Thursday, October 11, 2018

பசு மஞ்சள் பயன்கள், ஒரு விளக்கம்

*பசு மஞ்சள் பயன்கள், ஒரு விளக்கம் :*

பசுமஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்பவை மஞ்சளின் வெரைட்டிகளில் சில. பச்சையாக, பசுமையாக பறித்தவுடன் கானப்படும் மஞ்சளை பசு மஞ்சள் என்கிறோம். காய வைத்தால் கஸ்தூரி மஞ்சள். மஞ்சள் வியாபாரிகள் இது குறித்து மேலதிகமாக சொல்வார்கள்.

ஆனால் எந்த மஞ்சள் வகையாக இருந்தாலும் ஓக்கே என்பதை நினைவில் கொண்டு மேலே படிக்கவும்

மஞ்சள் இன்ஃப்ளமேஷன் எனப்படு  உள்காயத்துக்கு அருமருந்து. ஆனால் சும்மா இருக்காத அமெரிக்கர்கள் மஞ்சளை அக்குவேறு ஆணிவேராக பிரித்து ஆராய்ந்து மஞ்சளில் உள்ள கியுர்குமினில் தான் அதன் ஜீவநாடியே இருக்கு என கண்டுபிடித்தார்கள். அப்படி கண்டுபிடித்தபின் கியுர்கிமுனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து காப்ஸ்யூலில் அடைத்து அதை நமக்கே விற்க ஆரம்பித்தார்கள். நாமும் அதை பாட்டில் ஆயிரம், ஐநூறு என கொடுத்து வாங்கி சாப்பிட்டுகொண்டிருக்கிறோம்.

மஞ்சளில் உள்ள கியுர்குமின் மேல் வெயில் பட, பட அதன் விரியம் குறைந்துகொண்டே போகும். அதே செடியாக, தண்டாக, கிழங்காக இருக்கையில் இப்பிரச்சனை இல்லை. ஏனெனில் கியுர்குமின் கிழங்குக்கு உள்ளே தான் ஏராளமா இருக்கு. அதை பொடியாக்கி பாட்டிலில் அடைத்து ஷெல்பில் வைத்தால் அதன் வீரியம் நாள்பட, நாள்பட குறைந்துகொண்டே போகும். அதை சமையலுக்கு பயன்படுத்தினால் இன்னும் சுத்தம். சக்கை தான் மிஞ்சும்,.

அதனால் மஞ்சள் வேரை வாங்கி ஒரு தொட்டியில் வளர்த்து வாருங்கள். அபார்ட்மெண்டில் கூட வலர்க்கலாம். இது ஒரு பைபாஸ் சர்ஜரியையே நிறுத்தும் சக்தி கொண்டது. சி.ஆர்.பி அளவுகள் எல்லாருக்கும் எகிறி இருக்கிறது. அதனால் இதையும் கூட துளசி, துலசி கிடைக்காத நாடுகளில் பேஸில் என வளர்த்து வாருங்கள்.

மஞ்சள் கிழங்கை தினம் அரை அல்லது 1 இஞ்சு அளவில் வெட்டி எடுத்து, கருமிளகுடன் பச்சையாக உண்ணவும். அப்படி உண்கையில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது முட்டை, இறைச்சி போன்ரவற்றுடன் சேர்த்து உண்ணவும். கியுர்குமின் அப்சார்ப் ஆவதை இது 1000 மடங்கு அதிகரிக்கிறது. இப்படி செய்யாமல் காப்ஸ்யூலில் எடுப்பதால் எப்பலனும் கிடையாது. காப்ஸ்யூலில் எடுத்தால் கூட கருமிளகு, சேச்சுரேட்டட் பேட் எடுப்பதும் அவசியம்.

