Sunday, July 14, 2019

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 #முந்திரி #பருப்பு!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 #முந்திரி #பருப்பு!!

முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளெவின், தயாமின் உள்ளிட்ட காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக  வைத்துக் கொள்ளும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொள்வது நல்லது.

முந்திரியில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக  விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால், பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமலே தடுக்கமுடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படக் கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

முந்திரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் பல பிரச்னைகள் தீர்க்கும்!

பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் பல பிரச்னைகள் தீர்க்கும்!

பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நாம் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சாப்பிடுவதில் குறைந்த அளவுகூட உலர் திராட்சையை சாப்பிடுவதில்லை.

ஆனால் உலர்திராட்சையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் 4 உலர் திராட்சையாவது அப்படியே அல்லது பாலில் காய்ச்சியோ குடிப்பதைக் கட்டாயமாக செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.

உலர் திராட்சையில் (dry Raisins) உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரண்டு வேளை, உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி இருந்தாலே ஆயுள் நீடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

பெருஞ்சீரகத்தோடு உலர் திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும்.

🚶🏼HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...