறது.
விளைவு?
வாட்ஸ்ஆப் முகநூல் சமூகவலைத்தளங்கள் யூடியூப் போன்றவற்றில் முளைத்து விட்ட திடீர் மரபு மருத்துவர்களின் பால் போகச்செய்கிறது.

அலோபதி மருத்துவம் வளர்ந்து வருகிறது என்பதே அம்மக்கள் மேலும் மேலும் ஆரோக்கியமற்ற சமூகமாக மாறிவருவதனால் தானே?
எனில் அலோபதியின் வெற்றி தான் என்ன?
நிரந்தர நோயாளிகளாக மக்கள்  அனுதினமும் தள்ளப்பட்டு வருவதா?
தடுப்பூசி உண்மையில் பலன் அளிக்கிறது என்றால் குறைந்தபட்சம் குழந்தைகள் நல மருத்துவர்களாவது எண்ணிக்கையில் தேவையின் அடிப்படையில் குறைந்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இங்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட15 கூடுதல் சிறப்பு பிரிவுகள் குழந்தைகள் மருத்துவத்தில் மட்டும். இது எதை காண்பிக்கிறது?
உண்மையில் ஒரு மருத்துவமுறையின் சாதனை மக்களை ஆரோக்கியமாக மருத்துவத்தின் அவசியம் குறைவாக வைத்திருப்பது தானே? ஆனால் நிலைமை மக்களின் ஆரோக்கியம் தொலைந்தும் இவர்களின் வணிகம் மட்டுமே வளர்ந்தும் வருகிறது.

இந்நிலை எப்படி மக்களிடம் அவர்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும்?

ஒரு சமூகத்தில் ஆரோக்கியமற்ற காரணிகளை என்றாவது சரியாக சுட்டிக்காட்டி அதனால் அச்சமூகம் ஆரோக்கியமானதாக எங்காவது கேள்விப்படுகிறோமா? நேர்மாறாகத்தானே இருக்கிறது.

இது அறிவியலின் சதி அல்ல. வணிகத்தின் சூழ்ச்சி!
அரைகுறை அறிவியலை மட்டும் வைத்து கொண்டு , வணிகநோக்கிற்காக மட்டுமே அந்த அறிவியலை பிடித்து நகரும் ஒரு துறை தானும் பெயர் கெட்டு அந்த அறிவியலுக்கும் கலங்கம் விளைவிக்கிறது.
அறிவியல் என்றாலே அது சூழ்ச்சி வணிகம் என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்ததன் விளைவு? அறிவியல் என்றாலே ஆபத்து என்றும் அதனால் முன்னோர் கூறிய மரபு மட்டுமே சரி என்றும் மக்கள் மீண்டும் கண்மூடித்தனமாக திசைமாறவைத்துவிட்டது.

இயற்கையும் மரபும் அறிவியலும் ஒன்று தான். பிரிக்க முடியாதது.
இயற்கையை புரிந்து கொள்ள ஒரு மொழிதான் அறிவியல்.
ஆனால் உண்ரவுகளே போதும் என்ற அளவுக்கு அறிவியலை புறந்தள்ளும் அளவுக்கு மக்களை விளிம்புக்கு இட்டு சென்றது அலோபதியின் வணிக அரசியல் தான். இதில் மருத்துவர்கள் பாவம், வெறும் கைப்பாவைகளே. சிலர் இதை உணர்ந்தவர் வணக்கத்துக்கு உரியவர்கள். பலர் ஆட்டுமந்தை போல,பரிதாபத்திற்கு உரியவர்கள்.
வெகுசிலர் இருக்கிறார்கள் , இந்த அரசியலை புரிந்தும் அதன் வணிகத்திற்கு துணை போகும் நயவஞ்சகர்கள்.

பிரசவத்திற்கு வருவோம். முக்கிய அச்சம் என்ன? சுகபிரசவம் நடக்க உதவாமல் அறுவைசிகிச்சை செய்து வணிகம் வளர்க்கிறார்கள் என்ற அச்சமே.
இது முற்றிலும் இல்லை என்று யாராவது கூறமுடியுமா?

முதலில் இன்றைய மருத்துவர்களில் எத்தனை பேருக்கு பிரசவத்தின் இயல்பான நிலை அதாவது postion எப்படி எப்போது என்ன காரணங்களுக்காக தந்திரமாக மறக்கடிக்கப்பட்டு இன்றைய நிலையை சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்ற முக்கிய ஐரோப்ப மருத்துவ வரலாறு தெரியுமா??

