Sunday, June 21, 2020

கருவளையம் மறைய...💫தமிழ்💫* தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு

கருவளையம் மறைய...

💫தமிழ்💫
* தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் கீழே தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி வர, படிப்படியாகச் சரியாகிவிடும்.

* உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுடன் துருவிச் சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துவர, கருவளையம் மறையும்.

 * பாதாம் எண்ணெயை தினமும் கண்களின் கீழே தடவிவர, கருவளையம் நீங்கும்.

 * காய்ச்சாத பாலை கண்களைச் சுற்றித் தடவுவதும் நல்ல தீர்வாகும்.

நிலக்கடலை சக்கரையை கொல்லும்

டாக்டர்களின் எதிரி
நிலக்கடலை 
சக்கரையை கொல்லும்
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்......*

*காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்......*

.
*நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்க வைத்துத்தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.*

இரண்டு சக்கர வாகனத்தில்பயணிக்கும்பொழுது,  பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபா, கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். 

இதனால் நமக்குப் பல நோய்கள் உருவாகின்றன. காரணம் என்னவென்றால், காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கிச் சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கின்றன. எனவே, ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. 

ஆரோக்கியமும் அதிகமாகிறது. கால்களுக்கு, நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

எனவே, தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதைத் தவிருங்கள்! குறிப்பாக, சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். 

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. இதனால், ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் (சம்மணமாக) அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிடச் சாப்பிடச் சாப்பாடு ஜீரணமாகி விடும்.

ஆனால், இப்பொழுது பலர் காலை மடக்கி உட்காரவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்; 

அது மலம் கழிக்கும்பொழுது. யாருடைய வீட்டில் இந்திய பாணிக் கழிப்பறை (Indian style toilet) என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமரும்படியான கழிப்பறை இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால், மேலைப் பாணிக் கழிப்பறை (European style toilet) உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு, முழங்கால் வலியும் அவை சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றன. ஏனென்றால், இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது.

முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது. ஆனால், இப்பொழுது சிறு குழந்தைகள் கூட மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துவதால் அவர்களும் தரையில் அமர முடியாமல் தவிக்கிறார்கள். 

உங்களால் சம்மணங்கால் போட்டுத் தரையில் உட்காரக் கூட முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்குக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

எனவே, ஏற்கெனவே மூட்டு, முழங்கால் வலி முதலான ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் பரிந்துரைப்படி மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் தவிர, மற்றவர்கள் தயவு செய்து அதைப் பயன்படுத்த வேண்டாம்! 

அதற்குப் பதிலாக இந்திய பாணிக் கழிப்பறை பயன்படுத்துங்கள். இதனால், குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதைப் போல் அமர்ந்து எழ வேண்டியிருக்கும்.

*FORWARD MESSAGE*
*என்றும் அன்புடன்...

தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦

♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦
  

♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன? நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா? நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்.

♦கழுத்து மற்றும் முதுகுவலி உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக (side lying) அல்லது நேராக மல்லாக்க படுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம் தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்.

♦தலையணை பொதுவாக தலையணை மிக முக்கியம். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். பொதுவாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும்.

♦முதுகின் கீழ்ப்பகுதி வலி? ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். நான் நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முற்றிலுமு் பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது நல்லது.

♦உட்காரும் நிலை நீங்கள் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும்

இருமலை ஒரே நாளில் போக்க இதுமட்டும் தான் சிறந்த வைத்தியம்!

இருமலை ஒரே நாளில் போக்க இதுமட்டும் தான் சிறந்த வைத்தியம்!

💫தமிழ்💫

இருமலானது இரண்டு வகையில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி, நுரையீரலுக்கு பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மற்றொரு வகை இருமலானது, தூசு, ரசாயனம் போன்ற பலவிதமான கிருமிகள் காரணங்களால் அலர்ஜி போன்று தொடர்ச்சியான வறட்டு இருமல் ஏற்படுகிறது.

வறட்டு இருமலை நிரந்தரமாக குணப்படுத்த, சூப்பரான டிப்ஸ் இதோ :-

தேவையான பொருட்கள்

பால்- 1 டம்ளர்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு – 1
செய்முறை

பாலை நன்றாக சூடுபடுத்தி அந்த பால் பொங்கி வரும் போது முட்டையின் மஞ்சள் கருவை கலந்து நன்றாக கலக்க வேண்டும்.

பின் அந்த பால் இளஞ்சூடாக இருக்கும் போது, அதில் தேன் கலந்து, அதை தினமும் இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் குடித்து வர வேண்டும். இதனால் தீராத வறட்டு இருமல் குணமாகிவிடும்.

தேனை இப்படி பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பயனையும் பெற முடியும்!*

🔊 *தேனை இப்படி பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பயனையும் பெற முடியும்!*


பண்டைய காலத்திலிருந்தே தேன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் தேனின் நன்மைகள் ஆயுர்வேதத்திலும் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. தேன் என்பது தேனீக்களால் பூக்களின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் திரவமாகும். இது பல கட்டங்களில் மிகவும் நீண்ட செயல்முறைக்குப் பிறகு தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் உள்ள தேன் ஒரு மருந்தாக பார்க்கப்படுகிறது. இப்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

எந்த வடிவத்திலும் தேனைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சமமாக நன்மை பயக்கும். அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பயன்படுத்தப்பட்ட தேன் சுத்தமானதா அல்லது கலப்படமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் கலப்படம் செய்யப்பட்ட தேனை சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தேனின் தரம் குறித்து மக்கள் எப்போதும் குழப்பமடைவார்கள். உண்மையான தேன் மிகவும் அடர்த்தியானது மற்றும் தண்ணீரில் சேர்க்கும்போது, ​​அது எளிதில் கரைவதில்லை, மாறாக அது கீழே உறைந்து போகும், அதே நேரத்தில் போலி தேன் தண்ணீரில் விரைவாக கரைகிறது.

தேனில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்:
தேனில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு மூலமாகும். பிரக்டோஸ், கார்போஹைட்ரேட், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் தேனின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
ஒரு தேக்கரண்டி தேனில் (21 கிராம்) 
64 கலோரிகள், 17 கிராம் சர்க்கரை (பிரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ்) உள்ளது. இதில் கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் எதுவும் இல்லை.

தேனின் முக்கிய ஆரோக்கியம் தேனின் நன்மைகள்:
1) வெட்டு அல்லது தீக்காயங்களுக்கு தேன் நன்மை பயக்கும்: –
தோல் வெட்டப்படும்போது அல்லது உரிக்கப்படும்போது, ​​தேனில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தோலில்  இருக்கும் எரிந்த பகுதியை விரைவாக குணப்படுத்துகிறது மற்றும் சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

பயன்பாட்டு முறை: 
உங்கள் தோலில் லேசான கீறல் ஏற்பட்ட பகுதியில் அல்லது சில பகுதியில் எரிச்சல் இருந்தால் நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனைப் பயன்படுத்துவதால் எரிச்சல் குறையும், அந்த பகுதியில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.

2) தேன் இருமல் நிவாரணத்திற்கு உதவுகிறது: உங்களுக்கு பல நாட்களாக குணமாகாத இருமல் என்றால், நீங்கள் தேனைப் பயன்படுத்த வேண்டும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்று மேலும் வளரவிடாமல் தடுக்கிறது.  மேலும் இது கபத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.  இது கபத்தை எளிதில் வெளியே கொண்டு வருகிறது.

உட்கொள்ளும் முறை:
படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு தேக்கரண்டி தேனை மந்தமான சூடு உடைய தண்ணீரில் கலக்கவும். இது சளியைக் குறைத்து இருமலில் இருந்து விரைவான நிவாரணத்தை அளிக்கிறது அல்லது இஞ்சி, தேன் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பான திரவத்தை நீங்கள் பருகலாம்.

3) எடை இழப்புக்கு தேனின் பயன்கள்:
உங்கள் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தால், தேன் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். தேனில் கொழுப்பு இல்லாததால் தவறாமல் தேனை குடிக்கவும். எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இது உடலின் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.

நுகர்வு முறை:
ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரை எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான  தண்ணீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

4) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது:
தேனில் குறிப்பிடத்தக்க அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் இதயம் தொடர்பான பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. இது தவிர, தேனின் முக்கிய செயல்பாடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது பல தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

உட்கொள்ளும் முறை:
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து குடிக்கவும். பாலில் தேன் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5) தோலுக்கு தேனின் பயன்கள்:
தேன் சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் மற்றும் தோல் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க தேனைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்பாட்டு முறை:
*வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு: 
ஒரு தேக்கரண்டி தேனை எடுத்து சருமத்தின் வறண்ட பகுதியில் தடவவும். இது 15-20 நிமிடங்கள் உலர விடவும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு வாரத்தில் 2-3 முறை இதைப் பயன்படுத்துங்கள்.

*தோல் வெண்மைக்கு: 
முகத்தின் பிரகாசத்தை அதிகரிக்க, நீங்கள் தேனுடன் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் தேன் மற்றும் எலுமிச்சை, தேன் மற்றும் பால், தேன் மற்றும் வாழைப்பழம் மற்றும் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை தயார் செய்யலாம்.

ரொம்ப ஒல்லியா அசிங்கமா இருக்கீங்களா? குண்டாக ஆசைப்படுறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க...*

🔊 *ரொம்ப ஒல்லியா அசிங்கமா இருக்கீங்களா? குண்டாக ஆசைப்படுறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க...*


எங்க பார்த்தாலும் எடையைக் குறைக்கும் செய்திகளாக உள்ளதா? நீங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவரா? அதற்கான வழிகளை அன்றாடம் தேடுபவரா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. உடல் எடையைக் குறைக்கும் வழிகளை ஒருபுற மக்கள் தேடும் அதே வேளையில் எடையை அதிகரிக்கும் வழிகளைத் தேடும் மக்களும் உள்ளனர். ஆம், எப்படி ஒல்லியாவது கடினமான ஒரு விஷயமோ, அதேப் போல் தான் குண்டாவதும் அவ்வளவு எளிதானது அல்ல.



உலகில் பல மக்கள் மிகவும் ஒல்லியாக ஓமக்குச்சி போன்று காணப்படுவதுண்டு. அத்தகையவர்களைக் கண்டால் வயதிற்கு ஏற்ற உடலமைப்பைக் கொண்டிருக்கமாட்டார்கள். இந்நிலையில் அவர்கள் பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு. இதனால் ஒல்லியாக இருக்கும் பலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இப்படி ஒருவரது உடல் எடை அதிகரித்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கே ஆபத்தை உண்டாக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், எப்போதும் ஆரோக்கியமான வழியைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானதும் நல்லதும் கூட.
அதற்கு தமிழ் போல்ட்ஸ்கை உடல் எடையை அதிகரிக்க உதவும் ஒருசில ஆரோக்கியமான பழக்கங்களை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் ஆரோக்கியமான வழியில் எடையை அதிகரித்துக் காட்டலாம்.



