Monday, July 23, 2018

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"* தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,

நாட்டு மருத்துவம் குழுவில் படித்தது.

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"*

தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,
"நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,
"புற்று நோய்" என்ற,
இந்த நூற்றாண்டில் மனித குலத்தை மிக பயப்படுத்தும் ஒரு வார்த்தை, அகராதியில் இருந்து நீக்கப்படும்!

ஓவராக தெரிகிறதா?
தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்!

ஐந்து வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்
எனது "ஒரு நாள் பயிற்சி வகுப்பில்" கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளும்(சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள்) அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து தேன்,எலுமிச்சை பானத்தை "உணவாகவும், மருந்தாகவும்"
பருகி வருவதோடு சர்க்கரை, இரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், கர்பப்பை கோளாறு, "மன அழுத்தம்", மற்றும்
அனைத்து விதமான "உடல் மற்றும் மனம்சார்ந்த" நோய்களிலிருந்து பூரணகுணம் கண்டு மருந்து மாத்திரை இல்லா பெறுவாழ்வு வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம்தான்!

இது பல ஆயிரம் ஆண்டுகளாக,
உடல் செல்களின் தேவையை புரிந்து கொண்டு,
உணவை தேடிப்பிடித்து சாப்பிட்டு,
நோயில்லா வாழ்வு வாழ்ந்து,
இயற்கை மரணம் அடைந்த மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு!

இதைப்பற்றிய தாயாரிப்பு முறை, அளவு, பயன்கள், இதைப்பற்றி மருத்துவர்கள் பரப்பிவிட்டுள்ள மூட நம்பிக்கைகள், தப்பபிப்ராயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்!

*தாயாரிப்பு முறை மற்றும் அளவு(ஒருவருக்கு)!*

ஒரு தம்ளர் நீரை குறைந்த தீயில் வைக்கவும்,
அவரவரின் பொறுக்கும் திறனுக்கும்,
வசதிக்கும் வெப்பமடைந்தால் போதும்!

ஒரு காலி தம்ளரில்,
பெரியதாயிருந்தால் பாதி,
சிறியதானால் முழு எலுமிச்சம் பழத்தை பிழிந்துக்கொள்ளவும்!
பருகும் போது அதிக புளிப்புச் சுவையில்லாத அளவு!
அப்பொழுதுதான் கத்தியில் அறுத்த பழமாக இருக்கவேண்டும்!
(ஏற்கனவே அறுத்த பாதி பழத்தை உபயோகிக்க கூடாது,
"சவப்பெட்டியில்" வைத்த எலுமிச்சைக் கூடாது,
அது உணவாக செயல்படாது, "திருஷ்டி சுத்திப்போட,
வாகனங்களின் டயர்களுக்கு அடியில் வைக்க சிறந்தது)!

தேன், இரண்டு அல்லது இரண்டரை அல்லது மூன்று ஸ்பூன்,
வாங்கும் தேனின் தன்மைக்கேற்ப!
சுவைக்கும்போது நன்றாக இனிப்பாக,
உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்!
(சுத்தமான தேன் கிடைப்பது அபூர்வம்,
தேடியலைந்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள்,
அசுத்தமான தேனையே உபயோகித்து பலனடையும்
முறைதான் இங்கு சொல்லப்படுகிறது!
அதிர்ஷ்ட வசமாக சுத்தமான தேன் கிடைக்குமானால் நன்று)!

அத்துடன் அடுப்பில் சுமாராக சூடேற்றப்பட்ட நீரை கலந்து
அருந்த வேண்டும் !

இதை பிரத்யோக முறைப்படிதான் பருக வேண்டும்!
கொஞ்சம் கொஞ்சமாக,
கவனம் செலுத்தி,
உமிழ் நீரில் சுவைத்து,
சுவையை வாயிலேயே முழுவதும்
உறிஞ்சும் வகையில் "சப்பி சப்பி" சாப்பிட வேண்டும்!

அலட்டல் என நினைக்க வேண்டாம்!

இதில் நிறைய விஷயம் அடங்கியுள்ளது!
அருந்தும் முறையை ஒவ்வொரு நாளும் சரியாக செய்யமுடியாதுதான்!
அதற்கு ஒரு முறையுள்ளது,
அது "ஸ்பூனில்" சாப்பிடுவதுதான்,
எரிச்சலடையவேண்டாம், தயங்க வேண்டாம்!
இதற்கு மொத்தமே 4 அல்லது 5 நிமிடங்களே ஆகும்!
("கொஞ்சம் கொஞ்சமாகதானே சாப்பிட வேண்டும், அத்தோடு நில், நான் பார்த்துக்கொள்கிறேன்", என நம் "மேதாவித்தனத்தை" காட்டுவது பலனளிக்காது! ஸ்பூனில் மட்டுமே சாப்பிட பழகுங்கள்)

*பயன்கள்!*

1. உடல் கழிவுகளை வெளியேற்றும்!