2016ல் லேன்சட்டில் வெளிவந்த அறிவியல் ஆய்வுக்கட்டுரை இந்தியாவின் பிரசவத்தில் மருத்துவத்தின் ஊடுருவல் பற்றி சொல்வது அச்சுருத்ததான் செய்கிறது.

https://www.news18.com/news/lifestyle/health-and-fitness-caesarean-section-deliveries-up-from-10-to-30-percent-in-india-1347492.html

கடந்த 20 ஆண்டுகளில் சிசேரியன் எனப்படும் அவசர அறுவைசிகிச்சை மட்டும் 10-30% அதிகரித்திருக்கிறது என்கிறது.
உலக சுகாதார மையம் நிர்னயித்துள்ள ஒரு குறிப்பிட்ட மக்களில் தேவைப்படும் சிசேரியன் எண்ணிக்கையை என்றோ இந்தியா எகிறி சென்றுவிட்டது.

இதே காலகட்டத்தில் சுயமாக இயங்கும்(மருத்துவ நிறுவனங்களின் தலையீடு இல்லாத) ஆய்வு இங்கு ஆரம்ப விகிதமே 10% அல்ல, 18% என்கிறது!
தெலுங்கானாவில் அதிகபட்சமாக தனியார் மருத்துவமனையில் சிசேரியன் விகிதம் 75%, அரசு மருத்துவமணையில் 40.6%  . சராசரியாக58%!!

தமிழகத்தில் சராசரியாக 34%!!
உலக சுகாதார மையம் 10% தொட்டுவிட்டாலே அது அதிகம் என்கிறது.
அதாவது உண்மையில் ஆரோக்கியமான சமூகத்தில் மருத்துவ உதவியுடன் கூடிய கர்பங்களில் பிரசவ சிக்கல்களானது 10% க்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
எனில் இதில் வணிக நோக்கம் தானே மேலோங்கி இருக்கிறது?

இதில் வேடிக்கை என்னவென்றால், உலக சுகாதார மையம் எந்த குறிப்பிட்ட மக்கள் தொகையில் பிரசவத்தில் சிசேரியன் அறுவைசிகிச்சை சதவிகிதம்10% தொடுகிறதோ அங்கு பிரசவ சிக்கலினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் இந்தியாவின் அதிகளவிலான அவசர சிசேரியன் அறுவைசிகிச்சை எந்தவிதத்திலும் பிரசவ மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு!!
இது இந்தியாவுக்கு பிரசவத்தில் அலோபதியின் தலையீடு வணிகம் சார்ந்ததாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த பிரசவ மரணங்களில் முதற்காரணமாக  மருத்துவமணைகளிலும் அறியப்படுவது அதிக உதிரப்போக்கு தான். அவ்வளவு எளிதாக மருத்துவ உதவி இருந்தும் இதை தவிர்க்க முடியவில்லை என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

பிரசவ வணிக வளர்ச்சி உண்மையில் பிரசவ மரணங்களின் சதவிகிதத்தை பன்மடங்கு குறைத்திருந்தால் அந்த வணிகத்தில் குறைந்தபட்சம் அறம் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் அப்படி இல்லையே.

இந்த ஆய்வு அடிப்படையில் தான் இரண்டு ஆண்டுகள் முன்னர்,அலோபதி மருத்துவர்கள் வணிகத்திற்காக தேவையற்ற சிசேரியன் செய்வதை தடுக்க ஒவ்வொரு சிசேரியனையும் தீவிரமாக கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது அப்போதே செய்திகளில் கொஞ்சம் சலசலத்தது நினைவிருக்கலாம்.

சரி இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?

உண்மையில் பிரசவத்தில் ஒரு மருத்துவரின் கண்காணிப்பு தேவையா?இல்லை என்கிறது உலக சுகாதார மையமே.
85-95% பிரசவங்கள் சிக்கல் இல்லாத இயல்பாக நடப்பவை தான். ஆதலால் இவர்களுக்கு மருத்துவர்கள் தேவையில்லை.
மருத்துவச்சிகள் போதும்.

ஆங்????
மருத்துவச்சிகளா? அப்படி னா?என்கிற அளவில் தான் இருக்கிறது இந்தியாவில் மருத்துவச்சிகள் நிலைமை.