மஞ்சள் கிழங்கு கிடைக்கலை என்பவர்கள் பிரஷ் ஆன மஞ்சள் பொடியை வாங்கி, அதை ஒரு துணியால் மூடி ப்ரிஜ்டில் வைத்து வெளிச்சம் படாமல் வைப்பது கியுர்குமின் அளவுகளை அதிகரிக்க உதவும். நாட்பட்ட மஞ்சள் பொடியை முடிந்தவரை தவிர்க்கவும். ஆனாலும் பாட்டிலில் இருப்பதால் வெளிப்புறம் இருக்கும் கியுர்குமின் வேண்டுமானால் வீரியம் குன்றலாமே ஒழிய பொடியின் பெரும்பகுதியில் கியுர்குமின் தப்பி பிழைத்துவிடும். கிழங்காக எடுத்தால் இந்த சிக்கல் இல்லை. கிடைக்கவில்லையெனில் பொடியாக எடுக்கவும்.

பொடியாக எடுத்தாலும் சமைக்க பயன்படுத்தும் மஞ்சள் வேறு, சி.ஆர்.பிக்கான மஞ்சள் வேறு என்பதில் தெளிவாக இருக்கவும். சி.ஆர்.பிக்கான மஞ்சளை பிரிட்ஜில் வைத்து தினம் 1 ஸ்பூன் என்ற அளவில் பச்சையாக உண்ணவும். அல்லது எதாவது சாலடின் மேல் தூவி உண்ணவும்.

மாரடைப்பு, ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கும் இதயத்தில் சிக்கல் இருப்பவர்களுக்கும், உள்காயம் இருப்பவர்களுக்கும் மஞ்சள் அருமருந்து. அதை மருந்தின் தன்மையுடன் பயன்படுத்தினால் மிக சிறப்பு

நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவ ர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்!*

*நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவ ர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்!*

*🌹நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!*

*🌹அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!*

*🌹இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!*

*🌹கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!*

*🌹இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!*

*🌹அதுதான் மெலடோனின் (melatonin)!!*

*🌹இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.*

*🌹மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!*

*🌹இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!*

*🌹அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!*

*🌹ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!*

*🌹நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!*

*🌹பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!*

*🌹இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!*

*🌹எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!*

*🌹அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.*

*🌹ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!*

*🌹இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!*

*🌹இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!*

*🌹நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.*

*🌹அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!*

*🌹அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!*

*🌹அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!*

*🌹எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.*

*🌹அவசியம் அனைவருக்கும் பகிருங்கள்!*
*🙏வாழ்க வளமுடன். நல்லதே நடக்கும்*🤝👍💐

கருஞ்சீரகம் - பயன்கள் :*

*கருஞ்சீரகம் - பயன்கள் :*

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிடவேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

*கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.*

*”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது”* என்ற பொன்மொழி இன்று மருத்துவர்களால் கருஞ்சீரகம் தொடர்பாக கண்டறியப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு 1500 வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டதாகும். ஒரு வார்த்தையில் பெரியவர்கள் கூறிய விடயத்தில் எத்துனை எத்துனை மருந்துகள் இருக்கின்றன என்று பாருங்கள்.

*மேலே உதாரணத்திற்காக நான் தொகுத்துத் தந்தவை சொற்பமே! இதுவல்லாத இன்னும் பல நோய்களுக்கும் கருஞ்சீரகத்தில் நிவாரணி இருக்கின்றது.*

*இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்*

*இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்*

இந்துக்கள் எண்பது சதவீதத்துக்கும் மேலாக வாழும் ஒரே நாடு நமது பாரதம் மட்டுமே. பாரத தேசத்தில் இந்து தர்மத்தைச் சிதைப்பதிலும்,இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களில் சிலரே களத்தில் இருக்கின்றார்கள்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்துவிரோத சக்திகள் இருந்தாலும், இவர்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் வியாபித்துள்ளது. இந்த தீய சக்திகள் இந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களின் செயல்களை செய்து வருகிறார்கள்.