வழி #1

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பளுத்தூக்கும் பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக ஓவர்ஹெட் ப்ரஸ், செஸ்ட் ப்ரஸ், பெண்ட் ஓவர் ரோஸ், லஞ்சஸ், கர்ல்ஸ் மற்றும் ஸ்டிவ் டெட்லிப்ட் போன்ற பயிற்சிகளை ஒரு செட்டிற்கு 8-12 தடவை என தினமும் 4-5 செட் செய்ய வேண்டும். இந்த பளுத்தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, முடிந்த அளவு அதிக அளவிலான எடையைத் தூக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஆறு நாட்கள் செய்து, ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.



வழி #2

எப்போதும் கலோரி அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நட்ஸ், உலர் பழங்கள், விதைகள், உலர்ந்த பெர்ரிப் பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவற்றை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிட வேண்டும். தினமும் உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.



வழி #3

அன்றாடம் உண்ணும் உணவுகளில் கலோரிகள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரையில் வெற்றுக் கலோரிகள் உள்ளதால், அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளான உருளைக்கிழங்கு, சீஸ் சூப், கொழுப்பு இல்லாத பால் சேர்க்கப்பட்ட சூப், பால், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.



வழி #4

ஜூஸ் குடிப்பதாக இருந்தால், ஒரே ஒரு பழம் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸிற்கு பதிலாக பல பழங்களால் ஆன ஜூஸைத் தேர்ந்தெடுத்துக் குடிப்பது நல்லது. ஆப்பிள், பீச், பெர்ரி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் ஒன்றாக உட்கொள்ள ஏற்றது. ஜூஸ் வழியே கலோரிகளை அதிகரிக்க நினைத்தால், அவகேடோ, நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களைக் குடியுங்கள். ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் கிடைத்து, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.



வழி #5

டெசர்ட்டுகளை உண்பது ஆரோக்கியமானது மற்றும் இது உட்கொள்ளும் கலோரியின் அளவை அதிகரிக்கவும் உதவும். யோகர்ட்டில் க்ரனோலா மற்றும் பழங்கள் சேர்த்து உண்பது, தவிடு மஃப்பின்கள் போன்றவை மிகவும் சிறப்பான டெசர்ட்டுகளாகும். உடல் எடையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு கலோரிகளை எடுப்பது அவசியமாகிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், ஆரோக்கியமான உணவுகளின் மூலம் கலோரிகளின் அளவை அதிகரிக்க வேண்டும்.



வழி #6

பானங்களின் மூலம் கலோரி அளவை அதிகரிக்க நினைப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். சோடா, பீர், ஒயின் மற்றும் இதர சோம பானங்கள் உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானங்கள் இல்லை. இவற்றில் இருப்பது வெற்று கலோரிகள் ஆகும். அதாவது இவை ஆரோக்கியமற்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும். நற்பதமான பழச்சாறுகள் மற்றும் பானங்களான மாம்பழம் மில்க் ஷேக் போன்றவை உடல் எடையை அதிகரிக்க சிறப்பான பானமாகும். எனவே முடிந்தால் தினமும் ஒரு மாம்பழ மில்க் ஷேக் குடியுங்கள்.

உடல் எடையை குறைப்பது இவ்வளவு சுலபமா…காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க….பிறகு எப்படி ஸ்லிம்மா ஆகுறீங்கன்னு பாருங்க*

🔊 *அட….உடல் எடையை குறைப்பது இவ்வளவு சுலபமா…காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க….பிறகு எப்படி ஸ்லிம்மா ஆகுறீங்கன்னு பாருங்க*



ஒரு சிறந்த எடையை அடைவது அல்லது இடுப்பைச் சுற்றியுள்ள கூடுதல் அங்குலங்களைக் குறைப்பது அனைவரின் கனவு. ஆனால் அதற்கு வலுவான விருப்பம் மற்றும் விஞ்ஞான உண்மைகளை ஆதரிக்கும் அணுகுமுறை தேவை. உடலுக்குத் தேவையானதை விட அதிகமான கலோரிகளை உட்கொள்வதை நீங்கள் கட்டுப்படுத்தும்போது, ​​தற்போதுள்ள சேமிக்கப்பட்ட கொழுப்பை உடல் செயல்பாடுகளின் மூலம் எரிக்கும்போது கொழுப்பு இழப்பு அல்லது எடை இழப்பு அடைய முடியும். 

குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கான ஒரு சிறந்த அணுகுமுறை கொழுப்பு, வறுத்த மற்றும் கலோரி நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது. அப்படிப்பட்ட உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவை தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். 

◆சியா விதைகள்:

சியா விதைகள் என்பது வேறு ஒன்றும் இல்லை சப்ஜா விதைகள் தான். இவை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இரண்டு தேக்கரண்டி சியா விதைகள் சுமார் 11 கிராம் நார்ச்சத்து கொடுக்கின்றன. பழம் அல்லது காய்கறி சாலடுகள், பழச்சாறுகள், மோர் அல்லது சூப் போன்ற மாறுபட்ட தயாரிப்புகளில் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். 
துளசி நீர், ஜீரா, அஜ்வைன், புதினா நீர் போன்றவற்றில்  சியா ஜெல்லை சேர்த்து காலை உணவோடு இணைக்கலாம். காலை உணவின் பகுதியைக் குறைத்து அதை ஃபைபர் மற்றும் புரதத்துடன் மாற்றுவதே குறிக்கோள். ஆனால் 2 தேக்கரண்டி சியா விதைகளில் 9 கிராம் கொழுப்பு உள்ளதால் இதனை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

◆கலப்பு தினை கஞ்சி:

தினையில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும். இது திருப்தியை அளிக்கிறது மற்றும் உணவு நுகர்வை குறைக்கிறது. ஃபிங்கர், பெர்ல், புரோசோ, கோடோ, ஃபோக்ஸ்டைல், பார்ன்யார்ட் மற்றும் சிறிய தினை போன்ற பல தினைகள் உள்ளன. 
ஒற்றை தானியங்கள் அல்லது வெவ்வேறு தினைகளின் கலவையானது அதிக சத்தான காலை உணவை உண்டாக்குகிறது. எல்லா தினைகளிலும், ராகி அல்லது விரல் தினை மிகவும் பிரபலமானது. இதில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது பசியின்மை அடக்கியாக செயல்படுகிறது. இதனால் எடை இழப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

◆கீன்வா :

கீன்வா என்பது ஒரு சீமைத்தினை ஆகும். இதில்  புரதங்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடை குறைக்க உதவுகிறது. அதிக சுவை பெற, அதை உட்கொள்ளும் முன் வறுக்கலாம். உப்மா, புலாவ், கிச்சடி போன்ற மாறுபட்ட தயாரிப்புகளை நீங்கள் செய்யலாம்.

◆ஓட்ஸ் :

ஓட்ஸ் ஒரு மலிவு, உயர் ஃபைபர், கடினமான  கார்போஹைட்ரேட் ஆகும்.  இது எந்தவொரு தயாரிப்பிலும் நன்றாக கலக்கிறது. நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க விரும்பினால் இதனை கொண்டு பல விதமான காலை உணவுகளை தயார் செய்யலாம். உடனடி ஓட்ஸ்  பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும். நீங்கள் ஓட்ஸை வேகவைத்து காய்கறிகள், பருப்பு, சாம்பார், தயிர், காய்கறி குழம்பு அல்லது முட்டை போன்றவற்றை சேர்த்து பயன்படுத்தவும். 

◆முட்டை:

எடை இழப்பில் புரதம் ஒரு முக்கியமான மற்றும் இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். முட்டைகள் புரதத்தின் அதிக மூலமாக அறியப்படுகின்றன. புரதங்கள் வளர்சிதை மாற்றத்தை 15 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கின்றன. மேலும் மனநிறைவையும் தருகின்றன. நீங்கள் காலை உணவின் ஒரு பகுதியை இரண்டு வேகவைத்த முட்டை வெள்ளையோடு எடுத்து கொள்ளலாம். அவை உங்களை நீண்ட நேரத்திற்கு  வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும் மற்றும் பசியை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் நீர்க்குமளி எனப்படும் வாட்டர் ஆப்பிள் நீரிழிவு நோய்க்கு நல்லதா*

🔊 *நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் நீர்க்குமளி எனப்படும் வாட்டர் ஆப்பிள் நீரிழிவு நோய்க்கு நல்லதா*



வாட்டர் ஆப்பிள் சுகாதார நன்மைகள்:
1.தீவிர சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது:
வாட்டர் ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் பிற பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. இவை இலவச தீவிரவாதிகள், மாசுபடுத்திகள் மற்றும் நச்சு இரசாயனங்கள் காரணமாக உயிரணுக்களின் சேதத்தைத் தடுக்கின்றன, அவை இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்ற சுகாதார நோய்களுக்கு வழிவகுக்கும். கதிர்வீச்சு, புகையிலை அல்லது புகை ஆகியவற்றால் உடல் வெளிப்படும் போது மற்றும் உணவை உடைக்கும் செயல்பாட்டின் போது உடலில் இலவச தீவிரவாதிகள் உருவாகின்றன. நீர் ஆப்பிள்களின் ஆக்ஸிஜனேற்ற சொத்து உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட எதிர்த்து நிற்கிறது.

போல்ஸ்டர்ஸ் நோயெதிர்ப்பு செயல்பாடு:

வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் செயல்பாட்டிலும் உதவுகிறது. வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தை நீக்கி, மென்மையான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி ஜலதோஷத்தை எதிர்க்க நோயெதிர்ப்பு சக்தியை திறம்பட அதிகரிக்கிறது.
வாட்டர் ஆப்பிள் சுகாதார நன்மைகள்

பக்கவாதம் குறைக்கப்பட்ட ஆபத்து:

வாட்டர் ஆப்பிளில் சோடியம் மற்றும் கொழுப்பின் மிகக் குறைவான அளவு வீக்கம், ஆக்ஸிஜனேற்ற சேதம், இருதய ஆரோக்கியம், பெருந்தமனி தடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் எண்டோடெலியல் ஆரோக்கியம் போன்ற பக்கவாதம் மற்றும் சுகாதார நோய்களுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. உடலில் பிளேக்கின் வளர்ச்சி பக்கவாதம் அல்லது மாரடைப்பை ஏற்படுத்துகிறது, இது வைட்டமின் சி மூலம் குறைக்கப்படலாம்.


நல்ல எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்கிறது:

வாட்டர் ஆப்பிள் என்பது நியாசினின் மூலமாகும், இது அமைப்பில் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. நியாசின் நல்ல எச்.டி.எல் கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்தத்தில் மோசமான எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது:

வழக்கமான உணவில் நீர் ஆப்பிள்களை உட்கொள்வது, உயிர்வேதியியல் செயல்முறைகளில் என்சைம்களுக்கு வினையூக்கியாக செயல்படுவதன் மூலம், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை ஒருங்கிணைப்பதை துரிதப்படுத்த உதவுகிறது. இது சரியான பசியையும் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது மற்றும் உகந்த உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.


