Tuesday, July 31, 2018

மஞ்சள்காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

*மஞ்சள்காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.

அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.

என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே  ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது. Forwarded msg

தொப்பையை குறைக்க

தொப்பையை குறைக்க இன்றையஇளைஞர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை இடைவெளியின்றி பின்பற்றிவந்தால் தொப்பையை சீக்கிரமே குறைத்துவிடலாம்.


உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு அருகம்புல் மிக சிறந்த மூலிகை. அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

முதல்நாள் இரவே அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஓமத்தை பொடிசெய்து போட வேண்டும். இந்த கலவையை ஒரு குவளை நீரில் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பின்பு அதை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

மறுநாள் காலை அதை நன்றாக சாறுபிழிந்து சக்கையை நீக்கிவிட வேண்டும். இந்த சாறை தினமும் இதே போல் தயார் செய்து பத்து நாட்கள் வேறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை வற்றிவிடும்.
தேவையற்ற கொழுப்பை குறைக்க கேரட்டை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவாக கொழுப்பு குறைந்து உடல் மெலியும்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும். (குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

பொன்னாங்கண்ணி. For கண்

*👁👁👁👁👁✍தஞ்சாவூரிலிருந்து அசோக் குமார் என்பவர் தனது 5 வயது மகனுக்கு கண்ணாடி போட்டுள்ளான் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கண்ணாடி பவரை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் கூறுகின்றார் கண்ணாடியின் பவர் அதிகம் ஆகாமலிருக்க மருத்துவம் இருக்கிறதா சுத்தமாக கண்ணாடி போடாமல் இயற்கையாக கண் தெளிவாக தெரிவதற்கு மூலிகைகளில் மருத்துவம் உள்ளதா என்று கேட்டு இருந்தார் அவருக்காக பதிவிடுகிறேன்*.        கண் பார்வைக் கோளாறுகள் நமது சித்தர்கள் 96 வகை என்று அந்தக் காலத்தில் வகுத்துள்ளார்கள் ஆனால் ஆங்கில மருத்துவத்திலோ இரண்டு பகுதியாகப் பிரித்து விட்டார்கள் ஒன்று கிட்டப்பார்வை மற்றொன்று தூரப்பார்வை வாழ்க்கை முறை இயற்கையை ஒட்டி இருந்தால் ஆங்கிலம் மட்டும் சொல்லக்கூடிய இரண்டு வகையான பார்வை கோளாறுகளும்சித்த மருத்துவர்கள் சொல்லக்கூடிய 96 வகைகளையும் வெல்லக்கூடிய தீர்க்கக்கூடிய குணமாக்கக்கூடிய மூலிகை எதுவென்றால் *பொன்னாங்கண்ணி கீரை ஒன்றே போதும் பொன்னாங்கண்ணி ஒரு காயகற்ப மூலிகை என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார் தங்கச் சத்து நிறைந்து உள்ளது என்றும் கூறுகின்றார் இதை முறைப்படி உண்பவர்களுக்கு தங்கம் போன்று மேனி யை தரும் என்று கூறியுள்ளார்கள் இதை முறைப்படி கற்ப முறையிலாவது அல்லது உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக 96 வகையான கண்நோய்கள் தீரும் 🤩குறிப்பாக சற்று மேடான பகுதியில் விளைந்த பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு இந்துப்பு கூட்டி தொடர்ந்து ஓரிரு மண்டலங்கள் சாப்பிட்டு வர கருவிழி நோய் கண்ணில் வரக்கூடிய ரத்த அழுத்தம் கண்காசம் கண் புகைச்சல் கண் எரிச்சல் ஒவ்வாமையினால் வரக்கூடிய அரிப்பு கண் சிவத்தல் இது போன்ற கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது ஆனால் புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓👀👀👀👀👀👀👀👀 கண்ணாடியின்          பவரை குறைக்க மேற்கண்டபடி சாப்பிடவும் பொன்னாங்கண்ணி கீரையை சுத்தமான நாட்டு பசு நெய்விட்டு வதக்கி ஒரு மண்டலம் தான் கண்களில் கட்டிவர கண்ணாடியின் பவர் குறைவதை பார்க்கலாம் இதுபோன்று செய்ய முடியாதவர்களுக்கு 📕📕📕📕📕📕தைலமுறையாவது கைகொடுக்கும் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் பொன்னாங்கண்ணி இலைச்சாறு ஒரு லிட்டர் வெள்ளை கரிசாலை சாறு அரை லிட்டர் நாட்டு நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் சுத்தமான நாட்டு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 👉குறிப்பு😎(இதில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து எண்ணெய் தயாரித்து இருக்கக்கூடாது) நாட்டு பசும்பால் ஒரு லிட்டர் அதிமதுரம் 25 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி தலை மூழ்கி வர 96 வகையான கண்நோய்கள் தீரும் என்பது உண்மை புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் சித்த வைத்தியர் பெருமாள் பிள்ளை ஆர் ஐ் எம் பி அவர்கள் மிக எளிமையான முறையை குறிப்பிடுவார்கள் தினம்தோறும் காலை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அளவு பொன்னாங்கண்ணி இலை சாப்பிட்டு வர பகலில் நட்சத்திரம் தெரியும்என்று ஆதாரப்பூர்வமாக கூறியது மட்டுமல்லாமல் அவர் சாப்பிட்டு ஸ்ரீரங்கத்தில் சித்த ஆயுர்வேத புத்தக வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த திரு சோமு அவர்களும் திரு தியாகராஜன் அவர்களும் பரிசோதனை முயற்சியாக சாப்பிட்டு வெற்றி கண்டதாக சிவ பெருமாள்பிள்ளை ஒரு நூலில் குறிப்பிடுகின்றார் ஆகவே எந்த வழியிலாவது எப்படியாவது பொன்னாங்காணிக்கீரையை முறைப்படி சாப்பிடுங்கள் கண்பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து  நோய்களில் இருந்து விடுபட சித்தர்கள் துணை நிற்பார்கள் *நன்றி தாழ்மையுடன் அருள் நாகலிங்கம் பாரம்பரிய சித்த மருத்துவன் அருள் சித்த ஆயுர்வேத மருந்தகம், அருள் ஹெர்பல்ஸ் ,அருள் இன்ஸ்டியூட் ஈரோடு**9095905000👁👁👁👁👁👁

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...