Sunday, August 13, 2017

*தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...* *இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.*

*தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...*
*இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.*

அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியதும் உங்கள் கடமை!...

சென்ற வாரம் என் நண்பர் ஓமான் நாட்டிற்குச் சென்றார்.

அவர் சென்றது ஒரு எண்ணெய் கம்பெனியின் வியாபாரத் தொடர்புக்கு சென்றவருடன்!.

சென்றவர்கள் அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலை என்று கூட்டிச் சென்றார்கள்.

அவரும் சோஹார் தாண்டி அபுதாபி திசையில் ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

அவர்கள் கூறிய படியே அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைதான்!

அந்த தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியைக் கேட்ட போது நண்பர் மயக்கம் போடாத குறைதான்!

ஆம்! அந்தத் தொழிற்சாலையில் குரூட் ஆயிலை உபயோகப் படுத்தி ஹெக்சென் கழிவில் ஒரு ஆயிலை தயாரிக்கிறார்கள்.

சரி அதனால் என்ன?.

அது நிறமற்ற, மணமற்ற அடர்த்தி குறைவான ஒரு பொருள்.

மூச்சை இழுத்துப் பிடியுங்கள்...

இங்கேதான் விஷயம்!

*இந்தப் பொருளைத்தான் நாம் தினம் வாங்கும் சூரியகாந்தி எண்ணெய் , ரீபைண்ட் கடலை எண்ணெய் சனோலா எண்ணெய் என்று பெயரிட்டுள்ள அனைத்து பிரபல எண்ணெய்களிலும் 70 சதவீதம் கலக்கிறார்கள்!.*

இது அமெரிக்காவின் FDA வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல !.

இந்தியாவில் இது குறித்த எந்த ஸ்டேண்டர்டும் இருப்பதாக கூட தெரியவில்லை!

ஆகவே இது வரை நாம் உபயோகித்து வந்த எண்ணெய் டீசலை விட சற்றே அதிகமாக சுத்திகரிக்கப் பட்ட ஒரு எண்ணெய். அதனால்தானோ என்னவோ கிலோ 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இந்தியாவின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சந்தைக்கு விற்று தன்னிறைவை எட்டுமா?!.

அது பற்றி இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை நோக்கிய போது அது 25%-30% வரையே உற்பத்தி நடக்குறது எனும் உண்மையும் தெரிந்தது.

பால்ம் ஆயில் என சொல்லி இந்த கழிவுகளை இறக்குமதி செய்து கலக்கின்றனர்.

ஆகவே எண்ணை வியாபாரிகள் இந்த குரூட் எண்ணையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லாமல் புத்தியை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள்.

எண்ணெய் சந்தை. தமிழகத்தில் எண்ணெய் சந்தை மதிப்பு ரூ 4100 கோடி ரூபாய்.

*பெட்ரோலிய எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்யம் பற்றி பேசி என்ன பயன்..?*

எனவே.... தயவு செய்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

*நமது சந்ததிகளைக் காக்க இதுவே கடைசி தருணம்!.*🚸

*உண்மையான செக்கு எண்ணெய் விலை அதிகம் என்றாலும் அதையே உபயோகியுங்கள்.*

உண்மையான விவசாயிகளை வாழ வைத்த புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கும்!.

பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள்.

⚠ *டிவியை பார்த்து நம்பி வாங்கியது இனி போதும்...?*⚠

அதே போன்று வெள்ளைச்  சர்க்கரை என்ற எமணையும் வீட்டிற்குள்ளேயே விட வேண்டாம். நாட்டுச் சர்க்கரைக்கு மாறிடுவோம்.
🍃🌾🍃🌾🍃🌾
🌾🍃🌾🍃🌾🍃🌾🍃

எளிய வீட்டு மருந்துகள்

எளிய வீட்டு மருந்துகள்

*ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு

கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

*உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில்

போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து

வந்தால் போதும்.

*அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி

வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

*பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு

சரியாகும்.

*சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம்

குறையும்.

*மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை

கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம்

கிடைக்கும்.

*துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி

மூளை பலம் பெறும்.

*மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி

சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

*வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து

வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி

நீங்கும்.

*பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று

முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய்

துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

*வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல

வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால்

வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன்

சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

*வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும்

காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச்

சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

*அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர்

மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

*அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி

மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு

ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளை சீனி ( White Sugar ) யாரும் உண்ண வேண்டாம்...

எச்சரிக்கை !!!

வெள்ளை சீனி
( White Sugar )

யாரும் உண்ண வேண்டாம்...


நாய்க்கு கூட கொடுக்க வேண்டாம்...

Sugar disease is a slow POISON

சர்க்கரை வியாதி என்பது மெல்ல கொல்லும்
...   விஷம்   ...

இதுதான்,
இன்றைக்கு இனிப்பான செய்தி.. 😀

உங்கள்
சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்
.
நிச்சயமாகப் போகும்.
ஆக,
சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.
இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்?

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு
படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை
சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.... 😈😈😈😈

பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்
😬.

இந்த
வெள்ளை சீனியை
எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்
களானால்.....
இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசாயன‌ப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன என்று பார்ப்போம்...

1.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3.
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்
கள்.

4.
102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகி
றது
.
5.
அடுத்து,
பாலி எலக்ட்ரோ
லைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு7 தெளிந்த சாறு கிடைக்கிறது

6.
சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படு
கிறது
.
7.
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.
சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகி
றது.

8.
இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே
.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடக் கூடாது.
.
காரணம்

அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது
.
குடலில்
மட்டுமல்ல,
பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி
( சர்க்கரை வியாதி ),
இரத்த அழுத்தம் போன்ற பெரிய
வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது
.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,

வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
.
இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

This is true so Can we avoid?

டாக்டர்
டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்
.
“சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11
.
இந்த சர்க்கரையில்
12 கார்பன் அணு (atom)
22 ஹைட்ரோஜன் அணு,
1 ஆக்ஸிஜன் அணு உள்ளது
.
இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது
.
கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4
.
இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது
.
சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு
.
நண்பர்களே இன்றைய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் இதைக் கூறலாம்.

இது பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

நண்பர்களே... (முக்கியம்)
படித்துவிட்டு பகிருங்கள்

இயற்கையைப்  போற்றுவோம்

நோயற்று வாழ்வோம்.👍

முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும்

மீள் பதிவு

முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள்  நாட்கள்  சமைத்து சாப்பிட்டுப்  பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு  முருங்கையைப் போன்ற மாமருந்து  இந்த உலகில்  வேறு இல்லை.  சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த  உணவு ஆய்வாளர்கள்  இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை  அத்தியாவசிய அமினோ அமிலங்கள்  அசைவ உணவுகளில்  மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு  பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4  மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு

1.மத்திய  அரசின் CCRAS RESEARCH DEPARTMENT -ன் 25 வருட ஆராய்ச்சிக்கு பிறகு    ( IME -9 Ayush 82 Research Product)  என்ற ஆயுர்வேதிக் மாத்திரை அறிமுகப்படுத்தியுள்ளது

2. இது சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடியது.

3. சர்க்கரை நோய்க்கு எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருந்தை நிறுத்தாமல்,

  அதனோடு இந்த  IME 9 மாத்திரையை உட்கொள்ளலாம்.

பக்க விளைவுகள் ஏதும் கிடையாது

சர்க்கரையின் அளவு சாதரன நிலைக்கு வந்த பிறகு ஆங்கில மாத்திரையை நிறுத்தி விடலாம்.

ஒரு மாத்திரையின் அரசு விலை ரூ.5.

ஒரு பெட்டியில் 3 மாத்திரை பாட்டில்கள்,
ஒரு பாட்டிலில் 180 மாத்திரைகள் இருக்கும்.

