Cut one piece of garlic in round shapes...and keep it on the warts ..paste it using the surgical tape.keep it over night and remove in the morning...it worked for me very well.
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Wednesday, November 7, 2018
இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...! 🍑🍑🍑
✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋
இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!
🍑🍑🍑
ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்ச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும்.
பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையை தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாக்க முடியாத அளவு ஏற்படுகிறது.
🍍🍍🍍
வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2 முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.
🥒🥒🥒
பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
🥑🥑🥑
தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
🍒🍒🍒
ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும். பற்களில் தொற்று ஏற்படாதவாறு உணவுத் துணுக்குகளை அகற்றி பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல்துலக்க உப்பையே நன்கு பொடித்தும் பயன்படுத்தலாம்.
🍇🍇🍇
ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
🍏🍏🍏
அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி வந்தனர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரால் தினமும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வாருங்கள்.
🍓🍓🍓
கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்🍓🍓🍓🍓🍓🍓
🍋🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*
*பவானி*
*ஈரோடு மாவட்டம்*
*செல் நம்பர்*
*6383487768*
*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻
ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !* --------------------------------------
*ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !*
--------------------------------------
*வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.*
*நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.*
*இது தான் அந்த மூன்று சக்தி*
*1 - செரிமான சக்தி*
*2 - இயக்க சக்தி*
*3 - நோய் எதிர்ப்பு சக்தி*
*இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.*
*காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.*
*மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.*
*உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.*
*இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.*
*உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.*
*உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.*
*உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.*
*இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.*
*ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது 'சஷ்டி விரதம்' தான்.*
*துலை மாதம் ௩ ஆம் தேதி விழா துவங்கி, ௮ ஆம் நாள் நிறைவு பெருகிறது. [ ஐப்பசி 3 ஆம் தேதி (Oct -20) துவங்கி, ஐப்பசி 8 ஆம் நாள் (Oct 25) நிறைவு பெறுகிறது ]*
*உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.*
*'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய்'. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.*
*இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.*
*வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.*
*எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்' இருந்தாலும் வதம் செய்துவிடும்.*
*உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.*
*சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?*
-------------------------------------------------------
*1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.*
*2 - சமய முறைப்படி இருக்கலாம்.*
*3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.*
*4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.*
*5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.*
*இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.*
*சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.*
*பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.*
*இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.*
*திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.*
*இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.*
*வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.*
*எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.*
*உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.*
*நோன்பின் போது என்ன நடக்கலாம் ?*
----------------------------------------------
*ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.*
*1 - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.*
*2 - மலம் கருப்பாக வெளியேறலாம்.*
*3 - சளி வெளியேறலாம்.*
*4 - உடல் ஓய்வு கேட்கலாம்.*
*5 - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)*
*6 - வலிகளை உணரலாம்.*
*என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?*
------------------------------------------
*1 - அதிக உடல் எடை சீராகும்*
*2 - முகம் பொழிவு பெறும்*
*3 - கண்ணில் ஒளி வீசும்*
*4 - சுறுசுறுப்பு அதிகரிக்கும்*
*5 - இரத்தம் தூய்மை பெறும்*
*6 - தோலின் நிறம் சீராகும்*
*7 - மன உளைச்சல் குறையும்*
*8 - கவலை, பயம், கோபம் குறையும்*
*9 - புத்துணர்வு கிடைக்கும்*
*10 - உடல் பலம் பெறும்*
*11 - மன அமைதி பெறும்*
*12 - ஆழ்ந்த தூக்கம் வரும்*
*ஆக மொத்தத்தில்*
*உடலில் ஆரோக்கியமும் !*
*எண்ணத்தில் அழகும் !*
*மனதில் நிம்மதியும் !*
*கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.*
*கந்தன், அரக்கனை அழிப்பது போல்*
*உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.*
*நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.*
*உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.*
*உலகில் மிகச்சிறந்த மருந்துவர் - உங்கள் உடல்.*
*உலகில் மிகச்சிறந்த மருத்துவம் - உண்னாநோன்பு.*
*உண்ணாநோன்பு இருப்போம்*
*ஆரோக்கியமாக வாழ்வோம்*
*நன்றி*
*- ஹீலர்.இரா.மதிவாணன்.*
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.*
*மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )*
*மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.*
நமது இடது நாசி சந்திரகலை.
அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.
வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.
இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.
பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும்.
அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும்.
இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.
ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.
இதில்எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.
ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.
மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.
சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.
நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.
*சுவாசம்...*
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.
*சந்திரகலை என்றால் என்ன?*
இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலைஎனவும் அழைக்கப்படும்.
சந்திரகலையை மதி/இடகலை/
இடைக்கால்எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு ‘கால்’ என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.
அதனால் தான் ‘காலனைக் காலால் உதைத்தேன்’ எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.
இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.
16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.எனவே விதி முடிவும் விலகியே போகும்.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .
உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.
இதுதான் பிராணாயாமத்தின்
சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.
வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் ‘ஸ்பாஞ்’ போல காற்றுப் பைகளால் ஆனது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ‘பிராணா’ சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சந்திரகலை’. இது குளுமையானது .
வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சூரியகலை’. இது வெப்பமானது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ‘சந்திரகலை’ அதிகரிக்கும்.
இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"
வெற்றிலையின் பயன்கள்*
*வெற்றிலையின் பயன்கள்*
1. அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.
2. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
3. வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி தலை வலி உடனே குணமாகும்.
4. இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
5. முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
புங்கை அல்லது #புங்கன் . மருத்துவ குணங்கள்..
#புங்கை அல்லது #புங்கன்
.
மருத்துவ குணங்கள்..
.
படிக்காமல் கடந்துவிட்டுப் பின்னாளில் வருந்த நேரிடலாம்..
கைவச மருந்துகளை விட்டு மருத்துவமனைகளுக்கு ஓடலாமா?
.
இலை,பூ,காய்,விதை,வேர்,
பட்டை வரை அனைத்துமே அருமருந்தாகப் பயனளிப்பது புங்கன் ஆகும்.புங்கை எண்ணெயும் மருந்தாகும்.
டீசலும் தயாரிக்கப் பயன்படும்.புங்கன் புண்ணாக்கு வரை அனைத்தும் இயற்கையின் வரப்பிரசாதமே.
.
புங்கன் இலை:
காயம் பட்டவுடன் புங்கன் இலையை அரைத்துப் அவ்விடத்தில் பத்து போலப் போட்டுக் கட்டிவிட்டால் காயம் உடனே ஆறத்தொடங்கும்.
ஆறியவுடன் காய்ந்த மருந்து தானே விழுந்துவிடும்.உணவு செரிக்காமை ( அஜீரணம்), வயிற்று உப்புசம்,
வயிற்றுப் போக்கு போன்றவற்றை புங்கன் இலைச்சாறு குணப்படுத்தும்.
.
புங்கன் இலைகள் நெல் வயல்களுக்கு இயற்கை உரமாகும்.
.
புங்கன் பூ:
நீரழிவுக்கு புங்கன் பூவை வதக்கி சிறிது நெய், சிறிது பேரிச்சையுடன் அரைத்து காலை மாலை இருவேளை நெல்லி அளவு உண்ணக் குணமாகும்.
புங்கன் பூவை வதக்கி அரைத்து குடிநீரில் கலந்தும் பருகி வருதல் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
.
புங்கன் விதை:
கக்குவான் இருமல், சுவாசக் கோளாறுகளுக்கு புங்கன் விதைச் சூரணம் அருமருந்தாகும்.
.
புங்கன் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.புங்கன் விதைகள் டீசல் தயாரிக்கப் பயன்படுகிறது.
..
புங்கன் எண்ணெய்:
புங்கன் எண்ணெய்க்
களிம்பு சரும நோய்களுக்கும்,
ஆறாத புண்களுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
நாட்டு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
.
புங்கன் பட்டை:
இதன் கசாயம் மூலநோய்க்கு நல்ல மருந்து.
பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் மருந்து பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும்.
.
புங்கன் பால்:
புண்ணை ஆற்றும் மருந்து.
இடையர்களுக்கு உடனடி மருந்து இது. சிறிது நீரில் கலந்து பருக வாயுக் கோளாறுகளைச் சரிப்படுத்தும்.
.
தொழிற்சாலைக் கழிவான விஷ வாயு மீத்தைல் ஐசோ சயனைடை இது உறிஞ்சி கிரகித்துவிடும் சக்தியுள்ள மரம் எனவே தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக நட்டு சுற்றுச்சூழல் பேணலாம்.
.
