Saturday, July 8, 2017

கறிவேப்பிலை


தென்னிந்திய மற்றும் இலங்கை சமையலில் கறிவேப்பிலைக்கு மிக முக்கிய இடமுண்டு.

கறிவேப்பிலையை பலரும் வாசனைக்காகப் பயன்படுத்துவது என்று நினைத்துக் கொண்டு, தூற எறிந்துவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் கறிவேப்பிலையில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இது வெறுமனே உடலைப் பேணுவதற்காக மட்டுமல்லாது, அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக நறுமணமும் சத்துக்களும் கொண்ட கறிவேப்பிலை எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன.

கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டோமேயானால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு, ரத்தம் சுத்திகரிக்கப்பபடுகிறது.
இளநரையைப் போக்குவதற்கு கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும். பார்வைக் கோளாறுகள் நீங்கி, கண்கள் பிரகாசமாகத் தெரியும்.
தலைமுடியைக் கருமையாக்கும். வளர்ச்சியைத் தூண்டும்.
தொடர்ந்து ஒரு மாதம் வரை காலையும் மாலையும் கறிவேப்பிலையைச் சாப்பிட்ட வர, நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.
வெண்குஷ்டம், மூலம், தோல் வியாதிகளை போக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு.

கறிவேப்பிலை ஜூஸ்
ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாகக் கழுவி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துச் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். அதோடு, சில பேரிச்சம்பழங்களையும் சேர்த்து ஊற வைத்து அருந்தலாம்.
கறிவேப்பிலை சாறை வெறுமனே குடிப்பதைக் காட்டிலும் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். டீ, காபிக்கு பதிலாக, காலையில் அருந்துவதற்கான மிகச் சிற்ந்த பானம் இது.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

sundar Raja:
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

செம்பு பாத்திரம்
நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார், சித்த மருத்துவர் காசி பிச்சை.

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி...விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.
செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.

செம்பு பாத்திரம்
செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.
நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
நீரைக் குடிக்கும் முறை:
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு:
முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.

வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம். புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.

வாழ்கவளமுடன். Water can any wanted call me

பிரணாயாமம் செய்முறை:--

பிரணாயாமம் செய்முறை:--

பிரணாயாயம் எனும் மூச்சுப் பயிற்சி பயில்பவர்,
பத்மாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை
இடது கை மோதிர விரலால் மூடி, இடது
நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை
உள்ளிழுக்க வேண்டும். இதனை பூரகம் என்பர்.

அவ்வாறு உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம் நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம்
நிறுத்த வேண்டும். இதற்கு கும்பகம் என்பர்.

பின்னர் இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை மூடிக் கொண்டு, வலது நாசித்
துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே
சீராகவும் வெளியிடுதல் வேண்டும். இதற்கு
ரோசகம் என்பர்.

பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை
உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், வலது நாசி வழியே சீராக மூச்சினை வெளியிட
வேண்டும். கும்பகம்.

"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம்"

"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"

"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு தீர்வு தரும் கால்சியம் நிறைந்த பிரண்டை

முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு தீர்வு தரும் கால்சியம் நிறைந்த பிரண்டை

S.SETHU RAMAN.B.Sc

முழங்கால் வலி,மூட்டு வலி நீங்க பிரண்டை துவையல் செய்து சாப்பிடுங்கள்..கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை,  தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் சோர்வும் இருக்காது.

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான். எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை. சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.

பிரண்டை உப்பை சுமார் 300 மில்லி கிராம் தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள்  வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது. சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை  உடனடியாக உணரலாம்.

பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால்  வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து. பிரண்டையின் மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும்.

S.SETHU RAMAN.B.Sc

#பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா? அப்படி என்னதான் அதுல இருக்கு?

#பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா?
அப்படி என்னதான் அதுல இருக்கு?

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஏன் என்று தெரியுமா?

ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா

#மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

#பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

#கர்ப்பம் :

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

#மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

#குடல் கோளாறு:

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

#பற்சொத்தை :

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு *சாப்பிட கூடாதவை*

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு

*சாப்பிட கூடாதவை*

நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திரட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருளைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்

*அளவோடு சாப்பிடலாம்*

அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்திரிபருப்பு
மக்காச்சோளம்

*அளவில்லாமல் சாப்பிடலாம்*

கீரை
தக்காளி
காராமணி
வாழைத்தண்டு
வாழைப்பூ
பாகற்காய்
சுரைக்காய்
பீர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி

முடிந்த அளவு பகிருங்கள்.....!!!

"பழைய சோறு".

👅👌🙌👍🍚🥛🌶👳👨‍🍳👩‍🍳
”ஆற்றுநீர் வாதம் போக்கும்;
அருவி நீர் பித்தம்
போக்கும்;
சோற்று நீர் இரண்டையும்
போக்கும்“

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து
நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது
வாதம்,
பித்தம்,
கபம்
என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்
நோய்களைப் போக்கும் வழிமுறைகளை
இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும்,
அருவி நீரிலும்
உயர்ந்த தாதுப் பொருட்களும்,
மூலிகைச் சத்துக்களும், நிறைந்து
காணப்படும்.

ஏனெனில்,
ஆற்றுப்
படுகையிலும்,
அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும்
மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக
உள்ளது.
வாதநோய் தொடர்பாக
நரம்புக்கோளாறுகளும்,

பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.
இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும்,
அருவி
நீரும் பயன்படுகின்றன. வாதம்,
பித்தம்
இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.
இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும்
பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து
ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள்
சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்க
ள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத்
தான் இருக்க வேண்டும்".....!!!

அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து
நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு
பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்…..

இந்த ஆராய்ச்சி முடிவுகள்
வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?..
. என்று அமெரிக்கர்கள் இந்திய
நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி
கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால்

நாம் தான் இதை திண்ணால்
சளி பிடிக்கும்,
உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
"பழையதை" பழித்து வருகிறோம்.

அது பெரிய தவறு…!!

சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான
அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6
முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தயார்………..!!

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர்
கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது
உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும்
கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு
பாருங்கள்….!!

ஆகா….!!!

இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு
முறையை வாரத்தில் மூன்று நாட்கள்
மட்டுமாவது கடைபிடியுங்கள்.

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள்
நம் முன்னோர்கள்……..!!

இனியாவது குப்பை உணவான பர்கரையும்,
பீட்சாவையும், புரோட்டவையும் தேடி
அலைவதை நிறுத்துவோம்...

உடல் நலத்தை
பேணுவோம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...