மொத்தம் 540 மாத்திரைகள் விலை ரூ. 2835

இது முற்றிலும் மத்திய அரசின் CCRAS நிறுவனத்தின் தயாரிப்பு .
This product manufactured by KUDOS LABORATORIES INDIA (100 Years of Experience in Ayurveda) ISO 9001:2008 CERTIFIED(GMP)
சர்க்கரை நோயை பொறுத்தவரை பணக்கார நோய் என்றே கூறுவர் ஏனெனில் மற்ற நோய் வந்தால் அந்த நோயுடன் நின்றுவிடும்...  ஆனால் இந்த நீரழிவு நோய் மட்டும் அதனுடன் சேர்த்து 9 நோய்களை கூட்டி வரும்... அதனால் தான் நம் பொருளின் பெயர் IME -9 (INSULIN MANAGEMENT EXPERT)  சர்க்கரை நோய் மூலமாக வரும் 9 நோய்களுக்கு எதிரி என்று அர்த்தம்....  ஏழை மக்கள் இந்த நோயிலிருந்து விடுபடுவதற்காகவே மத்திய அரசு (CCRAS)  25 வருட ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடித்த ஒரு அற்புதமான பொருள்தான் இந்த AYUSH -82 IME -9... பொருளை பற்றிய தகவல் அறிய
WWW.AYUSH 82.com (or)  WWW.IME 9.Com.....  என்ற இணையதளத்திலும் அறியலாம்.. 
மேலும் விவரங்களுக்கு: 
M.SURESH
9965767147

வேப்பிலை

🌼 முகநூலில் படித்தது 🌼
#காட்சி_1:
காலையில் ஆட்டோவில் ஏறும்போது கவனித்தேன்.. அந்த ஆட்டோ இளைஞர், தன் ஆட்டோவின் முன் பக்கத்தில் ஒரு கொத்து வேப்பிலையைச் சொருகி வைத்திருந்தார்.
‘‘என்ன தம்பி, வேப்பிலையெல்லாம் வச்சிருக்கீங்க?’’ என்று விசாரித்ததும், ‘‘ஆடி மாசம் இல்லையா? அதான், அம்மனைக் கும்பிட்டு தினமும் கொஞ்சம் வேப்பிலையை என் ஆட்டோவிலும் சொருகி வச்சுக்கிறேன்!’’ என்றார் அவர்.
#காட்சி_2:
வீட்டில் பணிபுரியும் பெண் அன்று பணிக்கு வரவில்லை. போன் செய்து விசாரித்தபோது, ‘‘ஐயோ அம்மா, குழந்தைக்கு டெங்கு ஜுரம்னு சொல்றாங்கம்மா. டெஸ்ட் பண்ணதுல இப்பத்தான் ரிசல்ட் வந்தது. ஏழு வருஷம் குழந்தை இல்லாம இருந்து ஆசை ஆசையா பெத்தெடுத்த குழந்தை. எனக்கு பயமா இருக்கும்மா!’’ என்று அழுத பெண், ‘‘இங்கிலீஷூ டாக்டர்கிட்டதான் போனோம். ஆனா, அவரு ஊசியெல்லாம் போடாம, வேப்பிலையை கொதிக்க வச்சுத் தரச் சொல்றாரும்மா!’’ என்றார்.
#காட்சி_3:
சென்ற ஞாயிறு அன்று கூட்டமாக சிலர் வந்து நன்கொடை கேட்டார்கள். ‘‘நம்ம தெரு முனையில் இருக்கிற அம்மன் கோயில்ல ஆடி கூழ் ஊத்தப் போறோம்!’’ என்றார்கள். இன்னும் சிலர், அக்கம் பக்கத்து வேப்பிலை மரங்களில் இருந்து வேப்பிலை கொத்துக்களை பறித்து, கோயிலைச் சுற்றியும் தெருவைச் சுற்றியும் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்கள் .

