Thursday, October 18, 2018

பிட்யூட்டரி...நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு..

குருவே சரணம்.

பிட்யூட்டரி...நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு..

பெரிய அறிவாளிகளை மண்டைச்சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்று அடிக்கடி கூறக்கேட்டு இருப்போம். அது என்ன மண்டைச் சுரப்பு என்று சிந்தித்துப்பார்த்தால் நம் முன்னோர்கள் எந்தச் சொல்லையும் பொருளற்று பயன்படுத்தவில்லை என்பது புலனாகும்.

பொதுவாக மனித உடலில் எண்ண்ற்ற சுரப்பிகள் (Glands) காணலாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர் ஒரு குழாய் வழி எடுத்துச்செல்லப்பட்டு இரத்ததில் கலக்கப் படுகிறது.. இதே போல மனித உடலில் வேறு பல சுரப்பிகளும் உள்ளன. இவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள் சாதாரண சுரப்பிகள் போலன்றி நேரடியாக இரத்தத்தில் கலக்கும் தன்மையை உடையன. இதனை நாளமில்ல சுரப்பிகள் (Endocrine Gland) என்பர். இந்த நாளமில்லா சுரப்பிகளில் சில சுரப்பிகள் ஒரு ஹார்மோனையும் சில சுரப்பிகள் இரு ஹார்மோன்களையும் இன்னும் சில மூன்று நான்கு ஹார்மோன்களையும் சுரக்கின்றன.

இந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைமை சுரப்பியாகத் திகழ்வது பிட்யூட்டரி சுரப்பி. (Pituitary Gland). இது இளஞ்சிவப்பும் சாமபல் நிறமும் கலந்த ஒரு நீல நிறத்தில் காணப்படும். மற்ற நாளமில்லா  சுரப்பிகளையெல்லாம் இது ஆள்கிறது. அவைகளை இயக்குகிறது. மற்ற சுரப்பிகளின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இதுவே தசைகள் எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. இது கரியமில வாயு, புரதச்சத்து, கொழுப்புச்சத்துக் குறைபாட்டினைக் கட்டுப்படுத்துகிறது. இது இடம்பெற்றுள்ள இடம் எண்சாண்  உடலுக்குப் பிரதானமாகத் திகழும் தலையில். இதனை,

”உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாமலெரியுது வாலைப் பெண்ணே”

என்று கொங்கணசித்தர் அழகாகப் பாடுகிறார். தலை உச்சிக்கு நேராக கீழே  உள் நாக்கிற்கு நேராக மேலே ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. அச்சு என்றால் பீடம் என்று பொருள். இச்சொல் தலைமை பீடத்தை வகிக்கும் சுரப்பி பிட்யூட்டரி என்பதை விளக்கும். அது அவியாமல் எரியும் விளக்கு என்றும் கூறுகிறார்.

இந்த பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாட்டினால் வருவது டிராஃபிஸம் (Dwarfism) என்றழைக்கப்படும் மிகக் குள்ளமான உருவம். இது குறைவாகச் சுரக்கும் போது இக்குள்ள நோய் ஏற்படுகிறது.

இதன் மிகுதிப்பாட்டில் வருவதே ஜெய்ஜாண்டிஸம் (Gigantism) எனறழைக்கப்படும் அதிக வளர்ச்சி.. இது அதிகமாகச் சுரக்கும் போது அளவுக்கு அதிகமான உடல் உயரம், வளர்ச்சி ஏற்படுகிறது.

குமரப்பருவத்தில் இளைஞர்கள் கிடு கிடுவென அகோரமாக வளர்ச்சி அடைந்து காணாப்படுவர். இதன் குறைபாட்டாலோ மிகுதிப்பாட்டாலோ வரும் மிக முக்கியமான ஒரு விளைவே இந்த அகோர வளர்ச்சியான அக்ரோமகலி (Acromegaly) எனப்படும் குமரப்பருவ குறைபாடு..

அதுமட்டுமல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் திறன், நினைவாற்றல், தன்னம்பிக்கை இவற்றையும் இச்சுரப்பியே காக்கிறது. இச்சுரப்பி நன்கு வேலை செய்வதால் மூளையின் திறனும் அதிகரிக்கிறது.