தக்காளி போன்ற பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களை புங்கன் புண்ணாக்கு கட்டுப்படுத்தி அழிக்கவல்லது.
புங்கன் எண்ணெய் வேப்பெண்ணெய் போலவே பயிர்ப் பாதுகாப்புக்கு முக்கியமானது.
.
டீசலுக்குப் பயன்படும் காட்டாமணக்கு நிலத்தை நாளடைவில் பாழ்படுத்தி விடும்.ஆனால் புங்கன் நிலத்தை செழிக்கச் செய்து டீசல் தரும் மரமாகும்.
புங்கன் விதைகளை வீண்டிப்பதைப் பல இடங்களில் பார்ப்பதற்கு வேதனையளிக்கிறது.பயன்பாடு தெரியாமல் உள்ளோம் என்பதே உண்மை.
.
ஆடு மாடு மேய்ப்பவர்கள், காடுகளில் வேலை செய்வோர் புங்கன் இலைகளை வெற்றிலை போல வாயில் போட்டு அடிக்கடி மெல்லுவதைப் பார்த்து நான் அவர்களிடம் விசாரிக்கையில் ' சூட்டைத் தணிக்கும், உடலைக் குளிர வைக்கும், இரவில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் சூட்டுவலி வராமல் தடுக்கும்' என்றனர்.வியந்தே போனேன்.
.
புங்கன் மரக்காற்று குளிர்ச்சியானது.
புங்கன் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்தல் நல்லது.
புங்கன் மரத்தின் பயன்பாடுகள் பற்றிய விரிவான ஆய்வுகள் நடந்துவருகிறது.
அக்கால கிராமங்களில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வேம்பும், புங்கனும் கட்டாயம் இருக்கும்.
.
புங்கன் நட்டுப் பயனடைவோம். இயற்கை மருந்துகளை நேசிப்போம். பாரம்பரியம் காப்போம். இயற்கையோடு பயணிப்போம்.
ஆண்களுக்கு #உயிரணுக்கள்_இல்லாத #நிலை_AZOOZ_SPERMIA…
#ஆண்களுக்கு
#உயிரணுக்கள்_இல்லாத #நிலை_AZOOZ_SPERMIA…
கல்யாணமாகி நாலு வருஷமாச்சு!..
உனக்குத்தான் ஒரு குழந்தையைப் பெத்துதர துப்பில்லையே...
"என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்!’’
என்று இன்னமும்கூட பல குடும்பங்களில் பெண்ணைப் பார்த்துதான் முதல் ஈட்டி பாய்ச்சப்படுகிறது!
குழந்தை இல்லை என்றால் உடனே பெண்கள்தான் அதற்குக் காரணம் என்ற போக்கு, படிக்காத பாமரர்கள் மத்தியில்தான் என்றில்லை... படித்தவர்கள் மத்தியில்கூட இந்த எண்ணம் சட்டென்று நீக்க முடியாத அளவில் ஆழப் பதிந்து போயிருக்கிறது.
இருவரில் யார் வேண்டுமானாலும் இந்தக் குறைக்குக் காரணமாக இருக்க முடியும் என்ற விஷயமே இரண்டாவது சிந்தனையாகத்தான் ஏற்படுகிறது. அதுவும்கூட ஓரளவு படித்த, விஷயங்கள் புரிந்த சிலருக்குத்தான். குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாதததற்கு காரணமான பிரச்னைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதிக்குப் பாதி என்று ஏற்கெனவே மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தது.
சமீபகாலங்களில் இந்த சதவிகிதம் ஆண்களுக்கு பெண்களைவிட கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் அதிகமாகி இருக்கிறது.
‘‘உண்மைதான். இந்தப் பிரச்னை இப்போதல்ல.. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே மிக அதிகரித்து வருகிறது. காரணம் மாறி வரும் நமது வாழ்க்கை முறைதான்!’’
இதெல்லாம் ஆண்கள் பிரச்னை’ என்று வெளியே சில பிரச்னைகள் தெரியாததற்குக் காரணமே சில பெண்கள்தான். குறை தங்கள் கணவரிடம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள் என்பது இவரது கருத்து
‘கணவருக்கு குறையிருந்தால்கூட எங்க குடும்பத்தில் வேற யாருக்கும் இது தெரிய வேண்டாம்’ என்று பெண்களே நினைக்கிறார்கள். கணவர்கள் இந்த விஷயத்தில் கஷ்டப்படக்கூடாதென்று மனைவிகள் இரட்டைக் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது’’
♦ குழந்தையின்மைக்கான ஆண்களின் குறை ஏன் அதிகமாகிக் கொண்டு போகிறது?
முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடைப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நம் லைஃப் ஸ்டைலில் நாம் புதிதாக கடைப்பிடிக்கும் விஷயங்கள் ஆண்களுக்கு எந்தக் குறையை அதிகமாக்குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்’’ .
பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணுக்கள் எண்ணிக்கைக் குறைவுதான். ஒரு ஆணுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இருக்க வேண்டும். இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்கள், இந்த எண்ணிக்கையில் எழுபது சதவிகிதமாவது இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கு குழந்தை தர முடியும்!
சில ஆண்களுக்கு விந்துத் திரவமே உற்பத்தி ஆகாமல் இருக்கக்கூடும். இந்நிலையை ஆஸ்பெர்மியா (Aspermia) என்று அழைக்கிறோம்.
அது எப்படி ஒரு ஆணுக்கு வயதுக்கு வந்த பின்னரும் அதாவது டீன்ஏஜ் நிலை கடந்த பின்னரும் விந்துத் திரவம் உற்பத்தி ஆகாமலே போகும் என்று நீங்கள் சந்தேகம் கேட்கலாம். நியாயமான சந்தேகம்தான்.
குழந்தைப் பருவத்திலேயே புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்கியவர்களுக்கு விதைகள் செயலற்றுப் போய் விந்துத் திரவத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போகும்.
#ஆஸ்பெர்மியா
(Aspermia)
சில ஆண்களுக்கு விந்துத் திரவமே உற்பத்தி ஆகாமல் இருக்கக்கூடும். இந்நிலையை ஆஸ்பெர்மியா (Aspermia ) என்று அழைக்கிறோம்.
அது எப்படி ஒரு ஆணுக்கு வயதுக்கு வந்த பின் னரும் அதாவது டீன்ஏஜ் நிலை கடந்த பின்னரும் விந்துத் திரவம் உற்பத்தி ஆகாமலே போகும் என்றுநீங்கள்சந்தேகம் கேட்கலாம். நியாயமான சந்தேகம்தான். குழந்தைப்பருவத்திலேயே புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்கியவர்களுக்கு விதைகள் செயலற்றுப்போய் விந்துத்திரவத்தை உற்பத்திசெய்ய இயலாமல்போகும்.
#அஜுஸ்பெர்மியா (Azoospermia)
இன்னும் சிலருக்கு விந்துத் திரவம் உற்பத்தியாகும்… ஆனால் விந்துத் திரவத்தில் உயிரணு ஒன்றுகூட இல் லாமல் இருக்கும். இப்படி உயிரணு அறவே இல்லாமல் பூஜ்யமாக இருந் தால் அந்தக் குறைபாட்டுக்கு அஜுஸ் பெர்மியா (Azoospermia) என்று பெயர்.
#யெலிகூஸ்பெர்மியா’
(Eligoospermia)
இன்னும் சிலருக்கோ விந்துத் திரவத்தில் உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும். இந்த எண்ணிக்கையைக் கொண்டு ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்ய முடியாது. இந்நிலைக்கு ‘யெலிகூஸ்பெர்மியா’
(Eligoospermia) என்று பெயர்.
#ஒலிகோஸ்பெர்மியா’
(Oligospermia)
யாருக்காவது விந்தில்உயிரணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவுக்கும் குறைவாக இருந்து, அவை நீந்துகின்ற தன்மையையும் குறைவாகக்கொண்டு இ ருந்தால் அதை ‘ஒலிகோஸ்பெர்மியா’
(Oligospermia) என்று கூறலாம்.
#மைல்டு #ஒல்கோஸ்பெர்மியா
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை ஓரளவே குறை வாக இருந்தால் அது ‘மைல்டு ஒல்கோஸ்பெர்மியா’
‘#மிடில் #ஒலிகோஸ்பெர்மியா’
(Middle Oligospermia)
அதேபோல விந்தில் உயிரணுக்களும், செத்துப்போன அணுக்களும் சமநிலையில் இருக்கும் நிலையை ‘மிடில் ஒலிகோஸ்பெர்மியா’
(Middle Oligospermia) என்போம்.
