Tuesday, May 21, 2019

எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

           *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)

நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

            *எப்படி அணுக வேண்டும்*

                 பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள்.

             முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கால இடைவெளியைக் (தேதி)  குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள்.

            குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துவிடுவார்கள். பின் அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள்  தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள்.

            மீண்டும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் [சுமார் 45 நாட்கள் கழித்து] சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர்.  தேவைப்பட்டால் காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் நீக்கி ஊர் வந்து சேர வேண்டியதுதான்.
                
                 மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் 2ம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள்.
வசதிகள்

          சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு (திருப்பதி தேவஸ்தான உணவு பற்றி யாவரும் அறிந்ததே), தங்கும் இடம்,  மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

அறுவை சிகிச்சை TO கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

           *எப்படி செல்வது*

           திருப்பதி பேருந்து நிலையம்  ரயில் நிலையம் அல்லது அலிப்பேரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எடுத்துச் செல்ல வேண்டியவை

             பிலாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ப்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3

                 *கவனத்தில் கொள்ள வேண்டியவை*

                         அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை.

                     *தகுதி*

   பாதிப்பு மட்டுமே. சிபாரிசு தேவையில்லை. ஜாதி மதம் மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை.
5 வயது முதல் 55 வயதுவரை உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில் / பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ்.

இதுபோன்ற சிறப்பான போலியோ எலும்பு அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனை தவிர கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகிவற்றில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் வரை செலவாகும் ஆனால் இங்கு (TTD) முற்றிலும் இலவசம்.

இதை பகிர்வதன் மூலம்  உங்களாலும் உதவ முடியும்.  சிலரின் வாழ்விலாவது ஒளி ஏற்ற முடியும் என்பதோடு எம் பெருமான் திருமலைவாசனின் அருள் கிடைக்கப்பெறுவோமாக.....

கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்*.

Dr.Dv.Arul...

*குடிக்காதீர்கள் என கட்டளையிடவில்லை., கல்லீரலை காத்துக்கொள்ளுங்கள் என வேண்டுகிறேன்.*🍀

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் !🍀

உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போரா🍀டும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.
இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.🍀.

மற்ற எந்த உடல்
உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது.🍀

உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.
இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.🍀

நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.🍀.

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. 🍀

கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.
இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.🍀.

இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.
அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.🍀

அதுபோலத்தான்
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.
கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.🍀

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.🍀.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். 🍀

அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள்.🍀

கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !🍀

*இத்தகைய கல்லீரலை காப்பாற்ற*
மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.🍀.

பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான மோர் போன்றவற்றை பருகலாம்.
உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.🍀
நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.🍀
முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

*கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்*.

உடல் எடை அதிகரிக்க...*

*மருத்துவ குறிப்புகள்.* *

உடல் எடை அதிகரிக்க...*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் எடை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது. வேர்க்கடலை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உலர் திராட்சையில் அதிக அளவு தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளதால் உலர் திராட்சயானது உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு வைட்டமின் ஏ, டி, ஈ, புரோட்டீன் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடை அதிகரிக்கிறது. வேக வைத்த உருளைக்கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரமாக அதிகரிக்கும். வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். ஆனால் தினமும் சாப்பிடக்கூடாது. தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது. *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

பயன்கள்:

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.

தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள் அன்புடன் இர.ச.🏵️🙏🌹

வாயு தொல்லையை போக்கும் பிரண்டை பொடி செய்வது எப்படி?

*மருத்துவ குறிப்புகள்.*

*வாயு தொல்லையை போக்கும் பிரண்டை பொடி செய்வது எப்படி?* *

பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ பிரண்டை வயிறு கோளாறு மற்றும் வாயு தொல்லையை போக்கும் குணம் கொண்டது இதை பொடியாக செய்து வைத்து கொண்டால் தேவை படும் பொழுது நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இதற்க்கு தேவையான பொருட்கள் பிரண்டை துண்டுகள் 10 எண்ணம் கருப்பு உளுந்து 1 கப் கடலை பருப்பு 1 கப் வெள்ளை பூண்டு பல் 10 எண்ணம் தோல் சீவிய இஞ்சி ஒரு சிறிய துண்டு கறிவேப்பிலை ஒரு கைப்பிடியளவு காய்ந்த மிளகாய் 20 எண்ணம் பெருங்காய தூள் சிறிதளவு உப்பு சிறிதளவு இதை எப்படி செய்யலாம் பார்ப்போம் வாணலியை அடுப்பில் வைத்து அதில் கருப்பு உளுந்து,கடலை பருப்பு,கறிவேப்பிலை, மிளகாய்,பெருங்காயத்தூள்,இஞ்சி ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வருது அதை ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பிரண்டைத் துண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இதையும் நன்றாக ஆற வைத்து விடுங்கள். இவை அனைத்தையும் நன்றாக ஆறிய பிறகு ஒன்றாக சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று அரைத்து விடுங்கள். பின்னர் அதனுடன் உப்பு, பூண்டு பல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து அதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் . இட்லி , தோசை போன்றவற்றிற்கு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டு கொள்ளலாம். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