மலச்சிக்கலைத் தடுக்கிறது:

நீர் ஆப்பிளில் உள்ள உணவு நார்ச்சத்து பொருள் இயக்கத்தில் செரிமான அமைப்பை ஆதரிக்கிறது மற்றும் மலத்திற்கு மொத்தமாக சேர்க்கிறது, இது ஒழுங்கற்ற குடல் செயல்பாடு அல்லது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். இது ஆரோக்கியமான எடையை ஆதரிக்கிறது மற்றும் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

தசை பிடிப்பை குணப்படுத்துகிறது:

வாட்டர் ஆப்பிளில் போதுமான அளவு பொட்டாசியம் மற்றும் நீர் உள்ளது. இது தசைகளின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் குறைந்த அளவு பொட்டாசியம், சோடியம் மற்றும் நீரிழப்பு காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்பைக் குறைக்கிறது.


உடலை ஹைட்ரேட் செய்கிறது:

வாட்டர் ஆப்பிள்களில் ஏராளமான நீர் உள்ளடக்கம் மக்கள் பெரும்பாலும் நீரிழப்புக்குள்ளாகும் போது, ​​கோடைகாலத்தில் தாகத்தைத் தணிக்கவும், உடலை குளிர்விக்கவும் சரியான வழியாகும். பழத்தை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது ஒரு சாற்றில் பிழிந்து, குளிர்ந்து, பருகலாம், போதுமான நீர் விநியோகத்தை உறுதிசெய்யவும், உடல் உயிரணுக்களில் எலக்ட்ரோலைட் நிரப்பவும் முடியும்.

கல்லீரல் பாதிப்பை குணப்படுத்துகிறது:

கல்லீரல் சேதம் ஆல்கஹால், இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று மற்றும் ஹெபடோடாக்ஸிக் மருந்துகளின் அதிகப்படியான நுகர்வு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. வாட்டரி ரோஸ் ஆப்பிள் கல்லீரல் வியாதிகளுக்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவும் ஹெபடோபிரோடெக்டிவ் முகவர்களைக் கொண்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு வாட்டர் ஆப்பிள் நல்லதா?

வாட்டர் ஆப்பிள்களில் சக்திவாய்ந்த ஆண்டிஹைபர்கிளைசெமிக் பண்புகள் உள்ளன, அதாவது அவை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. வெறும் 2 இன் குறைந்த கிளைசெமிக் சுமை மதிப்புடன், அவை உடலில் நுழையும் உணவில் உள்ள சர்க்கரைகளை படிப்படியாக பதப்படுத்த உதவுகின்றன, எனவே இரத்த குளுக்கோஸ் அளவை ஆபத்தான அளவில் அதிகரிப்பதை கண்காணிக்கின்றன.

ஜம்போசின் என்பது வாட்டர் ஆப்பிள்களில் உள்ள ஒரு பயோஆக்டிவ் படிக ஆல்கலாய்டு ஆகும், இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை இடைநிறுத்துகிறது, இதனால் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு.
எனவே, நீரிழிவு நோயாளிகளால் வாட்டர் ஆப்பிள்களை மிதமான அளவில் உட்கொள்ளலாம். இருப்பினும், பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும்.

உங்க குழந்தைகளின் மூளை ஸ்மார்டா வேலை செய்யணுமா? இந்த கீரையை மட்டும் கொடுத்து பாருங்க*

🔊 *உங்க குழந்தைகளின் மூளை ஸ்மார்டா வேலை செய்யணுமா? இந்த கீரையை மட்டும் கொடுத்து பாருங்க*



தமிழில் வல்லாரை கீரை என்று அழைக்கப்படும் சென்டெல்லா ஆசியட்டிகா (Centella asiatica)-வில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சரியான விகிதத்தில் தேவையான அனைத்து பொருட்களும் இதில் உள்ளன. மேலும், மூளையின்  ஸ்மார்ட் செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.

வல்லாரை கீரை என்பது வாய் அல்சர் பிரச்சினைக்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். வாய் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த வல்லாரை கீரையின் 3 அல்லது 5 இலைகளை பச்சையாக எடுத்துக்கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்று சாப்பிடலாம். இவ்வாறு செய்துவர அற்புதமான குணப்படுத்தும் விளைவை சில நாட்களுக்குள் காணலாம்.

இது நினைவக சக்தியையும் மேம்படுத்துகிறது. தொண்டை-அடைப்பு, காய்ச்சல் மற்றும் சளி மற்றும் உடல் சோர்வு போன்ற பல சிக்கல்களுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை தீர்வாகும். இது மலச்சிக்கலைக் குணப்படுத்துவதோடு கண்கள் மங்கலாக தெரிவதையும் சரி செய்து கண்பார்வையை கூர்மையாக்குகிறது.
உடல் எரிச்சல், மூட்டுகளில் வலி (முழங்கால்கள் மற்றும் கைகள்), வீக்கம், மஞ்சள் நிற சிறுநீரை கடந்து செல்வது போன்ற புகார்கள்.
வல்லாரை கீரையால் செய்யப்பட்ட சட்னி மலச்சிக்கலை குணப்படுத்தும். கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதனுடன் எந்த உணவுகளையும் தயாரிக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்ப்பது அசல் சுவையை கெடுத்துவிடும், மேலும் அதன் மருத்துவ குணப்படுத்தும் பண்புகளையும் நடுநிலையாக்கக்கூடும்.

மலச்சிக்கலைக் குணப்படுத்துவதைத் தவிர, வல்லாரை கீரை கல்லீரல் மற்றும் வயிற்றின் புண் நிலையையும் குணப்படுத்துகிறது. வல்லாரை கீரை இலைகளை பகல் நேர நிழலில் உலர வைக்கவும். ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கவும். இது செரிமான அமைப்பில் உள்ள புழுக்களைக் கொல்லும். குழந்தைகளின் வயிற்றுப்போக்கு நிலையை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

வல்லாரை கீரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றின் கூடுதல் பொருட்களைப் பயன்படுத்தி ‘சாம்பார்’ தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இல்லையெனில், சிறிது அளவு உளுந்து வறுத்து, வணங்கிய வல்லாரை கீரை, தேங்காய், உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு சுவையான துவையல் அல்லது சட்னி தயாரித்தும் எடுத்துக்கொள்ளலாம். அப்படியில்லையெனில், வல்லாரை கீரையை பச்சைப்பயறு உடன் சேர்த்து குழம்பு செய்தும் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ் எலும்புக்கு வலிமை சேர்ப்பது முதல் சருமத்திற்கு அழகை சேர்ப்பது வரை அனைத்துக்கும் இது ஒன்று போதும்*

🔊 *எலும்புக்கு வலிமை சேர்ப்பது முதல் சருமத்திற்கு அழகை சேர்ப்பது வரை அனைத்துக்கும் இது ஒன்று போதும்*



முட்டைக்கோஸ் அதன் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. பாலிபினால்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். இது உடலின் செல்களை கட்டற்ற ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதோடு, முட்டைக்கோஸில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C மற்றும் வைட்டமின் K ஆகியவை முட்டைக்கோஸில் உள்ள முக்கியமான வைட்டமின்கள் ஆகும்.
இது தவிர, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற பிற தாதுக்கள் இருப்பதால், முட்டைக்கோஸ் தண்ணீரை உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
முட்டைக்கோஸ் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது?

எனவே, முட்டைக்கோஸ் தண்ணீரை தயாரிப்பதற்கான எளிய வழி இங்கே பாருங்கள்:

ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து, பாட்டிலின் அரை பாகம் வரை துண்டாக்கப்பட்ட முட்டைக்கோஸ் கொண்டு நிரப்பவும்.

பாட்டில் நிரம்பும் வரை தண்ணீர் சேர்க்கவும்.

கடல் உப்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து ஜாடியை மூடி வைக்கவும்.

ஒரு இரவில் அல்லது ஒரு நாள் முழுவதும் செங்குத்தாக அதை அப்படியே வைத்துவிடுங்கள்.

ஒரு கிளாஸ் எடுத்து தண்ணீரை வடிக்கவும், ருசிக்கு ஏற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

அதை நன்றாக கலக்கி பின்னர் குடிக்கவும்.

பார்வையை மேம்படுகிறது:

முட்டைக்கோஸ் பீட்டா கரோட்டின் கொண்டிருக்கிறது, இது உங்கள் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் நீரை தவறாமல் உட்கொள்வது மாகுலர் சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் கண்ணின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சருமத்திற்கு நல்லது:

முட்டைக்கோஸ் தண்ணீரை தவறாமல் உட்கொள்வது சருமத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. அத்தியாவசிய பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால், முட்டைக்கோஸ் நீர் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில், ஃப்ரீ ரேடிகல்கள் முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகள் மற்றும் தீவிர வறட்சி போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

எலும்புகளுக்கு நல்லது:

முட்டைக்கோஸ் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து எலும்புகள் சிதைவடையாமல் பலவீனமடையாமல் பாதுகாக்க உதவுகின்றன. ஒரு கிளாஸ் முட்டைக்கோஸ் தண்ணீரை தவறாமல் குடிப்பது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது:

முட்டைக்கோஸ் நீரை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாலும் நிறைந்துள்ளது மற்றும் எந்தவித கொழுப்போ அல்லது அதிகப்படியான கலோரிகளையோ கொண்டிருக்கவில்லை. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

கல்லீரலுக்கு நல்லது:

ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்ற முட்டைக்கோஸ் நீரில் ‘இந்தோல் -3 கார்போனைல்’ (Indole-3 Carbonile) எனப்படும் மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது கல்லீரலை நச்சுத்தன்மை அற்றதாக மாற்ற உதவுகிறது, இதனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?*

🔊 *ஒரு வாரம் தொடர்ந்து சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?*


உலகின் மிக அழகான பூக்களில் சூரியகாந்தி பூக்களும் அடங்கும். இந்த பூக்களின் முழு ரகசியமும் சூரியகாந்தி விதைகளில் மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், சூரியகாந்தி விதைகளின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய பல ஆய்வுகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக உடல் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  

எனவே இது ஒரு சூப்பர்ஃபுட் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதன் விதைகள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதன் காரணமாக இது மிகவும் பிரபலமாகக் கருதப்படுகிறது. பல ஊட்டச்சத்துக்கள் அதன் நுகர்வு மூலம் உடலில் நிரப்பப்படுகின்றன. இதனை  உட்கொண்டால் பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை பெறலாம்.  சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

சூரியகாந்தி விதைகளின் நன்மைகள்:


◆சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் C உள்ளது. இது இதய நோய்களில் இருந்து நம்மை காக்கும். மேலும், இதில் உள்ள வைட்டமின் E,  தமனிகளில் கொழுப்பு உறைவதைத் தடுப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. கால் கப் சூரியகாந்தி விதையை தினசரி எடுத்து வரும்போது 90 சதவீதம் வைட்டமின் E கிடைத்து விடுகிறது.