#சிவியர் #_ஒலிகோஸ்பெர்மியா’
( Severe Oligospermia)
விந்துத்திரவத்தில் உயிரணுக்கள் மிகக்குறைவாக இருந்து, இறந்துபோன அணுக்களே அதிகம் இருந்தால் அது, ‘சிவியர் ஒலிகோ ஸ்பெர்மியா’ ( Severe Oligospermia) எனப்படும். ஒரு சிலரு க்கு விந்தில் உயிரணுக்களி ன் எண்ணிக்கை விரல்விட்டே எண்ணுகிற அளவுக்கு இருந்து, பிற அனைத்துமே செத்துப்போன அணுக் களாக இருக்கும். அந்நிலையை
‘வெரி சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ என்கிறோம்.
#ஆஸ்தெனோஸ்பெர்மியா (Asthenospermia)
சிலருக்கு விந்தில் தேவையான அளவுக்கு உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை நீந்துகிறத்தன்மை மிகக்குறை வாக இருக்கும். (கரு உருவாக நீந்தும் தன்மை முக்கியம்) இது ‘ஆஸ்தெனோஸ்பெர்மியா’
(Asthenospermia).
#பயோஸ்பெர்மியா (pyospermia)
விந்துத் திரவத்தில் சீழ் அல்லது ரத்தத்தின் வெள்ளை அணுக்களும் கலந்து இருந்தால் அது ‘பயோஸ்பெர்மியா’
(pyospermia)
#யூடூஸ்பெர்மியா
உயிரணுக்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தால் அது ‘யூடூஸ்பெர்மியா.’
#கிரிஸ்டோலஸ்பெர்மியா (Crystolospermia)
உயிரணுக்கள் படிகங்கள் போலக் காணப்படுகிற நிலை இருந்தால் அது ‘கிரிஸ்டோல ஸ்பெர்மியா’
(Crystolospermia).
#யெனிலோஸ்பெர்மியா (Anylospermia)
உயிரணுக்களை வளமாகச் செய்யவேண்டிய மாவுச்சத்து
(கார்போஹை ட்ரேட்), வைட்டமின்_ஈ போன்றவை குறைவாக இருந்தால் அது ‘யெனிலோஸ்பெர்மியா’
(Anylospermia).
#ஹீமோஸ்பெர்மியா (Haemoespermia)
முறையற்ற செக்ஸ் உறவின் காரணமாக ஆணுக்கு கொனோரியா எனும் பால்வினை நோய் வந்திருந்து உயிரணுக்கள் கருத்தரிக்கச் செய்ய இய லாத நிலையில் இருந்தால் அது ‘ஹீமோஸ்பெர்மியா’
(Haemoespermia).
#நெக்ரோஸ்பெர்மியா (Necrozopermia)
விந்தில் உள்ள உயிரணுக்கள் அனைத்துமே இறந்த அணுக்களாக இருந்தால் அந்நிலை ‘நெக்ரோஸ்பெர்மியா’
(Necrozopermia) எனப்படும்.
‘#ஒலிகோஸ்மியா’
(Oligospermia)
மேலே குறிப்பிட்டவற்றில் ஆண்களிடம் அதிக மாக இருக்கும் குறை ‘ஒலிகோஸ்மியா’
(Oligospermia) என்ற நிலைதான்.
ஒருவேளை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக டெஸ்டுகள் சொன்னாலும் கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப்
பொறுத்துதான் குழந்தை உருவாகிறது.
♦ உயிரணுக்களின் வீரியத்தை வைத்து……
1. அசையாத தன்மையுள்ள உயிரணுக்கள்,
2. வால் மட்டும் அசைக்கும் உயிரணுக்கள்,
3. வேகமற்ற உயிரணுக்கள்,
4. வேகமான உயிரணுக்கள்
என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
மேலே குறிப்பிட்டவற்றில் ஆண்களிடம் அதிகமாக இருக்கும் குறை ‘ஒலிகோஸ்மியா’ என்ற நிலைதான்.
ஒருவேளை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக டெஸ்டுகள் சொன்னாலும்கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப் பொறுத்துதான் குழந்தை உருவாகிறது.
இந்த நான்கிலும் முதல் இரண்டு வகை கொண்டவர்களால் தன் மனைவிக்குச் குழந்தை தர முடியாது (#சிகிச்சைக்கு #பின்பே_முடியும்). மூன்றாவது வகை சிறிது கஷ்டம். நான்காவது வகைதான் தொட்டதும் பற்றிக் கொள்ளும்!’’
