Thursday, December 12, 2019

சர்க்கரைநோயை_குணப்படுத்த முடியுமா?? முடியுமே!!

#சர்க்கரை_நோயை_குணப்படுத்த #முடியுமா……❓❓❗❗❗

நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.

சுமார் 6 மணி நேரம் எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் உங்கள் இரத்தை பரிசோதனை செய்து அதில் 120 என்கிற அளவுக்கு மேல்  குளுகோஸ் இருந்தாலும், உணவு உண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப்  பிறகு 170 க்கு மேல் இரத்தத்தில் சுகர் இருந்தாலும் நீங்கள்  சர்க்கரை நோயாளியாக கருத்தப்படுகின்றீர்கள்.  அன்றிலிருந்து நீங்கள் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ள அறிவுறுத்தப் படுகி்ன்றீர்கள். அடிப்படையில் இந்த ரீடிங் அளவே தவறானது. அது நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியது.

சர்க்கரை நோய்க்காக சரியாக, முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் பலவிதமான பயங்கர வியாதிகள்  வருமென்று பயமுறுத்தப்படுகின்றீர்கள்.

நீங்கள் எந்த வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அது உங்கள் இரத்ததில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை மட்டுமே குறைகின்றது.  பொதுவாக அனைத்து மருத்துவங்களும் நோயாளியை திருப்திபடுத்துவதற்காக  இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டும் குறைத்தால் போதுமென்று நினைக்கின்றன.
அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட  நேரிடுகிறது.

இந்நோயைப் பற்றி ஓரளவு தெரிந்த படித்த சிலபேர்கூட சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும், அதை குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதில் பல விஷயங்களை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள்.

👉உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டால் பிறகு ஏன் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள்.❗❗❗

👉ஒரு நோயை கட்டுப்படுத்த முடியுமென்றால் பிறகு அதை குணப்படுத்தவும் முடியும் அல்லவா❓

மருந்து சாப்பிடாவிட்டால் இந்த சர்க்கரை நோயால் பல வியாதிகள் வந்துவிடும் என்று டாக்டர்களின் அட்வைஸ்படி (பயமுறுத்தலின்படி) சுகர் வந்த நாள்முதல் தினந்தோறும் தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள். 

பிற்காலத்தில் எந்தெந்த வியாதிகள் வந்துவிடக்கூடாது என்று தவறாமல் மருந்து மாத்திரைகள்  எடுத்துக்கொண்டீர்களோ, பிறகு சுமார் 4,  5 வருடங்களில் அந்த வியாதிகள் உங்களை சூழ்ந்துள்ளது  என்பதை அப்போது உணர ஆரம்பிக்கின்றீர்கள். 

👉பொதுவாக அந்த நேரத்தில்…… 

வாயுக்கோளாறு, 

அஜீரனம், 

பசியின்மை, 

மலச்சிக்கல், 

உடல் அசதி, 

பாத எரிச்சல், 

தோல்களில்  அரிப்பு, 

பார்வை குறைபாடு, 

கைக்கால்கள் மரத்துப்போதல், 

மூட்டுவலி, 

கொலஸ்டிரால், 

BP, 

சிறுநீரக கோளாறு 

போன்ற பல  வியாதிகள்  உங்களுடன் இருக்கும். நீண்ட நாட்கள் பலவிதமான மருந்துகள் உட்கொண்ட  பின்னரும் அந்த மருந்துகள் உங்கள் நோயை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்று அப்போது ஓரளவு உங்களுக்கு புரிய ஆரம்பிக்கின்றது. வேறு வழி தெரியாமல் திரும்பவும் அதே மருந்துகளை தான் தொடர்ந்து சாப்பிடுகின்றீர்கள்.

ஆரம்பத்தில் ஓரிரு மாத்திரைகள் எடுத்திருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின்  எண்ணிக்கையும், அளவும் கூடியிருக்கும். 

மருந்து மாத்திரைகள் மூலம் இரத்தத்தில் உள்ள  சர்க்கரையின் அளவை மட்டும்  குறைத்தது தான் இந்த நிலைமைக்கு காரணம். 

உங்கள் இரத்தத்தில் அதிகப்படியாக சேரும் குளுகோஸை தடுப்பதற்கான அடிப்படையான   காரணம் உங்கள் உடலிலிருந்து இன்னும் நீக்கப்பட வில்லை. அதானால் தான் தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. 

சரி எப்படி இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது, மருந்துகள் எடுக்கும்போது மட்டும் எப்படி சுகர் குறைகிறது, குறைந்த அந்த குளுகோஸ் எங்கே போகிறது❓

நீங்கள் உண்ணும் உணவுகளும் மற்றும் நீர்வகைகளும் சரியாகவும்,  முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஜீரணிக்கப்பட்டால்தான் அந்த உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்ஸ், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உடலில் சேர்ந்து உங்களுக்குத் தேவையான சக்தியை (Energy) கொடுக்கும். 

👉இந்த ஜீரணம் நாக்கில் ஆரம்பித்து…… 

வயிறு, 

மண்ணீரல், 

கணையம், 

சிறுகுடல், 

பித்தப்பை 

வழியாக முறையாக ஜீரணிக்கப்பட்டு  கல்லீரலில் முடிகிறது. நீங்கள் உண்ட உணவு ஒவ்வொரு உறுப்பிலும்  ஜீரணிக்கப்பட்டு அதிலிருந்து முறையாக  பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும்  இந்த சக்திதான் குளுகோஸ் என்னும் சர்க்கரை  ஆகும். 

இந்த குளுகோசை நமது உடல் பயன்படுத்த இன்சுலின் என்னும் ஹார்மோன் திரவம் தேவைக்கேற்ப உங்கள் கணையத்தில் சுரக்கப்பட
வேண்டும். 

அந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் பயன்படுத்த வைக்கிறது.,

நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை❓ 

காரணம் தெறியாது. காரணம் தெறியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா❓ 

தேவையான அளவு இன்சுலின்  சுரக்கவில்லை என்பது மட்டும் தெறிந்துவிட்டது.  

பி்ன்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...