Monday, January 13, 2020

சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.*

*முக்கிய கட்டுரை முழுவதும் படிக்கவும்*

*தவறான கருத்து:*

*சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.*


சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.


சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, *உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப் படுகின்றன.*

*உலோகங்கள் என எடுத்துக் கொண்டால்*


இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


*பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால்*
(Arsenic Compound), 

கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.


*உப்புகள் என எடுத்துக்கொண்டால்*

இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் *120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.*

உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.


*இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.*


*நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.*
*அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.*
*ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.*
*உதாரணத்திற்கு Lead என்ற காரீயத்தின் சுத்தி* *முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.*
*மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.*

இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. 

அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).


*இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.*


உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.


*சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.*http://www.siddharmedicine.in/@ 9943909495,04258-226495

புற்றுநோய் வள்ளியம்மாள்

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். 

பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை   இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார். 

இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.

83448 88786‬: 
Address 

VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581

Source: our Rotary club WhatsApp group இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன்.

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது 

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, , 04258-226495

அக்கி (Herpes), அக்கிப்புடை (Herpes Zoster)

அக்கி (Herpes), அக்கிப்புடை (Herpes Zoster) 


அக்கி (ஆங்கிலம்:Herpes) என்பது மனிதத்தோலின் மேல் தோன்றும் தீநுண்ம நோய் ஆகும். இது பலவகைப்படும். அவற்றுள் இயல்பான அக்கி, அக்கிப்புடை என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இயல்பான அக்கி, மேற்தோலில் தோன்றக்கூடியது. இது தோன்றும் முன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். இந்நேரத்திலேயே தோலின் மீது நைட்ரசு ஈதர் பூசி, இந்நோய் வராவண்ணம் தடுக்கும் வழக்கம் உள்ளது. நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும்.பின்னர், விரைவில் கொப்புளங்கள் தோன்றும். பொதுவாக இது முகத்திலும், கன்னத்திலும்,மூக்கின் மேலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா ஆகிய நோய்கள் பீடித்திருக்கும் போது இந்நோய் வரலாம்.அக்கி ஒருமுறை வந்தால், மீண்டும் பலமுறை வரும் இயல்புடையது ஆகும். 
அக்கிப்புடை (Herpes Zoster) என்ற இந்நோய் அக்கியை விடச் சிக்கலானது. இது தொற்றுநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்புவலிக்குப் பின் திடீரெனச் சிரங்கு தோன்றும். பல மாதங்கள் இந்த அக்கிப்புடை தோன்றிய இடத்தில் வலி இருக்கும். இந்நோய் வருவதற்கு முன் சிலருக்கு காய்ச்சல், உடற்சோர்வு வரும். இப்புடை ஒருமுறை வந்தால், மீண்டும் பல ஆண்டுகளுக்கு வருவதில்லை. நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது.
நச்சுக்குரிய நோய்களுள் ஒன்றான ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் (Herpes simplex, பண்டைக் கிரேக்கம்: ἕρπης - herpes, உள்ளபடி "படர்தல்" என்ற பொருள்) ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமி 1 (HSV-1) மற்றும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமி 2 (HSV-2) ஆகிய இரண்டாலும் ஏற்படுகிறது. ஹெர்பெஸ் நுண்கிருமியால் ஏற்படும் தொற்றுநோய், அது ஏற்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உடல்நோய்களாக வகைப்படுத்தப்படுகிறது. 
வாய்வழி ஹெர்பெஸ், காணக்கூடிய அறிகுறிகளுடன், பேச்சுவழக்கில் சளிப் புண் என்றழைக்கப்படும் அது முகம் மற்றும் வாயைப் பாதிக்கிறது. வாய்வழி ஹெர்பெஸ் தான் பொதுவாக வரக்கூடிய தொற்றுநோய் வகை. 
பிறப்புறுப்பு ஹெர்பெஸ் பொதுவாக வெறுமனே படர்தாமரை என்றழைக்கப்படும் இதுதான் இரண்டாவது அதிகமாக பரவக்கூடிய ஹெர்பெஸ் வகை. இதர ஒழுங்கின்மைகளான படர்தாமரைக்குரிய நகச்சுற்று, ஹெர்பெஸ் கிளாடியேடரபம், பார்வைக்குரிய படர்தாமரை (கெராடிடிஸ்), பெருமூளைக்குரிய படர்தாமரை தொற்றுநோய் மூளைக் கொதிப்பு, மோல்லாரெட்ஸ் மூளைக்காய்ச்சல், நியோனடால் ஹெர்பெஸ் மற்றும் பெல்ஸ் பால்சி இவை அனைத்துமே ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமிகளால் ஏற்படுகின்றன.