♦ சமீபகாலமாக ஆண்களின் குறை அதிகமாவதற்கு என்ன காரணம்?
‘இப்போதெல்லாம்
பான்,
ஜர்தா
போடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
சிகரெட்டும் சரி, பான் போடுபவர்களும் சரி...
புற்று நோய்
போன்ற உடல்நலக் கேட்டுக்கு மட்டுமல்ல...
ஆண் குறைகளுக்கும் ஆளாகிறார்கள். இதனால் உயிரணுக்கள் உற்பத்தியே இருபத்தி மூன்று சதவிகிதம் குறைகிறது. உயிரணுவின் வீரியம் (நீந்துகிற தன்மை) பதின்மூன்று சதவிகிதம் குறைகிறது. ஏன்... சில சமயம் உயிரணுக்களின் வடிவம்கூட சிதைந்து போவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
அதேபோல இன்று ஆண்கள் மதுபானம் அருந்தும் எண்ணிக்கையும் மிக அதிகமாகிவிட்டது.
மதுபானங்கள் உயிரணுக்கள் உற்பத்தியிலேயே சிக்கல் ஏற்படுத்தி விடுகின்றன தெரியுமா?
ஆண்களின் குறைக்கு மிக முக்கியமான இன்னொரு காரணம் தொலைந்து போய்விட்ட நம் ‘மாரல்!’ அதாவது ‘இது ஒன்றும் பெரிய தப்பில்லை’ என்ற ரீதியில் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும் இடங்களில் ஏற்படும் செக்ஸ் ரீதியிலான அட்ஜெஸ்ட்மெண்டுகள்கூட உயிரணுக்களை முக்கியமாக பாதிக்கின்றன.
சமீப காலமாக சில பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்கள் பிரத்தியேக பகுதிகளில் வழவழப்பு ஏற்படுத்த வேண்டி கே.ஒய். ஜெல்லி, சர்க்கிலூப், லுபிபேகஸ் போன்ற ஜெல்லிகளை சகஜமாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் குழந்தை பெறாத பெண்கள் இவற்றை உபயோகிக்க வேண்டாம். காரணம், இதுபோன்ற ஜெல்லிகளுக்கு ஆண்களின் உயிரணுக்களை கொன்று விடுகிற ஆற்றல் உண்டு.
பொதுவாகவே தாம்பத்தியத்துக்கு முன்பு மனைவியை போர்பிளே எனப்படும் காதல் சில்மிஷங்கள் மூலம் உணர்வு மயமான சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றாலே போதும்... பிரத்தியேக பகுதிகள் நெகிழ்வுறும். அதனால் ஜெல்லி வேண்டாம்.
ஆண்கள், கட்டுமஸ்தான உடம்புக்காக அதிக எக்ஸர்ஸைஸ்... குறிப்பாக ‘சைக்கிளிங்’ செய்வதும் கூட இந்த விஷயத்தில் தப்புதான் தெரியுமா? (அளவான உடற்பயிற்சி எப்போதும் ஆபத்தில்லை) வாரத்துக்கு நூறு மைல் தொலைவு ஓடுவது, ஐம்பது மைல் தொலைவு சைக்கிள் ஓட்டுவது, மிக அதிக தூரம் டூவிலரில் உட்கார்ந்தபடியே போவது போன்றவைகூட உயிரணு உற்பத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
அதிக உஷ்ணமான சூழலில் வெகு நேரம் நிற்பது, அலுவலகத்தில் உஷ்ணமான இடத்தில் சேர்போட்டு அமர்வது அல்லது வெப்பம் கொப்பளிக்கும் மிஷின்கள் ஓடுமிடம், பாய்லர் போன்றவற்றின் அருகே மணிக்கணக்கில் நிற்பது, உணவு அல்லது தினசரி பழக்கவழக்கங்களால் உடலை அதிக சூடுக்கு உட்படுத்திக் கொள்வது போன்றவற்றை பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். அதிக வெந்நீரில் குளிப்பதைக்கூட தவிர்க்கலாம்.
கடைசியாக ஒரு மிக முக்கியமான விஷயம்.. தேவையில்லாமல் அடிக்கடி செயற்கை குளிர்பானங்கள், பிரிசர்வேடிவ் கலந்த உணவு வகைகள், பாஸ்ட் பூட்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதைக் தவிருங்கள். நல்ல சத்தான உணவை நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாலே இந்த ரசாயன உணவு வகைகள் சாப்பிடுவது குறையும். இவைகூட ஆண்களுக்கான மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்!