சமீபத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த மூன்று காட்சிகள் ஒரேயொரு மிகப் பெரிய உண்மையை சொல்லிவிட்டுச் சென்றன. அது, ஆடி மாதத்தில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் பற்றியது!
இன்று தினசரி பேப்பர்கள் எல்லாம்,
டெங்கு காய்ச்சல் எப்படிப் பரவி வருகிறது,
அவற்றில் எத்தனை பேர் இறந்தார்கள் என அலறிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் டெங்கு காய்ச்சலுக்கு, அந்தப் பணிப்பெண்ணுக்கு ஆங்கில மருத்துவர் சொன்னது மாதிரி, வேறெந்த தீர்வும் இல்லை. நிலவேம்பு தவிர!
’ஆடி’ என்பது, சீதோஷ்ண ரீதியில் மிக முக்கியமான மாறுதல் ஏற்படும் காலம். வெயில் முடிந்து, ஈரப்பதம் ஆரம்பிக்கும் காலம். சூரியனின் சுழற்சியில் ஏற்படும் மாறுதலைக் கணித்து (ஆடி முதல் அடுத்த ஆறு மாதங்கள் தட்சிணாயணம்)
‘இந்த மாதம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருக்க வேண்டிய மாதம்!’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் நமக்கு முன் இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்!
வெறும் எச்சரிக்கையோடு நிறுத்தி விட்டு விலகி விடுவது முன்னோரின் இயல்பு அல்லவே..
அதனால், அவர்கள் ஸ்டைலில், இந்த மாதம் குறித்து நமக்கு பல்வேறு விதமாக எச்சரித்து, ‘இதை இதையெல்லாம் செய்ய வேண்டும்!’ என்று
நம்மை இந்த நேரத்தின்
நோயெதிர்ப்பு சக்தி மிகுந்த வாழ்க்கைக்குப் பழக்கியும் வைத்திருக்கிறார்கள்.
(ஆடியில் செய்யும் இந்த விஷயங்களை நாம் அறிவியல்பூர்வமாகப் பார்க்க வேண்டுமே தவிர, மதம் சார்ந்து பார்க்கத் தேவையில்லை! ஆரோக்கியமாக வாழச் சொல்லும் ஒரு வாழ்க்கை முறையில் மதம் எங்கிருந்து வருகிறது? இது மதங்கள் பிறப்பதற்கு முன்னாலான நமது வாழ்க்கை முறை என்று அறிக!)
வெயிலின் தாக்கம் முடிந்து ஈரப்பதம் காற்றில் அதிகமாக உருவாகும் இந்த சீசனில், எக்கச்சக்கமான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. அவை, மக்களின் நோயெதிர்ப்பு சக்தியைக் குலைத்து, சளி, காய்ச்சல், டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்கள் என்று விதவிதமாக ஏற்படுத்துகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், காற்றில் இருக்கும் பாக்டீரியாக்களில் இருந்தும் நமக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்! இதற்குத்தான் நாம் வசிக்கும் ஏரியாவின் காற்றில் பாக்டீரியாவின் தாக்கத்தைத் தடுக்க, ஏரியா முழுவதும் தோரணக் கயிறுகளில் கொத்துக் கொத்தாக வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் வந்தது!
பலர் வீடுகளிலும் நுழைவாயிலில் வேப்பிலையைக் கொத்தாக தொங்க வைத்திருப்பார்கள்.
ஒருவேளை, தப்பிப் பிழைத்து சில பாக்டீரியக்கள் வீட்டை முற்றுகையிட்டால், வாசலிலேயே அவை தடுக்கப்படட்டும் என்ற முன்னெச்சரிக்கைதான்!
அதேபோல் ‘ஆடிக்கூழ்’ உடல் உறுப்புகளுக்கு அதிக வேலைப்பளு தராமல், அதேசமயம் தேவையான பலத்தைத் தர உதவுகிறது!
வயிறு பாகங்களுக்கு குறைவான வேலைப்பளுவைத் தரும் (அதே சமயம் உடலுக்கும் அதிக பலம் தரும்) கூழை அந்த மாசத்தில் அதிகம் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இவையெல்லாவற்றையும் மீறி, பாக்டீரியாக்களால் அல்லது கொசுக்களால் விஷ ஜுரங்கள் பரவவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கும்கூட வேப்பிலையே கடைசியில் மருந்தாகிறது! நிலவேம்பைத்தான் கொதிக்க வைத்து மருந்தாகக் கொடுத்து, பல உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. உயிரைக் காப்பாற்றுவதாலேயே வேப்பிலையை (வேம்பை) ‘தெய்வம்’ என்று அழைத்து வணங்குகிறோம்!

*புற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம்

🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

*புற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் !!!*

போஸ்னியாவில் வாழும் பெண் ஹெர்ஜெகோவினா என்பவர் எவ்வாறு தனது புற்றுநோயில் இருந்து விடுபட்டார் எனும் ரகசியத்தை இப்பொழுது புற்று நோயால் பாதிக்கப்பட்ட எல்லாவருக்கும் பரிந்துரைத்து வருகிறார். எளிதாக தயார் பண்ணக்கூடிய மருந்து நமது சித்த மருத்துவத்தில் காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் இஞ்சி காயகல்பம்தான்.