தங்களின் அதிகார பலத்தாலும்,வெளி உலக பலத்தாலும் கருத்துக்களையே மாற்றியமைக்கக்கூடிய சூழிநிலையை உருவாக்குகிறார்கள்.

உலகில் வலிமைமிக்க சக்தியாக விளங்குவது ஊடகங்கள் எனப்படும் மீடியாக்கள்.இந்து விரோத சக்திகள், தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டு காரியங்களைச் செயல்படுத்த மீடியாக்கள் மூலம் முனைகிறார்கள்.

வெளிப்பார்வைக்கு இவர்களின் போக்கு இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிந்தும், அந்நிய சக்திகளின் ஊக்குவிப்பால் தங்களின் ஊடகங்கள் (மீடியாக்கள்) மூலமாக இந்து விரோத செய்திகளை அதிக அளவில் வெளியிடுகிறார்கள்.

அடிமைத்தனத்தின் உச்சமான ஆங்கில மோகத்தின் காரணமாக பாரத நாட்டில் பெருவாரியான மக்கள் ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பெருவாரியான ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் அல்லது அந்நிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கையில் இருக்கின்றன.

இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்யவேண்டும், இந்து ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தெளிவான கொள்கையின் அடிப்படையில் ஊடகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்,மூன்றாவது கண் என வர்ணிக்கப்படும் இதழ்கள் இரு சமுதாயத்திற்கு விரோதமான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தவறான செய்திகளாக இருப்பினும் சிறிதும் வெட்கம்,கூச்சமின்றியும்,எவ்வித சமுதாயக்கண்ணோட்டம் இல்லாமலும் செயல்படுகின்றன.

ஆங்கிலப்பத்திரிகை என்பது அறிவுஜீவிகளின் பத்திரிகை, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கலாம்.

ஆனால்,உலக நாடுகளுக்குப் பாரதத்தைப்பற்றியும்,பாரதத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் உணர்வுகளைப் பற்றியும் திசைதிருப்ப பெரும்பங்காற்றுவது ஆங்கிலப்பத்திரிகைகளே!!

அவை அப்படி செய்ய அதன் திரைமறைவு ரகசியங்களை ஆராய்வோம்:

தி ஹிந்து

125 ஆண்டுகள் பழமையான நாளிதழ் தி ஹிந்து. துவக்க காலங்களில் நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய இதழ்.

ஆனால், தற்போது இந்து விரோத செய்திகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதன், இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவான கட்டுரைகள் அதிக அளவில் பிரசுரிப்பதும் தங்களின் தலையாய பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விஜில் என்னும் அமைப்பின் சார்பில் நடந்த ஒரு ஆய்வரங்கில் 1992 இல் அயோத்தியில் நடந்த சம்பவத்தைக் காட்டுமிராண்டியின் செயல்பாடு என வர்ணித்தார்.

இன்று இந்து பத்திரிகையின் முழு நிர்வாக அமைப்பு சுவிஸ் நாட்டின் ஜோஷ்வா சொசைட்டி என்னும் நிறுவனத்தின் பிடியில் இருக்கிறது.(Joshuna Society, Berne).

என்.ராமின் முதல் மனைவி ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த சூசன் என்பர். இவர் ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீட்டின் பொறுப்பாளர். இவரது மகள் வித்யாராம் ஒரு பத்திரிகையாளர்.

என்.ராமின் இரண்டாவது மனைவி மரியம். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி.இவரின் தூண்டுதலின் பலனாகவே கிறிஸ்தவ அமைப்பிடம் இந்து பத்திரிகையின் நிர்வாக அமைப்பு மாறிவிட்டது.

எக்ஸ்பிரஸ் பத்திரிகை

தேசபக்தி கொண்ட ராம்நாத் கோயங்காவால் துவக்கப்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.இந்துப்பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் ஊறு விளைவிக்காமல் பத்திரிகை நடத்தியவர்.அவசர காலத்தில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்.