ஹெர்பெஸ் கிருமிகள், கொப்புளங்களாக 2-21 நாட்கள் வரை நீடித்திருக்கும், அதனைத் தொடர்ந்து நோய் தணிப்பு காலம் வரும், அப்போது அந்தக் கொப்புளங்கள் மறையும். எனினும் பிறப்புறுப்பு ஹெர்பெஸ், பெரும்பாலும் நோய்அறிகுறியற்றவை, இருந்தாலும் நச்சுக்குரிய அகற்றல் இன்னமும் தொடர்ந்து நடைபெறும். ஆரம்ப தொற்றுதலுக்குப் பின்னர் அந்த கிருமி சென்சரி நரம்புகளிடத்தில் நகர்கின்றன, அங்கு அவை வாழ்-நாள் முழுதும் உள்ளுறைகிற கிருமிகளாகத் தங்கிவிடுகின்றன. 



ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் பாதிக்கப்பட்ட தனிநபரின் உடல் திரவம் அல்லது புண்களின் நேரடி தொடர்பு மூலம் மிக விரைவாகத் தொற்றிக்கொள்கிறது. அறிகுறியற்ற வெளியேற்ற காலத்தின் போதும் தோலோடு தோல் தொடர்பு மூலமும் கூட அது பரவக்கூடும். நோயாளி, காணக்கூடிய புண்கள் அல்லது அல்சர்களைக் கொண்டிருந்தால், வாய்வழி ஹெர்பெஸ் எளிதாகக் கண்டறியப்படும். வாய்சார்ந்த முகப் படர்தாமரை மற்றும் பிறப்புறுப்பு படர்தாமரை நோய் கண்டறிதல் மிகவும் கடினம்; 
ஒருமுறை தொற்றிக்கொண்டால், அந்த வைரஸ் காலம் முழுவதும் உடலுக்குள் இருந்துவிடும். இருந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர், சில நபர்கள் நிரந்தரமாக நோய் அறிகுறியற்றவர்களாக ஆகிவிடுவார்கள், மேலும் அவர்கள் அதுமுதல் நோயின் எந்த தாக்கத்தையும் அனுபவிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் இன்னமும் மற்றவர்களுக்குப் பரவச் செய்யக்கூடும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9688231448, 9080068217, 04258-226495

சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க இயலாத ஒன்று.

சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க இயலாத ஒன்று. 

முழுக்க முழுக்க நமது அறியாமையாலும் நமது அறியாமையின் மீது கட்டப்பட்ட மருத்துவ வியாபாரத்தாலும் மட்டுமே செயற்கையாக உருவாக்கப்பட்ட கொடுமை. 
   

சிறுநீரக செயலிழப்பு நடக்க இரண்டு காரணங்கள் மட்டுமே உண்டு. அவை உடலில் அதிகப்படியான கழிவுகளை தேங்க வைப்பதும் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான சகதியையும் நேரத்தையும் கொடுக்காததே ஆகும். 
   

சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய வேண்டும் என்றாலும் மேற்சொன்ன இரண்டு காரணங்களை சரி செய்வது மட்டுமே தீர்வு. அவை கழிவுகளை சேர்க்காமல் இருப்பது மற்றும் சிறுநீரகத்திற்கு தேவையான சக்தியையும் நேரத்தையும் கொடுப்பது. 
   

உதாரணமாக ஒன்றை பார்ப்போம். 
   

#சர்க்கரை_நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பலருக்கு 
#சிறுநீரக #செயலிழப்பு  வாரும் காரணம் , சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் 
#மறைமுகமாக நமக்கு செய்யும் பக்க விளைவு உடலில் கழிவுகளை தேங்க வைப்பது.  

சிறுநீரக செயலிழப்பு நடக்க சொல்லப்பட்ட காரணத்தில் இதுவும் ஒன்று.  
   
#சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்தின் இன்னொரு தீங்கு உடலின் உயிர் சக்தியை அதிகரிக்க விடாமல் செய்வதோடு சிறிது 
#சிறிதாக #மந்தப்படுத்துவது. 

கூடவே உடலுக்கு ஓய்வை கொடுக்க இயலாத வண்ணம் மனிதனை பசிநோயாளி ஆக்குவது. இதனால் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான நேரம் கிடைக்காமல் போவதோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள தேவையான நேரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆக சிறுநீரக செயலிழப்பு நடக்க இவை இரண்டு காரணங்களும் சர்க்கரையை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகிறது. 
    

 சிறுநீரகம் பழுதடைய ஆரம்பித்த சில வருடங்களில் மேற்சொன்ன காரணங்களை சரி செய்யாத பட்சத்தில் சிறுநீரக செயலிழப்பால் மரணத்தை தடுக்க முடியாது. 

இவை தற்போது 
45 வயது முதலே ஆரம்பித்து விடுகிறது. 
   

ஆக சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் நோயை உருவாக்குகிறதே தவிர எந்த நோய்க்கும் தீர்வு அல்ல. 
   

இந்திய மருத்துவ சட்டம் மருந்துகள் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவோ  நோயை குணப்படுத்தவோ இயலாது என்பதை தெளிவுபடுத்தியும் மக்களின் அறியாமை காரணமாக இந்தியா முழுவதும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
    
சரி இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். 
   
நமது உயிர் இவ்வுடலில் தன்னை தக்க வைத்துக் கொள்ள கடைசி வரை முயற்சித்துக் கொண்டேதான் இருக்கும். 

நாம்தான் நமது அறியாமை காரணமாக அதை புரிந்து கொள்வதில்லை. ஆக உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு செயல்படும் பட்சத்தில் மட்டுமே இவ்வாறான நோய்களிலிருந்து மீண்டு வர முடியும். இது மட்டுமே வாய்ப்பு.  

நீங்கள் எந்த மருத்துவத்தை பின்பற்றினாலும் சரி அம்மருத்துவம் இப்பாதை வழியாக செல்லும் போது சிறுநீரக செயலிழப்பிலிருந்து அந்நோயாளியை மீட்டெடுக்க முடியும். 
  
உப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டுக்
கொண்டிருக்கும் மருத்துவ அறிவை மூட்டை கட்டி வைத்து விட்டு உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு அனுமதிப்பது மட்டுமே கடைசி வாய்ப்பு. 
    

இவரை காப்பாற்ற முடியாது என்று சொன்ன பின்பும் அம்மருத்துவத்தை கைவிடுவதில் தயக்கம் இருந்தால் கடைசி வாய்ப்பும் மூடப்பட்டுவிடும். அவ்வாறான நிலையில் உள்ள ஒருவருக்கு  நன்கு பசித்தால் மட்டுமே சிறிய அளவில் பழச்சாறுகளைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்க கூடாது.  தாகம் எடுக்கும் போது  தண்ணீர் கொடுக்க வேண்டும். 
   
வாந்தி பேதி, கொப்பலங்கள் ஏற்பட்டு சீல் வடிதல் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தடுக்க கூடாது. ஏனெனில் உடலின் உப்புக் கழிவுகள் இவ்வாறே வெளியேற ஆரம்பிக்கும். 
   
உடலை இளம்சூடான வெப்பத்தில் காட்டுவது நல்லது. 
  

கை கால் உடல் தசைகளை மென்மையாக அழுத்திக் கொடுக்கலாம். 
    

சாதாரண நிலையில் உணவுகளை செரிமானம் செய்ய உயிர் சக்தி அதிகம் செலவாகும். மருந்துகளை செரிமானம் செய்ய அதைவிட அதிக உயிர் சக்தி செலவாகும். அப்படி இருக்க செரிமானம் செய்ய இயலாத உயிருக்கு போராடும் நிலையில் உள்ள ஒருவருக்கு உணவு கொடுப்பது மற்றும் அதைவிட மருந்துகள் கொடுப்பது என்பது அவருக்கு விரைவாக மரணத்தை கொடுக்கும் வழி ஆகும். 
     

