Sunday, May 5, 2019

சர்க்கரைப் புண்.. முழங்காலை வெட்ட வேண்டாம். மூலிகை எண்ணெய் உள்ளது

சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.
என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .உடன் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும்  
எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
      20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை.நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன இருக்கிறதா என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் காலில் கட்டு எதுவுமில்லை சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன். முத்தூர் வெள்ளகோவிலிருந்து தாராபுரம் ரோட்டில் 8 - வது கிலோ மீட்டரில் உள்ள  தாசவ நாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள்(மணீயன் -  9443357325/ 150 வருட பாரம்பரீயமிக்க சித்த வைத்தியர்)ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது இது ஒரு குடும்ப. வைத்தியம் என்றார். உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம்.40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .இவ்வளவு ஆண்டுகளுக்கு ப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .அப்போது 
அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொண்டி
நொண்டி வருவார். டாக்ஸி வந்து நிற்க்கும் அதில் தடுமாறி ஏறுவார் . மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது.ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் என்ன விபரம் என்ன என்றுக்கேட்டேன்,சர்க்கரை இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.
    எனக்கு உடனடியாக தாச வநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் 1500ரூபாய் என்றார்.
    சரி நான் சொல்வதற்காக தாசவநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாச வவநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன்.இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன்.காலில் கட்டிலில்லை எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது.ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்....
    எல்லோரும் ஷேர் செய்யுங்கள்.....
   நம்புங்கள் சென்று பலனடையுங்கள்....
V.Navaneethan
Health Inspector
Chithode - 8248636098

புற்றுநோய் கட்டிகளை கரைக்க சப்பாத்தி பயன்படுத்தும் கள்ளிச்செடி..!

*பழங்குடியினர் புற்றுநோய் கட்டிகளை கரைக்க சப்பாத்தி பயன்படுத்தும் கள்ளிச்செடி..!*

புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது..

இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்..

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.

⭕️ சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

⭕️  உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

⭕️  நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

⭕️  வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

⭕️  ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

⭕️  சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது. கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது..

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும். ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம். ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid, Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ..

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது. உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது. இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது..

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும்.  இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

*வாழ்க வளமுடன்*

பெர்சனல்...கொஞ்சம்..! Personal*

*பெர்சனல்...கொஞ்சம்..!                       Personal*                         ********************** *Hygineமாதவிடாய், பிறப்புறுப்பு என்று பேசினாலே சில பெண்கள் முகத்தை திருப்பிக்கொள்ளலாம். ஆனால், ‘பெர்சனல் ஹைஜீன்’ தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களை அறியவேண்டியது உங்கள் கடமை அது தொடர்பாகத் தரும் தகவல்கள் இங்கே! படியுங்கள், தெளியுங்கள்...*

*பிறப்புறுப்பு சுகாதாரம்!*

‘‘பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்வது, பல தொற்றுகளில் இருந்து காக்கும். அதற்கான முதல்  வழி, சுத்தமான, உலர்வான உள்ளாடைகள் அணிவது. ஈரம், பூஞ்சைத்தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் எக்காரணம்கொண்டும் உள்ளாடைகளை ஈரத்துடன் அணியக்கூடாது. மாதவிடாய் நாட்கள் தவிர, மற்ற நாட்களில் உறங்கும் நேரத்தில் உள்ளாடைகள் தவிர்ப்பது நலம்; காற்றோட்டமும், உலர்வும் கிடைக்கும். ரோமம் இருந்தால்... ஈரம் தங்கும், தொற்று ஏற்படும் என்று பிரச்னைகள் வரிசைகட்டும் என்பதால் அதை நீக்கி பிறப்புறுப்பை சுத்தமாகப் பேண வேண்டும். குளித்து முடித்த பின்னும், ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னும் பிறப்புறுப்பை உலர்வாக்கிய பின்னரே உள்ளாடை அணிய வேண்டும். மாய்ஸ்ச்சரைஸர், டியோடரன்ட் போன்ற எதையும், மிகவும் சென்சிட்டிவான பிறப்புறுப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது. மாதவிடாய் நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஏதேனும் டிஸ்சார்ஜ் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

*பிறப்புறுப்புப் பிரச்னைகளுக்கு...*

வெள்ளைப்படுதல் குணமாக, 3 ஸ்பூன் புழுங்கல் அரிசியை 500 மில்லி தண்ணீரில் கொதிக்க  வைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தி வர, குணம் பெறலாம்.