முன்னர் அனுபவசாலிகளாக இருந்தவர்களையும் அழித்துவிட்டு, இப்போது இதை ஒரு முறையான அமைப்பில் அரசு அங்கீகாரத்துடன் பயிற்சி பெற்று பிரசவங்களை மக்களோடு மக்களாக மருத்துவமணை போல அச்சுறுத்தல் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் கையாளவேண்டியவர்களாக இருக்க வேண்டியவர்கள் இந்தியாவில் ஏட்டில் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆம்! உலக சுகாதார மையம் ஒவ்வொரு குறிப்பட்ட மக்கள்தொகைக்கும் மருத்துவச்சிகளின் தேவையை அழுத்தி தான் சொல்கிறது.

இங்கிலாந்தில் அரசே மக்களிடம் ஆரோக்கியமான கர்ப்பிணிகள் தயவுசெய்து மருத்துவமணை வராதீர்கள், மருத்துவச்சிகளை நாடுங்கள். மருத்துவர்களை உண்மையில் அவர்கள் தேவைப்படும் அவசர மருத்துவ உதவிக்கு செயல்பட அனுமதியுங்கள் என்கிறது.

இங்கே?

அனைவரும் மருத்துவர்களைதான் மருத்துவமணைதான் நாடவேண்டுமாம்.

இது அறிவியல் அறியாமையா? அல்ல வஞ்சகமான வணிக அரசியலா?

ஒரு சமூகத்தில் மருத்துவ வளர்ச்சி என்பது உண்மையில் அம்மக்களை மருத்துவ தேவையில் இருந்து விடுவிப்பதாக இருக்கவேண்டும்.
மேலும் மேலும் கூட்டம் சேர்பதும் மருத்துவமணை வளர்வதும் வணிகத்தின் வளர்ச்சி மட்டுமே. மருத்துவத்தின் வளர்ச்சி அல்ல.

உண்மையில் மருத்துவ அக்கரையோடு மக்களுக்காக செயல்பட விரும்பும் அரசென்றால் கொண்டு வாருங்கள், மீண்டும் மருத்துவச்சி முறையை.
இந்தியா போன்ற கிராங்கள் நிறைந்த, ஏழை, படிப்பறிவு குறைந்த மக்களிடம் சரியான முறையான பிரசவ கண்காணிப்பை எடுத்து செல்ல வேண்டும் என்றால் அது மருத்துவமணைகளால் மருத்துவர்களால் ஒருபோதும் முடியாது, மக்களோடு மக்களாக வணிகநோக்கம் குறைவான மருத்துவர்களின் ஊடுருவல் இல்லாமல் தனித்து இயங்ககூடிய மருத்துவச்சிகளால் மட்டுமே முடியும்!

செய்யுமா அரசுகள்?

அத்தனை விதிகளும் ஏடுகளில் இருந்தும் நடைமுறையில் இத்தனை ஆண்டுகளிலும் இம்முறை வராததற்கு காரணம்? மருத்துவ வணிகம் பாதிக்குமே!

இக்காரணங்கள் மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.
இந்நிலைதான் இவர்களை கோமாளித்தனமானதாக இருந்தாலும் இறுதி நோக்கம் அறம் சார்ந்த நல்லவையாக இருப்பதால் மரபு என லேசாக முனங்குபவரிம் கூட மக்களை ஈர்க்கிறது.

அரைகுறை அறிவியலை தொங்கிகொண்டு அதை நயவஞ்சமாக வணிகத்திற்கு பயன்படுத்துபவர்களை விட, கோமிளித்தனமாக இருந்தாலும் இறுதி தகவல் குறைந்த பட்சம் அதிக பாதகம் செய்யாத, வணிகநோக்கம் குறைவாக உள்ளவர்கள் பக்கம் மக்களை கூடச்செய்கிறது.

மெத்த படித்த அறிவியல் அறிவாளிகள் என்பதை அவர்கள் எனது பதிவுகளில் உதிர்க்கும் முதல் வார்த்தை ஃபக் fuck ல் தெரிந்துகொள்வேன். இவர்களை பார்த்தால் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கும்.

இந்த காரணங்கள் தான் என்னை,  இவர்களில் எந்த பக்கம் துணை நிற்கவேண்டும் என்ற கேள்வியில் வணிகர்களைவிட கோமாளிகளை காப்போம் என அவர்களுக்கு வாதிட , அவர்கள் பால் வீசப்படும் மிகநேர்த்தியாக தந்திரமான ஒடுக்குமுறை நோக்கோடு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவும் வைக்கிறது.