◆அவற்றில் மோனோ மற்றும் பாலி சாச்சுரேட்டட்  கொழுப்புகள் உள்ளன. அவை நல்ல கொழுப்புகளாக கருதப்படுகின்றன. கெட்ட கொழுப்பைக் குறைக்க அவை வேலை செய்கின்றன. இது தவிர, அவற்றில் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன, அவையும்  கொழுப்பைக் குறைக்கும்.

◆சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 80 கிராம் சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும்.


◆சூரியகாந்தி விதைகளின் உண்டால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  ஏனெனில் அதில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது.

◆அதன் விதைகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  ஏனெனில் இதில் ஏராளமான கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் உள்ளன.

◆பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இதன் உட்கொள்ளல் நன்மை பயக்கும்.

◆சூரியகாந்தி விதைகள் சருமத்தை மேம்படுத்துகின்றன.  ஏனெனில் இதில் வைட்டமின் E மற்றும் கேப்பர் உள்ளன.

◆வைட்டமின் E, ஃபைபர் மற்றும் செலினியம் பெருங்குடலில் உண்டாகும்  புற்றுநோயிலிருந்து நம்மை  பாதுகாக்கிறது.


◆இந்த விதைகளில் உள்ள ஏராளமான நார்ச்சத்து மலச்சிக்கல் தீர்க்க உதவுகிறது.

◆தோல் மற்றும் தோல் நோய்களை அகற்றவும் பெரிதும் கைக்கொடுக்கும்.

◆சூரியகாந்தி விதை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே சருமத்தை பாக்டீரியாவிலிருந்து  பாதுகாத்து மேலும் அவை வளரவிடாமல் தடுக்கின்றன. சூரியகாந்தி எண்ணெய் அரிப்பு மற்றும் தோல் அழற்சி நோயைத் தடுக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

◆இது நம் மனதை அமைதியாக வைத்திருக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் மூளையின் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம்,  ஒற்றைத் தலைவலியை நீக்குகிறது.

வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 19 மருத்துவ குறிப்புகள்

வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 19 மருத்துவ குறிப்புகள் !

1.ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும்.

2.ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும்

3.ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்றுவேளை சாப்பிட வயிற்று வலி குணமாகும்

4.வெந்தயக்கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும்

5.சிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்

6.ஒரு வெற்றிலையோடு சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிட வயிற்று அஜீரணம் நீங்கும்

7.ஒரு கரண்டி வெற்றிலைச் சாறு குடிக்க வயிற்று உப்புசம் தீரும்

8.சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்றுவலி குணமாகும்

9.எலுமிச்சை சாறில் சிட்டிகை அளவு ஆப்ப சோடா மாவை போட்டு கலக்கி குடித்தால் வயிற்றுவலி குணமாகும்

10.சிறிதளவு மிளகு, சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி சிறிதளவு குடிதண்ணீர்  குடித்து விட்டால் எந்தவித வயிற்றுவலியானாலும் உடனே குணமாகும்

11.சுக்கை இடித்து தூளாக்கி, அரை கரண்டி தூளை எடுத்து, இதே அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி குணமாகும்

12.ஐம்பது கிராம் ஓமத்தை எடுத்து ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வருத்தபின் ஆறவைத்து, நன்றாக உமி போகும் வரை பிசைந்து இதனுடன் பத்துகிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை. மாலை சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.

13.சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம எடை விதம் எடுத்து வறுத்து பொடியாக்கி பசுநெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் தீரும்.

14.சிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து இத்துடன் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வயிற்று வலி, அஜீரணம், பொருமல் நீங்கும்.

15.சுடுநீரில் மிளகு பொடியையும், பெருங்காய பொடியையும் கலந்து குடிக்க வாயுக் கோளாறுகள் தீரும்.

16.ஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி துளசி இலை சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் ஏழு நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை தீரும்.

17.பத்து கிராம் பிரண்டை, பத்துகிராம் ஓமம், இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு, ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்த்து ஒரு நாள் மூன்று வேலை மூன்று கரண்டி விதம் குடித்துவர, அஜீரண வயிற்று போக்கு குணமாகும்.

18.இள முருங்கை மரத்தின் பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால்பாகமாக சுண்டக்காய்த்து அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்வரை காய்த்து வடி கட்டி, காலையில் அரை அவுன்ஸ் விதம் சாப்பிட வாயுக்  கோளாறு தீரும்.

19.இந்து கிராம் விதம் கிராம்பு, சுக்கு, ஓமம், இந்துப்பு இவைகளை எடுத்துக்கொண்டு, நன்கு பொடியாக இடித்து, சிட்டிகைப் பொடியை சாப்பிட செரிமானம் ஏற்படும், பசி கூடும்.

வெங்காய தேநீர் நன்மைகள் !வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

வெங்காய தேநீர் நன்மைகள் !

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.

பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

வெங்காய தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 1
பூண்டு பல் – 3
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
பிரியாணி இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி அதோடு பிரியாணி இலை சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

வெங்காயம், பூண்டு நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும். அதன் பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். இதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம்.

உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!!

உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!! 

வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்.

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்.

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும். தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும். இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?
 
பழங்கள் என்றால் நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும் குறிப்பாக சில பழங்களை நமக்கு விருப்பமாக தேர்ந்தெடுத்து உண்பது அனைவருக்கும் வழக்கம். அதிலும் ஆரஞ்சு பழம் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவா செய்வார்கள்.

இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. சிலர் பழத்தின் நன்மை தீமை அறியாமலே உண்கிறார்கள். அனைத்து பழங்களிலும் பொதுவாகவே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சாது நிறைந்து காணப்படும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது, இதனால் உடலில் பிரீ ராடிக்கல் செல் அழிவு மற்றும் ஆக்ஸிடேஷன் ஏற்படாமல் காப்பதோடு மட்டுமல்லாமல், உங்களை இளமையாக வைக்க உதவும்.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
இந்த பழத்திலுள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.பழத்தில் மட்டுமல்ல இதன் விதையிலும் அளவற்ற சத்துக்கள் உள்ளது.

விதையின் நன்மைகள்:

ஆரஞ்சு பழத்தில் விதைகளில் சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. எனவே, இதனை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த விதைகள் உடல் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவும் .மேலும் இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும் .மேலும் முடியின் வலிமையை அதிகரிப்பதோடு, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது .

இது தலையில் ரத்த ஓட்டம் சீராக செயல்படவும் உதவுகிறது . மேலும், இந்த விதையில், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ளதால் உடலில் நச்சுத்தன்மையை சரி செய்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக் குறிப்புகள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக் குறிப்புகள் :

நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாக சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது மிக எளிமையான வழிமுறை ஆகும்.

தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை இவற்றை சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.

உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்கங்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள்.

இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில் கிடையாது. இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய் முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அதே மாதிரி மருதம் பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது.

இதற்கு ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டி வந்தால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகும்.

முதுமை இல்லாத முகம் வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்…

முதுமை இல்லாத முகம் வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்…

முகத்தில் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றம் என்பது வெகுசிலருக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும். அனைவருக்கும் அதுபோன்ற தோற்றம் வேண்டும் என்றால் அதற்கு பராமரிப்பும் அவசியம்.

உங்கள் சருமத்தில் மெல்லிய சுருக்கங்களை கவனிக்காமல் விட்டால் மிக சில வருடங்களில் அவை அழுத்தமாக பதிந்து பிறகு முதுமையான தோற்றத்தை தந்துவிடும்.

அவ்வாறு சுருக்கங்கள் உங்கள் முகத்தில் உள்ளதென்றால் இந்த வழியைப் பயன்படுத்திப் பாருங்கள்.

வழி…

ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை முகத்தில் மெல்லிய படலமாக போடவும். முழுவதும் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

பிறகு, ஒரு பெரிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும்.

இந்த குறிப்புகள் அனைத்தும் செய்வதற்கு மிக எளியது. நேரமும் குறைவு. ஆனால் பலன்கள் நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட அதிகம்.

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

 
நம்மில் பலருக்கும் இதுபோன்ற மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது வழக்கம். அதிகமாக புகை பிடித்தல், பாண் பராக் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதுபோன்ற மஞ்சள் நிற பற்கள் நம்மை மற்றவர்கள் முன் தலைகுனிய வைக்கிறது.

இதை சரி செய்ய முடியுமா? வீட்டில் இருந்தே சரி செய்ய ஏதாவது வழி இருக்கா? நிச்சயம் இருக்கு. வாங்க பாக்கலாம்.

முதலில் பச்சரிசியை சிறிது எடுத்துக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்த பச்சரிசி மாவில் இருந்து கால் டீஸ் பூண் பச்சரிசி மாவை எடுத்து அதில் கால் டீஸ் பூண் மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து பேஸ்ட் போல் மாற்றவேண்டும். பேஸ்ட் தயாரானதும் அதை எடுத்து வழக்கம்போல் பல்துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மஞ்சள் நிற பற்கள் விரைவில் மறைந்து பல் பளபளக்க ஆரம்பித்துவிடும்.

நீங்கள் புகைப்பிடிப்பதை கைவிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நீங்கள் புகைப்பிடிப்பதை கைவிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இரத்த அழுத்தம்:-

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்ஸிஜன் சீராகும்:-

இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

சுவை மற்றும் மனம் திரும்பும்:-

இரண்டு நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஆக்கத்திறன் அதிகரிக்கும்:-

4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

இரத்த ஓட்டம் சீராகும்:-

2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சுவாசக் கோளாறுகள் நீங்கும்:-

9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும்:

5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

செரிமான மாறுதல்கள்:-

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

சுவாச மாறுதல்:-

தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் மாறுதல்:-

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

மனநிலை மாறுதல்:-

இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.