இந்த சுரப்பியின் சிறப்பான வேலைத்திறத்தினால் உருவாவவர்களே அறிவிற்சிறந்த மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், ஞானிகாளும், கவிஞர்களும் என்போர்.

இது எப்போது பாதிக்கப்படுகிறது? மற்ற உறுப்புகளைப் போன்றே அதிர்ச்சி, விபத்து, பிரசவம் ஆகியவற்றினால் பாதிக்கப் படுகிறது. இவ்வாறு இந்த பிட்யூட்டர் பாதிக்கப் படும்போது இதன் அருகில் மூளையில் அமைந்துள்ள மற்றொரு சுரப்பியான பினியல் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. எவ்வாறு பிட்யூட்டரியின் சிறப்பான் வேலையின் போது அறிஞர்களும் சான்றோர்களும் அவதரிக்கின்றார்களோ அதே போல இச்சுரப்பிகளின் குறைபாட்டின் காரணமாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்து விடுகிறது..

இந்த பிட்யூட்டரியைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது சற்றேறக்குறைய அதன் அருகில் உள்ள பினியல் சுரப்பியையும் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இச்சுரப்பியின் செயல்பாடுகள் பல இன்னும் மருத்துவ ஆய்வுக்கே புலனாகாதப் புதிர்களாக உள்ளன. இதுவும் மற்ற சுரப்பிகளை கட்டுப் படுத்துகிறது.

இந்தச் சுரப்பியால் விளையும் நன்மை. யாதெனில், இச்சுரப்பி சோடியம், பொட்டாசியம், ஆகிய உப்புகளின் அளவைச் சீராக வைக்கிறது. இச்சுரப்பியும் நன்கு வேலை செய்யும் போது அறிவு, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் அதிகரிக்குமாம். மனம் எதற்கும் கலங்காது இருக்குமாம். இதன் காரணமாகவே நாடு யோகிகளையும் ஞானிகளையும் பெற்றுள்ளது.இது சரிவர இயங்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இச்சுரப்பி இயக்கக் குறைவால் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாகி கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. உள்ளங்கால் உள்ளங்கை பகுதிகளில் அதிக வியர்வை உண்டாகிறது.இதைத்தவிர தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கனையம், சினைப்பைகள், விதைப்பைக்ள் என்று முக்கியமான எட்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றுள் சினைப்பையும் விதைப்பையும் சுரப்பிகள் என்று அழைக்கப்படாவிட்டாலும் இவை பிட்யூட்டரியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்சுரப்பிகளைப் போன்றவையே.

மூச்சுக்குழாயின் இரு பக்கங்களில் இருக்கும் தைராய்டு சுரப்பு தைராக்சின் என்ற திரவத்தைச் (ஹார்மோன்)சுரக்கிறது. இது அதிகமாகச் சுரக்கும் போது எண்ணம், சொல், செயல் எல்லாம் மந்தமாக இருக்கும். அதிகமாக சுரக்கும் போது (ஹைபர் தைராய்டு) எல்லாமே முந்தைய செயல்களுக்கு எதிர் மாறாக இருக்கும். இது அதிகமாக வேலை செய்யாத போது இதில் உள்ள அயோடின் குறைபாட்டால் காய்டர் (Goitre) எனப்படும் முன் கழுத்துக் கழலை தோன்றுகிறது.

பாரா தைராக்சின் எனப்படுவது, தைராய்டு சுரப்பிகளின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டாக மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. இது கால்சியம், இரத்தம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றது.

மார்புப் பகுதியில் மூச்சுக்குழாய இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ளது தைமஸ் சுரப்பி. இது குழ்ந்தைகளின் நோய் தடுப்புச் சக்திக்கு பெரிதும் உதவுகிறது.

சிறு நீரகங்களின் தலைப் ப்குதியில் பக்கத்திற்கு ஒன்றாக உள்ள இரு சுரப்பிகள் அட்ரினல் சுரப்பி எனப்படும். கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் இதன் சுரப்பு விகிதம் கூட கூறைய நிகழ்கிறது. இது கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது.