தேவையான அளவு தேவையான நேரத்திற்கு  உணவு, உடற்பயிற்சி, ஓய்வு என முறையாக வாழ்ந்தால் எந்த நோயும் வராமலிருப்பதுடன் எந்த நோயிலிருந்தும் நம்மை குணப்படுத்திக் கொள்ள இயலும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9688231448, 9080068217, 04258-226495

பித்தக்கற்கள்

பித்தக்கற்கள்

பித்தப்பையில் தோன்றும் பித்தக்கற்கள் பல அளவுகளில் அமையலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு இக்கற்கள் தோன்றலாம். இக்கற்கள் பித்தநீரில் தோன்றும். பித்தநீரில் கொலஸ்டிரால்,நிறமிகள் மற்றும் சில உப்புகள் உள்ளன. பித்தநீரின் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் கல் தோன்றுதல் நிகழலாம். இக்கற்கள் கொலஸ்டிராலால் ஆனவை. கல் தோன்றுதலுக்கான மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை. உடற்பருமன் அதிகரிப்பு,உணவில் கொழுப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களால் கல் தோன்றலாம்.மிகுந்த பாதிப்பு நிலையில் கற்களால் பித்தநீர் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை தோன்றும்.
கல்லீரல் அழற்சி
பல காரணங்களால் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. இந்நோயில் வைரஸ்களின் தாக்குதலால் கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று நோயற்ற கல்லீரல் அழற்சி அதிக அளவு மது அருந்துதலால் ஏற்படும். ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் தெளிவாக இருப்பதில்லை. இந்நோயால் உடற்சோர்வு, வாந்தியெடுத்தல், காய்ச்சல், வலது மேல் வயிற்றுப்பகுதியில் ஓர் வசதியற்ற உள்ளுணர்வு போன்றவை ஏற்படும். இந்நிலையுள்ளோருக்கு நல்ல ஓய்வு தேவை. மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

திடீரென்று உடல் பாகங்கள் மரத்து போவதற்கும், உடலில் சிலிர்ப்பு ஏற்படுவதற்கும் காரணங்கள் எவை….?

திடீரென்று உடல் பாகங்கள் மரத்து போவதற்கும், உடலில் சிலிர்ப்பு ஏற்படுவதற்கும் காரணங்கள் எவை….?
 
திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது என்பது. நமது உடல் பாகங்களுக்கு உணர்ச்சியை அளிப்பது நமது நரம்பு மண்டலம். மூளையும் முதுகுத் தண்டுவடமும் சேர்ந்து மத்திய நரம்பு மண்டலம் (Central nervous system) என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதும் பரவியுள்ள நார் போன்ற அமைப்புடைய நரம்புகள் அனைத்தும் சேர்ந்ததே வெளி நரம்பு மண்டலம் (Peripheral nervous system). இவை தவிர நமது மனக் கட்டுப்பாட்டில் வராமல் இயங்கும் உறுப்புகளை (இருதயம், மூச்சு, சிறுநீரகம் போன்றவை) செயல்படுத்த மூன்றாவது ஒரு தன்னிச்சை நரம்பு மண்டலமும் உண்டு.
நமது உடலுக்கு தொடு உணர்ச்சியும் பிற உணர்ச்சிகளையும் (வலி, அரிப்பு, சூடு போன்றவை) கொடுப்பது இந்த நரம்பு மண்டலமே. நமது உடலின் பாகங்களை நாம் அசைப்பதும் நாம் அசைவதும் நரம்புகளாலே.
பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு உணர்ச்சியைக் கொடுக்கும் நரம்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்த பாகம் செயலிழந்துவிடும். நரம்பின் தன்மைக்கேற்ப பாதிப்பு இருக்கும். உணர்ச்சியைத் தூண்டும் நரம்பில் (Sensory nerves) நோய் ஏற்பட்டால் குறிப்பிட்ட உடல் பாகம் உணர்வு இன்றி மரத்துப் போய்விடும். இந்த நிலை சில நிமிடங்களோ சில மணி நேரங்களோ அல்லது சில நாட்களோ இல்லை வாழ்நாள் முழுவதுமோ நீடிக்கக்கூடும். செயலைத் தூண்டும் நரம்பில் (Motor nerves) பாதிப்பு வந்தால் குறிப்பிட்ட உடல் பாகம் செயலிழந்து துவண்டுவிடும்.
இதற்கு பல காரணங்கள் உண்டு.
வெகுநேரம் ஓரிடத்தில் சரியான பாங்கில்லாமல் அமர்ந்திருத்தல் அல்லது உறங்குதல் (உதாரணம். நாற்காலியில் அமர்ந்து கொண்டே கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டுக் கொண்டு உறங்குதல்)
சில சத்துக் குறைபாடுகள்
சர்க்கரை நோய்
சில ஆபத்தான வேதிப் பொருட்கள்
நரம்புகளில் ஏற்படும் கட்டிகள்
சில காயங்களால் நரம்புகள் பாதிக்கப்படுதல்
மூளையில் ஏற்படும் நோய்கள்
காரணமே இல்லாமை.
இது போன்ற நோய்களில் காரணத்தை சரி செய்து விட்டால் நரம்புகள் பழைய நிலைக்கு வந்து விடும். மரத்துப் போன பாகங்கள் மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பித்து விடும்.
திடீரென்று உடலில் ஏற்படும் சிலிர்ப்பைப் பற்றியது. 