ஆனால்,இன்று,தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எனவும்,தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் எனவும் இரண்டாக பிரிந்துள்ளது.

இந்த இரண்டில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிக பங்குகளை வாங்கியது ஏசிடிஎஸ் கிறிஸ்டியன் மினிஸ்டர்ஸ் என்ற (ACTS Christian Ministers) கிறிஸ்தவ நிறுவனமாகும்.

இரண்டு பிரிவுகளில் இந்துக்களுக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை தற்போது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாகும்.ஏனெனில்,இது கோயங்காவின் நேரடி வாரிசுகளின் கையில் இருக்கிறது.

டைம்ஸ் குருப் பத்திரிகைகள்

வடமாநிலங்களில் அதிக அளவில் வெளிவரும் பத்திரிகை டைம்ஸ் குரூப்பின் பத்திரிகைகளாகும்.இந்த நிறுவனத்திலிருந்து வரும் பத்திரிகைகள் டைம்ஸ் ஆப் இந்தியா,மிட்டே,நவபாரத் டைம்ஸ்,ஸ்டார் டஸ்ட்,பெமினா,விஜய் டைம்ஸ்,விஜய் கர்நாடகா

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பென்னட் கோல்மேன் என்ற நிறுவனமாகும்.(Bennett & Coleman). இந்த நிறுவனத்தின் 80% பங்குகள் உலக கிறிஸ்தவ கவுன்சில் (World Christian Council) வசம் உள்ளது.

ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல்

ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல் என்னும் இரண்டு ஆங்கிலப்பத்திரிகைகளும் சவுதி அரேபியாவின் நிறுவனத்தைச் சேர்ந்தவை.இந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர்.இவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1989 முதல் 1991 வரை இருந்தவர்.

பல பத்திரிகைகளில் இந்துக்களுக்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.

அமெரிக்காவில் இருக்கும் புருக்கிங் (The Brookings Institution, Washington) நிறுவனத்தில் இஸ்லாமிய உலகின் அமெரிக்கக் கொள்கை பற்றிய வகுப்பு எடுக்கும் பகுதி நேர ஆசிரியர்.

2006 ஆம் ஆண்டு மக்கா அல் முக்கரமா என்னும் இடத்தில் நடந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்(Member of the Forum of Islamic Scholars and Intellectuals, held in Makka-al-Mukaramma).இவரின் துணைவியார் மல்லிகா ஜோசப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றுகிறார். ஆகவே, இவர் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் இந்துவிரோத கருத்துக்களாகவே இருக்கின்றன.

    🏵INTELLIGENCE🏵

வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*

*வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*
-------------------------------------------------------------------

*Oct 7, 2018 இரவு ஐ.நா ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.*

*தென்கொரியாவின் இஞ்ச்யான் நகரில் 200 சர்வதேச விஞ்ஞானிகள் பங்கு பெற்ற சுற்றுச்சூழல் மாநாடு தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்றது. அதில் 728 பக்க அறிக்கையை வெளியிட்டார்கள்.*

*அதில் 2050 ற்குள் உலகம் மிகப்பெரும் பேரழிவை சந்திக்க காத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.*

*உலகளவில் ஏற்கனவே நடந்த சுற்றுச்சூழல் மாநாடுகளில் புவி வெப்பம் 2℃ ஐ கடக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார்களாம். ஆனால் இப்பொழுது வேகமாக 1.5℃ நெருங்கி வருகிறதாம். 2030 ல் இது 3℃ வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்கள்.*

*இதனால் ஏற்படும் பாதிப்புகளை இவர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள் !*
-------------------------------------------------------------------

*1 - வெப்ப கதிர்வீச்சு தாக்கம் இனி தொடர் கதை ஆகும் - Heat waves (2015 ல் இந்தியாவில் மட்டும் இதற்கு 2500 பேர் இறந்துள்ளார்களாம்.)*