2. "கழிவு தேக்கத்தின் உச்சம் தான்
புற்று நோய்" என்ற இயற்கையின் நியதிப்படி
புற்று நோய் பயமில்லா வாழ்க்கை உறுதியாகும்!

3. விஷத்தை முறிக்கும் தெய்வீக குணமுடையது எலுமிச்சை!
ஏன் எலுமிச்சை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?
இந்த குணத்தால்தான்!

4. காலையில் நமக்குத் தேவையான "உடனடி குளுக்கோஸ்" நேரடியாக இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகிறது!
இந்த சேர்க்கைக்கு மனித இன்சுலின் தேவையில்லை என்பது சிறப்பு!
சர்க்கரை நோயாளிகளுக்கு "கனயத்தின் இன்சுலின் " உதவியில்லாமலே குளுக்கோஸ் கிடைப்பது என்பது இனிப்பானச் செய்திதானே?

*ஏன்? எப்படி?*
தேனில் உள்ள குளுக்கோஸ் முன்னமேயே,
"தேனீ " என்ற அற்புத உயிரினத்தின் இன்சுலினால் முழுமையாக செரிமானிக்கப்பட்டு, "லட்டு" ப்போல கிடைப்பது!
சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம்!
ஒரு உயிரினத்தின் இன்சுலினால் செரிக்கப்பட்ட தேன்,
"உமிழ் நீர்" எனும் செரிமான நீரால்,
நம் உடல் செல்கள் ஏற்றுக் கொள்ளத் தகுதியாக
மாற்றுவது மட்டுமே நம் வேலை!
அதற்காகத்தான் "ஸ்பூன்" மூலமாக,
பொறுமையாக, சிறிது சிறிதாக
சாப்பிடும் பழக்கம)் பரிந்துரைக்கப்படுகிறது.

5. தோல் பராமரிப்பு, முக வசீகரம்,
கிழட்டுத்தனத்தை தாமதப்படுத்துவது!

6. கர்பப்பை கோளாறுகள் நீங்கி பை உறுதியாகும்!
இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும்!
"சிசேரியன்" எனும் வியாபார வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

7. அமைதியான தூக்கம்!

8.இன்னும் பிற மனித மூளைக்கு பிடிபடாத நன்மைகள்!

*FAQ....!*

1. வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால்,
அதில் உள்ள "சிட்ரிக் ஆஸிட்" அல்சரை வரவழைக்கும்,
உள்ள அல்சரை தீவிரமாக்கும் என்பது சரியா........?

*முற்றிலும் தவறு!*

நாம் சாப்பிடுவது சிறிய அளவு எலுமிச்சைச் சாறு!
செயற்கையாக, இராசயனங்கள் மூலம்,
மனிதனால் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலம் வேறு!
எலுமிச்சை பழத்திலுள்ள இயற்கை தயாரிப்பான சிட்ரிக் அமிலம் வேறு!
இயற்கை பண்டங்களில் உள்ள அனைத்தும்,
அதை தேவைக்கருதி சாப்பிடும் உயிர்களுக்கு
நன்மை பயக்க மட்டுமே படைக்கப்படுகிறது!

2. எலுமிச்சை உட்கொள்வதால்
சளி, தும்மல், வீஸிங் வருமென்பது சரியா?

*சரியல்ல!*

"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்"என்பது போன்றதுதான்,
இது போன்ற அறியாமை பயங்கள்!

நுரையீரல், இது நாள் வரை தேக்கிவைத்துள்ள சளி வெளியேற்ற முடியாமல்,
பலமில்லாமல் தத்தளிக்கும் நேரத்தில்,
எலுமிச்சைச் சாறு, நுரையீரலுக்கு உடனடி சக்தியை கொடுத்து
சளியை வெளியேற்றும் செயல்தான்
மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் வீஸிங் என்பது!

3. "சர்க்கரை நோயாளிகள் தேனை சாப்பிடக்கூடாது"
என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
அப்படி சாப்பிட்டால் சர்க்கரை "ரீடிங்" தூக்கிடும் என்கிறார்கள்!
இது உண்மையா?

இது நவீன மருத்துவம் கட்டிவிட்ட "மூட நம்பிக்கை"!
மாறாக சர்க்கரை நோயாளிகள் என முத்திரை பெற்றவர்களுக்கு "வரப்பிரசாதம்" தேன்! எப்படி?