இன்சுலின் என்னும் திரவததைச் சுரக்கும் கணையம் குறைந்தால் ஹைபர்க்ளைசீமியா (Hyper glycamia) என்ற நீரிழிவு நோயும், இதன் சுரப்பு அதிகரித்தால் இரத்த அழுத்தமும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலியும் ஏற்படுகிறது.

பெண்களின் கருப்பையின் இருபுறமும் இரண்டு சினைப்பைகள் உள்ளன. இது முக்கியமாக தலைமை சுரப்பியான பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

விந்துககளை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் மகப்பேற்றுக்குக் காரணமாவதுடன் செல்கள், எழும்பு மஜ்ஜை., நரம்புகள், விந்தணுக்கள் ஆகியவற்றை சீர் செய்கின்றன. இவை இரண்டும் சுரப்பிகளுடன் சேக்கப்படாவிட்டாலும் இவையும் பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

”நெற்றியிலே தயங்குகின்ற நீலமாம் விளக்கினை
உற்றுணர்ந்து பாராடா உன்னுள் இருந்த சோதியைப்
பத்தியிலே தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்து இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே”

என்று சிவ வாக்கியார் உரைப்பது எதனை என்று நினைக்கின்றீர்கள்? நெற்றியிலே இருக்கின்ற நீல விளக்கு இந்த பிட்யூட்டரி என்னும் சுரப்பிதான். ஒளிர்விடுகின்ற (தயங்குகின்ற) அதனை உற்று பார்த்து நினைவுகளை ஒரு தலையாக அடக்கி உணர்ந்து பார்த்து, உள்ளே நிறைந்து இருக்கின்ற சோதிமயமான இறைவனைத் தியானம் செய்பவர் எங்கும் பரவி இருக்கின்ற தேவ நிலையை அடையலாம். தியானம் என்கிற மூச்சுப் பயிற்சியின் மூலம் இந்த பிட்யூட்டரி சுரப்பியை நன்கு செயலாற்ற வைக்கலாம். இதன் செயல்பாடு உடலுக்கு மட்டுமன்றி அறிவு வளம் பெற்ற சான்றோராக ஞானியாக ஆக்கும் என்று மேலே கண்டோம்

: இத்துனை செயல்பாடுகளை நிகழ்த்தும் சுரப்பிகளின் தலைமை தலையில் தான் உள்ளது. அந்த நீலமாம் விளக்குதான் பிட்யூட்டரி என்பது நாம் அறிந்தது. இந்த தலைமையைச் சீராகச் சுரக்கச் செய்ய தியானத்தால் முடியும். அதாவது குண்டலினி யோகம் அல்லது சரப்பயிற்சி என்பர் அக்காலத்தில். இரு புருவ மத்தியில் பார்வையையும் மனதையும் ஒருநிலையில் வைப்பதால் இம்முறையைச் செய்யலாம். முறையான தியானம் நாளமில்லா சுரப்பிகளின் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரியை சரிவர வேலை செய்ய வைக்கும் என்பதே. தலைமை சரிவர இயங்கினால் மற்றவையும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்து நம்மை உடல் அளவிலும் உள்ளத்து அளவிலும் செம்மையாக வைக்கும்.

நல்லதே நடக்கும்.
போகர் சித்தாந்தசபை
பழனி.
9488008816

மூலிகை முதலுதவிகள்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍇🍇🍓🍓

*மூலிகை முதலுதவிகள்*

’முதலுதவி செய்ய மூலிகை அறிவு’ என்பது அன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாய் குடும்பத்தலைவிக்கு நிச்சயம் உண்டு. தொழிற்புரட்சி காலத்திற்குப் பின் இங்கிலீஷ் மருத்துவம் வேகவேகமாக உலகெங்கும் காலூன்றிய போது, நாட்டு மருத்துவம் முழுமையும் நசுங்கி விடாமல் காப்பாற்றப்பட்டதற்கு, பாட்டி வைத்தியமாய் அது வீட்டில் பெண்களால் பாதுகாக்கப்பட்டதும் முக்கியக் காரணம். மூலிகை என்றதும் பலரும் நினைப்பது, ’ஏதோ ஏழு கடல் தாண்டி ஏழு மலைகள் தாண்டி எடுக்கும் விஷயம்’ என்று. நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும், அருகாமை நிலத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், ’சைரன் இல்லாத 108 வேன்’ மாதிரி, பல மூலிகைகள் முதலுதவி செய்யக் காத்திருக்கின்றன. விருப்பமான உணவு தயாரிக்கும் வித்தை மாதிரி, முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கைமருந்தாய்க் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய்த் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐயய்யோ! கைமருந்தா!?’ அது ஆபத்தாச்சே!' என்ற மேல்தட்டு மனோபாவம் மாற வேண்டும். எது அவசரம், எது ஆரம்பம், எது சின்ன சிரமம் என்ற அடிப்படை அறிவு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.

கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்துப் பார்க்கலாமா?
🍑🍑🍑
ஆடாதொடை - எந்த உரமும் போடாமல், எந்தப் பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்தச் செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்தச் செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்துக் கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வரத் தயங்கும், நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியைக் கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
🍎🍎🍎
அதிமதுரம் - இனிப்புச் சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும். திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலிக் கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
🍒🍒🍒
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செரியாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்துக் கசாயமாக்கிச் சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10 மி.லி. அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
🍍🍍🍍
சீரகம் - லேசான கிறுகிறுப்பு அதிகப் பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளைக் கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிடக் குறையும்.
🍊🍊🍊
வாய்விடங்கம் - வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சேர்த்துக் கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு, மதிய வேளையில் மோரில் பெருங்காயத் தூள் போட்டு சாப்பிடத் தீரும்.
🍅🍅🍅
கடுக்காய் - விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
🥒🥒🥒
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்து வரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு, வெந்தயம், பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாகக் கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
🍋🍋🍋
சாதிக்காய் - தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய்த் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட, தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
🍓🍓🍓
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்தப் பட்டையை தேநீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
🍏🍏🍏
இந்தப் பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்த்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்தக் கிச்சனில் இந்தப் பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருடத்திற்கு முன் ’ஓட்ஸ்’ என்றால் எத்தனை பேருக்குத் தெரிந்தது? ஆனால் தினையோ கம்போ பற்றிப் பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?” என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
🍇🍇🍇
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களைக் கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்
🍊🍊🍊🍊🍊
🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல* *குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🥦🥦🥦🥦🥦🥦

அபார தாதுபுஷ்டி லேகியம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑
*அபார தாதுபுஷ்டி லேகியம்*

பாதாம் பருப்பு – 100 கிராம்
பிஸ்தா பருப்பு – 100 கிராம்
பாதாம் பிசின் – 100 கிராம்
கசகசா – 100 கிராம்
பூனைக்காலி விதை – 100 கிராம்
அமுக்கிரான் கிழங்கு – 100 கிராம்
சாதிக்காய் - 100 கிராம்
சாதிப்பத்திரி – 100 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
வால் மிளகு – 25 கிராம்
அரிசி திப்பிலி – 25 கிராம்
ஏல அரிசி – 25 கிராம்
கோரைக் கிழங்கு – 25 கிராம்
கடுக்காய்த் தோல் – 25 கிராம்
நெல்லிக்காய் தோல் – 25 கிராம்
தேன் – 500 கிராம்
குங்குமப்பூ – 5 மி.கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 1 கிலோ
பசும்பால்
இளநீர்
செய்முறை:

