[27/06, 15:29] +91 98949 03595: செரிமானக்கோளாறு உடனடி தீர்வு
வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். எலுமிச்சை, ஏலக்காய் கலந்து வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர டாக்ஸின்கள் அதிகமாக வெளியேறி உடல் புத்துணர்வு பெறும். கிட்னி ஸ்டோன் : வாழைத்தண்டு சாறு குடித்து வர அது கிட்னி கற்களை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாறில் ஏலக்காயை
தட்டிப்போடுங்கள். இதனால் கிட்னி கற்களினால் ஏற்படும் வலி குறைந்திடும்.வாழைத்தண்டு சாற்றில் லெமன் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் கற்கள் உருவாகமல் தடுக்க முடியும். வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும். எடை குறை : சீக்கிரமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியமானதும் கூட
. சமைத்தோ அல்லது சாறாகவோ வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால். நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் தேவையற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது குறைந்திடும். தொப்பை : வாழைத்தண்டில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை கரைத்திடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாற்றுடன் இஞ்சி சேர்த்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதில் கலோரியும் குறைவு என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம். அசிடிட்டி : எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாதவர்கள், அடிக்கடி ஜீரணக்கோளாறினால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாப்பிட்டு வர விரைவில் பலன் உண்டு. இதைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உணவு ஜீரணமாவதற்கான ஆசிட்டும் அதிகரிப்பதால் உணவு சீக்கிரமாக செரிக்கப்படும். இதனால் ஜீரணக்கோளாறுகள் தவிர்க்கப்படும்.
சர்க்கரை நோய் :
வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். இதில் இருக்கும் துவர்ப்புச் சுவையினால் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்தாக அமைந்திடும். கிட்னி நன்றாக செயல்பட வேண்டுமானால் நீங்கள் உங்கள் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். ரத்த சோகை : வாழைத்தண்டில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி6 இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தசோகை ஏற்படுவது தவிர்க்கப்படும்.
🚶🏼HAROON SB
[27/06, 15:29] +91 98949 03595:
மணத்தக்காளி
வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும்.
தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.மணத்தக்காளிக்கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம்.
மலக்கட்டை நீக்கும். நெஞ்சில் கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும். மணத்தக்காளி வற்றலுக்கு சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல். இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும்.
ஆஸ்துமா, நீரிழிவு முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.
நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது. மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
மணத்தக்காளி கீரை உடன் பாதியளவு பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வருவது நின்றுவிடும். மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வேகவைத்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு கீரையை சமைத்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும். மணத்தக்காளியிலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை.
கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும். வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளி கீரை சிறந்த மருந்தாகும். காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சியடையும். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும். வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும்.
மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும். மணத்தக்காளி இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.
🚶🏼HAROON SB
[27/06, 15:31] +91 98949 03595: Hi all
U may find some points important ✍
Already known. But a few may be new.
*இயற்கை வாழ்வியல் முறை*
*உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை*
🍒🍒🍒🍒🍒🍒
*கடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிற்றை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.*
🍐🍐🍐🍐🍐🍐
*தாகம், பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகிறது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.*
.
🥑🥑🥑🥑🥑🥑
*காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைத்திருக்க முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து, உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.*
🍏🍏🍏🍏🍏🍏
*உடல் எடை சீராக இருக்க, தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல்*
🥒🥒🥒🥒🥒🥒 *எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.*
