Monday, February 25, 2019

குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவும் கொய்யாப்பழம்...!

*குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவும் கொய்யாப்பழம்...!*

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை  கண்பார்வைத் திறனை  மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத்  திறனையும் அதிகரிக்கிறது.
கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான  நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.

கொய்யாப்பழத்தில் விட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை  அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில்  லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை  போக்க உதவுகிறது.

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு  மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.

குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப்  பாதுகாக்கிறது.

*அனைவருக்கும் பகிருங்கள்.*

பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் லவங்கப்பட்டை...!!.*

*பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் லவங்கப்பட்டை...!!.*

சீதபேதி, ரத்தப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் திறன் கொண்டது. பிரசவ வலி குறைபாடு, மாதவிலக்கு பிரச்னைகள், நாள்பட்ட இடுப்புவலிகளை குணப்படுத்த லவங்கப்பட்டை பயன்படுகிறது.
வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த  துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால்  செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள்  இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றை சம அளவு எடுத்து நான்கில் ஒரு பங்காக வற்றியதும் காலை, மாலை அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம்  முறியும்.

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும்  சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு  வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.

தாது நட்டம் உள்ளவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும்  பெறலாம்.

லவங்கப்பட்டையை பொடித்து நீரிலிட்டு கொதிக்க வைத்து போதிய சூட்டில் வாய் கொப்புளிக்க பல் வலி போகும். வாய் நாற்றம் விலகி  பற்கள் ஆரோக்கியம் பெறும்.

லவங்கப்பட்டையில் ‘மாங்கனீஸ்’ என்னும் தாது உப்பு அதிக அளவு இருப்பதால் மூட்டு வலியைக் குணப்படுத்துகிறது. மாங்கனீஸ் எலும்புகளை பலப்படுத்தக்கூடியது. மேலும் ரத்தத்தையும் இணைப்புத் திசுக்களையும் பலப்படுத்தவல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு  மாங்கனீஸ் இன்றியமையாததாக விளங்குகிறது.

*அனைவருக்கும் பகிருங்கள்.*

உணவே மருந்து*

: ✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*உணவே மருந்து*

*மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு,*

*மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே*
*அவர்களின் உடல் நலத்தைக் தீர்மானிக்கின்றன.*

*தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்ககூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது. இயற்கை உணவுமுறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதுகாக்க முடியும் என மருத்துவர் பரிந்துரைகின்றனர்.*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂

*இன்று சமையல் முறைகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம்,*
*மாவட்டத்துக்கு மாவட்டம்* *வேறுபடுகின்றன. உணவகங்கள்*
*பெருகியுள்ளன.* *சத்துக்காக அன்றிச் சுவைக்காக* *உண்ணும் நடைமுறை மிகுந்திருக்கிறது. அட்டைப்பெட்டிகளிலும் தாள் பைகளிலும் பதப்படுத்தி அடைத்த ஆயத்த* *உணவுவகைகள், விரைவு உணவுகள், வழக்கத்துக்கு வந்துள்ளன. அதனால், நோய்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂‍ *உணவே மருந்து என்னும் நிலைமாறி, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.*
*உணவின் இன்றியமையாமை :*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*உண்டி முதற்றே உலகு என்பது நாமறிந்தது.*
*உணவு,* *உடலுக்கு*
*வலிமையைத் தருவது,* *வளர்ச்சியளிப்பது,* *வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதுடன் கொள்கைகள்,* *பழக்கவழக்கங்கள், நாகரிகம்,*

*சமூக அமைப்பு, வாழ்க்கைத் தரம் முதலியவற்றிலும் மாறுபாடுகளை உண்டாக்கவல்லது. அஃது உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதாகும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பது* *உலகறிந்த உண்மை. எனவேதான்,* *பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது மணிமேகலைக் காப்பியம்.* *இப்பிணிக்கு மருந்து உணவே. ஆதலால்தான்,* *உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே எனப்* *புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன.*
*உணவே மருந்து* :
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*உயிர்,* *உடலோடுகூடிய நிலையில்* *எப்போதும் புறச்சூழலோடு போராடி* *வருகிறது.* *அதில் வெற்றியடைவதே உடல்நலமாகும்,* *தோல்வி அடைந்தால் நோயில் முடியும். அந்நோயைத் தீர்த்து இன்பமளிப்பதே மருந்து.*
*திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே* *மருந்தாகும்*
*தன்மையைத்* *திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂‍
*உண்ட*
*உணவு,* *செரித்தபின்னரே மீண்டும் உண்ணவேண்டும்மெனத் தமிழ்*
*மருத்துவம் கூறுகிறது.* *முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு*
*மருந்துண்ணும் தேவை* *ஏற்படாது.*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*மருந்தென* *வேண்டாவாம் யாக்கைக்கு* *அருந்தியது*
*அற்றது போற்றி* *உணின்*் . – *குறள் *942*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*என்பது வள்ளுவர் வாக்கு. எனவே,* *உடல்நலத்துக்குப்*
*பொருந்திய* *உணவு எது?* *பொருந்தா* *உணவு எது? என*
*ஆராய்ந்து,* *தெளிந்து உணவு முறையை வகுத்துக்கொண்டால்,*
*உடலுக்கு ஊறுசெய்யும் நோய்கள் நம்மை அணுகா.*
*தமிழகத்து உணவு,* *தொன்றுதொட்டு மருத்துவமுறையில்*
*சமைக்கப்படுகிறது. வெப்ப நாடான நமது நாட்டுச்* *சமையலுக்குப்*
*புழுங்கலரிசியே* *ஏற்றது.* *அன்றாடச்* *சமையலில்* *கூட்டுவனவற்றுள்*
*மஞ்சள்,* *நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்தமல்லி,* *பித்தத்தைப்*
*போக்கும். சீரகம்,* *வயிற்றுச்* *சூட்டைத்தணிக்கும். மிளகு,* *தொண்டைக்*
*கட்டைத்* *தொலைக்கும். பூண்டு,* *வளியகற்றி வயிற்றுப்பொருமலை*

🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*நீக்கிப் பசியை மிகுவிக்கும்.*
*வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் *குருதியைத்* *தூய்மைபடுத்தும*்.
*பெருங்காயம் வளியை* *வெளியேற்றும். இஞ்சி,* *பித்தத்தை ஒடுக்கிக்*
*காய்ச்சலைக் கண்டிக்கும்.* *தேங்காய் நீர்க்கோவையை நீக்கும்.*
*கறிவேப்பிலை, மணமூட்டி உணவிருப்பை உண்டாக்கும்.*
*நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்.*
*சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்துச் *செரிமான*
*ஆற்றலை  உடலுக்கு வலிமை ஊட்டும்* *கழிவு* *அகலவும்*
*கீரை நல்லது.* *உடலுக்குக் குளிர்ச்சி* *ஏற்படவும் பித்தம் போக்கவும்*
*எலுமிச்சை ஊறுகாயை* *மோர்ச்சோற்றுடன்* *உண்ணலாம்.*
*தவிர்க்க* *வேண்டியன :*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*நோய்க்கு முதல் காரணம்,* *உப்பு.* *இதனைக் குறைவாகக்* *சேர்த்தல்*
*நன்று.* *உப்பு நிறைந்த* *பொருள்களான ஊறுகாய்,* *அப்பளம், வடாமவாழைக்காய்ச்*,* *முந்திரிப்பருப்பு, வறுத்த உருளைச் சீவல்,* *வாழைக்காய்ச்*
*சீவல்,* *புளித்தமோர்* *முதலியனவற்றை முழுவதுமாகத் *தவிர்த்தல்*
*வேண்டும்.*
*கொழுப்பு நிறைந்த* *இறைச்சிகள்,* *முட்டையின்* *மஞ்சள் கரு, தயிர்,*
*நெய்,* *வெண்ணை,* *பாலாடை,* *பனிக்கூழ், இனிப்புக்கட்டி *ஆகியவற்றை*
*நீக்குதல் வேண்டும்.*
*காரமும் புளிப்பும் மிக்க உணவுகள் கூடா.* *எண்ணெயில் *வறுத்த,*
*பொரித்த உணவுகளை ஒதுக்குதல் நன்று.* *நொறுக்குத் தீனி*
*வயிற்றுக்குக்* *கேடு என்பது பழமொழி.* *நொறுக்குத் தீனி கூடவே கூடாது.* *இடையிடையே எதனையாவது* *தின்பதும் கொறிப்பதும் உடலுக்கு நல்லது இல்லை.*
*உண்ணும் முறை :*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*எளிதில் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை,*
*பால் இவற்றையே குடல் ஏற்றுக்கொள்கிறது. நாச்சுவை கருதி*
*உண்ணாமல், உடல்நலங்கருதி உண்ணுதலே நல்லது.*
*உணவை விரைவாக விழுங்குதல் கூடாது, நன்றாக மென்று*
*விழுங்குதல் வேண்டும்.* *அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.* *உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும்,* *அது செரிக்காது, குடலும் தன் செரிமான*
*ஆற்றலை இழந்துவிடும்.*
*உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.*
*காய்கறிகளை முக்கால்* *வேக்காட்டில் வேகவைத்து* *உண்ணுதல்*
*வேண்டும்.* *வேகவைத்த காய்கறி நீரில் மிகுதியான சத்துகள்*
*இருப்பதனால்,* *அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*
*நொறுங்கத் தின்றால் நூறு வயது :*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*தண்ணீரும் மருந்தே.* *நீரின்றியமையாது உலகு என்பது வள்ளுவம்.* *இயற்கை* *உணவுப்பொருள்களில் நீரில்லாத உணவுப்பொருள்களே இல்லை.* *எல்லாவகையான உணவுப் பொருள்களும்* *விளைவதற்குக் காரணாமாக அமைவது நீர்.*
*உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கும்,* *குருதி தூய்மை*
*பெறுவதற்கும் உடலிலுள்ள* *கழிவுப்பொருள்கள்* *வெளியேறுவதற்கும்*
*நீர் இன்றியமையாதது. எனவே, நீரைத்* *தேவையான( நாளொன்றுக்குக்*
*குறைந்தது* *மூன்று லிட்டர் )* *அளவுக்குக் குடித்தல்* *உடலுக்கு நல்லது.*
*உணவு உண்ணும் போது இடையில் நீர் குடித்தல் கூடாது.*
*சமச்சீர் உணவு :*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு,* *மாச்சத்து,*
*கனிமங்கள்,* *நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு.* *எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது ஒவ்வொருவரின் கடமை*
*சோறும் காய்கறியும் அரைவயிறு பால், மோர்,* *நீர் கால்வயிறு,*
*கால்வயிறு வெற்றிடமாக இருத்தல்* *வேண்டும். வயிறு புடைக்க*
*உண்ணுதல் நோய்க்கு* *இடமளிக்கும்.* *எனவேதான்,* *ஒளவையார் மீதூண் விரும்பேல்* *என்றார்.* *அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி.*
*வயது ஏறும்போது கொழுப்புச்சகுருதியுடன்*ின் *அளவைச் சிறிது*
*சிறிதாகக்* *குறைத்துக்கொண்டே வருதல் வேண்டும்.* *உணவைக்*
*கட்டுபடுத்துவ*தொடு எளிய* *உடற்பயிற்சிகளையும் செய்தல் வேண்டும்.* *நடைபயிற்சியே எளிய உடற்பயிற்சி.* *நாள்தோறும்* *தவிராமல் நடந்தால் நோய்* *நம்மைவிட்டு நடக்கும்,* *ஓடினால் நோய் நம்மைவிட்டு ஓடும், எப்போதும் படுத்துக் கிடந்தால் நோய் நம்மீது படுத்துக்கொள்ளும்.*
*காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்  காலைத்தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே.* *– கவிமணி*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*உடல்நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை*
*மேற்கொண்டால், நெடுநாள் நலமாக வாழலாம்.* *உண்பதற்காக*
*வாழாமல்,* *வாழ்வதற்காக உண்டால் மருந்தென்பதே உடலுக்குத்*
*தேவை இல்லை. திருமூலரும்* *உடலைக் காத்தலின் *தேவையை*
*வலியுறுநாடு* *நலம்பெற நல்லுடல் பெற்ற மக்கள் தேவை.* *நல்லுடல் பெற* *நல்லுணவு* *முறையை* *மேற்கொள்ளுதல் வேண்டும்.*
*உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை* *வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. – திருமூலர்.*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
*அறுசுவையின் பயன்கள் :*

