Saturday, June 10, 2017

*மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?*

*மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?*

*நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.*

*சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.*

*உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)*

*கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?*

*அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.*

*சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.*

*அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.*

*BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.*

*BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.*

*BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.*

*BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.*

*BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.*

*மதுவை ஒழிப்போம்.*

★ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்

★ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

★ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ;

இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;

★அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

★இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

★ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப்படுவதையும்
மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திரஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர்.

★இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்( Wavelet
Transforms,Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

★ஓம் என
உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்
மூளையில் ஒலியினால் மின் செயல்
மாறுபாடுகள் ஏற்படுவதையும்
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம்
என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும்
பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும்
மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.

★மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான
நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

★ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரன் ஆகியோர்
செய்வதை இந்து தர்மம்
கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள
★அகார,உகார ,மகாரங்கள் “ பிரம்மா
,விஷ்ணு ,ருத்ரனை ” க் குறிப்பதையும்
அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச
ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள்
மூலமாக நமது உடலில்
நுழைகின்றன.வாயின் பின்புறம்
உதிக்கும் “ அ” சுவாசிப்பு அமைப்பில்
அடிவயிற்றில் உணரப்படுகிறது.

★வாயின் நடுவில் பிறக்கும் “ உ ”
மார்புப்பகுதியில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த
உதடுகளில் வழியே வரும் “ ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள
சுவாச அமைப்பில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

★இந்த ஒவ்வொரு ஒலியும்
ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின்
சிறு திசுவிலிருந்து முழுசுவாச
அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண
ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

★ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில்
குர்ஜருக்கு ஏன்
ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர்
வாழ்க்கையில் நடந்த
ஒரு சம்பவமே காரணம் ஆகும்.
29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது திடீரென
அவரது தாயாருக்குப் பேசும்
சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம்
கட்டிவிட்டதால் நினைவையும்
இழந்து அவர் பக்கவாதத்தால்
பீடிக்கப்பட்டார்

★.அடுத்த நாள்
அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய
ஆற்றல்
வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி
எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம்
தரப்பட்டதே இதற்குக்காரணம்.

★அவருக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
மூளையில் ரத்தம் உறைவதற்கான
காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக
மன அழுத்தமே என
தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக அவர் ஓம்
ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின்
அற்புத
ஆற்றல்களை அறிந்தார்.

★மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

★ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

★இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த
போது அது இருபகுதிகளைக்
கொண்டிருப்பதைக் கண்டு “ ஓ ”
என்று ஆரம்பித்து “ ம்”
என்று முடிக்கும்போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான
விளைவுகளை ஏற்படுத்துவது
ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும்
தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

★ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40
வயது வரை உள்ள ஆண் பெண்கள்
அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.

★அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்புமண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,

★1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட
ஓம் ,உடலின் ஏழு சக்கரங்களில்
அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று
கண்டார்.

★மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ,ஸ்வாதிஷ்டானத்தில் 288
ஹெர்ட்ஸீம் ,மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம் ,விசுத்தாவில்(தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில்
(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம்
,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.

★ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான
காதுகள் மெடுல்லா மூலமாக
உடலின்
திசுக்களை இணைக்கிறது.நமது
உடலின் தன்மை ,சமன்பாடு ,நெகிழ்வுத்
தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால்
பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும்

★நல்ல ஒலி நன்மையைத்
தருகிறது.இது வேகஸ்
நரம்பு மூலமாக உள்காது
,இதயம் ,நுரையீரல்,வயிறு
,கல்லீரல் , சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள் ,சிறுகுடல், பெருங்குடல்
ஆகிய அனைத்து உறுப்புக்களையும்
இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான
ரீதியாக விளக்கிக்
கொண்டே போகலாம்.

★அவ்வளவு
உண்மைகளை ஆராய்ந்து
கண்டுபிடித்திருக்கிறார் அனில்
குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல்
சித்தார்த் லடாகே.இவர்களின்
ஆராய்ச்சி இன்னும்
தொடர்கிறது.மந்திரங்களின்
மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப்
புதுமைகள் இன்னும் அதிகமாக
வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

Generic medicines by sagayam I a s

இளைஞர்களைவைத்து
சகாயம் செய்யும் சகாயம்

நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிட்ட இளைஞர்களின்  குரலுக்கு

அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா  அரசியலுக்கு வராமலேயே நம்மால் நண்மைகளைச் செய்ய முடியும் என்றுக்கூறிய
திரு சகாயம் ஐ ஏ எஸ் இன்று  அதை நிரூபித்தும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஆம் மக்களுக்காக இன்று அவர் சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கும் ஒரு செயல்தான் இந்த 
ஜெனரிக்.

