Friday, November 9, 2018

ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..! பா

Aara Vedha:
*பானகம்*

ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..!

பானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாக பானம் என்றால் மிகையாகாது.

இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால் தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.

பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார்.

பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.

இதன் மகத்துவம் தெரிந்ததால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது.

பொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம்.

ஜம்பீர பானகம்:

தேவையான பொருள்கள்:

எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்
வெல்லம்- ஒரு பங்கு
தண்ணீர் - 16 மடங்கு
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகலாம்.

மருத்துவப் பயன்கள்:

பசியின்மை, உடல் சோர்வை போக்கும். தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும்.

ஜிஞ்சா பானகம்

தேவையான பொருள்கள்
புளி - 100 கிராம்
தண்ணீர் - 400 மி.லி
வெல்லம் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
சுக்குப்பொடி - சிறிதளவு
மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை:

முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது.

பலன்கள்:

ரத்தசோகை நீங்கும்; பசியை உண்டாக்கும்; குமட்டல் நீங்கும்.

இனையப்பகிற்வு
*வேதா*

நாள்பட்ட மூட்டுவலி குணமாக

Aara Vedha:
கடுகு

நாள்பட்ட மூட்டுவலி குணமாக
-----------------------------------------------------
கடுகு (30 கிராம்) ,கோதுமை (100 கிராம்) ,  கஸ்தூரி மஞ்சள் (100 கிராம்) இவை மூன்றையும் அரைத்து , முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பற்றுப் போட்டு  வந்தால் எப்படிப்பட்ட மூட்டு வலியும் குணமாகும்.

நீர்க்கடுப்பு குணமாக
-----------------------------------------------------
கடுகைத் தேவையான அளவு எடுத்து அரைத்து , தொப்புளில் லேசாகப் பற்றுப் போட்டு வந்தால்  நீர்க்கடுப்பு குணமாகும்.

நாள்பட்ட தலைவலி குணமாக
-----------------------------------------------------
கடுகை நீரில் ஊறவைத்து முளைக்க வைத்து , பிறகு அதை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

நாட்பட்ட விக்கல் குணமாக
-----------------------------------------------------
கடுகை (1 ஸ்பூன்)எடுத்து  இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.

வாத , பித்த , கப தோஷங்கள் நீங்க
-----------------------------------------------------
கடுகு , உப்பு , மிளகு தலா இரண்டு கிராம் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் உடம்பில் ஏற்படும் வாத , பித்த , கப தோஷங்கள் நீங்கும்.

மூச்சிரைப்பு , இருமல்  குணமாக
-----------------------------------------------------
கடுகை (25 எண்ணிக்கை) , தேன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு , இருமல் குணமாகும்.

தொன்டை வலி குணமாக
-----------------------------------------------------
கடுகைப் பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டு வந்தால்  தொண்டை வலி குணமாகும்.

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது

[26/09, 00:12] ‪+91 95667 67677‬: Aara Vedha:
"முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
            
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 
                    
                      குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

                      பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.

                  சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

                  பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .
                   பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
               மூலம் நோய் உள்ளவர்களுக்கு
உரிய  மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்
பயன்படுகிறது.
                 இந்த மூலிகையை "குத ரோக நாசினி" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

                    இவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட  குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.
மற்றும் இயற்கை கால்சியம்  அதிகம் உள்ளது  .
                   இவ்வாறு இருக்க  நாம்  ஏன் அனாவசியமாக  கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....

                 வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
                  உலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

               தேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" எனப்படுகிறது.

இனையப்பகிற்வு
[26/09, 00:14] ‪+91 95667 67677‬: Aara Vedha:
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.அது ஏன் என்று தெரியுமா?

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றி விடும்.

சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

நரம்புகள் டென்சன் ஆகும் பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

உயிரையும் உள்ளத்தையும் இணைக்கும் கருவி* உடல்

Aara Vedha:
*உயிரையும் உள்ளத்தையும் இணைக்கும் கருவி*

உடல் நலம் கெட்டுப் போன பிறகுதான் நாம், நம் உடல் நலத்தின் அருமை, பெருமைகளைப் பற்றி யோசிக்கவே செய்கிறோம்.

பரவாயில்லை. அதை நம்மால் முற்றிலும் சரி செய்து விட முடியும்.

எப்படி ? யோகாசனத்தால்தான்.

வேறு எந்த வழியும் கிடையாது.

அலோபதியோ, ஆயுர் வேதமோ, யுனானியோ, ஹோமியோபதியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோய் முற்றிலும் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம்.

வாழ் நாள் முழுவதும் நோய் வராமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி யோகாசனம்தான்.

சிவ பெருமான் ஆடும் நடன பாவங்கள், முத்திரைகள், அசைவுகள் அனைத்தும் யோகாசனங்கள்தான்.

நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கைக்கும் நமக்கும் ரெம்ப தூரம்.

இயற்கையோடு ஒன்றி வாழ்வதில்லை என்பதோடு மட்டுமல்ல இயற்கையை அவமதிக்கிறோம்.

மருந்து, மாத்திரை, ஊசி, டானிக் என்று செலவு செய்வதோடல்லாமல் மேலும் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் சாப்பிட்டதால் வியாதிகள் வந்து துன்பப்படுபவர்களே அதிகம். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.

நம் உடலில் முக்கியமான பல குழலற்ற சதைக் கோளங்கள் உள்ளன. இவற்றை சுரப்பிகள் என்றும் சொல்வார்கள்.

இவைகள் நம் நாடிகளோடு தொடர்புடையவை. இந்த நாடிகளின் முக்கிய மையங்களையே வர்ம்ப் புள்ளிகள், சக்திப் புள்ளிகள், அக்கு ப்ரஸர் புள்ளிகள் என்றெல்லாம் சொல்கிறோம்.

இவற்றில் தட்டியோ, தடவியோ, ஊசிகளால் தூண்டி விட்டோ சுரப்பிகளை நன்கு செயல்படும்படிச் செய்ய முடியும்.

அப்படிச் செய்வதால் அந்த சுரப்பிகளில் இருந்து உற்பத்தியாகும் ஹார்மோன்களின் அளவு அதிகரித்து அவை நம் இரத்தத்தில் உள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று விடுகிறது.

அதே போலவே சக்தி மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து இந்த சுரப்பிகளை நன்கு இயங்கும்படிக்குத் தூண்டும் அழுத்தப் பயிற்சியே யோகாசனம்.

இது சாதாரணமான உடற்பயிற்சியல்ல. இந்த சுரப்பிகள் நன்கு வேலை செய்யும் மனிதனுக்கு எந்த நோயும் வராது.

பிட்யூட்டரி, பீனியல்பாடி என்ற இரு சுரப்பிகளும் சிரசின் பின்புறம் உள்ளது.

தைராய்டு, பாரா தைராய்டு என்ற இரு சுரப்பிகளும் கழுத்துப் பகுதியில் உள்ளது. தைமாஸ் சுரப்பி மார்புப் பகுதியிலும், அட்டேரினல் சுரப்பி குண்டிக்காயின் மேல் பகுதியிலும், ஈரல் வலப்புறமும் உள்ளது. பாங்கிரியாஸ் தீனிப் பையின் கீழ் உள்ளது.

இன்னும் பல் வேறு சுரப்பிகள் நம் உடலில் உள்ளன. இந்த சுரப்பிகள் ஒழுங்காகச் சுரப்பு நீரைச் சுரந்தால் மனிதனுக்கு எந்த வியாதியும் வராது.

யோகாசனம் என்ற அழுத்தப் பயிற்சியின் மூலம் நாடி, நரம்புகளைத் தூண்டி விடுவதால் இந்த சுரப்பிகளை நன்கு செயல்பட வைத்திடலாம்.

சிரசாசனம், சர்வாங்காசனம் செய்வதால் பிட்யூட்டரி, பீனியல்பாடி சுரப்பிகள் நன்கு வேலை செய்யும். சர்வாங்காசனம், ஹலாசனம், மத்சியாசனம் செய்வதால் தைராயிடு, பாராதைராயிடு சுரப்பிகள் நன்கு வேலை செய்கிறது. பாத ஹஸ்தாசனம், ஹலாசனம், நௌலி, உட்டியாணா, சிவலிங்காசனம், பச்சிமோத்தாசனம் போன்ற ஆசனங்களைச் செய்வதால் பாங்கிரியாஸ் சுரப்பி நன்கு செயல்படுகிறது.

சக்கராசனம், கோமுகாசனம், ஹலாசனம், பச்சிமோத்தாசனம், சர்வாங்காசனம், ஊர்த்துவ பத்மாசனம் செய்வதால் அட்டேரினல் மற்றும் ஈரல் நன்கு வேலை செய்கிறது.

மேலும் நாடிகள் நன்கு அழுத்தம் பெறுவதாலும், பிராணவாயு சீராகத் தடையின்றி கிடைப்பதாலும், சக்கரங்கள் நன்கு செயல்படுவதாலும் பிராண மற்றும் ப்ரபஞ்ச ஆற்றலின் திணிவு உடலில் உண்டாகி விடுகிறது. எனவே நோய் நொடி இல்லாமல் போவதோடு இளமையாகவும், ஆயுளோடும் வாழலாம்.

எந்த வைத்திய சாஸ்திரத்தாலும் முடியாத ஒரு அதிசயம் என்னெவன்றால், யோகாசனம் மற்றும் பிராணாயாமம் மூலம் ஆணோ, பெண்ணோ நினைத்த குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது திருமூலர் வாக்கு.