இந்த நிலை பொதுவாக திடீரென்று நரம்புகள் தூண்டப்பட்டால் நிகழ்வது. நமது உடலில் பெரும்பாலான நரம்புகள் தசைகளால் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளன. சில நரம்புகள் உதா. முழங்கையின் பின்னால் இருக்கும் அல்னார்(ulnar) நரம்பு போன்றவை சற்று வெளிப்புறமாக அமைந்திருக்கும். இது போன்ற உடலின் வெளிப் பாகங்களில் அமைந்துள்ள நரம்புகளில் சிறிய அதிர்வோ அழுத்தமோ ஏற்பட்டால் (முழங்கையை திடீரென்று எதாவது பொருள் மீது இடித்துவிடுதல்) அந்த பாகம் முழுவதும் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இது சில நொடிகளில் சரியாகிவிடும்.
மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் சிறிய அடைப்பு ஏற்பட்டாலும் உடலின் சில பகுதிகளில் சிலிர்ப்பு போன்ற உணர்வு ஏற்படும்.
ஏதாவது ஆபத்தான தருணத்தை உடலும் மனமும் உணரும் போது அட்ரினல் போன்ற சுரப்பிகள் சுரந்து உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்படும்.
வலிப்பு நோயின் சில வகைகளில் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு வலிப்பு வரும்.
ஆக பல காரணங்களாலும் உடல் சிலிர்ப்போ மரத்துப் போதலோ ஏற்பட்டாலும் பெரும்பாலான சமயங்களில் இவை ஆபத்து இல்லாத தொந்தரவுகளே. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

அல்சர் பிரச்சனைகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்*

அல்சர் பிரச்சனைகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்*

அல்சர் உள்ளவர்களுக்கு அவ்வப்போது விட்டுவிட்டு வயிறு, நெஞ்சு போன்ற  பகுதிகளில் வலி ஏற்படுதல், சாப்பிட்ட உடனேயோ சற்று நேரம்  கழித்தோ வயிற்று  வலி உண்டாதல், வாந்தி எடுத்தல், இரத்தத்துடன் மலம் கழிதல், பசியினால்  சாப்பிட வேண்டும் என்றிருந்தாலும் சாப்பிட முடியாமல் இருத்தல், வாயில்  அடிக்கடி துர்நாற்றம் வீசுதல், உடலின் எடை குறைந்து வருதல், வயிற்று  எரிச்சல், வயிறு உப்பிசம், புளிப்பு  ஏப்பம் வருதல் என்பன ஆகும்.

இரைப்பையில்  வருவது ‘கேஸ்டிரிக் அல்சர்’ என்றும் இரைப்பை கோளத்தில் வருவது ‘பெப்டிக்  அல்சர்’ அல்லது ‘டியோடினல் அல்சர்’  என்றும் சொல்லப்படுகிறது.

கேஸ்ட்ரிக் அல்சர் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்டால் வயிற்றுவலி  அதிகமாகும். வாந்தி எடுத்தால் தான் வலி குறையும். பசி இருக்கும்  ஆனால்  சாப்பிட பயந்து சாப்பிடாமல் இருந்து நாளடைவில் எடை குறைந்துகொண்டே போகும்.  உடல் மெலியும்.

இரைப்பை கோளத்திலுள்ள அல்சருக்கு உணவு  சாப்பிட்டால்தான் வயிற்றுவலி குறையும். வயிறு காலியாக இருந்தால் வலி  அதிகமாகும். பசி  இருக்கும் அதனால் அதிகமாக சாப்பிட உடல் எடை அதிகரிக்கும்.

