Wednesday, June 28, 2017

*ஓஜஸ் எனும் உயிர்சக்தி*

*ஓஜஸ் எனும் உயிர்சக்தி*

டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .சுதா ., BAMS

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று பலரும் இப்போது ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருகிறார்கள் .உடலின் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட கிடைத்து விடுமா ? வெறும் சத்து மாத்திரைகளை உண்டு வந்தால் அந்த நோய் எதிர்ப்பு சக்தி கூடி விடுமா ?. இந்த கேள்விக்கு பதில் நாம் ஓஜஸ் பற்றி தெரிந்து கொண்டால் கிடைத்து விடும்

ஆயுர்வேதத்தில் ஒஜஸ் என்பது சப்த தாதுக்களின் ( ஏழு தாதுக்கள் ) சாரம்சமாகும். ஆரோக்யமான உடலின் ஏழு தாதுக்களும் ஓஜஸின்- நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. உடலை நோயில் இருந்து விலக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

*ஓஜஸ் எங்கிருக்கிறது ?*
உடல் முழுவதும் பரவி இருக்கிறது ..
இதயத்தை ஸ்தானமாக கொண்டு உடல் முழுவதும் பரவி உடலை இயக்குகின்றது

*ஓஜஸ் குணம்*
•  ஸ்நிக்தம்      -  எண்ணெய்த்தண்மை
•  சோமாத்மகம்    -  நீர் போன்று
•  சந்த        -  தெளிவாக
•  ஈசத்லோனபீதகம்  -  கொஞ்சம் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு

*சரகரின் கூற்றுப்படி ஓஜஸ் 10 குணமுடையது*

•  குரு        -  கனமானது
•  சீத        -  குளிர்ச்சியானது
•  ம்ருது                     -   மிருதுவான
•  ஷ்லக்ஹனம்    -  மென்மையானது
•  பஹல      -  அடர்த்தியானது
•  மதுரம்      -  இனிப்பு சுவையுடையது
•  ஸ்திரம்      -  திடமானது
•  ப்ரசன்னம்      -  தெளிவானது
•  பிச்சிலம்      -  பிசுக்குத்தன்மை
•  ஸ்நிக்தம்      -  எண்ணெய்த்தன்மை

*ஓஜஸ் எப்படி இருக்கும் ?*
நிறம் நெய் போன்றும் , சுவையானது தேன் போன்றும் , வாசம் வறுத்த நெய் போன்றும் இருக்கும்.

http://ayurvedamaruthuvam.blogspot.com/2017/06/blog-post_29.html

*ஓஜஸ் எப்படி உருவாகிறது ?*

ஓஜஸ் கரு வயிற்றில் உருவாகும்போதே உருவாகின்றது. கரு வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. கரு வயிற்றில் இருக்கும்போதே ஓஜஸ் ஆனது அதனுடைய இடமான இதயத்தை சென்றடைகின்றது.
ஓஜஸ் என்னும் உயிர்சக்தி குறைவாக இருந்தால் மனிதனின் ஆயுட்காலமும் குறைவுதான்

*ஓஜஸின் வகைகள் எத்தனை ?*
பர மற்றும் அபர என்று இரண்டு விதமான ஓஜஸ்கள் உண்டு.
*பர ஓஜஸ்*
மிக முக்கியத்தவம் வாய்ந்த வாழ்க்கை சார்ந்து இருந்தது
இதயத்தை இடமாக கொண்டுள்ளது
அளவு  :  8 சொட்டு
*அபர ஓஜஸ்:*
இது உடல் நலத்தை சார்ந்தது
இது உடல் முழுவதும் பரவி காணப்படும்
அளவு  :  அர்த்த அஞ்சலி ப்ரமானம் அதாவது அரை கை அளவு - 10 - 15 மிலி