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..!

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..! உங்களுக்கு தெரியுமா..???

உலகமே கைக்குள் என்ற நிலைமை வந்துவிட்டது. விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் புதிது புதிதாக வரும் நோய்களை வெல்ல எந்த அறிவியலாலும் முடியவில்லை.

இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தை முறையாகச் செய்தால் நிச்சயம் வெல்ல முடியும் என்று பலருக்குத் தெரியவில்லை. மூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 

உதாரணமாக கறிவேப்பிலையைக் குறிப்பிட்டாலும் சமீப காலங்களில் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை எல்லாவிதமான காய்ச்சலையும் விரட்டுவதில் இதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் கலந்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும்.
பன்றிக்காய்ச்சலுக்கும், எலிக்காய்ச்சலுக்கும்... ஏன் வவ்வால் மூலம் பரவியதாகச் சொல்லப்பட்ட நிபா வைரஸ் காய்ச்சலுக்கும்கூட இந்த கறிவேப்பிலை மருந்து நல்ல நிவாரணம் தரும். பலருக்கும் இந்த மருந்து பலனளித்தது, பலன் தந்து கொண்டிருக்கிறது.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் கோலை வீசி விட்டு குலுங்கிக் குலுங்கி நடப்பானாம்.

என்றும் இளமையுடன் வாழ திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது காலையில் இஞ்சியை சாறு எடுத்து குடிப்பது, டீயில் இஞ்சி சேர்த்துக் குடிப்பது, இஞ்சித் துவையல் செய்து சாப்பிடுவது, இஞ்சி ஜூஸ் குடிப்பது என அன்றாட நிகழ்வுகள் அமைய வேண்டும்.

இதேபோல் சுக்குடன் மிளகு, தனியா சேர்த்துப் பொடியாக்கி மாலை நேரத்தில் டீக்குப் பதிலாக அந்தக் கலவையை கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிப்பதன்மூலம் செரிமானக் கோளாறில் தொடங்கி இதயம் தொடர்பான நோய்கள், சளித்தொல்லை என நிறைய நோய்கள் சரியாகும்.

இதேபோல் இரவில் கடுக்காயை (விதையை நீக்கிவிட்டு) இரவில் கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும், மூல நோய் விலகும்.

வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு என எல்லாமே மருந்துதான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? சிலர் கேட்கலாம், அப்படியானால் தினமும் அந்த மருந்துகள் இல்லாமல் எங்கள் வீட்டில் சமையலே செய்வதில்லை. ஏன், எங்களுக்கு சுகர் வருகிறது, பிரஷர் வருகிறது, புற்றுநோய் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

நீங்கள் அந்த மருந்துகளையும் சாப்பிடுகிறீர்கள். கூடவே, பட்டை தீட்டிய அரிசியைச் சாப்பிடுகிறீர்கள், பல்வேறு ரசாயனங்களைப் போட்டு பிளீச் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை தினம் தினம் சாப்பிடுகிறீர்கள், கல் உப்புக்குப் பதில் அயோடின் சேர்த்த உப்பு என்று யார் யாரோ சொல்வதைக் கேட்டு பொடி உப்பைச் சேர்க்கிறீர்கள், பெட்ரோல் எடுத்ததுபோக மிச்சமாகிப்போன குருடாயிலில்  தயாரித்த எண்ணெய்களில்தானே தினம் தினம் வறுக்கிறீர்கள், பொரிக்கிறீர்கள், வடை செய்கிறீர்கள், பூரி போட்டு சாப்பிடுகிறீர்கள். இப்படி விஷமாகிப்போன உணவுகளை ஒவ்வொருவேளையும் சாப்பிடும்போது நீங்கள் எத்தகைய விலைஉயர்ந்த மருந்துகளைச் சாப்பிட்டாலும் நோய்கள் வரிசைகட்டி நிற்கத்தான் செய்யும்.

இதுமட்டுமல்ல வாரம் ஒருநாள்தான் நான்வெஜ் என்று சொல்லிக்கொண்டு ஊசி போட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் சிக்கனைச் சாப்பிடுகிறீர்கள். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தைச் சாப்பிடுகிறீர்கள், பூச்சிமருந்தில் முக்கி எடுத்த திராட்சைப்பழத்தைச்  சாப்பிடுகிறீர்கள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவரைச் சாப்பிடுகிறீர்கள். இவற்றில் உள்ள விஷங்கள் உங்களை பாதிக்காமல் என்ன செய்யும்?

