Monday, September 11, 2017

கேன்சர் என்பது நோய் அல்ல...

கேன்சர் என்பது நோய் அல்ல...
🤔
-------------------------------------------------------
அது வைட்டமின் B17ன் குறைபாடு
-------------------------------------------------------
கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAi
-------------------------------------------------------
தமிழ் உலகம் விழிப்புணர்வு அடைய "கேன்சர்"  பற்றிய மிக முக்கிய தகவலை வெளியிடுகிறோம்..
-------------------------------------------------------
Raja Bai , Shakthi BBala Yogi
-------------------------------------------------------
( புற்றுநோய் - CANCER  ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
-------------------------------------------------------
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
-------------------------------------------------------
கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது.
-------------------------------------------------------
இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு
-------------------------------------------------------
ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
-------------------------------------------------------
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி  
பிளூபெர்ரி    
பக் வீட் ( Buck Wheat ) 
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும்.
-------------------------------------------------------
அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள்.
-------------------------------------------------------
அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.
-------------------------------------------------------
உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.
-------------------------------------------------------
கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..
-------------------------------------------------------

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:-

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:-

* வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன. வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

* வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

* வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

* ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

* பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

* வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

* அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

* வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

* இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

* வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

* இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

*சுக்கில் இருக்கு சூட்சுமம் !!*

*சுக்கில் இருக்கு சூட்சுமம் !!*

மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.
சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில்சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டை காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.
👁‍🗨 *சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் :*
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள்முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல்தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்து கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்
பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்குகிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போதுபயன்படுத்தலாம்.
👁‍🗨 *சுக்கு மொழிகள் பத்து :*
*1.* தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.
*2.* சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.
*3.* சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.
*4.* மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.
*5.* சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
*6.* இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.
*7.* பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.
*8.* சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.
*9.* சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.
*10.* சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.
👁‍🗨 *பொதுப்பயன்கள் :*
பித்தம் அகற்றும். வாயு தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியை குணப்படுத்தும். மூட்டுவலி மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
👁‍🗨 *மருத்துவப் பயன்கள் :*
*1.* சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
*2.* சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
*3.* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
*4.* சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
*5.* சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
*6.* சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
*7.* சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி,சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
*8.* சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
*9.* சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.
*10.* சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
*11.* சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
*12.* சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
*13.* சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
*14.* சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
*15.* சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
*16.* சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
*17.* தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
*18.* சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
*19.* சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
*20.* சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l
*சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை !*

*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

👆
*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

           *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)

நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

            *எப்படி அணுக வேண்டும்*

                 பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள்.

             முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கால இடைவெளியைக் (தேதி)  குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள்.

            குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துவிடுவார்கள். பின் அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள்  தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள்.

            மீண்டும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் [சுமார் 45 நாட்கள் கழித்து] சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர்.  தேவைப்பட்டால் காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் நீக்கி ஊர் வந்து சேர வேண்டியதுதான்.
                
                 மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் 2ம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள்.
வசதிகள்

          சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு (திருப்பதி தேவஸ்தான உணவு பற்றி யாவரும் அறிந்ததே), தங்கும் இடம்,  மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

அறுவை சிகிச்சை TO கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

           *எப்படி செல்வது*

           திருப்பதி பேருந்து நிலையம்  ரயில் நிலையம் அல்லது அலிப்பேரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எடுத்துச் செல்ல வேண்டியவை

             பிலாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ப்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3

                 *கவனத்தில் கொள்ள வேண்டியவை*

                         அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை.

                     *தகுதி*

   பாதிப்பு மட்டுமே. சிபாரிசு தேவையில்லை. ஜாதி மதம் மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை.
5 வயது முதல் 55 வயதுவரை உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில் / பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ்.

இதுபோன்ற சிறப்பான போலியோ எலும்பு அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனை தவிர கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகிவற்றில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் வரை செலவாகும் ஆனால் இங்கு (TTD) முற்றிலும் இலவசம்.

இதை பகிர்வதன் மூலம்  உங்களாலும் உதவ முடியும்.  சிலரின் வாழ்விலாவது ஒளி ஏற்ற முடியும் என்பதோடு எம் பெருமான் திருமலைவாசனின் அருள் கிடைக்கப்பெறுவோமாக.....

சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும் எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.

சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.
என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .உடன் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும்  
எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
      20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை.நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன இருக்கிறதா என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் காலில் கட்டு எதுவுமில்லை சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன். கொடுமுடி ,முத்தூர் வெள்ளகோவில் இடையே தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள் ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது இது ஒரு குடும்ப. வைத்தியம் என்றார். உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம்.40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .இவ்வளவு ஆண்டுகளுக்கு ப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .அப்போது 
அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொன்டி
நொன்டி வருவார். டாக்ஸி வந்து நிற்க்கும் அதில் தடுமாறி ஏறுவார் . மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது.ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் என்ன விபரம் என்ன என்றுக்கேட்டேன்,சர்க்கரை இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.
    எனக்கு உடனடியாக தாசநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் 1500ரூபாய் என்றார்.
    சரி நான் சொல்வதற்காக தாசநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாசநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன்.இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன்.காலில் கட்டிலில்லை எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது.ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்....
    எல்லோரும் ஷேர் செய்யுங்கள்.....
   நம்புங்கள் சென்று பலனடையுங்கள்.........
  K.C.பாலக்கிருஷ்ண்ன் Ex.பேருராட்சித்தலைவர்,கொடுமுடி..

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...