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை (தனியா) ஒரு கப் தண்ணீரில்  இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்தத் தண்ணீரை அருந்தி வர, ஆரோக்கியம் கூடும். இது காலம்தவறிய மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

*பிரைவேட் பார்ட் வாஷ்!*

ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை ஒரு கப் தண்ணீரில்  கொதிக்கவைத்து, ஆறவிட்டு, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவி வர... அரிப்பு, வெள்ளைப்படுதல் பிரச்னைகள் நீங்கும்.

3 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்து, அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவிவர... துர்நாற்றம் நீங்கும்.

*மாதவிடாய் நாட்கள்!* 

சராசரியாக ஒரு பெண் 15 வயதில் பருவமடைகிறாள் என வைத்துக் கொண்டால், 40 வயதுக்கு மேல் அவளுக்கு மெனோபாஸ் ஏற்பட்டு மாதவிடாய் நிற்கும் காலம்வரை, கருத்தரிக்கும் காலம் நீங்கலாக, கிட்டத்தட்ட 300 முறை, அதாவது குறைந்தது 900 நாட்கள் அவள் தன் ஆயுளில் மாதவிடாயுடன், அந்த வலி, அவஸ்தையுடன் வாழ்கிறாள். அதனால்தான், முந்தைய காலங்களில் அந்நாட்களில் பெண்களுக்கு ஓய்வும், ஆரோக்கிய உணவும் தரும் விதமாக அவர்களைத் தனித்திருக்க வைத்தார்கள். இன்றோ ஸ்பெஷல் கிளாஸ், டெஸ்ட், செமஸ்டர், வேலை என்று எல்லா நாட்களிலும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில், மாதவிடாய் ஓய்வு என்பது சாத்தியமற்றது. இருந்தாலும், அந்நாட்களில் ஆரோக்கியமும், சுகாதாரமும் பேணுவது அவசியமாகிறது.

சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் மாதவிடாய், மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை நீடிக்கும். அப்போது வலி, வாந்தி, தலைவலி, உடல் அசதி என்று சிரமப்பட்டாலும், சாப்பாட்டைத் தவிர்க்கக் கூடாது. காரணம், இந்நாட்களின் ரத்தப்போக்கால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, சத்தான உணவு மிகவும் அவசியம். மேலும், இந்த உதிரம் கழிவு ரத்தம் அல்ல. எனில், ஒவ்வொரு மாதமும் இவ்வளவு ரத்தப்போக்கையும் ஈடு செய்யும்விதமாக சத்துணவு உட்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்?!

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களில் காபி தவிர்த்து பிளாக் டீ குடிக்கலாம். உடல் சூட்டைத் தவிர்க்கும் விதமான குளிர்ச்சியான மற்றும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். கடைகளில் வாங்கும் காஸ்ட்லி நாப்கின்களில் பயன்படுத் தப்படும் ரசாயனங்களால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்னை ஏற்படும். அவர்கள் அதைத் தவிர்த்து, அம்மாவிடம் காட்டன் நேப்கின்கள் தயாரித்துத் தரச்சொல்லிப் பயன்படுத்தலாம். அல்லது, கடைகளில் காட்டன் நாப்கின் களாக கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம்.

*பீரியட்ஸ் வலி, சோர்வு நீங்க...*

கற்றாழைச் சோற்றின் சாற்றை, சாப்பாட்டுக்குப் பின் ஒரு ஸ்பூன் இரண்டு வேளைகள் அருந்தலாம்.