*2 - அரிசி, கோதுமை விளையாத அளவிற்கு சுற்றுச்சுழல் மாசு ஏற்பட்டு மண் மலடாகும். இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வார்கள்.*

*3 - குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.*

*4 - காடுகள் தீடீர் தீடீரென தீப்பற்றிக்கொள்ளும்.*

*5 - கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயர்ந்து உலகம் முழுக்க உள்ள கடலோர நகரங்கள் கடலுக்குள் முழ்கும் அபாயம்.*

*6 - பனிப்பாறைகள் உருகி அதில் இருந்து வெளியேறும் Methane gas வெளியேறும், இது Carbon-di-oxide ஐ விட பத்து மடங்கு அதிக நச்சு வாய்ந்ததாக இருந்து Ozone layer ஐ இது சேதப்படுத்திவிடும்.*

*7 - வரட்சி ஏற்படும்.*

*இதற்கு இவர்கள் குறிப்பிடும் முக்கிய காரணங்கள் தொழிற்சாலை, வண்டி வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் காடுகளை அழித்தல்.*

*இதற்கான ஆதாரம் இதோ 👇🏾*

https://youtu.be/Pc1h9gCZWAg

*இப்படி சாகக்கிடக்கும் பூமியை வெடி வைத்து மேலும் சாகடிக்கலாமா ?*

*சரி இப்பொழுது பட்டாசிற்கு வருவோம் !*
-------------------------------------------------------------------

*நாம் அன்றாட கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்கலுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.*

*ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்.*

*சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.*

*1 - பொட்டாசியம்*
*2 - பாஸ்பரஸ்*
*3 - சல்பர்*
*4 - துத்தநாகம்*
*5 - ஆண்டிமோனி சல்பைடு*
*6 - காட்மியம் காரீயம்*
*7 - நைட்ரேட்*
*8 - ஆர்செனிக் பேரியம்*
*9 - காப்பர் காம்பவுண்ட்*
*10 - லெட் காம்பவுண்ட்*
*11 - ஹெக்சா குளோரோ பென்சின்*
*12 - நைட்ரஜன் டை ஆக்சைட்*
*13 - லித்தியம் காம்பவுண்ட்*
*14 - சோடியம்*
*15 - அலுமினியம் பவுடர்*
*16 - மேக்னீசியம் பவுடர்*
*17 - அயர்ன் பவுடர்*
*18 - பொட்டாசியம் நைட்ரேட்*
*19 - பொட்டாசியம் பெர்குலோரெட்*
*20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்*
*21 - பொட்டாசியம் குளாரேட்*

*இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.*

*பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன*

*நீர் !*
--------

*பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.*

*நிலம் !*
-------------

*பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.*

*நெருப்பு !*
------------------

*பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.*

*காற்று !*
---------------

*பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்ப்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.*

*ஆகாயம் !*
-------------------

*21 நச்சு இரசாயனங்கள் வழி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.*

*நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?*

*இதோ பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள் !*
-------------------------------------------------------------------

*1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்*
*2 - காது கேளாமை*
*3 - சளி*
*4 - இருமல்*
*5 - தும்மல்*
*6 - ஆஸ்துமா*
*7 - மூச்சுத்தினறல்*
*8 - நுரையீரல் புற்றுநோய்*
*9 - சொரியாஸிஸ்*
*10 - கண் பார்வை இழப்பு*
*11 - தைராய்டு*
*12 - மூளை செயல்பாடு பாதிப்பு*
*13 - அனீமியா*
*14 - சிறுநீரக கோளாறு*
*15 - கல்லீரல் பாதிப்பு*
*16 - வாந்தி*
*17 - தலைவலி*
*18 - வயிறுக் கோளாறுகள்*
*19 - சைனஸ்*
*20 - மூக்கு, தொண்டை பாதிப்பு*
*21 - இரத்த அழுத்தம்*
*22 - மாரடைப்பு*
*23 - தூக்கமின்மை*
*24 - குழந்தையின்மை*
*25 - புற்றுநோய்*