#பெண்களுக்கு #என்னென்ன_குறைகள்?
குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகள், சரியாக சினைமுட்டை சினைக்காத தன்மை மற்றும் மாத விலக்கு ஒழுங்கின்மை ஆகிய இரண்டும்தான். பத்து பெண்களில் ஐந்து பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கிறது.
பெண்களுக்கு சுரக்க வேண்டிய புரஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்கள் சரியாக சுரக்காததால் இந்தக் குறை ஏற்படுகிறது.
அடுத்த முக்கிய குறை, கர்ப்பப்பையிலும் அதன் சுவரை ஒட்டியும் ஏற்படும் கட்டிகளும் சினைப் பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளும்.
பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற ஊளைச் சதைகளும்கூட குழந்தை பிறக்காததுக்கு ஒரு காரணமாகிறது.
ஒரு சிறு எச்சரிக்கை:
கருக்குழாய்
(பெலோபியன் டியூப்) அடைப்பு என்பது முன்பெல்லாம் மிகக் குறைவாக இருந்தது. தற்போது நம் தவறான வாழ்க்கை முறைகூட இதற்கு காரணமாகிறது. உதாரணமாக உடலுக்கு அதிக வேலை தராமல் இருக்கும்போது நம் உடலில் ஏற்படும் ஊளைச்சதைகள் கர்ப்பப் பையைச் சுற்றிலும் வளர்ந்து பின் கருக்குழாய் உள்ளேயும் போய் அடைகிறது.
இதற்கு முன்பு கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களுக்கோ அல்லது குழந்தையில்லா குறைக்காக அடிக்கடி
#டி_அண்ட்_ஸி செய்து கொள்பவர்களுக்கோ அந்த புண்கள் ஆறக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகளால் கருக்குழாய்களின் ஒரு முனையோ அல்லது இரு முனைகளோ மூடி விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
முதல் குழந்தை வேண்டாம் என்று நினைத்து கருச்சிதைவு செய்து கொள்ளும் சில தம்பதியர் மத்தியில் இந்தக் குறை அதிகம் ஏற்படுவதைக் காண்கிறேன். குழந்தை உருவாகாமல் இருக்க அவர்கள் கருத்தடுப்பு முறைகளை உபயோகித்தால் பிற்காலத்தில் குழந்தை இல்லாக் குறையால் தவிக்க வேண்டியதில்லை...
பெண்கள் காலதாமதமாக குழந்தை பெற நினைப்பதும்
(35 வயதுக்கு மேல்) குழந்தையில்லா குறைக்கு ஒரு முக்கிய காரணம்!
சிலநேரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்தக் குறையும் இருக்காது. அப்படியிருந்தும் குழந்தை பிறக்காமல் போவதுண்டு! இதற்கு சரியான சமயத்தில் அல்லது சரியான முறையில் உறவு கொள்ளாதது அல்லது டென்ஷன் என்று ஏதாவது காரணங்கள் இருக்கலாம்!
இரண்டு சிறப்புகள்!
குழந்தைப் பிறப்புக்கான ஆண்கள் குறைகளில் மிக முக்கியமானது '#Nil_Count' எனப்படும் ‘அஜுஸ்பெர்மியா, என்ற என்ற நிலை. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தில் செயற்கை கருவூட்டலுக்குத்தான் (அதிலும் குறிப்பாக பிற ஆண்களின் உயிரணுவைக்கொண்டு) முயற்சி செய்கிறார்கள்.
அதேபோல பெண்ணின் மிக முக்கியமான குறை பெலோபியன் குழாய்கள் அடைத்திருப்பது. பெலோபியன் குழாய்களின் வழியாகத்தான் உயிரணு, சினைமுட்டையைச் சேர்ந்து கருமுட்டையாக உருவாகிறது. கருவுருதலுக்கு இதுதான் மிக முக்கியம். ஆனால் சமயத்தில் சில பெண்களுக்கு இந்த இரண்டு பெலோபியன் குழாய்களுமே அடைத்துக் கொண்டிருக்கும். இவர்களும் செயற்கை கருவூட்டல் முறைக்கோ
(#டெஸ்ட்டியூப்பேபி) அல்லது பெலோபியன் குழாயில் செய்யப்படும் #மைக்கோ #சர்ஜரிக்கோதான் போக வேண்டும். என்று சொல்வார்கள்
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...