நாம் சாப்பிடும் உணவு செரிமாணிக்கப்பட்ட பின் கிடைக்கும் குளுக்கோஸ் அதிகப்டியான அளவு தரமற்றதாக உருவாவதால்,
இன்சுலின் மறுக்கப்பட்டு, சிறு நீரகத்தால், சிறு நீர் வழியாக வெளியேற்றப்படுகிறது!
இதனால் உடல் செல்கள்,
தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவதிப் படுவதால்
எல்லா நோய்களும் ஏற்பட ஏதுவாகிறது!
இது தான் சர்க்கரை நோயாளிகளின் நிலைப்பாடு!

இப்படிப்பட்டவர்களுக்கு தேன் "ஆபத்தாண்டவன்" !
தேன் ஏற்கனவே செரிக்கப்பட்ட குளுக்ஸை அளித்து
சர்க்கரை குறைபாடு சரி செய்யப்படுகிறது!

எனவே "சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது"
என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
"கார்ப்பரேட் வியாபார சதி"!

மேலும் உணவுகளை, "சித்தர்கள்" அறு சுவையின் அடிப்படையில்
வகை படுத்தியிருக்கிறார்கள்!
அதில் தேன் கசப்பு உணவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது!
"தேன் நாக்கிற்கு மட்டுமே இனிப்பு, உடலுக்கு கசப்பு"!

எனவே சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு,
நாளும் விரலில் குத்தி இரத்தம் சிந்தி,
சர்க்கரை அளவு பார்த்து பார்த்து, பயந்து,
நோயை நிலைப்படுத்திக்கொள்ளும்
"ஆங்கில கோனங்கி பழக்கத்தை" விட்டொழித்து,
தேன் வாங்க கிளம்புங்கள் தேக ஆரோக்யம் காக்க!

4. தேன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது சரியா?

தேன் உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும்!
கழிவுகளை வெளியேற்றும் வேலை செய்வதால்,
கழிவுகளின் எடை குறைவதால்,
மற்றவர்களின் பார்வைக்கு உடல் மெலிவதாக தெரியும்!
அவ்வளவே!
உடல் "ஸ்லிம்" ஆகும் நல்ல செயல்
தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது!

5. எந்த வயதினர் சாப்பிடலாம்?

வயது வரையறை இல்லை!
இன்று பிறந்த குழந்தை முதல் சாப்பிட ஆரம்பிக்கலாம்!
(இதை குடிக்கும் தாயின் பாலில்
அந்த மருத்துவ குணம் குழந்தைக்கு உட்புகும்)

*வாழ்க வளமுடன்.......!*
Forward ed

*கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள்!*

*கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள்!*

குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள், பலவித நவீன மருத்துவ முறைகளைச் செய்து, கருப்பை பாதிக்கப்பட்டு, குழந்தையும் இல்லாமல், உடல் பருமன், மாதவிடாய் சரி வர ஏற்படாமல் துன்புறும் நிலை இன்று மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றவளாவதற்கு நம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவா?

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் (1798-1832) மேல்நாட்டு வைத்திய நூல்களையும், மருத்துவர்களையும் கூட வைத்துக் கொண்டு, அதற்கென ஆஸ்பத்திரிகளையும் நிறுவி, பல ஆராய்ச்சிகளைச் செய்து, சுமார் 4000 முறைகளைத் தேர்ந்தெடுத்து 18 சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார். அவற்றைத் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நிர்வாகத்தார் புத்தக வடிவில் கொண்டுவர பெரும் முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதில் இரண்டாவது வெளியீட்டில் - மலட்டு நோய்க்கான மருந்து வகைகளும் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து திரட்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள்-

1. வெல்லம் 1 கட்டி
2. குப்பைமேனிச் சாறு 150 மி.லி.
3. சுத்தமான பொரித்த பெருங்காயம் 3 கிராம்
இவற்றை ஒன்று கலந்து ஒரு புதுச்சட்டியிலிட்டு, ஒரு வெள்ளைத் துணியினால் மூடி, இளம் வெயிலில் வைத்து, மாதவிடாய் காலத்தில் மூன்று நாளும் சாப்பிட்டு வர, கருப்பை மலட்டுத்தன்மை நீங்கும். மூன்று முறை செய்தால் பெண் கர்ப்பமடைவாள்.

