Tuesday, August 15, 2017

*ஆண்மைக் குறைவு முதல் நரம்பு தளர்ச்சி வரை, பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்!!!*

0⃣1⃣➖0⃣5⃣➖2⃣0⃣1⃣7⃣

🔰 *சித்திரை மாதம் 18 , திங்கள் கிழமை​* 🔰

🔔 *SRI செய்தி 24/7 குழுமம்​* 🔔

💢 *ஆண்மைக் குறைவு முதல் நரம்பு தளர்ச்சி வரை, பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்!!!* 💢

கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதை போல், இன்று நாம் நமது எளிய பாரம்பரிய வைத்தியங்களை மறந்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை நாடி உலங்கெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் குணப்படுத்த மிக கடினம் என எண்ணும் சில உடல்நல கோளாறுகளுக்கு கூட எளிய பாட்டி வைத்தியத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம்.

பெரும் உடல்நல கோளாறுகள் மட்டுமின்றி, உங்கள் உடல்நலம் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கூட சில பாட்டி வைத்தியங்கள் உங்களுக்கு பயனளிக்கின்றன. ஆங்கில மருத்துவத்தை போல இது பக்க விளைவுகள் தராது, மீண்டும் மீண்டும் குடைச்சல் கொடுக்காது. மற்றும் இதன் தீர்வு மிகவும் சீரானதாக இருக்கும்.

நாம் மறந்து போன பொன்னான பயன் தரும் பாட்டி வைத்தியத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவது அவசியம். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் உங்களுக்கோ அல்லது உங்களது வீட்டில் உள்ளபவர்களுக்கோ ஏதேனும் உடல்நல கோளாறு ஏற்படும் போது இவை உங்களுக்கு பெருமளவில் உதவும்…

ஆண்மை பெருக
தேங்காய் அரைத்து அதன் சார் பிழிந்து, தேங்காய் பால் எடுத்து தினமும் பருகி வந்தால் ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

மாதவிடாய் சோர்வு
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

பித்தம் நீங்க
விளாம்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குணப்படுத்தும்.

தொண்டை கரகரப்பு குணமாக
சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொண்டை வலி சரியாக
உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

இருமல் குணமாக
வெண்டைக்காயை சூப் வைத்துக் குடித்து வந்தால், இருமல் உடனே குணமாகும்.

கொழுப்பை குறைக்க
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

காது வலி
எலுமிச்சை பழத்தின் சாரை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

குடல் புண்
குடல்புண் குண மாகவும், வயிற்றுப்புழுக்களை அழிக்கவும் அகத்திகீரை நல்ல வகையில் பயனைளிக்கும்.

நுரையீரல் ஆரோக்கியம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

நரைமுடி கருமையாக
பசுநெய் மற்றும் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

நரம்பு தளர்ச்சி குணமாக
தினந்தோறும் சில அத்திபழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

*SRI குழுமத்தில் பயணிப்போம்*

*தீராத வயிற்றுவலியை தீர்க்கும் அருமருந்து

0⃣1⃣➖0⃣5⃣➖2⃣0⃣1⃣7⃣

🔰 *சித்திரை மாதம் 18 , திங்கள் கிழமை​* 🔰

🔔 *SRI செய்தி 24/7 குழுமம்​* 🔔

💢 *தீராத வயிற்றுவலியை தீர்க்கும் அருமருந்து !!!* 💢

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாகும்.
ஓமம், மிளகு வகை, 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன், 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும், 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

பசியைத் தூண்டி, சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி குடிக்கலாம்.

குடலிரைச்சல், இரைப்பை, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திரவம் என்ற மாபெரும் மருந்து, ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது.

குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திரவம்தான். ஓமத்திரவம் வீட்டில் இருந்தால், சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய் ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் காய்ச்சல் ஓடி விடும்.

தினமும், அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது.

வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.

மூட்டு வலிக்கு ஓம எண்ணெய்யை தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.

ஓமப்பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன், இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும், நன்கு வெந்தவுடன் அப்படியே மூடிவைத்து விட வேண்டும்.

பின்னர், அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.

*SRI குழுமத்தில் பயணிப்போம்*

*ஆண்மை பெருகி குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை-நெருஞ்சி!!!*

0⃣1⃣➖0⃣5⃣➖2⃣0⃣1⃣7⃣

🔰 *சித்திரை மாதம் 18 , திங்கள் கிழமை​* 🔰

🔔 *SRI செய்தி 24/7 குழுமம்​* 🔔

💢 *ஆண்மை பெருகி குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை-நெருஞ்சி!!!* 💢

ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன.

நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர்.

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.

நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

விவசாயிகளுக்கும் பாதங்களுக்கும் எதிரியான நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும். சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும்.

ரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.

கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

*SRI குழுமத்தில் பயணிப்போம்*

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:*

0⃣1⃣➖0⃣5⃣➖2⃣0⃣1⃣7⃣

🔰 *சித்திரை மாதம் 18 , திங்கள் கிழமை​* 🔰

🔔 *SRI செய்தி 24/7 குழுமம்​* 🔔

*முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்:*

*1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)*

*2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்*.

*3. அமரும்போது வளையாதீர்கள்*.

*4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்*.

*5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்*.

*6. சுருண்டு படுக்காதீர்கள்*.

*7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்*.

*8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.*

*9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்*.

*10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்*.

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*

*SRI குழுமத்தில் பயணிப்போம்*

*மூலநோயைத் துரத்தும் துத்திக் கீரை !!!*

0⃣1⃣➖0⃣5⃣➖2⃣0⃣1⃣7⃣

🔰 *சித்திரை மாதம் 18 , திங்கள் கிழமை​* 🔰

🔔 *SRI செய்தி 24/7 குழுமம்​* 🔔

💢 *மூலநோயைத் துரத்தும் துத்திக் கீரை !!!* 💢

பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ்
சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை
எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியீற் றுத்தியிலை யை

மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் முன்னோர்கள் துத்திக் கிரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.
இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.

துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.
ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும் சமயம் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும்.

துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.
வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு ‘அதிபலா’ என்ற வேறு பெயரும் உண்டு.

இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி சேர்க்கப்படுகிறது.

வட மாநிலத்தில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் துத்தி இலையின் பொடியை கோதுமை மாவுடன் கலந்து ரொட்டியாகத் தயாரித்துச் சாப்பிடுகின்றனர். கருப்பை சார்ந்த நோய்கள் தீர இவ்வாறு தயாரித்துச் சாப்பிடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.

பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும்.
மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் விடுதலை அடையலாம்.

*துத்திக் கீரை கொண்டு தயாரிக்கக்கூடிய உணவுகள்…*

துத்திக் கீரை சூப்
துத்திக் கீரை – 100 கிராம்
(பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 10 (பொடிதாக
அரிந்து கொள்ளவும்)
பூண்டு – 5 பல்
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை: – ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு, அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், துத்திக் கீரை மற்றும் பூண்டை அதில் இட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் அரை லிட்டர் நீர் கலந்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பின் மிளகு, சீரகத்தைப் பொடி செய்து நெய்யில் தாளித்துக் கலந்து, உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்துப் பரிமாறவும்.
இந்த சூப் 100 மி.லி. சாப்பிட, உடல் சூடு குறையும், உடல் வன்மை உண்டாகும், மூலச்சூடு குறையும். மூலத்தில் ஏற்பட்டுள்ள வலியும் நீங்கும், மலசிக்கல் தீரும்.

*துத்திக் கீரை கூட்டு*

துத்திக் கீரை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
வேகவைத்த துவரம்பருப்பு – 3 மேஜைக்கரண்டி
மிளகு தூள் – 1/2தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை: துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடிதாக அரிந்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சீரகம் தாளித்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை இட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும். கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இந்தக் கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும், மூலத்தின் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.

மூல நோயால் துன்பப்படு பவர்கள் இந்தக் கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.

*SRI குழுமத்தில் பயணிப்போம்*

*தைராய்டு* சுரப்பிகள் வீக்கம்

*தைராய்டு* சுரப்பிகள் வீக்கம்
https://www.facebook.com/aurafoodsbiz-1784310268498109/

உடம்பிற்கு தேவையான அளவு *அயோடின்* இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் தைராய்டு சுரப்பிகள் மங்கிப்போய் கட்டிகள் உருவாகும்.
*சிறு வெங்காயம்,*
*இஞ்சி,*
*கொத்தமல்லி,*
*மிளகு,*
*இலவங்கம்*
போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வரவும்.
*அயோடின் இயற்கையாகவே* உடலிற்கு கிடைக்கும்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
ஆரா மரச்செக்கு எண்ணெய் 9884122255

*♨சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை*

*♨சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை*

                   *News 1♨*

*ஒன்று :* கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

*இரண்டு :* எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

*மூன்று :* ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

*நான்கு :* பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்த பின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்லை என்றால், தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனை விடவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம். மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம்!

*தேன் மகிமை :* உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.

நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம். தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பிக்கலாம். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும்.

ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும். சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்து ரெடி. அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் பருகி வர நல்ல பலன் தெரியும். உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல்வாகு சீராகும்.

*♨மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன?*

*♨மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன?*
மாரடைப்பு ஏற்பட்ட 50 சதவீத நோயாளிகள் நெஞ்சுவலி என்று கூற மறுக்கிறார்கள். வாய்வு கோளாறு, எரிச்சல், வாந்தி, நெஞ்சு அழுத்தம், வியர்த்து கொட்டுதல் போன்றவை மாரடைப்பு நோயின் அறிகுறிகள் என்று உணராமல் செரிமான கோளாறு என நினைத்துக்கொண்டு காலம் தாழ்த்தி டாக்டரை அணுகி வருகின்றனர். மாரடைப்பு வந்த பின்னர் அதற்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்வது மிக அவசியம். மாரடைப்பை இ.சி.ஜி., எக்கோ ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

மாரடைப்புக்கு இரு சிகிச்சை முறைகள் உள்ளன. முதல் சிகிச்சை முறையில், மாரடைப்பிற்கு காரணமான ரத்தக்குழாய் அடைப்பு சக்தி வாய்ந்த மருந்து மூலம் கரைக்கப்படும். சில நேரங்களில் மருந்து கொடுத்த பின்னரும் மாரடைப்பு குறையவில்லை என்றால், 2-வது சிகிச்சையாக ஆஞ்சியோ மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இதில் இரண்டாவது சிகிச்சை முறை, முதல் சிகிச்சை முறையை விட சிறந்தது. இந்த சிகிச்சை 24 மணி நேர கேத் லேப் வசதி மற்றும் நுண்துளை இதய மருத்துவர் இருக்கும் ஆஸ்பத்திரியில் தான் ஆஞ்சியோ மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்ய முடியும்.

வயதானவர்களின் நோயாக கருதிய மாரடைப்பு, தற்போது வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய நோயாக விளங்குகிறது. உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்பு நோய் ஏற்பட வழிவகுக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்க வாழ்க்கை முறையில் சீர்திருத்தம், உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

நம் பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடித்தல், பசித்த பின் உண்ணுதல், துரித வகை உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சிக்கு முன்னுரிமை, 8 மணி நேர தூக்கம், புகை பிடித்தல் மற்றும் மது பழக்கங்களை தவிர்த்தல் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வதின் மூலம் மாரடைப்பு நோயை தவிர்க்கலாம்.

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்
கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.

தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான் !!!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...