*இன்றைய மூலிகை தலைப்பு (8)நத்தை ரி📕📕📕📕📕 இன்று பெரும் பிரச்சினையாக உடல்ரீதியாக மனரீதியாக பாதிப்படை செய்வது உடல் எடை அதிகரிப்பு தான் காரணம் அதிகப்படியான கலோரி உள்ள உணவுகளை தினமும் உட்கொள்வதால் அதற்கு ஏற்றார்போல் உடற்பயிற்சி செய்து கலோரி எரிக்கப்படாததால் பெண்களுக்குஉடம்பில் கால் தொடைப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் பின்பு மற்ற பகுதியிலும் தேவையற்ற கொழுப்பு தங்கிவிடுகிறது ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் வயிறு பகுதியிலேயே தங்கி தொப்பை விழுகிறது இதனால் நடப்பதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் விகாரமான தோற்றம் ஏற்படுகிறதுஅழகு குறைந்து விட்டதோ என்ற தாழ்வு மனப்பான்மை இதையெல்லாம் நீக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒற்றை மூலிகை தான் நத்தை சூரி🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂ நத்தை சூரி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியுங்களா மழைக்காலங்களில் தோளில் சங்கு போன்ற வடிவத்தில் இரண்டு கொம்பு வைத்துக்கொண்டு நத்தை ஊர்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள் அந்த நத்தை மேல் இந்த மூலிகை சாறு விட்டோம் என்றால் சதை வேறு ஓடு வேராக பிரிந்துவிடும் அதனாலதான் நத்தைசூரி என்று பெயர் வரக் காரணம் (சூரி என்றால் கொல்லுதல் என்று பொருள் படும்)📘📘📘📘📘📘📘📘📘 நத்தை சூரி விதையை தினம்தோறும்காபி டீ போல் பயன்படுத்தி வந்தாலே போதும் உடல் எடை குறைவதை கண்கூடாகக் பார்க்கலாம் அல்லது*
📝📝📝📝📝📝 *நத்தை சூரி விதை 100 கிராம். ஆவாரம் பூ 25 கிராம் சுக்கு 25 கிராம் கொத்துமல்லி விதை 25 கிராம் கேழ்வரகு 25 கிராம் மருதம்பட்டை 5 கிராம் எலுமிச்சை இலை இரண்டு கிராம் இவைகளை தக்க அனுபவம் உள்ளவர்களிடம் சுத்தி செய்து சூரணமாக தயார் செய்து வைத்துக் கொண்டு காலை இரவு ஒரு ஸ்பூன் உணவுக்கு முன்பாக 5 கிராம் எடுத்து கசாயமாக அல்லது டீ போடுவது போல் தயார் செய்து அதனுடன் கெமிக்கல் கலக்காத இயற்கை நாட்டு சர்க்கரை அல்லது ஒரிஜினல் பனங்கற்கண்டு சேர்த்து காலை இரவு உணவுக்கு முன்பாக சாப்பிட மிக விரைவாக உடம்பில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பு எல்லாம் கரைத்து வெளியேற்றி கெட்ட கொழுப்பு நீங்கி உடலுக்கு அழகைத் தந்து உடம்பு இறுகும் சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் யானையைப் போன்ற பலத்தைக் கொடுக்கும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் இதை தாங்களே தயார் செய்து கொள்ளாமல் முறைப்படி தங்கள் அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த பட்டதாரி மருத்துவர்களிடமோ பாரம்பரிய மருத்துவர்களிடமோ எடுத்துக்கூறி இந்த முறையில் தயார் செய்து சாப்பிடுங்கள் உண்மையை உரக்கச் சொன்னேன் உணர்ந்திடுங்கள் ஏனென்றால் எல்லா பெருநகரங்களிலும் உடல் எடை குறைப்பதற்காக பல்வேறு விளம்பரங்களை செய்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய டின்னில் அடைக்கப்பட்ட ஏதோ மருந்துகளைக் கொடுத்து மிகப் பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள் அது எல்லாம் ஏமாற்றுவேலை பக்க விளைவுகள் உள்ளது நம் நாட்டு மூலிகையான நத்தைச் சூரியில் எந்தப் பக்க விளைவும் கிடையாது 📕📕📕📕📕📕📕📕📕இதே நத்தைச்சூரி சூரணத்தை கொண்டு சீதபேதி தீராத பெருங்கழிச்சல் வயிற்று வலி இவைகளுக்கும் கொடுக்க தீரும் நத்தைச் சூரி வேரை எடுத்து வந்து சுக்கு ஏலக்காய் கலந்து நன்னாரி சர்பத் தயார் செய்வது போல் தயார் செய்து அதனுடன் பாதாம் பிசின் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு சிறந்த பலத்தைக் கொடுக்கும்
[27/06, 15:31] +91 98949 03595: 💫💫💫
வாரம் ஒரு முறை *கருணை கிழகை* சாப்பிட்டால் போதும்... உடலில் உள்ள பாதி நோயை சரி செய்யுமாம்!
கருணைக்கிழங்கு நிலத்தினுள் விளையும் ஒரு வகைக்கிழங்குப்பயிர் ஆகும். இதனை காரும் கருணை என்றும் அழைப்பர்.
இதில் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.
இது குடலை சுத்தப்படுத்துவதற்கும், உடல் எடையை குறைக்கவும் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.
மேலும் இது உடலில் உள்ள பாதி நோய்களை அடியோடு அழிக்க உதவி புரிகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும்.
கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.
வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சீராக்குவதோடு, பசியின்மை பிரச்சனையை தீர்க்கிறது.
கருணை கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.
வயிறு, இரைப்பை புற்று ஏற்படாமல் தடுக்க உணவில் கருணைக்கிழங்கு அதிகம் சேருங்கள்
👍🙏
[27/06, 17:33] +91 99449 43595: *கருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்?*
குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. கருத்தரிக்க தடையாக இருப்பதற்கு நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.
எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.
ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.
அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.
சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…
எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.
கீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.
பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.
மாறிப்போன உணவுப் பழக்கங்கள்.
தவறான வாழ்வியல் பழக்கம்.
காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.
மாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.
மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.
அதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்… பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.
புது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.
பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.
நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.
இதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
[27/06, 17:37] +91 99449 43595: *சளித் தொல்லையை சரி செய்ய*
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!