*ஓஜஸ் குறைய காரணங்கள்:*
அளவுக்கு அதிகமான கோபம் , பசி , கவலை , பேராசை , பொறாமை , சோர்வு , அதிக உடற்பயிற்சி , அதிக உபவாசம் இருப்பது , அளவுக்கு குறைவாக உணவு உட்கொள்வது , மதுபழக்கம் , பயம் ,  கலப்பட உணவு , பழைய உணவுகள் , இரவில் கண் விழித்தல் , இரவு தூக்கத்தை தவிர்ப்பது , கெட்ட கிருமிகளின் தாக்குதல் , பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் , வைரஸ் தாக்குதல்கள் , விபத்துகள் மூலம் அதிகப்படியான இரத்தப்போக்கு , விந்து அதிகமாக விரயம் , விஷம் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் ஓஜஸ் ஆனது விரைவில் குறையக்கூடும்.
இப்படி குறையும்போது உடலில் உள்ள உயிர்சக்தியே இல்லாமல் போகின்றது
ஓஜோ நாசம் / சிதைவு
சுஷ்ருதசம்ஹிதா சூத்திர ஸ்தானத்தில் ஓஜோ சிதை 3 விதத்தில் நடைபெறுகிறது.

*ஓஜோ விஸ்ரமம்*

அறிகுறிகள்
•  சந்தி விஷ்லோஷனம்  -  அனைத்து  மூட்டுகளிலும் வலி மற்றும் மற்றும் பலகீனம்
•  காத்ரசத       -          விரைவில் தளர்ச்சி , களைப்பு அடைதல்
•  தோஷ்ச்யவன  -       உடலில் உள்ள அனைத்து தோஷங்களையும் அதிகரிக்கும்
•  க்ரிய சன்னிரோதம்  -  உடல் இயக்கங்கள் அனைத்தும் தடைபெறும்

*ஓஜோ வயாபத்:*
•  ஸப்த குருதாத்ரதா  -  உடல் கனமாகவும் மற்றும் இழுத்துப்பிடிப்பது
•  வாத சோபம்  -  வாததோஷ அதிகரித்து உடல் முழுவதும் கட்டிகளை  உருவாக்கும்.
•  வர்ணபேதா  -  தோலில் கருந்திட்டுகள்
•  க்ளானி  -  விரைவில் சோர்வு
•  தந்ரா  -  களைப்பு , ஒழுங்கற்ற முறையில் உடல் உறுப்புகள் செயல்படும்
•  நிரே  -  அதிகப்படியான உறக்கம்

*ஓஜோக்ஷயம்:*

1.  மூர்ச்சா  -  சுயநினைவு இல்லை
2.  மாம்சக்‘யம்  -  உடல் தசை குறைப்பாடு
3.  மோக  -  திரிபுணர்ச்சி
4.  ப்ரலாப  -  பொருத்தமில்லாமல் பேசுவது , உளறுவது
5.  மரணம்  -  மரணம்

  இவ்வாறாக ஓஜஸ் உயிர்சக்தி நமது உடலில் குறையும் போது மரணத்தை எட்டுகிறது.
*ஓஜஸை அதிகப்படுத்த செய்ய வேண்டியவை:*
•  பால் , நெய் மற்று ம் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவு
•  யோகா , பிரணாயாமம் , உடற்பயிற்சி , மனபயிற்சி , மனதை ஒரு நிலைப்படுத்துதல்
•  இறைவனை வேண்டுதல்
*ஆயுர்வேத மருந்துகள் :*
•  ச்யவனப்ராஷ்
•  சாரஷ்வதாரிஷ்டம்
•  ப்ரம்ம ரசாயனம்
•  அமலக இரசாயனம்
•  குடுச்சி    ( சீந்தில் கொடி )
•  ஆம்லா    ( நெல்லிக்காய் )
•  அஸ்வகந்த  ( அமுக்கிரா கிழங்கு )
•  சதாவரி    ( தண்ணீர்விட்டான் கிழங்கு )
•  திரிபலா    ( நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் )
•  அஸ்வகந்தாரிஷ்டம்
•  பலாரிஷ்டம்
•  அஷ்வகந்தாதி லேகியம்
•  ஷீரபலா தைலம்
•  பலாஅஸ்வகந்தாதி தைலம் மகாராஜாபிரசரின்யாதி தைலம்
•  சிலாஜித்
•  மகா கல்யாணக க்ருதம்
•  ப்ரம்மி வடி
*ஸ்வர்ண ப்ராஷன்*

ஓஜஸ் –உயிர் சக்தியை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆலோனைக்கு
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
*அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை*
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 *( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )*

*புற்று நோய்க்கு *மருந்து உண்டு

*புற்று நோய்*     
-------------------------
*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்க not beளும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
                                                                     *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*

*இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*

*நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.*

*அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,*

*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்

*சக்கரை குறைபாட்டின் உண்மைகள்...