கட்டிப் பெருங்காயத்தை நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், துளசிச் சாறு இரண்டு ஸ்பூன்கள் கலந்து குடிக்கலாம்.

ஒரு ஸ்பூன் எள்ளை, ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.

ஒரு துண்டு இஞ்சியை சுத்தம் செய்து நசுக்கி ஒரு  கப் தண்ணீரில் கொதிக்கவைத்து,  வடிகட்டி, உணவுக்குப் பின் அந்த நீரை அருந்தலாம்...’’

*ஹைஜீனாக இருங்கள்... ஹெல்தியாக இருங்கள்... ஹேப்பியாக இருங்கள்!*                      **********************

குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?*

*குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?*

*குளியல் பொடி தயாரிக்கும் முறை 1 (Bath Powder)*

*தேவையானவை:*

பச்சைப்பயறு – ½ கிலோ
கடலப்பருப்பு – ½ கிலோ
கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
பூலாங்கிழங்கு – 10 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
ரோஜா – 50 கிராம்
செம்பருத்தி பூ – 10
வேப்பிலை – 30 கிராம்
துளசி – 30 கிராம்
வெட்டிவேர் – 10 கிராம்

*செய்முறை:*

மேற்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும்.
நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையே குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்றது.

*யார் பயன்படுத்தலாம்?*

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்.

*பலன்கள்:*

குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது.
குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்.

துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும்.
உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது.
வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.

சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும்.
பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும்.
வியர்க்குரு தொல்லையும் இருக்காது.

பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை.

*குளியல் பொடி தயாரிக்கும் முறை 2*

*தேவையானவை:*

ரோஜா இதழ் – 150 கிராம்
பச்சைப்பயறு – 200 கிராம்
கடலப்பருப்பு – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
வேப்பிலை – 50 கிராம்
ஆரஞ்சு தோல் – 3-4 பழத்தின் தோல்கள்
பாதாம் – 10
எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்
செம்பருத்தி பூ – 10

*செய்முறை:* ச

இவை அனைத்தையும் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.

கடையில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் குளியல் பொடி ரெடி.

*யார் பயன்படுத்தலாம்?*

குழந்தைகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.

*பலன்கள்:*

தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.

இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும்.
மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும்.

**வியர்வைத் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.*
*சருமத்தில்இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும். சருமத்தை* *ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.**

குடலிறக்கத்தால்_பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்

#குடலிறக்கத்தால்_பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இதோ சில இயற்கை வைத்தியங்கள்...

ஒரு உறுப்போ அல்லது கொழுப்பு திசுவோ சுற்றியுள்ள பலவீனப்பட்ட சதையின் மூலம் வெளியேறி வருவது ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஆகும்.

இது தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது.

குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும்.

குறிப்பாக மலச்சிக்கல் குடலிறக்கத்திற்கு பாதிப்பிற்கு ஒரு அடிப்படை காரணம் ஆகும்.

அதிக உடல் எடை, நிறைய குழந்தைகள் பெறுதல், அதிக நேரம் சைக்கிள் பிரயாணம் செய்தல், அதிக எடை தூக்குவது, பாரம் சுமப்பது இவையும் குடலிறக்கம் ஏற்பட காரணம் ஆகின்றன.

அந்தவகையில் குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்....

ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.

ஒரு நாளைக்கு மூன்று முறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.
குடலிறக்கம் பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.

பழங்களில் அவகேடோ மற்றும் அன்னாசி போன்றவற்றை குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாப்பிட வேண்டும். இதனால் அவை புடைப்பு குறைப்பதோடு, வலியையும் சரிசெய்யும்.

பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பாகற்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவை தசைகளை வலிமையடையச் செய்து, குடலிறக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

டீயிலேயே க்ரீன் டீ தான் ஹெர்னியாவை குணப்படுத்துவதில் சிறந்தது. ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.
உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்....

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...