இவருக்கு நாளமில்லா சுரப்பிகளில் புற்றுநோய் தாக்கி மூன்று வாரங்கள் மருத்துவ மனையில் மெசின்களின் உதவியோடு வாழ்க்கையை ஓட்டவேண்டி வந்தது.  இதன் பிறகு தானாக இயற்கை முறையில் பாரம்பரிய மருந்தை முயற்ச்சிக்கலாமே என்று கீழே சொன்ன மருந்தை செய்து சாப்பிட்டார்.

கெமொதெரப்பி மற்றும் அறுவைசிகிச்சை இல்லாமல் மூன்று நாட்களில் தன்னுடைய உடலில் முன்னேற்றம் அடைவதை கண்டு மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்து இந்த மருந்தை தொடர்ந்தார். நாற்பது நாட்களில் நல்ல முன்னேற்றம் கண்ட அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கும் செய்முறையை வெளிப்படுத்தினார்.

செய்முறை:

·         2 பெரிய இஞ்சி துண்டுகள்

·         1 கிலோ இயற்கை தேன்


இஞ்சியை வேர் நீக்கி மிகவும் சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும் அல்லது மிக்சியில் இட்டு பொடித்து கொள்ளவும். இந்த இஞ்சியை தேனில் இட்டு கலந்து கண்ணாடி ஜாடியில் வைத்து கொள்ளவும்.

சாப்பிடும் முறை:

தினமும் நான்கு ஸ்பூன்கள் ஒரு நாளில் சாப்பிடவும்.  முக்கியமாக கவனிக்க வேண்டியது - செராமிக், மரம் அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை மட்டும் பயன்படுத்தவும். ஒரு போதும் உலோக கரண்டிகளை உபயோகபடுத்த வேண்டாம்.

இதே மருந்துதான் நமது பராம்பரிய சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆயுள் பெருகவும், அழகு பெறவும்…தேனில் ஊறிய ‘காயகல்ப இஞ்சி’ இதன் செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.

இஞ்சியை சுத்தம் செய்து, மேல்தோலை சீவிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு, சுத்தமான தேன் 150 கிராம் விட்டு, அதனை, நான்கு நாள் கழித்துத் தினம்காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து, 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டு விடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும், அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே!

இஞ்சி வேறு எந்த முறைகளில் மருந்தாகின்றது என்று பார்ப்போம்:

ஆங்கில் மருத்துவத்தில இஞ்சியை ரசாயன முறைப்படி சாறு பிழிந்து, அதை மதுசாரத்துடன் கலந்து, ஜிஞ்ஜர்பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து, அதை மிக்சர்களில் கலந்து செரிமாணத்துக்குகொடுக்கின்றனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு, அரை அவுன்ஸ் வீதம் கொடுத்துவர,ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் நீங்கும். இந்த முறையில், வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல்,இரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து, சர்க்கரைப்பாகுடன் பதப்படுத்தி தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து,இரைப்பு நோய் தொல்லை வரும்போது, மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 3, மிளகு 10இவைகளை நசுக்கி, இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாக சுண்ட வைத்து,வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாச காசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லைகொடுக்கும்போதும், இந்தக் கஷாயத்தை காலை மாலை என நோய் தீரும் வரை கொடுக்கலாம்.(இதில் பூ மூன்றும், மிளகு 10 மட்டும்தான்; எடை கணக்கல்ல)

இஞ்சி கஷாயம் கால் டம்ளர், 20 கிராம் கற்கண்டு தூள் சேர்த்து, அதனுடன் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து, அரைக்கால் படி பசும்பாலில் கலந்து,காலையில் சாப்பிட்டு வர, பித்த ரோகங்கள்,பித்தம் சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவை தடுத்து நிறுத்தி,களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவது நிற்கும். எரி குன்மம் ஆஸ்துமா,இளைப்பு, மயக்கம், இருமல், வாய்வு குடைச்சல்,வலிகளும் நீங்கும் சந்தேகமில்லை.

செலவில்லாத இந்த மருந்துகளை முயற்ச்சித்து பார்க்கலாமே.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...