"அஞ்சனம் போன்றுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தனும்
சஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே"
என்கிறார் திருமூலர்.

மைபோன்ற உடலில் ஏற்படும் கப நோய் மாலையில் யோகாசனம், பிராணாயாமம் செய்தால் போகுமென்றும், நடுப்பகலில் செய்தால் வஞ்சகமான வாதம் போகுமென்றும், அதிகாலை செய்தால் பித்தம் நீங்குமென்றும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரை, திரை, மூப்பு நீங்கி என்றும் இளமையோடு சிரஞ்சீவியாக வாழலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

நாம் யார்யாருக்காகவோ உயிர் வாழ்கிறோம். நம் வாழ்வின் குறிக்கோளை அடையும் வரை உயிர் வாழ வேண்டாமா ?

அப்படி வாழும் வரை ஆரோக்யமாக வாழ வேண்டாமா ?

எனவே அதற்காகச் சிவன் அருளிய 84000 ஆசனங்களை நம் சித்தர்கள் 1000 ஒன்று வீதம் சுருக்கி 84ஆக தந்துள்ளதாகச் சொல்வார்கள்.

எனவே நாம் யோகாசனம் பயிற்சி செய்வதோடு நம் குழந்தைகளுக்கும் கட்டாயமாக இதைச் சொல்லிக் கொடுத்தோமானால், அவர்கள் ஆயுள் ஆரோக்யமாக வாழ்வதோடு நம் தேசத்தையும் சுபீட்சமடையச் செய்திடுவார்கள்.

மேலும் யோக சாதனை செய

தேன் காய் = தேங்காய் என்னும் அமிர்தம். #தேங்காய் #உபயோகம் #மாரடைப்பில் #மு

Flowers Kalki:
தேன் காய் = தேங்காய் என்னும் அமிர்தம்.
#தேங்காய் #உபயோகம் #மாரடைப்பில் #முடியும்
#என்று #நிறைய #பேர் #கைவிட்டனர்
#உண்மை #இதோ :--

*பச்சை தேங்காயின் பயன்கள்*
தேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்....
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
இரத்தத்தை சுத்தமாக்கும்...
உடலை உரமாக்கும்.....
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...
குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி 🤒 ஊ..ஊ..ஊ....
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்🤔?..
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...

நரைமுடி கருப்பாக*

Aara Vedha:
*நரைமுடி கருப்பாக*

அவுரி இலை மருதாணி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு இந்த கலவையை முடியில் தடவி 30 முதல் அறுபது நிமிடங்கள் கழித்து கழுவி
விட்டால் நரைமுடி
சிகப்பாக மாறிவிடும்.

அதன்பின் ஆயிரம் மில்லி செக்கு தேங்காய் எண்ணெயில் 100 கிராம் கருஞ்சீரகம் தட்டிப்போட்டு 12 முதல் 24 நாட்கள் தினமும் 2 மணிநேரம்
வெயிலில் வைத்து எடுத்தால் எண்ணெய் கருப்பாக மாறிவிடும்.

இந்த எண்ணெயை தினமும்
குளித்த பின்  நரைமுடியின் மேல் தடவி வந்தால்
பித்த நரை,இளநரை சில மாதங்களில் மறைவதோடு
மற்ற எந்த வகை நரையாய் இருந்தாலும் தொடர்ந்து மாதக்கணக்கில் பூசிவர
முடி கருப்பாகும்.!

உணவில் கருவேப்பிலை,
நெல்லிக்காய், சீரகம்,
அத்திப்பழம்,தேன்,தேங்காய் போன்றவற்றை அதிகம்
சேர்க்க  வேண்டும்.

வேதா அய்யாவிற்கு நன்றி

*பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை..!!* தமி

Aara Vedha:
முகநூலில் கண்ட தகவல்

*பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை..!!*

தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது.

இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது.

பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்;

கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம். பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:

தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது.

இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.

ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளைச் சமூகத்தில் பெருக்க இந்த உணவு முறை துணைச் செய்யும்.

ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை.

மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை

சேர்க்கப்படும் பொருட்கள்:

வெள்ளை எள் – ஒரு கப்,
சர்க்கரை முக்கால் கப்,
ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை:

வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்: பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் phyto oestrogen எள்ளில் உள்ளது.

மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி

சேர்க்கப்படும் பொருட்கள்: சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து – கால் பங்கு, ஏலக்காய் பொடி – சிறிதளவு, கரும்பு வெல்லம் – தேவையான அளவு

செய்முறை:

சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.

மருத்துவப் பயன்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி

சேர்க்கப்படும் பொருட்கள்: வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி – நான்கு பங்கு

செய்முறை:

சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்:

இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...