*சக்கரை குறைபாட்டின் உண்மைகள்.......*
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!
ஆங்கிலமருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து "பகல் கொள்ளை வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!
ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!
நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

ஏன் ஏற்படுகிறது?
நாம் தெரிந்துக்கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!

1. தரமான குளுக்கோஸ்,
2. தரமற்ற குளுக்கோஸ்.

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

ஏன்?
தரமற்ற சர்க்கரை "உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும் "குப்பை சர்க்கரை" சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
"Polyurea"(excessive and frequent urination)
"அடிக்கடி சிறுநீர் கழித்தல்"
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல்  அதிகப்படியான நீர் கேட்கிறது!

இப்போது விளங்கியிருக்கும்
ஏன்,
2. Polydipsia(dryness of mouth-excessive thirst) அதிக தாகம் ஏற்படுகிறது என்று?

எவ்வளவுஉணவுஉட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

இப்போது புரிந்திருக்கும்
ஏன்
3. Polyphagia(excessive hunger-feeling tired)
அதிக பசி மற்றும் அதிக சோர்வுஏற்படுகிறது என்று?

சரி இதற்கு தீர்வுதான் என்ன?
உறுதியாக மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்(metabolic disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!

இதுமட்டுமே சர்க்கரை நேய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்
(ஓரறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)

1. எதை சாப்பிடுவது(proper diet)?
2. எப்படி சாப்பிடுவது(proper eating
     techniques)?
3. எப்போது சாப்பிடுவது(need based diet)?

இந்த மூன்று விஷயங்களை FB பதிவின் மூலம் விளக்க முயற்சிப்பது கேலிகூத்தாகிவிடும்!

நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்,
"நேருக்கு நேர்" என்ற முறைதான் நடைமுறை சாத்தியம்!
இதற்கு பிரயத்தனப்படவேண்டும்!

இயற்கை ஆர்வலர்கள்( ஹீலர்பாஸ்கர் போன்றோர், அவர் எழுதிய புத்தகம் படித்தாலும் அவரின் நேரடி ஆலோசனை கேட்டவர்களே நல்ல பயநாளிகளாக ஆகியிருப்பதை இங்கு குறிப்பிடுகிறேன்)
தகுதியான Acu ஹீலர்கள், நல்ல ஆசானிடம் பயிற்சி பெற்ற single touch ஹீலர்கள்,
மருந்து மாத்திரை சாராத தகுதியான தெரபிஸ்டுகள்,
இவர்களை தேடிப்பிடித்து,
நேரில் மீண்டும் குறிப்பிடுகிறேன் "நேரில்" சில காலம் தொடர்ந்து ஆலோசனை பெறுவது மூலமே தீர்வு பெறமுடியும்!

யானைமீது உட்கார்ந்து கொண்டே சுண்ணாம்பு கேட்காதீர்கள்!
இறங்கி வாருங்கள் தீர்வு கிடைக்கும்!

இதற்கான இடம், காலம்,
உங்களுக்கு வசதியாக எதிர்பார்க்கும், சோம்பேரித்தனத்திலிருந்து வெளியேறுங்கள்!
தகுதியான ஆட்களை தேடுங்கள்!

Diabetic ரீடிங்,
சர்க்கரை அளவு கட்டுப்பாடு(control),
Diabetic management,
உணவு கட்டுப்பாடு,
இவைகளனைத்தும் "ஏமாற்று வேலை",
பிரட்சினைகளை பெரிது படுத்தி வியாபாரம் செய்யும் தந்திரம்!

இந்த மாய வாலையிலிருந்து வெளியேறுங்கள்!
வாழ்த்துக்கள்....!
*Dr.JUSTIN*
*Health & Wealth*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...