Wednesday, August 1, 2018

வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.

வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.

இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

கண்நோய்கள் நீங்கும்
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்

ஆயுள் புல்லிங்
உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பாதத்தை கழுவினால் நோய் தீரும். ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும்.

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!! * சூரிய யோகி

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா!!!

* சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன்.

★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள்.

★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைலைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மறியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது.

★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார்.

★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம்.

★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம்.

★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது.

★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்கலாம்.

★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும்....

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...