தூக்க மாறுதல்:-

தூங்கும் முறையில் கூட மாற்றங்களைக் காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

முழங்கையை இடித்துக் கொண்டால், ஷாக் அடித்தது போல் இருப்பது ஏன் தெரியுமா

*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*

*இன்றைய   17-06-2020   மருத்துவ குறிப்பு!*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*முழங்கையை இடித்துக் கொண்டால், ஷாக் அடித்தது போல் இருப்பது ஏன் தெரியுமா.?!*



ஸ்கூல் படிக்கும் போது அடிக்கடி பின்னாடி இருக்கிற பெஞ்சுல இடுச்சுக்குவோம். அப்படியே வலி ஜிவ்வுனு இருக்கும். ‘நமக்கு மட்டும் தான் இந்த அனுபவமா’னு நினைக்கும் போது க்ளாஸ்ல இருக்கிற பாதி பேருக்கு இது பழக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் வளர்ந்த பின்னரும் கூட ‘இது எதனால் ஏற்படுது’னு நாம் சிந்திக்க மாட்டோம். சமீபத்தில் காமெடி சேனல் பார்த்துக்கொண்டிருக்க, சந்தானம் துணை நடிகர் ஒருவரது முழங்கையில் சுண்டிவிட்டு ‘என்ன ஷாக் அடுச்சுதா’ என கேலி செய்வார். சிரிக்கமட்டுமில்லை, சிந்திக்கவும் வைத்துவிட்டார் சந்தானம். நம்மில் பலருக்கு ஏற்பட்ட அந்த ஷாக் உணர்வு ஏன் ஏற்படுகிறது?


ulnar nerve எனும் நரம்பு கழுத்தில் தொடங்கி முன் கை,மணிக்கட்டுக்குள் நுழைந்து மோதிர விரலில் முடிவடையும் நீண்ட நரம்பு. இங்குள்ள எலும்பின் பெயர் Funny Bone. இந்த ulnar nerve உடன் இணைந்த எலும்பு ஹியூமரஸ். இது நமது முழங்கைக்கு மேலே உள்ளதாம். ஹியூமரஸ் எலும்புக்கும் முன்கைக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கும்.. இது கியூபிடல் சுரங்கம் என்று மருத்துவ பாஷையில் அழைக்கப்படுகிறது. இந்த கியூபிடலில் தான் வம்பு உள்ளது. அதாவது எளிதில் பாதிப்படைய கூடியது.

நாம் எங்காவது இடித்துக்கொள்ளும் போது இந்த பாதுகாப்பற்ற நரம்பானது எலும்போடு சேர்த்து அழுத்தப்படுகிறது. அந்த நேரம் ulnar nerve ஆனது பாதுகாக்கும் பொருட்டு அலைகளை தூண்டி மின்சார அதிர்ச்சியை தருகிறது. அதனாலே இடித்துக் கொள்ளும் போது “நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்றபடி நிற்கிறோம்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!*

*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*

*இன்றைய   17-06-2020   மருத்துவ குறிப்பு!*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!*


மூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் சில பாதிப்பு உணவுகளை அறிந்தால் அதனை தவிர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தினை நாம் பாதுகாக்க முடியும். சர்க்கரை: அதிக சர்க்கரை என்றாலே பல் சொத்தை, உடல் எடை கூடுதல், வீக்கம், எடை கூடுவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாக சர்க்கரை நோய். உடலில் கெட்ட பாக்டீரியாக்களால் தாக்குதல்கள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. செயற்கை இனிப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். பலருக்கு பால், பால் சார்ந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது. இந்த அலர்ஜியால் வீக்கம் உண்டாக்கி வயிறு கோளாறு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படலாம். தேங்காய் பால், பாதாம் பால் இவற்றினை வீட்டிலேயே தயாரித்து அளவான முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது.

* மது பழக்கம் கூடும்போது புற்று நோய் வரை கொண்டு சென்று விடும். மதுவினை அடியோடு தவிர்ப்பதே நல்லது.

* முழு தானிய உணவினை மட்டுமே உண்ண வேண்டும்.

* அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உப்பினை தவிர்க்க வேண்டும்.

* காய்கறி, பழங்கள், முழு தானிய உணவு, வேளைக்கு முறையான உணவு என்று கையாண்டால் ஆரோக்கியம் நம் கையில்.

சிலர் 60 வயதில் 40 வயது போல் தெளிவாய் இருப்பர். சிலர் 20 வயதில் 60 வயது போல் ஆரோக்கியமற்று, முதுமையாய் தோற்றமளிப்பர். இந்த கூடுதல் முதுமைக்கு காரணம் காலை முதல் இரவு வரை உள்ளது. காலையில் நாம் செய்ய வேண்டிய 20 நிமிட நடைபயிற்சியை விட்டு விடுவது முதல், இரவு தூங்குவதற்கு முன்பு கொறிக்கும் தவறான உணவு வரை நீண்ட பல காரணங்கள் உள்ளது. இது வெளித்தோற்றம், மறதி, மறதி நோய் என பல தாக்குதல்களை ஏற்படுத்தி விடுகின்றது.

* மது, புகை இவை மூளையையும், உடலையும் மிக கூடுதலாக பாதிக்கும்.

* மன உளைச்சலை ஒதுக்கி தானே சரியாகி விடும் என அதனுள்ளேயே மூழ்கி இருப்பது.

* கடும் வெய்யிலில் பாதுகாப்பின்றி சுற்றுவது.

* அதிக காபி குடிப்பது

* மிருதுவான தலையணை உறை இல்லாமல் சுரசுரப்பான உறையின் மீது உறங்குவது.

* கூன் போட்டு லேப்டப்பில் வேலை செய்வது.

* துரித உணவு எனப்படும் உணவுகளை சாப்பிடுவது.

* தேவைப்படும் போது வெய்யிலில் கறுப்பு கண்ணாடி அணியாது இருப்பது.

* அளவுக்கு மீறி உண்பது

* தன்னை அவ்வப்போது எடை மிஷினில் எடை பார்த்துக் கொள்ளாது இருப்பது.

* அதிக மேக்&அப்

* ஏதேனும் ஒரு பொழுது போக்கு பழக்கம் இல்லாது இருப்பது.

* லிப்டினை உபயோகித்து படிகளில் ஏறாமல் இருப்பது போன்றவை வெளித் தோற்றத்திலும் மூளையின் உள்ளும் முதுமையைக் கூட்டி விடும்.

எதுவும் நாட்டம் இல்லாமல் இருந்தால், தூக்கம் 7 மணி நேர அளவு இல்லாமல் இருந்தால், அதிக தவறான உணவுகளில் நாட்டம் இருந்தால் உங்கள் உடல், மன நலத்தினை சரி செய்து கொள்ள வேண்டும் என அறிவோமாக.


*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!*

*🇮🇳🥭👼👶🐚🕉️🙌🌾🦚💐உள்ளத்தில் நல்ல உள்ளம்🇮🇳🥭💐🦚🌾🙌🕉️🐚👶👼*
*புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!*

*இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தால் நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்லல் வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.

*உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமைல் அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?

*கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.

*இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.

*இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.

*பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

*மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

*தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு,

*🇮🇳🥭💐🦚🌾🙌🕉️🐚👶👼உள்ளத்தில் நல்ல உள்ளம்🇮🇳🥭👼👶🐚🕉️🙌🌾🦚💐*

*நோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவ குறிப்புகள்*

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

* தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

* ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.

* இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.

* அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

* எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

* உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

குடல்புழுக்களை வெளியேற்ற உணவான நம் மருந்து மட்டுமே தீர்வு...*

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்♻️♻️♻️* 


 *#குடல்புழுக்களை வெளியேற்ற உணவான நம் மருந்து மட்டுமே தீர்வு...* 

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.

நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை.

 *சிறு குடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து என்ன ?* 

இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்.

 *🍁 மருந்து ஒன்று:* 

சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்து இருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டுக் கிளறி, மிளகுத் தூள், கல் உப்புப் போட்டு பொரியல் ஆக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.

 *🍁 மருந்து இரண்டு:* 

பாகற் காய் மசியல் கூட்டு செய்ய வேண்டும்.நாட்டு பாகற்காய் மட்டுமே பயன் படுத்த வேண்டும். பொறித்து சாப்பிட்டேன் என தம்பட்டம் அடிப்பது வீண்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல் ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து மூன்று:* 

அகத்திக் கீரை சாறு - ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு - ஒரு தேக்கரண்டி
தூய தேன் - அளவாக
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கி இருக்கும் புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து நான்கு:* 

வாய் விடங்கம், ஓமம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன் நிறமாக வறுத்து ஆற வைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்.

இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்லி, சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.

வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்து விட்ட பொருள் இது

 *🍁 மருந்து ஐந்து:* 

சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்.
கசப்பு காரணமாக சிலர் குடிக்கவும் மறுப்பார்கள்.

அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்.

வேப்பங் கொழுந்து,
கறிவேப்பிலை,
பூண்டு,
மிளகு,
ஓமம்,
சுக்கு

ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன் நிறமாக வறுத்து இறக்கி ஆற வைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து ஆறு:* 

குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டி ஸ்பூன் அளவு எடுத்து தூய தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்

 *🍁 மருந்து ஏழு:* 

சின்ன வெங்காயம் - இரண்டு

நல்ல மிளகு - இரண்டு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறிய துண்டு

தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

 *🍁 மருந்து எட்டு:* 

யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

 *🍁 மருந்து ஒன்பது* 

புழுத் தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மல வாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத் திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தூய தேன் உடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் மலத்துடன் வெளியேறும்

 *🍁 மருந்து பத்து* :

குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.

 *🍁 மருந்து பதினொன்று:* 

குடலில் புழுக்கள் தங்கி்இருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து வடி கட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்....

 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

உடல்நலம் பற்றிய புரிதல் நம்மிடம் உள்ளதா???

உடல்நலம் பற்றிய புரிதல் நம்மிடம் உள்ளதா???

#விழிப்புணர்வுபதிவு..!!!!

* நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் இளநீர், பதநீர் இருக்க, வெளிநாட்டு குளிர்பானங்கள் எதற்கு???

* கரும்பினால் ஆன வெல்லம், பனையால் ஆன பனஞ்சர்க்கரை, கல்கண்டு, கருப்பட்டி இருக்க, வெள்ளை விஷசர்க்கரை எதற்கு??

* வியர்க்குரு போக்க நுங்குநீர் இருக்க, நைசில் பவுடர் எதற்கு???

* கொஞ்சும் அழகு தரும் பயத்தம்மாவு, மஞ்சள், சந்தனம்  இருக்க, அந்நிய பேர்அண்ட்லவ்லி எதற்கு???

* எள்எண்ணெய், நல்லெண்ணெய் இருக்க அந்நிய ஆலிவ்ஆயில் எதற்கு??? 

* தேங்காயெண்ணை இருக்க பாராசூட் ஆயில் எதற்கு???

* இயற்கை மா, பலா, வாழை, கொய்யா இருக்க, வெளிநாட்டு ஆப்பிள், கிவி, ஆப்ரிகார்ட் எதற்கு??

* நம்மூர் நிலக்கடலை இருக்க, பாதாம், பிஸ்தா எதற்கு???

* சத்துமிக்க கம்பு, கேழ்வரகு, சோளம் சிறுதானியங்கள் இருக்க, வெளிநாட்டு ஹார்லிக்ஸ், காம்பிளான், பூஸ்ட், போர்ன்விட்டா எதற்கு???

* நம்மூர் நாட்டுமாடுகள் இருக்க, அரக்கனான ஜெர்சி மாடுகள் எதற்கு???

* கறந்த பால் இருக்க,  கலப்பட பாக்கெட் பால் எதற்கு??

* பாரம்பரிய சீடையும்,  முறுக்கும் இருக்க 
அந்நிய நாட்டு பிஸ்கட் எதற்கு???

* மின்சாரத்தைலம் இருக்க, அமர்தாஞ்சன் டைகர்பாம் விக்ஸ்வெப்போராப் எதற்கு???