அமுக்கிரான் கிழங்கை உடைத்து மண் சட்டியில் 500 மி.லிட்டர் பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிக்காயை உடைத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் இளநீரும் 500 மி.லிட்டர் பசும்பாலையும் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, வால் மிளகு, அரிசி திப்பிலி, ஏல அரிசி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், நெல்லிக்காய்  தோல் ஆகியவைகளை கல் உரலில் இடித்து வடிகட்டவேண்டும்.
அரைத்து பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், கசகசா, பூனைக்காலி விதை இவைகளை ஒன்றாக ஆட்டுக் கல்லில் நன்றாக ஆட்டிக் கொள்ளவேண்டும். சர்க்கரையை ஒரு இரும்புக் கடாயில் இடித்துப் போட்டு பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு மூடி வைத்து 30 நிமிடங்கள் கழித்து தோலை நீக்கி கழுவித் துடைத்து அம்மியில் வெண்ணெய்ப் பதமாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
பிஸ்தாப் பருப்பை ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி 30 நிமிடங்கள் மூடி வைத்திருந்து பருப்பை முன்போல் அரைத்துக் கொள்ளவேண்டும்.
பாதாம் பிசினை ஓர் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் இளநீர் விட்டு 9 மணி நேரம் அரைத்துக் கொள்ளவேண்டும்.
கசகசாவை 500 மி.லிட்டர் பசும்பாலில் ஊறவைத்து பாதாம் பிசினையும் கசகசாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
பூனைக்காலி விதை 500 கிராம் வாங்கி ஓட்டைப் போக்கி எடை அளவு பருப்பை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 500 மி. லிட்டர் இளநீர் விட்டு மூடி விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து இளநீர் சுண்டியதும் பருப்பை எடுத்து அரைத்துக் கொள்ளவேண்டும். 500 மி.லிட்டர் தூய நீர் விட்டு விறகடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து கொதி வந்ததும் அரைத்துள்ள பருப்பு வகைகளைப் போட்டு மர அகப்பையால் கிண்டவேண்டும்.
ஒரு நிமிடங்கழித்து மற்ற மருந்துச் சரக்குகளையும் கொட்டி 5 நிமிடங்கள் கிண்டி தேன் ஊற்றி 3 நிமிடங்கள் கிண்டவேண்டும். இளகல் பதம் வந்ததும் இறக்கி நெய்யை உருக்கி ஊற்றி 10 நிமிடங்கள் கிண்டவேண்டும். கிண்டி முடித்த பின்பு குங்குமப்பூ 5 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:

10 வயது முதல் 16 வயது வரை சிறுவர்களுக்கு இரவு உணவு  சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து 5 கிராம் இளகலுடன் பசும்பாலும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
15 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு 10 கிராம். 21 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு 15 கிராம். இந்த வயதுக்குள் திருமணமானவராக இருந்தால் காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் இரண்டு வேளை வீதம் எண்பது நாட்கள் சாப்பிடலாம்.
26 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன் போல் 80 நாட்கள். 31 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 15 +15 + 15  கிராம் இளகல் 80 நாட்கள். காலை, பகல், இரவு உணவுக்குப் பின் 80 நாட்கள் 36 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இதே கணக்கில் மருந்தை சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறையும்.
தீரும் நோய்கள்:

ஆண்மைக் குறைப்பாடு, சிறுவர்களுக்கு உடல் இளைப்பு, குழந்தையின்மை ஆகிய நோய்கள் குறையும். உடல் நல்ல பலம் பெறும்.
பத்தியம்:

பழஞ்சோறு, மொச்சை, பூசணிக்காய், கோழிக் கறி, கருவாடு ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது.
குறிப்பு:

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருந்துண்ணும் நாட்களில் பசிக் குறைவு ஏற்பட்டால் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். ஒரு வேளைக்கு ஐந்து கிராம் வீதம் குறைத்துக் கொள்ளவேண்டும்.🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

*ஈரோடு மாவட்டம் பவானி*

*செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

"...8 க்குள் ஒரு யோகா..."*

*"...8 க்குள் ஒரு யோகா..."*
(முழுவதும் படியுங்கள்)
🤝
*"எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"*
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
🙌
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..
🤝
*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,*
6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...!
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!
🤝
*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*
🤝
ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .
🤝
பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில்
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.
🤝
*1.* பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
*2.* இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்...!

*சரி...!* இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்...!
🤝
அந்தவடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்...! 

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,
🤝
*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!
🤝
*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!
🤝
*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!
🤝
*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!
🤝
*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!
🤝
*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!
🤝
*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!
🤝
*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!
🤝
இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி
*"வாசி யோக"த்திற்கு இணையானது,*
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது...!

📚படித்ததிலிருந்து பிடித்த ஒரு பதிவு *&* பகிர்கிறேன்...,✍

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...