Monday, October 1, 2018

கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு*

*கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு*

"என் மகன் வயது 9 , பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்க முடியவில்லை..தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது பதட்டத்துடன் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் . அங்கே என் பிள்ளையை பரிசோதித்த மருத்துவர் இரண்டு கண்களிலும் -2 , -1.5 பவர் குறைபாடு உள்ளது என்றும் கண் கண்ணாடி கண்டிப்பாக போட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு வேறு வழிகள் இல்லையா என்று நான் கேட்டதற்கு மருத்துவர் இப்போதைக்கு இதற்கு கண்ணாடி மட்டும்தான் தீர்வு ..18 வயதிற்குப் பின் லேசர் அறுவைச்சிகிச்சைக்கு முயற்சிக்கலாம் என்றும் சொன்னார் . நான் இதை ஏற்க மனமில்லாமல் ஏதாவது மாற்று வழிகள் இருக்குமா என்று தேட ஆரம்பித்தேன் .
கண் பயிற்சியிலேயே பார்வைக் குறையை போக்குவதாக என் நண்பர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் விசாரித்த பொழுது ஒரு வாரம் பாண்டிச்சேரியிலேயே தங்கி பயிற்சி பெற வேண்டும் என்று கூறினர்
அது எனக்கு சாத்தியப் படாத நிலையில் சென்னையில் ஐந்து நாள் கண் பயிற்சிக்கு  அடையாறில் ரூ 4500 கட்டணம் என்றும்
கோவையில் மற்றொரு தனியார் மையத்தில் ரூ 2500 கட்டணம் என்ற தகவல்கள் ,பொருளாதாரத்தில் நடுத்தர நிலையிலுள்ள எனக்குப் பொருந்தவில்லை
இந்நிலையில்
என் நண்பர்
சென்னை அம்பத்தூர் அருகிலுள்ள அயப்பாக்கத்தில் செயல் படும்
"அல் மதீனா வெல்னெஸ் ஹோம் "
பற்றி கூறினார் . எளிய கண் பயிற்சிகள் மூலம் இந்த குறைபாட்டினை நிரந்தரமாக சரி செய்ய முடியும் என்பதை அங்கு சென்ற பின் உணர்ந்து கொண்டேன் .என் மகன் சேர்ந்து ஒரு வார கண் பயிற்சியிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய வந்தது . மருத்துவமனை சென்று கண் பரிசோதனை செய்ததில் -2இருந்த வலது கண் பவர் -1.5 ஆகவும் -1.5 இருந்த இடது கண் பவர் -1.0 வாகவும் இருந்தது . மேலும் பயிற்சி செய்ய செய்ய என் செல்ல மகனின் குறைபாடு முழுக்க நீங்கி விடும் என்று 100% கண்கூடாக தெரிகிறது! நிறைய பிள்ளைகள் முழுப் பயிற்சியின் முடிவில் கண்ணாடிகள் இல்லாமல் படிக்க முடிந்ததையும்  தெளிவாக பார்க்க முடிந்ததையும் நேரில் கண்டு வியந்தேன் .

*இந்த மையத்தில் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று நடத்தப் படும் "கண்மணி "எனும் கேம்ப்பில் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை
எல்லா நோய்களுக்கும் இலவசமாக அக்குபங்சர் மருத்துவ ஆலோசனையும் வழங்குகின்றார்கள்*


இந்த நல்ல செய்தியை அனைவரும்  பகிரலாமே!

அவர்கள் முகவரி:
அல் மதீனா வெல்னெஸ் ஹோம்
1,முதல் மாடி
அயப்பாக்கம் மெயின் ரோடு
லாலா கடை அருகில்
MGR புரம்
அயப்பாக்கம்
சென்னை-600058

தொடர்பு எண்கள்
9092786666
8220789999

💐💐💐💐💐💐💐

காலில் பித்தவெடிப்பா?

காலில் பித்தவெடிப்பா?

கவலையை விடுங்கள்.
நம்மைத் தாங்கும் பாதத்தில் பித்தவெடிப்பு மறைய வேண்டுமா? தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

கொழுப்புக்களை எளிதில் கரைத்து, கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபட

கொழுப்புக்களை எளிதில் கரைத்து, கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபட...

உடலிலேயே கல்லீரல் தான் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடும் உறுப்பாகும். இந்த கல்லீரலில் ஏதேனும் காயங்கள் அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டால், அதன் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். ஒருவரது கல்லீரலின் சீரான இயக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அந்த நபருக்கு கல்லீரல் நோய் உள்ளது என்று அர்த்தம்.

உடலில் உள்ள கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு மற்றும் இரும்புச்சத்தை வளர்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்து, கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இது புரோட்டீன் உற்பத்தி மற்றும் இரத்த உறைவு காரணிகளின் உற்பத்தியிலும் ஈடுபடுகிறது.