* இட்லி, தோசை இருக்க, பிட்சா, பர்கர் எதற்கு???

* பாரம்பரிய இடியாப்பம் இருக்க
அந்நிய நாட்டு நூடுல்ஸ் எதற்கு???

* பாரம்பரிய கைகுத்தல் அரிசி இருக்க, சத்தில்லா கூர்தீட்டிய அரிசி எதற்கு???

* பாரம்பரிய சுக்கு, இஞ்சி தெம்பு பானம் இருக்க அந்நிய நாட்டு நெஸ்லே, காஃபி பொடி எதற்கு???

* உடலுக்கு நலம் தரும் மரசெக்கு எண்ணெய் இருக்க, ரீபைண்ட் ஆயில் எதற்கு??

* விவசாயம் செய்ய இயற்கை உரம் இருக்க, களைக்கொல்லிகளும், விஷவீரியமிக்க உரங்கள் எதற்கு??

* பலசத்துக்கள் உள்ள காய்கறிகள் இருக்க, வைட்டமின் மாத்திரைகள் எதற்கு???

* சுகப்பிரசவம் இருக்க, சிசேரியன் எதற்கு????

* பிறந்த குழந்தைக்கு சேய்நெய் இருக்க, ஜீனிதண்ணீர் எதற்கு???

* உடலுக்கு தீங்கும், பக்கவிளைவுகளும் தராத நாட்டுமருத்துவம் இருக்க, ரசாயணத்தினால் ஆன நவீன மருந்துகளும், மருத்துவமும் எதற்கு???

* பாரம்பரிய கேழ்வரகு, கம்பு, சோளம், அடைமாவு இருக்க பலவித கலப்பட கோதுமை, மைதா போன்ற மாவு பாக்கெட் எதற்கு???

* அதிக சத்துக்களை தரும் நாட்டுக்கோழி இருக்க, பிராய்லர்கோழி எதற்கு???

* உடலுக்கும் ஒவ்வாத,  மண்ணிற்கும் ஒவ்வாத உரம் (உப்பு) கலந்த குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பதை வாங்கும் நாமே மாறவேண்டும்..

* நம் மண்ணில் விளையும், பருவகால உணவுகளையே உண்பீர்..!!

#குறிப்பு..

பசியெடுத்தால் மட்டும் ருசித்து உண்ணுங்கள் , செரிமான கோளாறு ஏற்படாது,..செரிமான பிரச்சனை வரலில்லையெனில், சர்க்கரைநோய் உங்களை நெருங்காது...

தாகமெடுத்தால் மட்டும் வேண்டியஅளவு தண்ணீர் அருந்துங்கள்....உடல்கழிவுகள் தானாக வெளியேறும்..

வேர்வை வெளியேற நன்றாக உழையுங்கள், உறக்கம் தானாக உங்களை அணுகும்.. அதிக நேரம் உறங்குவதும் நல்லதல்ல..

ஆரோக்கியமான வாழ்வு வாழ்வீர்..!!

உடல் பருமன் நமது உடலில் நோய்கள் தோன்ற கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன்

நமது உடலில் நோய்கள் தோன்ற கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும் உடலுக்கு தேவையான உழைப்பு இல்லாததாலும் உடல் பருமன் ஏற்படுகிறது. “அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதிகாலை எழும் பழக்கத்தை முதலில் கடைபிடிக்க வேண்டும். பின் பல் துலக்கி, குறைந்தது ½ லிட்டர் நீர் பருக வேண்டும். பின் வாழைதண்டு சாறு அருந்தி வர வேண்டும். அத்துடன் குறைந்தது ½ மணி நேரம் எளிய உடற்பயிற்சி குறிப்பாக நடைபயிற்சி (Walking), யோகாசனம் (Yoga) அல்லது மிதிவண்டி (Cycling) போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

காலை உணவு (Break Fast):
கோதுமை தோசை, கோதுமை உப்புமா, ராகி தோசை, ராகி உப்புமா மற்றும் வரகரிசி கொள்ளு இட்லி அத்துடன் சாம்பார் அல்லது சட்னி சேர்த்து மிக குறைந்த அளவுடன் எடுத்துக்கொள்வது நலம். இவைகள் உங்களுக்கு அதிக கொழுப்புச்சத்து இல்லாத உடலுக்கு தேவையான நார்ச்சத்து நிறைந்தது. நம் உடலில் நார்ச்சத்து அதிகமாகும் போதுதான் உடல் குறைய ஆரம்பிக்கும்.

மதிய உணவு (Lunch):
கண்டிப்பாக ஒரு சப்பாத்தி உடன் சிறிது வரகரிசி சாதம். இவற்றுடன் பாசிபருப்பு சாம்பார், ரசம் அல்லது மோர். இருவகை காய்கறிகள் குறிப்பாக கீரைவகைகள். அதிலும் தொப்பைக் கரைய பசலைக் கீரை உண்டு வரலாம். பப்பாளி கூட்டு, வாழைப்பூ கூட்டு போன்றவைகளை அளவுடன் உண்டு வர நம் ஜீரண சக்தி சரிவர இயங்க ஆரம்பிக்கும். நம் உடம்பில் ஜீரணம் சரியாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நம் உடம்புக்கு தேவையான சக்தி போக எஞ்சிய கழிவுகள் சரிவர வெளியேற்றப் படுவது முக்கியம்.

இரவு உணவு (Dinner):
நம் முன்னோர்கள் ‘போகிக்கு இருவேளை” என்று கூறியுள்ளனர். ஆனாலும் நாம் மூன்று நேரம் உண்டு பழகிவிட்டதால் அதை உடனடியாக மாற்றினால் நம் உடல் நிலை ஏற்காது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவது உடல் எடையை குறைக்க ஏதுவாக இருக்கும். இரவில் அளவான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கு பின் சிறிது 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் நடப்பது நலம். இது உங்களுக்கு நிறைவான தூக்கத்தை கொடுக்கும்.

இவற்றுடன் நீங்கள் நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்த்து, பழங்கள் மற்றும் முளைகட்டிய பயறுவகைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் தேங்காய்ப் பாலுடன் பழுத்த வாழைப் பழத்தைக் குழைத்து கலக்கி புதிய வாழைப் பூவை சாறெடுத்து ஒரு மேஜைக் கரண்டி சேர்த்து, நாளைக்கு மூன்று வேளை மூன்று மாதம் உண்டு வர உடலில் உள்ள தேவையற்ற ஊளைசதை குறையும்.

கூடிய வரையில் ஹோட்டல் உணவுகளை தவிர்த்து மேல் கூறியவற்றை இடைவிடாது கடைபிடிக்கவும். உடல் பருமன் குறைவதோடு உடல் ஆரோக்கியம் கெடாமல் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்குகிணங்க வாழலாம்.

🚶🏼HAROON SB 👍🏼

எலுமிச்சை புற்று நோய் செல்களை கொல்ல ஒரு அற்புதமான இயற்கை படைப்பு

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் – எலுமிச்சையின் ஆச்சர்யமான நன்மைகள் !

எலுமிச்சை புற்று நோய் செல்களை கொல்ல ஒரு அற்புதமான இயற்கை படைப்பு என்று கண்டறிந்துள்ளனர். இது கீமோதெரபியை  விட பத்தாயிரம் மடங்கு வலுவானது .  .

நமக்கு இதை பற்றி எப்படி தெரியாமல் போயிற்று? ஏனெனில் இதை வைத்து  ஒரு செயற்கை பதிப்பு செய்து பெரும் லாபம் சம்பாதிக்க  ஆர்வம் நம் ஆய்வகங்களுக்கு  ஏற்பட்டுவிட்டது. இவ்விஷயம் அறிந்துக் கொண்ட நீங்கள் உங்கள் தோழியருக்கோ தோழனுக்கோ சொல்லி உதவுங்கள். எலுமிச்சை சாற்றின் பயன்பாட்டினை சொல்லி புற்று நோயிலிருந்து விடுவிக்க உதவலாம். அதன் சுவையோ அருமையாக இருப்பதனால் எடுத்துக்கொள்ளவும் எளிமை. மற்றும் கீமோதெரபி ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளை உருவாக்குவதில்லை.

இப்படிப்பட்ட  எளிதாக கிடைக்க கூடிய எலுமிச்சையின் நன்மைகளின் உண்மைகள்  மறைக்கப் படுமேயானால் எத்தனை உயிர்களை இழக்கக் கூடும், இதை வைத்து லாபம் சம்பாதிக்கும் உக்தியை தான் பெரிய  வணிக மக்கள்  கையாள்வார்கள். நாரத்தை குடும்பம், அதில் பல வகைகள் உண்டு எழுமிச்சை, சாத்துக்குடி இதில்  வரும் வகைகள் . கனிகளை சாறாக்கி, மற்றும் சில வகைகளை அப்படியே உரித்தும் சாப்பிடலாம் .இதன் கூழ் ,அதில் கிடைக்கும் சாற்றை பிழிந்தும் பருகலாம். . இது பல சிறப்புகளை பெற்றது,  ஆனால் மிக சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் அது ட்யுமர் கட்டிகள் மீது சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதை கண்டுபிடித்த ஆளை ஆனது அனைத்து வகையான புற்று நோய்களை எதிர்க்க வல்லது என்று நிருபித்ததுள்ளார்கள் சில ஆராய்சியாளர்கள், எவ்வித புற்று நோய் அழிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இது புற்று நோய் செல்களை அழிக்க தோதுவானது  மட்டுமின்றி பாக்டீரியா, தொற்று மற்றும் பூஞ்சை, நுண்ணியிர், ஒட்டுண்ணிகள் மட்டும் புழுக்களையும் அழிக்கவல்லது  . அதுமட்டுமின்றி அதிக இரத்த அழுத்தம்,நரம்பு கோளாறு ,மன அழுத்தத்தையும் குறைக்கவல்லது.

🚶🏼HAROON SB 👍🏼

நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி

டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார். 

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார். 

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம் 
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம் 
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம். 

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.

சிறுநீரகம்_காப்போம்

#சிறுநீரகம்_காப்போம்!

#கம்ப்ளீட்_கைடு 

நம் உடலில் உள்ள கழிவுகளை, நாம் குடித்த தண்ணீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே சிறுநீரகத்தைப் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. ரத்தத்தில் இருந்து பிரிப்பது, பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு, உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் இருக்கச் செய்கிறது. 

#சிறுநீரகத்தின்_செயல்பாடு..

மனிதனின் அடி முதுகுப்பகுதியில், பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும்.

சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் ரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட் டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. 

சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 - 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.

#பயன்கள்

கழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.

சிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகின்றன.

எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின்தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன. 

வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது.

உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது.

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

செயல்பாடு பாதிக்கப்படுவதால்...

சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.

♦ பாதிக்கும் விஷயங்கள்

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.

♦உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக் காரணங்கள்

1 சிறுநீரகத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் தடைப்படுதல்.

