*சளி குறைய*
தாமரைப்பூ, ரோஜாமொட்டு, கோரைக்கிழங்கு இவைகளை சம அளவு எடை எடுத்து 1 லிட்டர் தண்ணீரை அரை லிட்டராக வற்றக் காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தை இவற்றோடு கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் கலந்து குடித்தால் சளி, இருமல் குறையும்.
*தலைவலி குறைய*
வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.
*பித்தக் காய்ச்சல் குறைய*
திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.
*சுபம்*