இன்னும் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஒவ்வாத உணவுகளை வேண்டி விரும்பிச் சாப்பிடுகிறோம். டீக்கடையில் தேயிலையில் கலப்படம், அன்றாடம் அருந்தும் பாலில் கலப்படம் என எல்லாம் கலப்படம், ரசாயனம்... அவ்வளவும் நமக்கு நோயை வரவேற்க காரணமாகிறது.

இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முதலில் நம்மிடையே பொதுவான விழிப்புணர்வு வேண்டும். முன்பைக்காட்டிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும் செயலாக்கத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனா அந்த விழிப்புணர்வு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராமிலேயே நின்றுவிடுகின்றன.

அதாவது பார்க்க, பகிர, கருத்து சொல்ல என முடிந்துவிடுகிறது. வீட்டுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் விளைவாக ஓட்டல் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். அங்கே சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவில் தொடங்கி உங்களுக்கு பார்சல் போட்டு கொடுக்கப்படும் பாலித்தீன் பேப்பர் வரை எல்லாம் உயிர்க்கொல்லிகள்.

சிந்திப்போம். நோய்களை வெல்ல எளிய வழிகள் நிறைய இருக்கின்றன.

தலை வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி (இழைத்து) நெற்றியில் பற்று போடுங்கள்,

ஜலதோஷம் வந்தால் மணத்தக்காளி சூப் குடியுங்கள்.

மூக்கில் நீர் வடிந்தால் நொச்சியிலையை கொதிக்க  வைத்து ஆவி (வேது) பிடியுங்கள்.

சளி பிடித்தால் வெள்ளைப்பூண்டு பாலில் (சிறிது நீர் சேர்த்து) வேக வைத்து மிளகுப்பொடி, மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் குடியுங்கள் குணம் கிடைக்கும்.

இவை மட்டுமல்ல கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர்முன் அமர்ந்து வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என வலிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதுமட்டுமல்ல ஆண்மைக்கே சவால் விடும் பிரச்னைகளும் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.

இவைதவிர பொதுவாக நமது உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாய்வுக்கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், புற்றுநோய் என  நோய்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கை நிறைய காசு இருக்கிறது. ஆனால் அவற்றைக் கொண்டு நோய்களை விரட்ட முடியவில்லை. நோய்களை விரட்ட சரியான ஆட்களும் இல்லை. நோய்களுக்கேற்ப மருத்துவர்களும் பெருகிவிட்டார்கள், ஆனால் அவர்களிலும் பலர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கையில் கிடைத்ததை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கோ தயாரித்த மருந்துகளைக் கொடுத்து நம்மை சோதனை எலிகளாக்கி எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதனால் நோய் குணமாவதற்குப்பதிலாக பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படுகின்றன. அன்றைக்கு 100 மில்லி கிராம் குரோசினைச் சாப்பிட்டால்  காய்ச்சல் விலகியது. இன்றைக்கு 600-ஐத் தாண்டியும் நம்மிடம் சவால் விடுகிறது காய்ச்சல்.

எது வந்தால் என்ன? இயற்கையாக நம்மைச் சுற்றி மிக எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நோய்களை வெல்லலாம். 

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது... 🌷🌺💐💐💐💐💐🌺
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
🌺💐💐💐💐💐🌺
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
🌺💐💐💐💐💐🌺
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
🌺💐💐💐💐💐🌺
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
🌺💐💐💐💐💐🌺
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
🌺💐💐💐💐💐🌺
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
🌺💐💐💐💐💐🌺
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
சிதைவு வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
🌺💐💐💐💐💐🌺 தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
🌺💐💐💐💐💐🌺 மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
🌺💐💐💐💐💐🌺 வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
🌺💐💐💐💐💐🌺
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். 🌺💐💐💐💐💐🌺 மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். 🌺💐💐💐💐💐🌺 குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. 🌺💐💐💐💐💐🌺 இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
🌺💐💐💐💐💐🌺
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
🌺💐💐💐💐💐🌺
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
🌺💐💐💐💐💐🌺
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
🌺💐💐💐💐💐🌺
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
🌺💐💐💐💐💐🌺
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
🌺💐💐💐💐💐🌺
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன்பெறுவோம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...