2 சிறுநீரகங்கள் சேதம் அடைதல்.

3 சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல்.

#காரணங்கள்

1 விபத்து காரணமாக ரத்த இழப்பு.

2 உடலில் நீரிழப்பு ஏற்படுதல்.

3 செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று.

4 சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்.

5 பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல்.

ஓட்டப்பந்தய வீரர்களுக்கு `#அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, `மயோகுளோபின்’
 (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

♦நாட்பட்ட சிறுநீரக நோய் 

சிறுநீரகம் மூன்று மாதங்களுக்கு மேல் சரியாகச் செயல்படவில்லை எனில், அதை நாட்பட்ட சிறுநீரக நோய் என்கிறோம். இது மிகவும் ஆபத்தானது. நிலைமை மோசம் ஆகும் வரை இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை. அறிகுறிகள் தெரியும்போது, சிறுநீரகப் பாதிப்பு சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றிருக்கும்.

♦நாட்பட்ட கால சிறுநீரக நோய் ஏற்படக் காரணங்கள்

1.சர்க்கரை நோய் (டைப் 1, டைப் 2)

2. உயர் ரத்த அழுத்தம்

3. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

4. சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று

5. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்

6. சில மருந்துகள் மற்றும் நச்சுக்கள்

7.க்ளோமெருலோ
நெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)

8. சிறுநீர்ப்பாதை அடைப்பு

#சர்க்கரைநோய்

நாம் உட்கொண்ட உணவை செல்கள் பயன்படுத்த இன்சுலின் சுரக்கிறது. போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைவாக இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

நம் சிறுநீரகங்கள், குறிப்பிட்ட அளவு மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவு இருக்க அனுமதிக்கும். அளவு மீறும்போது, அதை வெளியேற்றும் பணியையும் செய்யும். 

வேலைப்பளு தொடரும்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ரத்தத்தில் உள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், புரதத்தைக்கூட வெளியேற்றிவிடுகின்றன.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. சிறுநீரகத்தின் உள்ளே பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயால் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பணியைச் சரியாகச் செய்ய முடிவது இல்லை. இதனால், உடலில் அதிக அளவில் நீர் தங்குகிறது. நச்சுக்கள் வெளியேறாமல் ரத்தத்தில் தங்குகின்றன.

சர்க்கரை நோய், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேற்றும் சிக்னல் உத்தரவு பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கி வைக்கும்போது, சிறுநீர்ப்பையின் அழுத்தம் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.

டைப் 1, டைப் 2 என 
#எல்லா_வகை__சர்க்கரை #_நோய்களும் #சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால், கவனம் தேவை.

இதைத் தவிர்க்க, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக மாவுச்சத்து உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#உயர்ரத்த_அழுத்தம்

இயல்புநிலையில் ரத்த அழுத்தமானது 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது, இதயம் சுருங்கும்போது 120-ம், இதயம் விரிவடையும்போது 80-ம் இருக்க வேண்டும். இதயம் விரிவடையும்போது 120 முதல் 139-க்கு உள்ளும், இதயம் விரிவடையும்போது 80-89 வரை இருந்தால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். இதுவே, இதயம் சுருங்கும்போது 140-க்கு மேலும், இதயம் விரிவடையும்போது 90-க்கு மேலும் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம்.

மேலே சொன்னதுபோல, சிறுநீரகம் என்பது மிகப்பெரிய வடிகட்டி அல்ல. மிக நுண்ணிய அளவில்தான் இதன் செயல்பாடு இருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயின் சுவர் பாதிக்கப்படுகிறது. 

இந்தப் பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய் என்பது, சிறுநீரகத்தில் உள்ள ரத்தக் குழாய்களையும் சேர்த்துதான். மிகச்சிறிய ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தில் ரத்தம் செலுத்தப்படும்போது, ரத்தக் குழாய் தளர்வுற்று, குறுகி, இறுக்கம் அடைகிறது. பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயால் போதுமான அளவு ரத்தத்தைச் சிறுநீரகத்துக்கு அளிக்க முடியாமல்போகிறது.

சிறுநீரகத்தினுள் உள்ள நெஃப்ரானில் முடியின் தடிமனைவிட சிறிய ரத்தக் குழாய்கள் உள்ளன. ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதற்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால், செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கலாம்.

டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#நோய்த்தொற்று

சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection (UTI)) என்கிறோம். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து மேல் சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை, யுரித்ரா எனப்படும் கீழ் சிறுநீர் குழாயில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பெரும்பாலும், கீழ்நிலை சிறுநீரக மண்டலத்தில்தான் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் உடலியல் அமைப்பு கிருமி பரவ ஏற்றதாக இருக்கிறது.

நோய்த்தொற்று கீழ்நிலையில் இருக்கும்போது தாங்க முடியாத வலி இருக்கும். தொற்றானது சிறுநீரகம் வரை பரவினால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பொதுவாக, பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பாதையில் நுழையும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர்ப்பாதையை அடையும் கிருமியானது, சிறுநீர்ப் பையை அடைந்து மிக வேகமாகப் பெருக்கம் அடையும். பொதுவாக, நம்முடைய சிறுநீரக மண்டலமே இத்தகைய கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது. ஆனால், இந்தச் செயல்பாடு பாதிக்கப்படும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

நம்முடைய செரிமான மண்டலப் பாதையில் காணப்படும் இ-கோலை பாக்டீரியாதான் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது.

#பொதுவான_அறிகுறிகள்

சிறுநீர் கழிப்பதில் சிரமம்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு.

மிகச் சிறிய அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

சிறுநீர் கலங்கலாக இருத்தல்.

சிறுநீரில் ரத்தம் கலந்து, கோலா நிறத்தில் இருப்பது.

சிறுநீரில் நாற்றம். 

இடுப்புப் பகுதியில் வலி.

நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அறிகுறிகள் மாறுபடும்.

#சிறுநீரகம்: 

மேல் முதுகுவலி, பக்கவாட்டில் வலி, காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி ஆகியவை.

#சிறுநீர்ப்பை: 

இடுப்பில் அழுத்தம், கீழ் வயிற்றில் அசௌகரியம், அடிக்கடி, மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

#கீழ்_சிறுநீர்_குழாய்: 

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்.

#பரிசோதனை

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று இருப்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் அல்லது பாக்டீரியா உள்ளதா என்பது கண்டறியப்படும். 

சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித் தொற்று எனக் கண்டறியப்படும்.

அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், சிறுநீர்ப்பாதை சி.டி., எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து பார்க்கப்படும். 

சிஸ்டோஸ்கோப்பி என்ற பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையை அடைந்து பரிசோதனை செய்யப்படும்.

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றைத் தடுக்க...

தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது, பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும்.

மலம் கழித்துவிட்டு #ஆசனவாயைக் #கழுவும்போது கவனத்துடன் செய்ய வேண்டும். மேல் இருந்து கீழாகக் கழுவ வேண்டும். பிறப்புறுப்பில் படாதவகையில் கவனமாக இருக்க வேண்டும்.

#உடலுறவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். இது, விரைவில் சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வெளியேற்றப்படும்.

♦சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic kidney disease )

சிறுநீரகத்தில் சிறு நீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ என்கிறோம். இந்தக் கட்டிகள் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும். நீர் கோத்துக்கொண்டே செல்லும்போது, அது மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.

மரபியல் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

இதில், ஒரு வகையான `ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Autosomal dominant polycystic kidney disease (ADPKD)) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, 30 முதல் 40 வயதினருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. 

பெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு வர 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. 

ஆட்டோசோமல் ரெசசிவ் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் (Autosomal recessive polycystic kidney disease (ARPKD)) வகையானது, கிட்டத்தட்ட ஏ.டி.பி.கே.டி போல இருந்தாலும், இது பிறந்த சில காலங்களிலேயே வெளிப்படும். சில சமயம் இது டீன் வயதில் வெளிப்படலாம்.

இதுவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவது.

கட்டி வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பெண்களுக்கு இது கர்ப்ப காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

#சுயமருத்துவம்

டாக்டர் பரிந்துரை இன்றி, உடல் வலி, தலைவலிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும். 

எல்லோருக்கும் எல்லா வகையான மருந்துகளும் ஏற்றுக்கொள்வது இல்லை. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

ஆன்டிபயாட்டிக், நெஞ்சு எரிச்சல் மருந்துகள், ஆன்டிவைரல், உயர் ரத்த அழுத்தம் என எந்த ஒரு மருந்தும் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.

எனவே, டாக்டர் பரிந்துரை இன்றி மருந்துகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

#உடல்பருமன்

உடல்பருமனால் இதய நோய்கள், மூட்டுவலி வரும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர்... அது சிறுநீரகத்தையும் பாதிக்கும். 

உடல்பருமனாக உள்ளவர்களுக்கு அதிகப்படியான கொழுப்பு அவர்கள் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிகிறது. ரத்தத்தில், டிரைகிளசரைட் என்ற கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு குறைகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியவை.

இவர்கள் உடல் எடையைக் குறைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரலாம். 

ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.

உடல் எடை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். டயட் திட்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிலர், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, அதிக அளவில் புரதச் சத்துள்ள உணவை எடுக்கின்றனர்.

அதிகப் புரதச்சத்து சிறுநீரகத்தின் வேலைப் பளுவை அதிகரிக்கிறது.

கார்போஹைட்ரேடுக்குப் பதிலாக, கொழுப்பை எரித்து அதிகப்படியான ஆற்றலைப் பெறும்போது, அது வெளிப்படுத்தும் ரசாயனம்கூட சிறுநீரகத்தைப் பாதிப்படையச் செய்யலாம்.

எனவே, டாக்டரின் ஆலோசனை பெற்று சரியான டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

#புகையிலை
#மதுப்பழக்கம்

முன்கூட்டியே மரணம் நிகழ முக்கியமான காரணியாக இருப்பது புகையிலை. நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வாய்ப் புற்றுநோய், இதய நோய்கள், கணையப் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வர முக்கியக் காரணியாக சிகரெட் புகைத்தல் இருக்கிறது.

சிகரெட்டில் உள்ள நச்சுக்கள் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கின்றன.

சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டத்தைக் குறைத்து பாதிப்படையச் செய்கிறது.

சிகரெட் நச்சுக்கள் ரத்தக் குழாய் சுவரை பாதிப்படையச் செய்து, குறுகலாக்குகிறது.

ஒருவருக்கு ஏற்கெனவே, உயர் ரத்த அழுத்தம் இருந்து, அதற்கான மருந்து எடுக்கிறார் என்றாலும், சிகரெட் புகைக்கும்போது, அது அந்த மருந்தின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.

♠க்ளோமெருலோ
நெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)

சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய முடிச்சு, போன்ற வடிகட்டிகளில் (Glomeruli), நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதன் மூலம், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

இதுவும் உடனடி மற்றும் நாட்பட்ட சிறுநீரக பிரச்னையாக வெளிப்படலாம்.