என்ன அது 'ஜெனரிக்'

இன்று உலகில் இருக்கக்கூடிய பலத்தரப்பட்ட மக்கள் நோய்வாய்ப்படு அதிகமாக இறப்பதற்குக்காரணம் மருத்துவக்குறைபாடு அல்ல மாறாக  மருத்துவத்திற்கான மருந்துவாங்க போதிய பொருளாதார வசதி அவர்களிடம் இல்லாததே
இதற்கு ஏதாவது மாற்றுவழி இருக்காதா என எண்ணிய திரு சகாயம் ஐ ஏ எஸ் தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஏன்  தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு முதல்வரும் செய்யாத ஒரு அற்புதத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார் அதுதான் இந்தியாவிலேயே குறைவான விலையில்  இல்லை இல்லை இந்தியாவிலேயே மிக மிகக்  குறைவான விலையில் மருந்துகள் விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துக்கடை.

புரியும்படிக் கூற வேண்டுமென்றால் சாதாரண மெடிக்கல்' எனக்கூறப்படும் கடையில் வாங்கும்  மருந்து ஆயிரம் ரூபாய் எனில் அதே மருந்தை இந்த ஜெனரிக் மருந்தகத்தில் வாங்கும்பொழுது அதன்  விலை நூறு ரூபாய் மட்டுமே அதாவது சாதாரண விலையை விட 90 சதவிகிதம் குறைவாகும்.

இது எப்படிச்சாத்தியம் ?

இந்தியாவில் மக்களின் இரத்தத்தை உறிந்துக் குடிக்கும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளையும் தாண்டிச் சில நல்ல நபர்கள் இருந்தால் இதுவும் சாத்தியமே

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஜெனரிக் மருந்தகம் இன்னும் விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டுவர மக்கள் பாதை இளைஞர்களின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
ஆனால் வருத்தம் என்னெவெனில் எந்த ஒரு மீடியாவும் இதைப்பற்றிக் கடுகளவும் வாயைத்திறக்கவில்லை

காரணம் பெரும்புள்ளிகளின் வியாபாரம் நஷ்டமடையும் என்பதால்

ஆனால் இன்று நான் இதை உங்கள் பார்வையில் விட்டுவிடுகிறேன் இச்செய்தியை  மக்களின் முன்னால் எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுங்கள்

By
SAGAYAM IAS 
Please share this friends

*அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) ? அந்த கணக்கு தெரியுமா?*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) ? அந்த கணக்கு தெரியுமா?*

*இது ஒரு அறிவியல் சார்ந்த விஷயம். மதம் சம்பந்தமான விஷயம் அல்ல.*

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.அவற்றிற்கான படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும

எப்படி என்கிறீர்களா...? இதோ இப்படி

*கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்>  9+12+27=48*

எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும்          ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.

*இன்னும் சந்தேகமா ?*

*ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! அறிவியல் உண்மை விளங்கும்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்

S.SETHU RAMAN.B.Sc

* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.

* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

S.SETHU RAMAN.B.Sc

கொசுவிரட்டி மருந்துகளால் வரும் சுவாச நோய்கள்

கொசுவிரட்டி மருந்துகளால் வரும் சுவாச நோய்கள்

S.SETHU RAMAN.B.Sc

‘‘கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.

தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும். வறட்டு இருமல் அதிகமாக வரும். ‘சைனசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு ‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் ஏசி செய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம்

சிலர் கொசுக்களை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்துவார்கள். இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இவற்றை உபயோகித்தால் அறை மற்றும் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து வைக்க வேண்டும். அறையில் காற்றோட்டம் இல்லையென்றால், கொசு விரட்டித் திரவங்களும் தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். கொசுவை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

பைப்புகள் மூலம் அடிக்கப்படும் கொசு மருந்துகளால் ஏற்படும் புகைமண்டலமே சிலருக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சைனஸ் உள்ளவர்களுக்கு இடைவிடாத தும்மல் ஏற்படும். இப்படி புகை போடும் போது துணியால் மூக்கையும் வாயையும் மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்ட சிலர் ஸ்பிரே அடிக்கிறார்கள். இது மூச்சுத்திணறல், தலைசுற்றல் ஆகிய பின்விளைவுகளை கொண்டுவரும்.

அதனால் கொசுவை விரட்ட நல்ல தரமான துணிகளில் தயாரிக்கப்பட்ட கொசு வலைகளை பயன்படுத்தலாம். விலை மலிவான கொசுவலைகளை பயன்படுத்தினால் போதிய காற்றோட்டம் இல்லாமல் மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கும். மட்டமான நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கும் கொசு வலைகளை பயன்படுத்தினால் அதில் இருந்து வரும் ஒருவித துர்நாற்றம் தலைசுற்றல், வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும்.

S.SETHU RAMAN.B.Sc

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...