Tuesday, November 27, 2018

வாழ்க்கை இனிதாக..'' ........................................

❤இன்றைய சிந்தனை..( 11.10.2018..)..
.............................................

''வாழ்க்கை இனிதாக..''
........................................

வாழ்க்கை இனிதாக அமைய என்ன செய்ய வேண்டும் என சொல்லும் ஒரு சிறிய கதை.

ஒரு ஊரில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஏழைக் குழந்தைகள்,வயதானவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வந்தார்..இலவச மருத்துவம் கூட பார்த்து வந்தார்..

ஒருநாள் அவர் வசித்த ஊருக்கு சில பேர் வந்து அவரை சந்தித்து அவரிடம், “ஐயா நாங்கள் புனித நதிகளில் நீராடினால் எங்களுடைய வாழ்க்கை இனிதாக என நினைக்கின்றோம்.

அதற்காக தீர்த்த யாத்திரை செல்ல இருக்கிறோம். நீங்களும் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினர்.

அதற்கு அவர் “என்னால் உங்களுடன் வர இயலாது. ஆதாலால் நீங்கள் நீராடும் புனித நதிகளில் இந்த மிளகாயையும் நீராட்டி, திரும்ப என்னிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறினார்.

அவர்களும் அவ்வாறே செய்வதாகக் கூறி மிளகாயை வாங்கிச் சென்றனர். சில நாட்கள் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர்.

அவர்கள் அந்த ஞானி கொடுத்த மிளகாயை திருப்பி கொடுத்து “ஐயா, நீங்கள் கூறியவாறே புனித நதிகளில் மிளகாயை நீராட்டி விட்டோம்” என்று கூறினர்.

அவர் மிளகாயை சிறு துண்டுகளாக்கி அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கச் சொன்னார்.

பின் அவர்களிடம் “புனித நதிகளில் நீராடியதால் இம்மிளகாய் இனிக்கும். நீங்கள் இப்போது அதனை உண்ணுங்கள்” என்று கூறினார்.

எல்லோரும் ஆர்வத்துடன் மிளகாயை வாயில் போட்டு உண்டனர்.

அம்மிளகாய் துண்டுகளும் எல்லா மிளகாயைப் போலவே காரமாகவே இருந்தது. எல்லோருடைய முகமும் மிளகாயின் காரத்தால் வெளிறியது.

கூட்டத்தில் ஒருவர்  “ஐயா, புனித நதிகளில் நீராடிய மிளகாய் இனிக்கும் என்றீர்கள். ஆனால், இது காரமாக இருக்கிறதே” என்றார்.

அதற்கு அந்த ஞானி அவர்களிடம்,

“மிளகாய் எந்த புனித நதிகளில் நீராடினாலும் அதனுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளவது இல்லை.

அதைப் போலவே நாமும் நம்முடைய தவறான செயல்கள், தீய பழக்கங்கள், கெட்ட குணங்களை மாற்றிக் கொள்ளமால்.,

புனித நதிகள் என்று சொல்லக் கூடியயவற்றில்  நீராடினாலும் எந்த பயனும் ஏற்படாது.

எத்தனை கோவிலுக்கு போனாலும், உருண்டு,புரண்டு வழிபாடுகள் மேற்கொண்டாலும், எத்தனை விரதங்கள் இருந்தாலும் எந்த மாற்றமும் உண்டாகாது..,

ஆம்.,நண்பர்களே..,

நம்முடைய மனங்களிலும், குணங்களிலும் நல்ல செயல்களிலும் மாற்றங்கள் உண்டானால்தான் வாழ்க்கை இனிதாகவும்,மகிழ்ச்சியாகவும் மாறும்.

நல்ல எண்ணங்களாலும், இரக்க குணத்துடன், நிறைந்த மனத்துடன் இனிதான வாழ்க்கை வாழுங்கள்..🌷❤

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...