இரைப்பை உட்சுவர்களை வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாக தாக்காமல்  இருக்க, வாயில் சுரக்கும் உமிழ்நீர் உதவியாக இருந்து அமிலத்தின் அரிப்புத்  தன்மையை குறைக்கிறது.

அல்சர் நோய்லிருந்து விடுபடுவதற்கு, பசி  எடுக்கும் நேரத்தில் காலம் தவறாமல் ஏதாவது பழங்கள் அல்லது பழச்சாறுகள்  உட்கொண்டு பசியை  தணிக்க வேண்டும்.

உணவில் உப்பு, புளி, காரம் பாதியாக குறைப்பது முக்கியமானது. போதைபொருள், மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே விட்டுவிட  வேண்டும்.

உணவு உண்ணும்போது பற்களால் நன்கு மென்று அரைத்து உமிழ்நீர் கலக்கும்படி  செய்து விழுங்க வேண்டும். ஒரு கப் தண்ணீர்  குடித்தாலும்கூட கொஞ்சம்  கொஞ்சமாக நாவால் நன்கு கலக்கி உமிழ்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மிலி அளவுக்கு வெண்பூசணிச் சாறினை  அருந்திவர வேண்டும். சிலருக்கு இச்சாறு பிடிக்காது. சளி ஏற்பட வாய்ப்பு  உண்டு. அப்படிப்பட்டவர்கள் சாறாக சாப்பிடாமல் பொரியல், குழம்பு என சமைத்து  சாப்பிடலாம்.

அல்சர் நோயாளிகள் உணவில் பால் சாதம், தயிர்  சாதம், மோர்சாதம், இளநீர், புடலங்காய், காரட், முட்டைகோஸ், வாழைப்பழம்,  மணத்தக்காளிப்பழம், மணத்தக்காளி கீரை, கீரைவகைகள் மற்றும் பச்சைக்  காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக  துவர்ப்பு சுவையுள்ள நாவல்பழம், சப்போட்டா பழம், மாதுளம் பழம்,  சுண்டைக்காய், அத்திப்பழம் ஆகியவற்றை அல்சர் நோயாளிகள் அதிகமாக சாப்பிட  வேண்டும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக  முழுமையாக குணப்படுத்த முடியும்.http://www.siddharmedicine.in/@ 9943909495, 04258-226495

எலும்பு தேய்மானம்

*⁰ தேய்மானம்*
 
எலும்பு தேய்மானம் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்குகிறது. இவை பெரும்பாலும் 45 வயதுள்ள பெண்களை அதிகம் தாக்க தொடங்கி பின்பு மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது
.
எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. 

இந்த தாது உப்பை உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. 

ஆண்களில் வயதானவர்களையும் பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மானம் நோய் பாதிக்கிறது.
 
எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.
 
பெண்களின் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிரந்திரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும்  ஹார்மோன் மாறுபாடுகளால்  எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும். பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மெனோபாஸ்  காலத்தில் பலர் கர்ப்பப்பை அகற்றுவதும் ஆஸ்டியோரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.http://www.siddharmedicine.in/@ 9943909495,04258-226495

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
ஆம் இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் - பெண் 
இருபாலரும் கண்டிப்பாக கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம் 
நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை, வலி கஷ்டம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம்.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் வேதனையையும் கொடுப்பாரா?. நம்மை நல்வழிப் படுத்துவதற்காக வலியுறுத்துவாரே தவிர நம் வாழ்வைக் கெடுக்க மாட்டார் அதனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய தினந்தோறும் 108 முறை சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), இறப்பு வீடு, பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்ய நேரங்களில் ருத்ராட்சம் அணியலாமா?
கண்டிப்பாக அணியலாம்
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் திதி போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் இறந்தவர்களின் ஆன்மா மோட்சம் பெரும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போதும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து இருக்கலாம் அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது. http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

அல்ஸிமெர்ஸ் நோய் (முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு)