2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10. சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'உ' இருக்கிறது.வைட்டமின் 'உ' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது. 11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
15. சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். (இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)
16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
17. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.
[27/06, 17:38] +91 99449 43595: 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*பிரியாணி இலை பயன்கள் (Bay Leaf Uses)*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*1. செரிமானத்துக்கு*
பிரியாணி இலை பயன்கள் (bay leaf uses): பெருங்குடலிலும் வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தன்மை பட்டை இலைகளில் உள்ளது.
சில வகை உணவுகள் சுலபமாகச் செரிமானம் ஆகாது. அவற்றின் செரிமானத்திற்குப் பட்டை இலையில் உள்ள enzymes எனும் மூலப் புரதப்பொருள் உதவுகிறது.
*2. இதயத்திற்கு*
பிரிஞ்சி இலை பயன்கள் (bay leaf uses): பட்டை இலைகளில் உள்ள caffeic acid என்ற அமிலமும் rutin என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவுறச் செய்கின்றன.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்புச்சத்தை நீக்கவும் அவை உதவும்.
*3. நீரிழிவு நோய் இருப்போருக்கு*
பிரியாணி இலை பயன்கள் (bay leaf uses): பட்டை இலைகள் உடலில் சுரக்கும் இன்சுலினை மேம்படுத்துகின்றன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.
*4. மன அழுத்தத்தைக் குறைக்க*
பிரிஞ்சி இலை பயன்கள் (bay leaf uses): பட்டை இலைகளில் உள்ள linalool எனும் இரசாயனம் மன அழுத்தத்தின் அறிகுறிகளை எதிர்க்க உதவுகிறது.
*5. வீக்கத்தைக் குறைக்க*
பிரியாணி இலை பயன்கள் (bay leaf uses): வீக்கத்தைக் குறைப்பது பே இலைகளின் முக்கிய பயன்களில் ஒன்று. மூட்டுவாதம் ஏற்படும் சாத்தியத்தை இது குறைக்கிறது.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
[27/06, 21:31] +91 94865 13446: 90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்
இந்த பதிவை எவ்வளவு குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
*நன்றி*
- பகிர்வு
[28/06, 04:38] +91 98658 64884: 😇இந்த ஜூலை மாத காலண்டரை கவனமாகப் பாருங்கள்.உங்கள் வாழ்க்கையில் ஒரேயொரு முறை மட்டுமே இந்த அதிசயத்தைப் பார்க்க முடியும்.01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 1415 16 17 18 19 20 2122 23 24 25 26 27 28 29 30 31இந்த ஜூலை மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை, 5 திங்கட்கிழமை, 5 செவ்வாய் கிழமை வருகிறது. 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் இப்படி நடக்குமாம்.இதை சீனர்கள பை நிறைய பணம் ("pocket full of money.") என்பார்கள்.இந்த செய்தியை 4 நாட்களுக்குள் அனைவருக்கும் பகிருங்கள் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.அப்படி நீங்கள் இதை பகிரவில்லை என்றால் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இழப்பீர்கள் என்று சீன சாஸ்திரம் கூறுகிறது.
[28/06, 06:46] +91 90431 99315: சிறுநீரக கற்கள் பித்த பைகற்கள் கரைய நீர் அடைப்பு சதை அடைப்பு கல்லடைப்பு தீர மருத்துவம் கீழாநெல்லி தொட்டால் சிலிங்கி இலை சோற்றுகற்றாழை உள் மடல் இதை 7 முறை நீரில் அலசி எடுக்கவும் முள்ளங்கி விதை சிறு கண் பீளை சிறு நெரிஞ்சில் பெருநெரிஞ்சில் வெள்ளரி விதைபூனை மீசை திரிபலா மூக்கரட்டை துத்தி வேர் கரும்சீரகம்மாவிலங்கபட்டை நீர் முள்ளி இலை வாகை மரபூசரக்கொன்றை புளிபூ சுரக்காய் கொடி சோம்புமண தக்காளி விதை இவைகள் வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 600 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைத்து 150 மில்லியாகவற் ற வைத்து வடிகட்டி அதில் வெங்கார பற்பம் நன்டு கல் பற்பம் வெடி உப்பு பற்பம் ஒவ்வொன்றும் அனர கிராம் அளவு கலந்து காலை மாலை உணவுக்கு முன் 15 நாள் குடிக்க பித்த பைகற்கள் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும் இதே மருந்தை சிறுநீரக பாதிப்பு யூரியா கிரியேடின் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 48 தினம் சாப்பிட சரியாகும் 48 தினம் சாப்பிட்டு பரிசோதனை செய்து தேவைபடின் தொடர்ந்து சாப்பிடலாம் உணவில் உப்புபுளி மது மாமி ஷம் என்னை உணவுகள் உடல் உறவு நீக்கவும் மரு, ரமேஷ் சிவன் 90431993 15 கும்மிடிப்பூண்டி