*இனிப்பு –* *வளம்.*
*துவர்ப்பு –* *ஆற்றல்.*
*கைப்பு –* *மென்மை.*
*கார்ப்பு –* *உணர்வு.*
*உவர்ப்பு –* *தெளிவு.*
*புளிப்பு –* *இனிமை*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂

பெண்கள் நலமே குடும்பத்தின்* *பலம்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

*பெண்கள் நலமே குடும்பத்தின்*
*பலம்*

*பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்!*

*பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும் தன்* *குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப் படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*நீ இனி குழந்தை இல்லை. குமரி…’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே. அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்னைகள்… *இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.*
*வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக* *விடக்கூடிய விஷயமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண்* *குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.*

🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில், உணவைத் தவிர்ப்பார்கள்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.*

🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

*வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் அதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால்தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மனச்சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உணர்ந்து, புரிந்து நடந்தால் போதும்*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀‍

*பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகளில் சில தகவல்கள் இதோ உங்கள் பார்வையில்*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*1. கறுப்பு உளுந்து*

*தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.*

*2. நல்லெண்ணெய்*

*ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*3.நாட்டு கோழி_முட்டை*

*பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு கோழி முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.*

*4.கம்பு*

*வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*5.பொட்டுக்_கடலை -*

*பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*6.அசைவ உணவுகள்*

*மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*7.கீரை வகைகள்*

*மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*8. பாகற்காய், சுண்டைக்காய்*

*சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.*

*உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*9.சத்துமாவு உருண்டை*

*கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.*

*10. கொண்டைக்கடலை*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.*

*சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.*

*சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள்.*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்..*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀
*இந்த உணவுப்பட்டியலை உணவாக கொண்டு வளரிளம் பெண்களை திடகாத்திரமான பெண்களாக மாற்றுங்கள்*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀🧚‍♀

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...