அல்ஸிமெர்ஸ் நோய் (முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு)
1979 ஆம் ஆண்டில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி-1 மற்றும் அல்ஸிமெர்ஸ் நோய் இடையிலான தொடர்பினை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். குறிப்பிட்ட சில மரபணு மாறுபாடுகளின் (APOE-எப்சிலான்4 ஆல்லெலெ கேர்ரீர்கள்) முன்னிலையில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி-1 நரம்பு மண்டலத்தைச் சேதப்படுத்தி அல்ஸிமெர்ஸ் நோய் ஏற்படுவதற்கான அபாயத்துக்கு ஆளாக்கும் நிலையை அதிகரிக்கச் செய்கிறது. வைரஸானது, லிபோப்ரோடீன்களின் ரெஸெப்டார்கள் மற்றும் ஆக்கக்கூறுகளுடன் செயல்விளைவை உண்டாக்குகிறது, இது அல்ஸிமெர்ஸ் நோய் உருவாவதற்கான காரணமாக அமைந்துவிடலாம். ஜீன் ஆல்லெலெ இருப்பு இல்லாமல், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி வகை 1 எந்தவித நரம்பியல் தொடர்பான சேதங்களையும் விளைவிக்காது மேலும் இதன் மூலம் அல்ஸிமெர்ஸ் நோய் ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டினை அதிகரிக்கிறது.

பாதிப்புக்குள்ளான நபரின் உடல் திரவம் அல்லது விழிப்புடன் இருக்கும் காயங்களுடன் நேரடியான தொடர்பு மூலம் ஹெர்பெஸ் பெறப்படுகிறது. ஹெர்பெஸ் கடத்தல், பொருந்தாத கூட்டாளிகளுக்கிடையில் ஏற்படுகிறது; நோய் பாதிப்புக்குள்ளான நபர் (ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி செரோபாசிடிவ்) அந்த வைரஸை ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி செரோநெகடிவ் நபருக்குத் தொற்றிவிடலாம். ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் 2 ஐப் பெறுவதற்கான ஒரே வழி, பாதிக்கப்பட்டுள்ள தனிநபருடன் நேரடியான தோலோடு தோல் தொடர்பு கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியம். ஒரு புதிய தனிநபரை பாதிப்படையச் செய்வதற்கு, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி வாய் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளின் தோல்களில் இருக்கும் சிறு பிளவுகள் அல்லது சளிச்சவ்வு ஊடாகப் பயணம் செய்கிறது. இந்த வைரல் நுழைவினை அனுமதிப்பதற்குச் சவ்வுச் சளிகளின் மிக நுட்பமான உராய்தல் மட்டுமே போதுமானது.

இந்த தனிநபர்களிடத்தில் இருக்கும் புண்களின் தோற்றம் மற்றும் பரவல் பன்மடங்கான, வட்டவடிவான, மேலெழும்பிய வாய்வழி அல்சர்களுடன் கடுமையான பல் ஈறுகளின் அழற்சியுடன் இருக்கும். வழக்கமான வகையில் அல்லாத காட்சிப்படுத்தலைக் கொண்டிருக்கும் பெரியவர்களுக்கான நோய் கண்டறிதல் மிகவும் கடினமானதாகும். ஹெர்பெடிக் புண்கள் தோன்றுவதற்கு முன்னர் ஏற்படும் ப்ரோட்ரோமல் அறிகுறிகள் ஒவ்வாமைக்குரிய வாய்ப்புண் போன்ற ஒத்த நோய் அறிகுறிகளின் இதர ஒழுங்கீனங்களிலிருந்து ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி அறிகுறிகளை வேறுபடுத்திக் காட்ட உதவும். வாய்களுக்குள் புண்கள் தோன்றாதபோது, முதன்மை ஓரோஃபேசியல் ஹெர்பெஸ் சில நேரங்களில் இம்பெடிகோ, ஒரு நுண்ணுயிரிக்குரிய தொற்றுநோய், என தவறாகக் கொள்ளப்படுகிறது. சாதாரண வாய் அல்சர்கள் (அப்தௌத் அல்சர்) கூட இன்ட்ராஓரல் ஹெர்பெஸ் போலவே இருக்கும் ஆனால் அவை கொப்புளமுள்ள நிலைக்குச் செல்லாது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

சிறுநீரகம்

சிறுநீரகம்

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்*

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு*

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு*

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். 'ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.  

4. குடிநீர் அளவு*

வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!*

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்*

மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். 

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய...

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம் - சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.

இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...