Monday, August 27, 2018

பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

நம்மில் பெரும்பாலானோர் நம்மைத் தாக்கும் பெரிய நோய்களை குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல முக்கியமான கொடிய நோய்களை ஆரம்ப காலத்தில் கண்டறியவே முடியாது. மாறாக முற்றிய நிலையில் தான் அந்த நோய்களைக் கண்டறிய முடியும். சில நோய்களுக்கான அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் உடல்நலக் குறைவாக இருப்பதால், பலர் அதனை சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.

பெரும்பாலான மக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் பித்தப்பை கற்கள். பித்தப்பையில் உருவாகும் கற்கள், வலியை ஏற்படுத்தும் வரை, அது நமக்கு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். பித்தப்பை கற்களுக்கான இயற்கை வைத்தியத்தைக் குறித்து காணும் முன்பு, அது எதனால் வருகிறது என்பதைக் காண்போம்.

பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகுபவை. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும்.

எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை கரைப்பதற்கு போதுமான பித்தநீர் பித்தப்பையில் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்களாக உருவாகின்றன. இருப்பினும் பித்தக்கற்கள் பித்த உப்புக்களாலும் உருவாகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களுக்கு பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகின்றன.

சரி, இப்போது பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

* 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் பித்தக்கற்கள் இயற்கையாக கரைந்து வெளியேறிவிடும்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது. அதுவும் தோல் நீக்காத ஆப்பிளை அரைத்து ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, வலிமிக்க பித்தக்கற்கள் இயற்கையாகவே வெளியேறிவிடும்.

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும். இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணமாகும். இதனை அனைவருமே பின்பற்றலாம். இதனால் பித்தப்பையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வரலாம். இதனால் வலிமிக்க பித்தப்பை கற்களை எளிதில் வெளியேற்றலாம்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள் தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கிரான்பெர்ரி ஜூஸ் உடன் சிறிது நீர் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் கிரான்பெர்ரி ஜூஸ் சற்று அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை.

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சர்க்கரை நோயா? பயம் வேண்டாம்

"சர்க்கரை நோயா? பயம் வேண்டாம்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள டாக்டர் கமலிஸ்ரீபால் இங்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

* எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்' முறையினை பின்பற்ற வேண்டும்.

* நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை இரவில் 100 மி.லி., தண்ணீரில் ஊற வைத்து, காலை அந்த நீரினையும், வெந்தயத்தினையும் எடுத்துக்கொள்ள இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

* 60:20:20 என்ற விகிதத்தில் நார்ச்சத்து மிகுந்த கார்போ ஹைடிரேட், புரதம், நல்ல கொழுப்பு இருக்கவேண்டும். 1500-1800 கலோரி சத்து அவரது வயது, உழைப்பினைப் பொறுத்து கூறப்படுகின்றது.

* உலர்ந்த பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கூட்டி விடும். ஆனால், பாதாம் 4-6 வரை எடுத்துக் கொள்ளலாம்.

* தக்காளி ஜுஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானியம், ஓட்ஸ், சிறு தானியங்கள், முளை தானியங்கள் இவையே பிரதான உணவாக இருக்கவேண்டும்.

* கொழுப்பற்ற பால் தினமும் 2 கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பட்டாணி, பீன்ஸ், பசலை, பயறு வகைகள் மிக மிக சிறந்தவை.

* ஒமேகா-3 என்ற சத்து மாத்திரையாவது எடுத்துக் கொள்ளுங்கள். மீன் உண்ணும் பழக்கம் இருந்தால் அவர்கள் நன்றாக மீன் எடுத்துக் கொள்ளலாம்.

* பப்பாளி, ஆப்பிள், கொய்யாப்பழம், பேரிக்காய், ஆரஞ்சு இவைகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* பெரிய உணவாக ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் சிறு சிறு உணவாக நாள் ஒன்றுக்கு 5 முறை எடுத்துக்கொள்ளுங்கள்.

