Saturday, November 3, 2018

தோப்புக்கரணம் போடு

மகா + விஷம் = மாமிசம்* இது

*மகா + விஷம் = மாமிசம்*

இது மோகத்தையும் கோபத்தையும்
தூண்டும்.

*அசைவம் பற்றி ஓஷோ...*

ஒவ்வொரு மிருகத்திற்கும் அதுவாக தேர்ந்தெடுத்த உணவிருக்கும்.

நீங்கள் ஒரு மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது.

*அவை தேர்ந்தெடுக்கும்.*

அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.

ஆனால் மனிதனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

மனிதன் அந்த உணர்வை முழுமையாகத் தொலைத்துவிட்டான்.

சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.

அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான்.

மனிதனுக்குப் பைத்தியம்.

அவன் உடலோடு என்ன எதிரொலிக்கிறது என்பது தெரியாது.

மனிதன் இயற்கையிலேயே ஒரு சைவமாகத்தான் இருக்க வேண்டும்.

காரணம் முழு உடலுமே சைவத்திற்காக உருவாக்கப்பட்டதுதான்.

ஒவ்வொரு விஞ்ஞானியும் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.

மனித உடலின் முழு அமைப்புமே அவன் அசைவமாக இருக்கக்கூடாது என்பதைத்தான் காட்டுகிறது.

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். குரங்குகள் சைவம். சுத்த சைவம்.

டார்வின் உண்மையென்றால் மனிதன் சுத்த சைவமாகத்தான் இருக்க வேண்டும்.

இப்போது சில மிருகங்கள் சைவமா அசைவமா என்பதைப் பார்க்க வழிகள் இருக்கின்றன.

அது குடலைப் பொறுத்தது. குடலின் நீளத்தைப் பொறுத்தது.

அசைவ மிருகங்களுக்கு சின்ன குடல் இருக்கும். புலிகள், சிங்கம் இவற்றிற்கு சின்ன குடல்தான்.

அதற்கு காரணம் மாமிசம் என்பது ஏற்கனவே ஜீரணக்கிப்பட்ட உணவுதான்.

அதற்கு ஜீரணத்திற்கு நீண்ட குடல் தேவையில்லை.

ஜீரண வேலையை அந்த மிருகமே செய்துவிடும்.

இப்போது நீங்கள் மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடப் போகிறீர்கள். அது ஏற்கனவே ஜீரணம் ஆனது. பெரிய குடல் தேவையில்லை.

மனிதனுக்குத்தான் மிக நீளமான குடல்கள். அதாவது மனிதன் சைவம். ஒரு நீண்ட ஜீரணம் தேவை, அதில் தேவையற்றது நிறைய இருக்கும். அவற்றைத் தூக்கியெறிய வேண்டும்.

மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.

இதனால் உடலுக்கு சுமை ஏற்றப்படுகிறது.

பெரிய ஞானிகள்...

திருவள்ளுவர், மகாவீரர்,
புத்தர், வள்ளலார், வேதாத்திரி அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்.

ஆனால்,
*நீ உண்மையிலேயே ஆழ்ந்த தவத்திற்கு நகர வேண்டுமானால், உனது உடல் எடையற்று இருக்க வேண்டும்.*

இயற்கையாக நகர வேண்டும்.

உங்கள் உடலிலிருந்து பாரம் இறங்க வேண்டும்.

அசைவ உணவினால் உடலுக்கு அதிக பாரம்.

நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள்.

அந்த மிருகத்திற்கு என்னவாகிறது.?

யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.

வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது.

விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை.

உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாக மாட்டீர்கள்.

ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்?

நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும்.

வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.

அதன் உடல்முழுவதும் வன்முறை, வேதனை, மரண ஓலம் பரவும்.

அந்த உடல் முழுவதுமே கழிவுகள், விஷம். உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது.

காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.

பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள்.

அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் வேதனையும் சாபமும் இருக்கிறது.

அந்த முழு சக்தியுமே விஷம்தான்.

பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.
        
நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது.

அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது.

நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள்.

பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது.

ஒரு பதற்றம் எழுகிறது.

ஒரு மன வேதனை எழுகிறது.

*எது ஒருவருக்கு இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ண வேண்டும்.*

உங்களுக்கு எது இயற்கை என்றால்... பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்புகள்.

*அவற்றை அளவுவோடு  உண்ணுங்கள்.*

எது இயற்கையானதோ, அது உங்களுக்கு ஒரு *திருப்தியை* கொடுக்கும்.

அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும்.

அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.

நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.

வாழ்க நலமுடன்!

- ஓஷோ

கொன்றால் பாவம்!

தின்றால் போச்சு!

இதன் உண்மையான அர்த்தம்...

கொன்றால் பாவம் வரும்.

உண்டால் உங்கள் புண்ணியம் போகும்.

ஆகவே,

*மகா விஷத்தை தவிர்போம்...*

*மனிதனாக வாழ்வோம்...🙏🏻*

சிறுநீரக தொடர்பான பாதிப்புகளுக்கு

மாவேள்- நீரகம் & நீரகம்+*

சிறுநீரக தொடர்பான பாதிப்புகளுக்கு

*இலட்சம் கணக்கில் சிறுநீரக பிரச்சினைக்கு செலவு செய்யாமல் குறைந்த செலவில் இயற்கையாக சரிசெய்யும் மருத்துவம்*

*உட்பொருட்கள்:*
பூளிப்பூ, துளசி, சிறு & பெருநெருஞ்சி, காட்டுக்கொடித்தோடை, சுக்கு, தனியா, திரிகடுகம், பனை சக்கரை.

*”நீரகம் =70ரூ (100கிராம்)”* தேநீரை அருந்துங்கள்.

*சிறுநீரக கல் உள்ளவர்கள்*
*” நீரகம் + =80ரூ(100கிராம்)”* காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.

*சிறுநீரக பாதிப்பால் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,*

1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. சோர்வு
4. தலைவலி
5. அடிக்கடி ஏற்படும் விக்கல்

போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள *நீரகம் தேநீரை* பயன்படுத்துங்கள்..
சிறுநீரக கல் இருப்பவர்கள் *நீரகம்+* பயன்படுத்துங்கள்...

*தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் -9445903067*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...