முகத்தில் நீர் கோத்தல் (எடிமா), சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் இதன் முக்கிய அறிகுறிகள்.

♦சிறுநீரகப் பாதையில் தடை

சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். கற்கள் உருவாவதால் இந்த அடைப்பு ஏற்படலாம். சிலருக்கு ப்ராஸ்டேட் அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.

♦சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகத்தில் படியும் சிறிய அளவிலான கடினமான தாதுஉப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் இவை வலுவானவை. இந்தப் படிவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. இந்தக் கற்கள், தாதுஉப்புகள் அல்லது அமில உப்புக்களால் ஆனதாக இருக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அது, சிறுநீரகம் முதல் சிறுநீர்ப்பை வரை எங்கும் அடைப்பை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கற்கள் உருவாக முக்கியக் காரணம், சிறுநீர் மிகவும் கடினமானதாக இருப்பதுதான். இதனால், அதில் உள்ள தாதுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்கின்றன அல்லது ஒட்டிக்கொண்டு கற்களாக உருவெடுக்கின்றன. 

சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். இந்தக் கற்கள் எங்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும்.

சிறிய கற்களாக இருந்தால், அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் வெளியேற்ற முயற்சிக்கலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

#காரணம்

சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

பெரும்பாலும் இந்தக் கற்களை நாம் கண்டறிவது இல்லை. அது அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், கற்கள் உருவானது நமக்குத் தெரிகிறது.

#அறிகுறிகள்

சிறுநீரகக் கல், உருவான இடத்தில் இருக்கும் வரை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. அது அங்கிருந்து நகரும்போது அல்லது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையும்போது அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

முதுகு மற்றும் பக்கவாட்டில் தாங்க முடியாத வலி. குறிப்பாக, விலா எலும்புக்குக் கீழ்.

கீழ் வயிற்றில் தொடங்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பு நோக்கிப் பரவும்.

வலி அலை அலையாக வரும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி அதிகமாக இருக்கும்.

பிங்க், சிவப்பு அல்லது பிரெளன் நிறத்தில் சிறுநீர் வெளிப்படும்.

கலங்கலாகவும் நாற்றத்துடனும் சிறுநீர் இருக்கும்.

குமட்டல் மற்றும் வாந்தி.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.

மிகக் குறைவாகவே சிறுநீர் வெளியேறுதல்.

வழக்கத்தைவிட அதிகமாகச் சிறுநீர் கழித்தல்,காய்ச்சல்.

நோய்த்தொற்றும் இருந்தால் உடல் சில்லிட்டுப்போதல்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

★சிறுநீரகக் கற்களின் வகைகள்

எந்த மாதிரியான கல் வரலாம், எப்படி உருவாகலாம் எனத் தெரிந்துகொண்டோம் என்றால், கற்கள் உருவாவதை நம்மால் தவிர்க்க முடியும்.

#கால்சிய கற்கள்

சிறுநீரகத்தில் தோன்றும் பெரும்பான்மையான கற்கள் கால்சிய கற்கள்தான். இது கால்சியம் ஆக்சலேட் என்ற வடிவத்தில் இருக்கிறது. ஆக்சலேட் என்பது சில காய்கறி, பழங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. தவிர, நம் கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. செரிமானப் பிரச்னை, சில மெட்டபாலிக் குறைபாடுகள் காரணமாக, சிறுநீரில் கால்சியம் அல்லது ஆக்சலேட் அளவு அதிகரிக்கிறது. இதனால், கால்சிய கற்கள் உருவாகின்றன.

#ஸ்ட்ருவைட் கற்கள்  
(Struvite stones)

நோய்த்தொற்று, சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இந்த வகையான கற்கள் மிக விரைவிலேயே பெரிதாகும்.

•#யூரிக் அமிலக் கற்கள்

எக்ஸ்ரேவில் இது தெரியாது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கும், போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது. கீல் வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம்.

#சிஸ்டின் கற்கள்

மிகவும் அரிதாக ஏற்படக்கூடியது. சிறுநீரகம் அதிகப்படியாக குறிப்பிட்ட வகை அமினோ அமிலத்தைப் பிரிக்கும் மரபியல்ரீதியான நோயால் தோன்றக்கூடியது. மிக அரிதாக வேறு சிலவகைக் கற்களும் உருவாகின்றன.

#எப்படிக்_கண்டறியலாம்?

அறிகுறிகளைப் பொறுத்து, சில எளிய பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

√ ரத்தப் பரிசோதனை

ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் அல்லது யூரிக் அமிலம் உள்ளதா எனக் கண்டறியலாம். 

√ எக்ஸ்ரே பரிசோதனை 

பொதுவாகத் தோன்றக்கூடிய 75 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவ முடியாததாக உள்ளது. இதனால், எக்ஸ்ரே கதிர்வீச்சை செலுத்துவதன் மூலம் இதை எளிதாகக் கண்டறியலாம்.

√ அல்ட்ரா சவுண்டு

அல்ட்ரா சவுண்டு பரிசோதனையின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளதை கண்டறியலாம். 

25 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவக்கூடியதாகவும், ஒலி அலைகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. எனவே, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையைச் செலுத்தி கற்களைக் கண்டறியலாம்.

இன்ட்ராவீனஸ் பைலோகிராம் (ஐ.வி.பி) 

ரத்தக் குழாயில் டை செலுத்திய பிறகு எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்தி, சிறுநீரகக் கல் கண்டறியப்படுகிறது.

சி.டி ஸ்கேன்: 

வயிற்றுப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்து சிறுநீரகத்தைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரகக் கல் எங்கே உள்ளது, அதன் அளவு என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறியலாம்.

#சிறுநீரகக்கற்கள் 
#வராமல்_தடுக்க!

ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டும் அல்ல, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். 

வயிற்றுப்போக்கு, வாந்தி என நீர் இழப்பு ஏற்பட்டால், உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீராகாரம், சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

இறைச்சி, உப்பு, சாக்லேட், உலர் பழங்களில் அதிக அளவில் ஆக்சலேட் இருக்கும். இத்தகைய உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

♦சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)

சிறுநீரகம் திடீரெனக் கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

சிறுநீரக செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோகூட ஏற்படலாம். 

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் காரணமாகச் சிறுநீரகத்தின் பணித்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். 

எதிர்பாராதவிதமாகச் சிறுநீரகத்தின் பணி இரண்டு நாட்களுக்குள்ளாக நின்றுவிடும். இதை ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’ என்கின்றனர்.

நாட்பட்ட, திடீர் செயலிழப்பு பாதிப்பு என எதுவாக இருந்தாலும், அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தாக வேண்டும்.

சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் அக்யூட் கிட்னி ஃபெயிலியர் பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகம் தன்னுடைய செயல்பாட்டைச் செய்யும் வாய்ப்பு உள்ளது. 

♦அறிகுறிகள்

சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்; எப்போதாவது சிறுநீர் இயல்பாக வெளியேறும்.

உடலில் நீர் தேங்குவதால் கால், பாதங்களில் வீக்கம்.

தூக்க உணர்வு.

மூச்சுத் திணறல் அல்லது சுவாசித்தலில் சிரமம்.

சோர்வு.

குழப்பம்.

குமட்டல்.

நெஞ்சு வலி, அழுத்தம்.

வலிப்பு. 

மிக மோசமான நிலையில் கோமாவுக்குக்கூட செல்லலாம்.

சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருக்கும். வேறு பிரச்னைக்கு பரிசோதனை செய்யும்போது இதைக் கண்டறிவதும் உண்டு.

♦சிறுநீரகச் செயலிழப்பு... மூன்று காரணங்கள்!

1)சிறுநீரகத்துக்குக் குறைவான அளவில் ரத்த ஓட்டம்.

2)விபத்து உள்ளிட்ட காரணங்களில் சிறுநீரகங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவது.

3)சிறுநீரகத்தில் இருந்து வெளிப்படும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது.

சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறையக் காரணங்கள்

ரத்த இழப்பு அல்லது நீர் இழப்பு.

உயர் ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து.

மாரடைப்பு.

கல்லீரல் செயலிழப்பு.

இதய நோய்கள்.

மோசமான தீக்காயம்.

சிறுநீரகப் பாதிப்பு

சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்து கட்டிப்போதல்.

கொழுப்பு படிந்து, சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வது தடைப்படுதல்.

சிறுநீரக நுண் வடிகட்டிகளில் வீக்கம் (Glomerulonephritis).

கீமோதெரப்பி சிகிச்சை, ஆன்டிபயாடிக் மருந்து, டை மருந்து செலுத்துதல், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்.

மது, கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்.

சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுதல்

சிறுநீர்ப்பை புற்றுநோய்.

சிறுநீர்ப்பாதையில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுத்துதல்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்.

பெருங்குடல் புற்றுநோய்.

ப்ராஸ்டேட் பெரிதாவது.

சிறுநீரகக் கற்கள்.

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பரிசோதனை

சிறுநீர் வெளியேறாமை உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவமனையில் சிறுநீர் வெளியேறும் அளவு பரிசோதிக்கப்படும்.

சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.

ரத்தப் பரிசோதனையின் மூலம், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.

இமேஜிங் பரிசோதனை: 

அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி பரிசோதனை பரிந்துரைக்கப்படும். இதில், சிறுநீரகத்தின் அளவு எப்படி உள்ளது எனக் கண்டறியப்படும்.

புற்றுநோய் மாதிரியான பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டால், சிறுநீரக பயாப்சி பரிந்துரைக்கப்படும்.

√ ♦சிறுநீரகம் காக்க ஏழு பொன் விதிகள்

1) ஃபிட்டாக, துடிப்பாக இருக்க வேண்டும்

உடல் ஃபிட்டாக இருக்க தொடர் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். எப்போதும் துடிப்புடன் இருக்க, குறைந்த தூரத்துக்குச் செல்லும்போது, நடந்து செல்ல வேண்டும். தினமும் நீச்சல், கால்பந்து, சைக்கிளிங், ரன்னிங், டென்னிஸ் போன்றவற்றை விளையாடலாம்.

2) ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்

சிறுநீரக நோய்கள் வர முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய். எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான பரிசோதனைகளுடன், தங்கள் சிறுநீரக செயல்திறன் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தோம் என்றால், சர்க்கரையால் ஏற்படக்கூடிய பாதிப்பை பெருமளவு குறைக்கலாம் அல்லது தவிர்க்க முடியும். இது தொடர்பான சந்தேகம் இருந்தால், தயங்காமல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3) ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க வேண்டும்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணமாக இருப்பதுபோல, சிறுநீரகச் செயலிழப்புக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் இயல்புநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

4) ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்

ஆரோக்கியமான, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை மட்டும் பாதுகாப்பது இல்லை, இதயம், மூளை என ஒவ்வோர் உறுப்புக்கும் நல்லது. உணவில், உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மிகாமல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். 

உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டியது ?

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...