*இவை அனைத்து தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.*

*மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் பல்லுயிர்களை சும்மாவிட்டுவிடுமா ?*
------------------------------------------------------------------

*1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.*
*2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.*
*3 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*4- நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.*
*5 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது.*

*ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?*

*நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்*

*ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.*

*சமுதாய பாதிப்புகள் !*
----------------------------------------

*பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை*

*காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை*

*ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை*

*ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை*

*நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை*

*வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை*

*உணவு இல்லையேல் மனிதன் இல்லை*

*நீ வெடிக்கும் பட்டாசு உனக்கு நீயே வைக்கும் வேட்டு என்று இப்பொழுது புரிகிறதா ?*

*ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?*

*ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?*

*ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?*

*கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.*

*பண்பாடு !*
--------------------

*வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.*

*பல்லுயிர்_நன்மைகள் !*
-------------------------------------------

*சுற்றுப்புறச்சூழல் மனித குலத்திற்குத் தரும், நீர் ஆதாரத்தை அது பாதுகாக்கிறது.*

*மணல் ஆதாரத்தை அது உருவாக்குகிறது; மற்றும் பாதுகாக்கிறது.*

*ஊட்டச் சத்துக்களை சேமித்து வைக்கிறது; மறு சுழற்சி செய்து தருகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் மாசுகளை தகர்க்கிறது; உறிஞ்சிக் கொள்கிறது.*

*உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளைப் பராமரிக்கிறது.*

*எதிர்பாராது எற்படும் இயற்கை நிகழ்வுகளிலிருந்து நம்மை மீட்கிறது.*

*உயிரிய ஆதாரங்களான  உணவு, மருத்துவ ஆதாரங்களாக உதவும் செடிகள், மரச் சாமான்களைத் தயாரிக்க உதவும் மரங்கள், ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.*

*பறவைகளுக்கான உணவு வகைகளைத் தருவதோடு  பல்வேறு வகை உயிரினங்களின் பாதுகாப்பு, மரபணு பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.*

*இது தவிர சமூகத்திற்கு ஆதாயம் தரும் வகையில் பண்பாட்டைப் பாதுகாத்துப் பேணுகிறது; சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கி மக்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.*

*ஒரு செலவும் இல்லாமல் இயற்கை நமக்குத் தரும் இதைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இவற்றை மனிதனால் உருவாக்கவே முடியாது.*

*ஆகவே அரிதாக நமக்கு இயற்கை அருளியுள்ள பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்காமல் காத்து சுற்றுப்புறத்தைக் காப்பது நமது கடமை.*

*இப்படி*

*"பகுத்துத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"*

*என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.*

*இன்று !*
----------------

*கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்துவிட்டு நம்மை நாமே அழித்துகொள்கிறோம்.*

*பட்டாசு தயாரிப்பவன் கொலைகாரன்*

*பட்டாசு விற்பவன் கொலைகாரன்*

*பட்டாசு வாங்கித்தருபவன் கொலைகாரன்*

*பட்டாசு வெடிப்பவன் கொலைகாரன்*

*இதற்கு சட்டத்தில் தண்டனை இல்லாவிட்டாலும் கர்மா அடிப்படையில் இவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.*

*பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.*

*பல்லுயிர்களை வாழவைத்து*
*நாம் வாழ்வோம்.*

*விளம்பி வருடம் வரும் ஐப்பசி மாதம் ௨० ஆம் நாள் (Nov - 6) வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே இறைவன் முன்நிலையில் உறுதிமொழி ஏற்போம்.*

*வெடிகளை வைத்து பூமியை அழிப்பதை விட !*
*செடிகளை வைத்து பூமியை பாதுகாப்போம் !*

*பட்டாசுகள் ஒழியட்டும் !*
*பல்லுயிர்கள் தழைக்கட்டும் !*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...