Friday, August 12, 2016

மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும்.

மூங்கில் அரிசி
* * * * * * * * * * * *
*குழந்தை பேறு இல்லையா?* *கருவுறுதல் பிரச்சினையா?* இது வரை நீங்கள் பார்த்த வைத்திய முறைகள் எதுவுமே பலனளிக்கவில்லையா? கவலையே வேண்டாம்.
மிக எளிய முறையில் இதற்கு தீர்வு காண முடியும். மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும். முயற்சித்துப் பார்க்கலாமே...!
மூங்கில் அரிசியின் பயன்கள் :
மூங்கில் அரிசி *நார்ச்சத்து* மிக்கது.
*உடல் வலிமை* பெறும்.
*சர்க்கரை அளவை* குறைக்கும்.
எலும்பை உறுதியாக்கும்.
*நரம்புத் தளர்ச்சியை* சீர் செய்யும்.
மூங்கில் *60 வருடங்களுக்கு* ஒரு முறை மட்டுமே பூக்கும்.இந்த மூங்கில் பூக்கள் மூங்கில் நெல்லை விளைவிக்கின்றது.
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.
*மக்கட்பேறு* உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .
*மூங்கில் அரிசி கஞ்சிசெய்முறை :*
தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி – 150 கிராம்
நொய் அரிசி – 150 கிராம்,
சீரகம், ஓமம் –
தலா அரைத் தேக்கரண்டி,
பூண்டு – 6 பல்,
சுக்கு – ஒரு துண்டு,
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு
செய்முறை:
* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.
* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
* அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
மருத்துவப் பயன்:
மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்
தமிழகத்தில் கன்னியாகுமாரி, ஊட்டி, கூடலூர், பாபநாசம் போன்ற மலைப் பகுதிகளிலும், கேரளா, குஜராத் போன்ற பகுதிகளிலும் மூங்கில் அரிசி உணவு சிறப்பானது. 

பிரண்டை...!

பிரண்டை...!
தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக்க்ம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.
1.இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.
2.பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.
3.கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.
4.பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்,வாய்நாற்றம்,உதடு,நாக்கு வெடிப்பு தீரும்.
5.பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் தீரும்.
6.சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம்,தாது இழப்பு ஆகியவை தீரும்.
7.பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது வருத்தமான ஒன்று.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. 
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

இந்த டீயை தினமும் 3 கப் குடிச்சா.. இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்

இந்த டீயை தினமும் 3 கப் குடிச்சா.. இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்
உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? இருந்தாலும் எந்த பலனும் கிடைத்ததில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டீயை தினமும் 3 கப் குடித்து வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
ஏனெனில் இந்த டீயில், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான கலோரிகள் கரைவதோடு, இந்த டீயைக் குடித்தால் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
குறிப்பாக இந்த டீயை ஒரு நாளைக்கு மூன்று கப் குடித்து வந்தால், விரைவில் இடுப்பளவும், உடல் எடை குறைவதையும் நீங்கள் காண முடியும். சரி, இப்போது அந்த டீ குறித்து காண்போம்.
பட்டை
உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, கல்லீரல் அதிகப்படியான சர்க்கரையை கொழுப்புக்களாக மாற்றி உடலில் தங்க வைக்கும். ஆனால், பட்டை உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும். மேலும் பட்டை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிகப்படியான சர்க்கரையை உடைத்து, கொழுப்புக்களை கரைத்து உடலுக்கு ஆற்றலாக வழங்கும்.
பிரியாணி இலை
பிரியாணி இலை உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், வாய்வு தொல்லையைத் தடுக்கும். முக்கியமாக இந்த பிரியாணி இலையில் உள்ள லிமோனைன் என்னும் பொருள், பட்டையுடன் சேரும் போது, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 800 மிலி க்ரீன் டீ பவுடர்- 1 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 துண்டு பிரியாணி இலை – 3 தேன் – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் பட்டை, பிரியாணி இலை, க்ரீன் டீ பவுடர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
குடிக்கும் நேரங்கள்
முதலில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்ற இருமுறை நீங்கள் சாதாரணமாக டீ பருகும் நேரங்களில் பருகலாம்.
குறிப்பு
உங்கள் இடுப்பளவு மற்றும் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமானால், இந்த டீயை தினமும் குடிப்பதோடு, தவறாமல் உடற்பயிற்சியையும், டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.
எச்சரிக்கை
இந்த டீயை கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலோ பருகக்கூடாது. குழந்தைகளுக்கும், பெருங்குடல் பிரச்சனைகளைக் கொண்டவர்களும் இந்த டீயைக் குடிக்கக்கூடாது.

முடி நரைக்கு எண்ணை தயாரிக்கும் முறையை மீண்டும் பதிவிடவும்.

கேள்வி : முடி நரைக்கு எண்ணை தயாரிக்கும் முறையை மீண்டும் பதிவிடவும். நன்றி
    பதில் :
கரிசலாங்கன்னி இலை சாறு 1/2 லிட்டர், இதில் நாட்டு பசு நெய் 100 ml சேர்த்து ஒரு கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்துக்கொண்டு.
தினம் காலை, மதியம், மாலை உணவிற்கு முன் 1 ஸ்பூன் உமிழ் நீர் கலந்து சாப்பிட்டால் இளநரை மறையும்.

எது? உலக அதிசயம்.

எது? உலக அதிசயம்.
ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள்,
பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா?
ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.
ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரம்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் உள்ளது.
நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் உண்டு.