✅பருத்திக் கொட்டையை ஒரு கொட்டைப்பாக்கு அளவெடுத்து அரைத்து, அதை ஒரு கோழி முட்டை வெள்ளைக் கருவில் குழப்பிச் சாப்பிட, கர்ப்பம் உண்டாகாமல் தடுக்கும் நீர்க்கட்டிகள் உடையும். அடுத்த மாதம் செப்பு நெருஞ்சியின் வேரை பால் விட்டரைத்துச் சாப்பிடக் குழந்தை உண்டாகும். தாயாருக்கும் சௌபாக்கியமுண்டாகும்.

✅ஆடாதோடை இலை, சிறுகுறிஞ்சி இலை, மலர்ந்த முருங்கைப்பூ இம் மூன்றையும் சிவந்த நிறமுள்ள பசுவின் பாலிலரைத்துக் குழப்பி, மூன்று நாள் சாப்பிட, பெண்ணுக்குக் கர்ப்பம் உண்டாகும்.

✅வெள்ளைப்பூண்டு, ஓமம், சிற்றரத்தை, சுக்கு, பெருங்காயம், மிளகு இவற்றை சமமாக எடுத்து பேய்க்கொம்மட்டி (கும்மட்டி) சாறு விட்டுக் கலந்து நன்றாக அரைத்துச் சிறிது தாளித்து அப்படியே விழுங்கிவிட்டு கொம்மட்டி இலையை அரைத்து வயிற்றில் கட்ட மலட்டுத்தன்மை நீங்கும்.

✅எருக்கம் பழுப்பு, கழற்சிக்கொடி, ஆடாதோடை இலை, பிரண்டை, சிறுபாகல், குறிஞ்சியிலை இவற்றை சமமான எடையளவில் எடுத்து நன்றாக இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் நல்ல புஷ்டியுள்ள சிவப்பு நிறப்பசுவின் பால் 150 மி.லி. சேர்த்துச் சாப்பிட, மலட்டுத் தன்மை நீங்கி, பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும்.
மேற்கண்ட இலைச் சாறு எல்லாம் சேர்த்து 50 மி.லி. எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயெண்ணெய் 100 மி.லி.
நல்லெண்ணெய்- 100 மி.லி.
ஆடாதோடைச் சாறு- 100 மி.லி.
வேப்பிலைச் சாறு- 150 மி.லி.
இவற்றையெல்லாம் ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பின் மீதேற்றிப் பக்குவமாக எரித்து வடித்து இந்த எண்ணெய்யை 12 நாள் சாப்பிட்டு வர, சாப்பிடும் பெண்ணுக்குப் பிள்ளையுண்டாகும்.
பத்தியம்: புளிப்பு, கசப்பு தவிர்க்கவும்.

✅பிரமியிலைச் சாறு 150 மிலி எடுத்து சூரியக் கதிரிலும் சந்திரக் கதிரிலும் வைத்து, அதைப் பருகி வர பெண்ணுக்குக் கர்ப்பமுண்டாகும். அதனுடன் செüக்கியமும் உண்டாகும்.

✅துத்தி இலையை வாய் பேசாமல் கடவுளைத் தொழுது பறித்து, நெல்லைக் குத்தி அரிசி செய்து, அதனுடன் நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். இதை நல்லெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட, ஆண் குழந்தையுண்டாகும், நெய்யில் குழைத்துச் சாப்பிட பெண் குழந்தையுன்டாகும்.

✅தீட்டான மூன்று நாட்களிலும் இரவு பட்டினியாயிருந்து மறுநாள் விடியற்காலையில் தாமரைப் பூவைப் பசும் பாலில் அரைத்து அம் மூன்று நாளும் பருகி வரக் குழந்தை உண்டாகும்.

✅இந்துப்பு, காசுக்கட்டி, பூவரசம்பட்டை இம் மூன்றையும் எடுத்து தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து தீட்டு முடிந்து தலை முழுகிய நாலாந்தினம் முதல், காலையும் மாலையும் நான்கு நாள் இம் மருந்தைச் சாப்பிட்டு வர கர்ப்பமுண்டாகும். இவை அனைத்தும் நவீன மருத்துவமுறைகளின் மூலம் கர்ப்பம் அடைவதற்காகச் செய்யும் முயற்சிகளுடன், செய்து கொள்ளக் கூடிய எளிய கை வைத்திய முறைகளாகும்.

✅தயாரித்து விற்பனையிலுள்ள பலசர்பிஸ் எனும் நெய் மருந்து, தான்வந்திரம் கஷாயம், சதாவரீகுலம், தாடிமாதிகிருதம் போன்ற மருந்துகளும் கர்ப்பம் தரிப்பதற்கு உதவிடக் கூடியவை

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...