* மூன்று வேளை உணவு அவசியம். 4-5 மணிக்கொரு முறை உணவு எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவினை சீராய் வைக்கும். எப்போதுமே குறைந்த கார்போஹைடிரேட் கொண்ட ஏதாவது ஒரு உணவினை வெளியில் செல்லும்போது உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* உங்கள் சர்க்கரை அளவினை நீங்களே தெரிந்துக் கொள்ளும் உபகரணத்தினை கண்டிப்பாய் உடன் வைத்திருங்கள். இதில் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

* உடலுக்குச் சத்தான உணவை தேர்ந்தெடுங்கள். சர்க்கரை, உப்பு இரண்டுமே குறைவாக இருப்பதே நல்லது.

* வேக வைத்த உணவுகள், நார்ச்சத்து உணவு, கொழுப்பில்லாத பால், பால் சார்ந்த பிரிவுகள், முழுதானிய உணவு, காய்கறி, பழ உணவுகள் மிக சிறந்தது.

* 3-4 மாதத்தில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு என்பதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* பிதீ கி1சி எனப்படும் இந்த பரிசோதனையில் 6-7சதவீதம் என்ற அளவு முறையானது. அதற்கு கூடுதலாக இருப்பின் கடந்த சில மாதங்களாக சர்க்கரை அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் அதன் எண்ணைக் கொண்டு (உ-ம் 10.5 சதவீதம்) எந்த அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் தெரிந்து உடனடி சீர்ப்படுத்த முயல வேண்டும்.

* ஆல்கஹால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதில் எந்த சத்தும் இல்லை. ஆனால் கலோரி சத்து மட்டுமே அதிகமாக உள்ளது. மது, நீரிழிவு மருந்துடன் இணைந்தால் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. வெறும் வயிற்றில் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் ஆபத்தை விளைவிக்கும்.

* உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு செய்யுங்கள்.

* வருடத்திற்கு 4 முறையாவது ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து பாருங்கள்.

* பாதங்களை அன்றாடம் கவனியுங்கள். அடி, காயம் இவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாதங்களை சாக்ஸ் அணிந்து கூட சிறிது வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

* முறையான சர்க்கரை அளவு இல்லாவிடில் சிறு சிறு ரத்தக்குழாய்கள் பாதிப்பிற்குள்ளாகும். குறிப்பாக, கண்கள் பாதிக்கப்படும். எனவே, வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

* நீரிழிவு பல், ஈறு இவற்றினை பாதிக்கும். கவனம் தேவை.

* பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றமும், உடல் உழைப்பு கூடுதலும் 80 சதவீதம் வரை சர்க்கரை அளவை சீராக்கி விடும்.

* ஆப்பிள் சுமாரான அளவு ஒன்று 21கி கார்போ ஹைடிரேட், 3.7 நார்ச்சத்து, .5கி கொழுப்பு, .3கி புரதம், கலோரி 81 உடையது.

* ஒரு சாதரண சிறிய வாழைப்பழம் 23.7கி கார்போ ஹைடிரேட், 2.4கி நார்ச்சத்து, .5கி கொழுப்பு, 1.0கி புரதம், 93 கலோரி சத்து உடையது.

* காபி குடித்த பிறகு பலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது. பால் இல்லாத காபி குடித்தாலும் சிலருக்கு இது இருக்கின்றது. சிலருக்கு க்ரீன் டீ, சத்து பானம் போன்றவைக் கூட சர்க்கரையின் அளவினை கூட்டுகின்றது. காபியின் சில ரசாயனங்கள் பிரிவு 2 நீரிழிவினை தடுக்கவும் செய்கின்றன. பொதுவில் அவரவர் உடல் வாகினை தெரிந்து இவற்றினை எடுத்துக்கொள்வது நல்லது.

* சர்க்கரை இல்லாதது என எழுதப்பட்ட உணவினாலும் ஏன் இதனை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுகின்றது என சிலர் எண்ணலாம். அந்த உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து கூடுதலாக இருக்கலாம். கவனம் தேவை.

* நோய் காலத்தில் உடல் அந்த நோயினை எதிர்த்துப் போராடும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். நன்கு தண்ணீர் குடியுங்கள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இவை சர்க்கரையின் அளவினை கூட்டுபவையா என்ற மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

* அதிக மன உளைச்சல் உள்ள பொழுது உடலில் வெளியாகும் ஹார்மோன்களால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடலாம். இது பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளிடையே சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. எனவே, பிராணாயாமம், யோகா, தியான முறையில் மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

* பச்சை நிற காலிப்ளவர், பசலைக் கீரை, பீன்ஸ் இவை நிறைய நார்ச்சத்து கொண்டவை. மாவுச்சத்து குறைவாகக் கொண்டவை.