ஒருவருக்கு கல்லீரல் நோய்கள் இருந்தால், சோர்வு, உடல் பலவீனம், எடை குறைவு, குமட்டல், வாந்தி, மஞ்சள் நிற சருமம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

கல்லீரலில் உள்ள 75%-த்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், கல்லீரலின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக கல்லீரல் சேதமடைந்த திசுக்களை எளிதில் மீண்டும் உருவாக்கும். ஆனால் 75 சதவீதத்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

பொதுவாக சில வகை கல்லீரல் நோய்களை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்துவிடலாம். இங்கு கல்லீரல் நோய்களை எளிதில் சரிசெய்ய உதவும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

#ஆப்பிள்_சீடர்_வினிகர்
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை என குடித்து வர, கொழுப்புக்கள் எளிதில் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

#டேன்டேலியன்_வேர்_டீ
இந்த டீ ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவும். ஆகவே கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் டேன்டேலியன் வேர் பொடியை வாங்கி, தினமும் 2 வேளை டீ தயாரித்து குடியுங்கள். வேண்டுமானால் டேன்டேலியன் வேரை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

#நெல்லிக்காய்
நெல்லியில் உள்ள வைட்டமின் சி, கல்லீரல் செயல்பாட்டை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவும். ஆய்வுகள் நெல்லிக்காயில் கல்லீரல் செயல்பாட்டைப் பாதுகாக்கும் உட்பொருட்கள் இருப்பதாக நிரூபித்துள்ளன. எனவே கல்லீரல் நோய்களில் இருந்து விடுபட தினமும் 4-5 நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

#அதிமதுரம்
அதிமதுரப் பொடியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, தினமும் 1-2 முறை குடித்து வர, கொழுப்பு கல்லீரல் பிரச்சனை நீங்கும். இந்த வழியானது ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் ஒன்றாகும்.

#மஞ்சள்
மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளன. இது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், ஹிபடைடிஸ் பி மற்றும் சியை உண்டாக்கும் வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. எனவே அன்றாட சமையலில் மஞ்சளை சேர்ப்பதோடு, தினமும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதாலும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

#ஆளி_விதை
கல்லீரல் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதால், அதில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருக்கும். இந்த அழுக்குகளை வெளியேற்றி, கல்லீரலின் இயக்கத்தை ஆரோக்கியமானதாக்க ஆளி விதையை வறுத்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஸ்நாக்ஸ் நேரத்தில் அதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள்.

#பப்பாளி
2 டீஸ்பூன் பப்பாளி ஜூஸ் உடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை குடித்து வர, கல்லீரல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

#பசலைக்கீரை_மற்றும்_கேரட்
1/2 டம்ளர் பசலைக்கீரை ஜூஸ் உடன் 1/2 டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்து கலந்து, தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு டம்ளர் என குடித்து வருவதால், கல்லீரல் அழற்சியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

#அவகேடோ
அவகேடோ பழ மில்க் ஷேக்கை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள க்ளூட்டதியோன், கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி சுத்தமாக இருக்கும்.

#வால்நட்ஸ்
வால்நட்ஸில் இருக்கும் உட்பொருட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கல்லீரல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், ஸ்நாக்ஸ் நேரத்தில் சிறிது வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

#ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் பெக்டின், கல்லீரல் மற்றும் செரிமான பாதைகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, அப்பகுதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

#பச்சை_இலைக்_காய்கறிகள்
கீரை, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரலில் பித்தநீரின் உற்பத்தியைத் தூண்டி, கொழுப்புக்களை எளிதில் கரைக்க உதவி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

#மதுவைத்_தவிர்க்கவும்
கல்லீரல் ஆரோக்கியமாக நோய்களின்றி இருக்க வேண்டுமானால், முதலில் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மதுவில் உள்ள உட்பொருட்களே கல்லீரலுக்கு உலை வைத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

#ப்ளூரைடு_இல்லா_நீர்
தினமும் போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். அதுவும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் ப்ளூரைடு இல்லாத நீரை குடிக்க வேண்டும். இதனால் கல்லீரலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் தவறாமல் 10-12 டம்ளர் நீரைப் பருகுங்கள்.

#உடற்பயிற்சி
ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உணவு செரிமானம் முறையாக நடைபெற்று, உடலில் இருந்து கொழுப்புக்கள் சரியாக வெளியேற்றப்படும். மேலும் உடற்பயிற்சியை செய்வதால், டாக்ஸின்களானது வியர்வையின் வழியே வெளியேறி, கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்குவதைத் தடுக்கும். எனவே தினமும் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

#க்ரீன்_டீ
க்ரீன் டீயில் உள்ள அதிகளவிலான கேட்டசின்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும். எனவே கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் 3-4 கப் க்ரீன் டீயைக் குடிக்க நல்ல பலனை விரைவில் காணலாம்.

🚶🏽‍♂HAROON SB

Removing Gallbladder stones - பித்தப்பை கல் நீங்க...

Removing Gallbladder stones -
பித்தப்பை கல் நீங்க...

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

இந்த  அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும்.

இவ்விதம் ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் வரை குடிக்கவும்.

கீழா நெல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

அறுவை சிகிச்சை மூலம் பித்த பையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள்.

இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது ?
    
உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு ஆகும்.  இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும்.

இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.

இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை ஆகும்

நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.

அவையாவது கொழுப்பு,
பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்படியான அற்புதமான
பணியை செய்கின்றது.

பித்த பை கல் உருவாவதற்கு பல வகையான காரணங்கள் உண்டு.
அவற்றை கீழே பாப்போம்.

1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.

2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.

3) ஈஸ்ட்ரோஜென்
(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும்.

கர்ப்பமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.

4) பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.

5) போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.

6)  நீரிழிவு: நீரழிவை தடுப்பதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.

இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.

நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.

இந்த நோயின் அறிகுறிகள்:

1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.

2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.

3) வாந்தி உண்டாகும்.

4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.

மருத்துவம்:

இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

🚶🏽‍♂HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...