"உரை மருந்து" மறந்துடோமே

மறந்துடோமே !!!!!!!  "உரை மருந்து" :
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டி இடமோ இதை பத்தி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும்," ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை".இந்த அறிய பொக்கிஷத்தை: மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம்.நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை.ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருந்துவ முறை  பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறிஇருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
உரை மருந்து என்றால் என்ன? 
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து  குழந்தைகளுக்கு புகட்டுவது.
எவை எவை உரை மருந்தாகிறது?
1.வசம்பு
2.கடுக்காய்         
3.மாசிக்காய் 
4.சித்தரத்தை  
5.ஜாதிக்காய் 
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
எப்படி உபயோகப்படுத்துவது?
*முதலில் மேற்கூறப்பட்டுள்ள  மருத்துகளை ஒரு கப்  தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க  விடவும்.பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன்,தண்ணீரை  வடிகட்டி விட்டு மருத்துகளை நிழலில்  உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
                         
*பிறகு மருத்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
*ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
*உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு  புகட்ட வேண்டும்.
எப்போது கொடுக்க வேண்டும்?
*குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
*ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
*குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
*தற்போதைய நவீன மருத்துவமுறை குழந்தையின் ஆறு மாதம்  வரை  தண்ணீர் மற்றும்  தாய்பால் தவிர வேறு எதையும்  கொடுப்பதை ஏற்பதில்லை.அவ்வாறு  நினைக்கும் தாய்மார்கள்  ஆறு மாதத்திற்கு  பிறகு  இம்மருந்தை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
1.வசம்பு- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும், பசியை  தூண்டும்.           
2.கடுக்காய்- மலமிளக்கி.        
3.மாசிக்காய்- நாவில் வெள்ளை  படலத்தை  தவிர்க்கும்        
4.சித்தரத்தை-  சளி, இருமலுக்கு அரும்மருந்து         
5.ஜாதிக்காய்- நன்கு தூக்கம் வரும்     
6.சுக்கு- சளி, இருமலை போக்கும்
மஞ்சள்- கிருமிநாசினி.
குறிப்பு:
வசம்பை "பிள்ளை வளர்ப்பான்" என்று அழைப்பார்கள்.அதற்காக நிறைய பயன்படுத்துவது  நல்லதல்ல.எப்போதுமே வசம்பை அதிகமாக  பயன்படுத்த கூடாது.
வசம்பை  உபயோகபடுத்தும்  முறை:
                                             வசம்பை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணை இட்ட விளக்கிலோ, அல்லது கேஸ்  அடுப்பிலோ காட்டி அது கருப்பாக மாறிய பின் உரைகல்லில் உரைத்து பயன் படுத்த வேண்டும்

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?*

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?*
*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

வெரிகோஸிஸ் வெயின் கால்களில் நரம்பு புடைத்திர்க்கும் பாதிப்பிற்க்கு தீர்வு

வெரிகோஸிஸ் வெயின் கால்களில் நரம்பு புடைத்திர்க்கும் பாதிப்பிற்க்கு தீர்வு உண்டா
[13/06 14:32] Admin Organic: சூரிய காந்தி எண்ணை பயன்படுத்துவதை விட நல்லது.. நல்லெண்ணையும், கடலை எண்ணையும்.. 

பொறிப்பதற்கு கடலை எண்ணையையும், சமையலுக்கு நல்லெண்ணையையும் பயன்படுத்தினால்.. எந்த கொழுப்பும் நம்மை அண்டாது.. 
சூரிய காந்தி எண்ணையினால், வரும் கொழுப்பு 99% எனில், கடலை எண்ணையினால் வரும் கொழுப்பு வெறும் 5% தான்.. விழிப்புடன் இருப்போம்.. அடுத்த தலைமுறையை காப்போம்!

உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகள் உள்ளது...? வைத்தியம் கூறவும்...

உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகள் உள்ளது...?
வைத்தியம் கூறவும்...
  பதில் :
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நாட்டு பசு நெய் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் கொழுப்பு கட்டிகள் கரையும்.
இதனுடன், காலை உணவிற்கு முன் 1 பல் பூண்டு பச்சையாக மென்று உமிழ் நீர் கலந்து சாப்பிட்டு வரவும். இஞ்சி, சுக்கு உணவில் சேர்க்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

அரச இலை காய்ந்த  நிலையில் அதை பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்  அடுத்து பண்ணிர் ரோஜா காய வைத்து பவுடராக அரைத்து கொண்டு  இரண்டையும் தேன் உடன் ஒரு சிட்டிகை கலந்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இது போல் செய்து வந்த நம் முன்னோர்கள் அனுபவ உண்மை...
CLEAN YOUR KIDNEYS IN Rs. 5.00
OR EVEN LESS...!!!
Years are passing by and our kidneys are filtering
the blood by removing salt and any unwanted
bacteria entering our body.
With time salt accumulates in our kidney and it
needs to undergo cleaning treatment.
How are we going to do this....???
A Million Dollar Question...!
Here is an easy, cheap and simple way to do it...!
Just.....,
Take a bunch of coriander (DHANIYA Leaves)
and
wash it clean.
Cut it in small pieces and put it in a pot.
Pour clean water and boil it for ten minutes
and let it cool down.
Next filter it and pour it in a
clean bottle and keep it in refrigerator to cool....!!
Drink one glass everyday and you will notice all
salt and other accumulated impurities coming out
of your kidney while urination....!!!
You will be able to
notice the difference yourself.....!!!
DHANIYA/CORIANDER
is known as a best cleaning agent / treatment for kidneys and
the best part is it is natural...!!!!
Please share this information with others and keep
your kidneys clean:)
Dont just Read
👉Do forward to whom you care.👈👍
World Kidney Day..
Protect your  KIDNEYS...!!!
📢🔔🙏🙏🙏🙏🔔🔊

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...