* சைவ உணவும், காய்கறிகளை அதிகமும் உட்கொண்ட 43 சதவீதம் மக்கள் (பிரிவு 2-வைச் சார்ந்த நீரிழிவு நோயாளிகள்) மருந்திலிருந்தே வெளிவர முடிந்தது என அமெரிக்க நீரிழிவு ஆய்வகக் குறிப்பு கூறுகின்றது.

* நீரிழிவு நோயாளிகள் எளிதில் இருதய நோய்க்கு ஆட்படுவர். ஆகவே மேற்கூறிய உணவுமுறை அவர்கள் எடையை குறைத்து, கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது.

பொருத்தமான உணவு :

ஓட்ஸ் போல் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி, சீராக்கும் ஒரு உணவுக்கு நிகர் ஓட்ஸ் மட்டுமே. ஓட்ஸ் உணவும் கார்போ ஹைடிரேட் வகையினைச் சேர்ந்ததுதான். இருப்பினும், இது நல்ல கார்போ ஹைடிரேட். செரிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றாது.

அடிக்கடி அல்லது அன்றாடம் ஓட்ஸ் உணவினை எடுத்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இதிலுள்ள நார்சத்து வயிற்றினை நிறைவாக வைப்பதோடு எடை குறைப்பிற்கும் உதவும். டைப் 2 நீரிழிவு பிரிவினரின் எடை குறைப்பிற்கு உதவும்.

பிரண்டையும் முழங்கால் வழியும்

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
            
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                    
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது. 
                  
                 இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல்  அணைவரும் உபயோகித்து பயன்   அடைந்தால்  நான் மிகவும் மகிழ்வேன்.
                         Dr.M.C.Ramamurthy,
                            9150001551.

பிரண்டையும் முழங்கால் வழியும்

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
            
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                    
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது. 
                  
                 இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல்  அணைவரும் உபயோகித்து பயன்   அடைந்தால்  நான் மிகவும் மகிழ்வேன்.
                         Dr.M.C.Ramamurthy,
                            9150001551.

எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?

பாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?

பாட்டி வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த, உணவு மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறைகள் ஆகும். இந்த பாட்டி வைத்தியத்தின் மிக அடிப்படையான விஷயமே நாம் சாப்பிடும் உணவையே நம்முடைய நோயைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவது தான்.

நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாகப் பின்பற்றி வந்தனர். ஆனால் இன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில், நம்முடைய உணவுப் பழக்கம் என்பது முற்றிலும் மாறிவிட்டது. ஃபாஸ்ட் ஃபுட், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் என்று சாப்பிட்டு விட்டு, உடலில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அதிகமான பின், மருத்துவரிடம் சென்று நிற்கும்போது, அவர் மீண்டும் நம்முடைய பழமையாக உணவு முறையைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். நாமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையையே இப்போது தனி மருத்துவ முறையாகப் பின்பற்றி வருகிறோம்.

வாழைக்காய்:
வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், வாழைக்காயை சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை உண்டாகும் என்னும் ஒரு வதந்தி இருக்கிறது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் வாழைக்காயை பல்வேறு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். வாழைக்காய் பாட்டி வைத்தியத்தில் எதற்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்:
வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நோஞ்சானாக இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் தேற ஆரம்பிக்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். என்னென்ன பிரச்னைக்கு வாழைக்காயை எப்படி சாப்பிடலாம்?

நீரிழிவு:
வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இயல்பாக எழுவது வழக்கம் தான். ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்கள் வாழைக்காய் கச்சல் செய்து சாப்பிடுங்கள். அதாவது வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

ரத்த விருத்திக்கு:
ரத்த விருத்திக்கு வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது. வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி விட்டு, சமைப்பது தான் சிறந்த முறை. அப்போது தான் நார்ச்சத்து முழுமையும் நம்முடைய உடலுக்கு வந்து சேரும். வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். அது மட்டுமல்லாது, வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

வயிற்றுப்போக்கு:
வயிற்றுப் போக்குக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.

ஏப்பம்:
சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரணக் கோளாறு தான். அப்படி அஜீரணக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும்.

அதேபோல், உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உளுந்து, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி, சாதப்பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...