அரை வேக்காடு முட்டை தரும் ஆரோக்கிய நன்மைகள்!*

*மருத்துவ குறிப்புகள்.* *

அரை வேக்காடு முட்டை தரும் ஆரோக்கிய நன்மைகள்!*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நாம் அனைவரும் தற்பொழுது அன்றாடம் பயன்படுத்தி வரும் ஒரு பொருளாகி விட்டது. சமையலில் பல வழிகளில் முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலரும் தினமும் ஏதாவது வகையில் முட்டையை பயன்படுத்தி வருகிறார்கள் . அப்படி பயன்டுத்தும் முட்டை எப்படி சமைத்தால் நமக்கு நல்ல பயனளிக்கும் பார்ப்போம். முட்டை சமைக்கும் பொழுது பொரித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு அதாவது ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே ஆரோக்கிய நன்மையை அளிக்கும். ஏனென்றால் முட்டையிலுள்ள அதிமுக்கிய புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். முட்டை என்பது அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே போல் அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்பது சிறந்த வழியாகும். முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள். ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும். அதற்கு அதனை சிறிது நேரத்திற்கு வேக வைத்தாலே போதும், நச்சு பாக்டீரியாக்கள் அழிந்து விடும். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடும் பொழுது அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டை இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும். அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும். ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும். வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு அரை வேக்காடு முட்டை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். பொரித்த முட்டையுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதே. ஆகையால் நீங்கள் முட்டை எடுத்து கொள்ளும் பொழுது அரை வேக்காடு முட்டையை எடுத்து கொள்ளுங்கள். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

கண்பார்வையை தெளிவடைய செய்யும் இயற்கை மருத்துவம்.*

*கண்பார்வையை தெளிவடைய செய்யும் இயற்கை மருத்துவம்.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ கண்பார்வை பார்வை குறைபாடிலே இரண்டு வகை காணப்படுகிறது. அவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை. பார்வை குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். வைட்டமின் A குறைபாடு இருந்தால் பார்வை குறைபாடு ஏற்படும். வைட்டமின் A என்பது நமது உடலில் அதிகமான நீர்ச்சத்தை தக்கவைக்க கூடிய ஒரு பொருள். வைட்டமின் A குறையும் பொழுது நம்முடைய உடலில் நீர்ச்சத்தும் குறையும். ஆகவே கண்களில் ஈரப்பதம் இருக்க வேண்டும். நமது உடம்பிலே ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும் போது கண்களிலும் ஈரப்பதம் குறைந்து பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை நாம் எளிதில் எப்படி தெரிந்து கொள்வோம் என்று பார்த்தால், நாம் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பார்க்கும் பொழுது கண்களில் வறட்சி ஏற்பட ஆரம்பிக்கும். இதனால் எளிதில் பார்வை குறைபாடு வர ஆரம்பிக்கும். ஆமணக்கு எண்ணெய் ஆமணக்கு எண்ணெயை 2 சொட்டு எடுத்து கொள்ளவேண்டும். இது அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்டது. மட்டுமல்லாது அதிகமான குளிர்ச்சியையும் கொடுக்க கூடியது. இந்த எண்ணெயானது ஈரப்பத்தினையும் தக்க வைக்கும். இதில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. ஆகவே 2 சொட்டே போதுமானது. இந்த எண்ணெயை விரலில் எடுத்து கண்ணெய் சுற்றி நன்றாக தேய்த்து விடுங்கள். தேய்த்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். கண்ணிற்கு உள்ளே பட்டாலும் பிரச்சினை ஒன்றும் இல்லை. சிறிதளவு நீர் மட்டும் வடியும். நீர் வடிவத்தால் பிரச்சினை ஒன்றும் கிடையாது. நீர் வடிவதும் நல்லது. காரணம் கண்ணிற்கு உள்ளே இருக்கும் கெட்ட அழுக்குகள் வெளியேறும். அதற்கடுத்து உங்களது உச்சந் தலையில் தேய்த்து விடுங்கள். கைகளின் மடக்கிலும் தேய்த்து விட வேண்டும். இதனை 2 நாளைக்கு ஒரு தடவை செய்தாலே போதும். இப்படி செய்யும் பொழுது 1 மாதத்திலேயே கண்பார்வை தெளிவடைவதை உங்களால் உணர முடியும். கேரட் ஜூஸ் கேரட் ஜூஸ் ஒரு நாளைக்கு 5 எடுத்து கொள்ள வேண்டும். இதனை கழுவி தோல் சீவாமல் எடுத்து கொள்ள வேண்டும். கேரட்டின் தோலில் அதிகமாக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A காணப்படுகிறது. இதன் தோலானது சருமத்தில் அதிகமான நீரை தங்க வைக்க பயனுள்ளதாக இருக்கிறது. நீர்சத்து தங்கும் போது எளிதில் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்த கேரட்டை வடி கட்டி எடுக்கும்போது காய்ச்சி ஆறிய பாலை இளம் சூடுடன் இதில் கலந்து வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் பாலை சேர்த்தால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். இந்த ஜுஸுடன் நாட்டு சர்க்கரை, பாகுவெல்லம் அல்லது தேன் ஏதாவது ஓன்றை சேர்த்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சேர்க்க கூடாது. இதை தினமும் காலையில் காபி, டீக்கு பதிலாக குடிக்கலாம். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம். வெள்ளை பொன்னாங்கண்ணிக்கீரை இந்த கீரையை பொரியல் செய்து ஒரு வாரத்தில் 3 முறை சாப்பிட வேண்டும். விளக்கெண்ணெய் தேய்க்கும் நாளில் இதை சாப்பிடக் கூடாது. இந்த மூன்றையும் நாம் செய்யும் போது எப்படிப்பட்ட கண்பார்வை குறைபாடையும் இது தீர்த்து விடும். 40 வயதுக்கு மேல் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்து குறைபாடையும் இது சரி செய்யும். எனவே இதனை மறக்காமல் செய்து பாருங்க இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...