Thursday, April 11, 2019

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*

*ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*

உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்களால் நன்மைகள் பல இருந்தாலும், பல்வேறு வகையில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைத் தடுக்க பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளன. ஆன்டிபயாட்டிக்குக்கு `ஆன்டிபாக்டீரியல்’ என்று ஒரு பெயரும் உண்டு. உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும்.

ஆன்டிபயாட்டிக்
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் பாதிப்பு, தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவப் பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புஉணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது.

முறையற்ற ஆன்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும். 64 சதவிகித மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்’என `உலகச் சுகாதார நிறுவனம்'  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவையற்ற நேரத்தில் உட்கொள்வதாலும், அதிக அளவு இந்த மருந்தைச் சாப்பிடுவதாலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா இந்த வகையான மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுவிடும். அதாவது, அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்ளும். இதனால், மருந்து எடுத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படும். நோய்களின் வீரியம் அதிகரித்து, உடல்நலம் குன்றிவிடும். எனவே, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் தகுதி பெற்ற தொழிற் வல்லுநர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆய்வாளர்கள் கவலைENS

உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து வாழ்ந்த மூதாதையர்களைக் கொண்ட இந்தியாதான் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக 2000 ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான இந்த கால கட்டத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தேசிய அறிவியல் மையத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக அளவில் 2000 முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகள் பயன்பாடு 39 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் அதே கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடு 103 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவே மருந்து, வரும் முன் காப்போம் என பல தாரக மந்திரங்களைக் கொண்டு வாழ்ந்த நம் முன்னோர், இயற்கை முறையில் உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், அவர்களது வழித்தோன்றல்களான நாம், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களால் அடிமையாகி, உணவே விஷம் என்ற கொள்கைக்கு உயிரை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்தவன், பிறகு அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் நீரிழிவை உண்டாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, நீரிழிவு வந்த பிறகு அந்த மருந்துகளையும் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

நாம் உண்ணும் உணவாலேயே நமக்கு பல நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்ததால்தான் தற்போது செக்கு எண்ணெய் உயிர் பெற்றுள்ளது. சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரைக்கு மாறியுள்ளோம். இதைத்தானே பன்னெடுங்காலமாக நமது மூதாதையர்கள் உண்டு வந்தனர். கோமணம் கட்டிய அவர்களை கேலி செய்து இன்று நவீன நாகரீகக் கோமாளிகளாக நாமே மாறியுள்ளோம்.

வேப்பங்குச்சியில் இருக்கும் எதிர்ப்பு சக்தி வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும், வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துகிறது என்றும் வெளிநாட்டு ஆய்வகம் கண்டுபிடிப்பு.. இது போன்ற எண்ணற்ற ஆய்வுகள் நமது மூதாதையர்களின் அறிவுத் திறனை நாம் கொண்டாடுவதற்கு பதிலாக குப்பையில் போட்டுள்ளோம் என்பதை உணர்த்தி வருகிறது.

புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்"

#அறிவியல்-அறிவோம்
(KING)

https://chat.whatsapp.com/1zMO8uxM7EOKqHsoJJBRnc

"புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்"

​நீங்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியரா?

பொன்னிறத்தில் மொறுமொறுவென, தின்னத் தின்னத் திகட்டாத வறுவல் வகைகள், நம் உயிருக்கே உலை வைக்கக் கூடும்.

உருளைக்கிழங்கு வறுவல், மரவள்ளிக் கிழங்கு வறுவல் போன்றவற்றை உட்கொள்வதால் உடற்பருமன் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே..இது தெரிந்தும் உருளைகிழங்கு சிப்ஸை விரும்பி உண்பவரா நீங்கள்
அப்படியானால் புற்றுநோய் மருத்துவரிடம் இப்போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படலாம். அளவுக்கதிகமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது. உருளைக்கிழங்கை அதிகபட்ச கொதிநிலையில் டீப் ஃப்ரை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் “அக்ரிலாமைட்” என்கிற ரசாயனமே புற்றுநோய்க்குக் காரணம்!

கார்போஹைட்ரேட் அதிகமா உள்ள ஒரு உணவை எந்தளவு சூடாக்கறோம், எவ்வளவு நேரம் சூடாக்கறோம்ங்கிறதைப் பொறுத்தே இந்த அக்ரிலாமைட் வெளியேறும். பொரிக்கிற, ரோஸ்ட் பண்ற, பேக் பண்ற உணவுகள் எல்லாம் இதுல அடங்கும். பிரவுன் நிற உணவுகளையும் சேர்த்துக்கலாம். காபி கொட்டையைக் கருக வறுத்து அரைக்கிறதுகூட  இந்த ரகம்தான்.

எஃப்.டி.ஏனு சொல்ற ஃபெடரல் டிரக் ஏஜென்சி, 2500 உணவுகளை மோசமானதுனு பட்டியலிட்டிருக்கு. அதுல உருளைக்கிழங்கு சிப்ஸூக்குதான் முதலிடம். “அந்தக் காலத்துல வத்தல், வடாம் சாப்பிடலையா? சிப்ஸூம் கிட்டத்தட்ட அப்படித்தானேனு கேட்கலாம். வத்தல், வடாம் என்பது வெயில்ல காய வச்சது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பும் கலோரியும் அதிகம். இவை எடையை அதிகரிக்கும், உயர் ரத்த
அழுத்தத்தை உண்டாக்கும். பாக்கெட்டில் விற்கப்படும் சிப்ஸ்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. இது ஹார்மோன் மாற்றம் தொடங்கி உடல் எடை அதிகரிப்பு, கேன்சர் என பல அபாயகரமான நோயை உண்டாக்கும்.

https://chat.whatsapp.com/1zMO8uxM7EOKqHsoJJBRnc

சிறுநீர்பற்றி #நாம்அறியாத #15உண்மைகள்!

#சிறுநீர்பற்றி #நாம்அறியாத

#15உண்மைகள்!

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

இதையும் படிங்க: நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க.

இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்

உண்மை 1

ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை 2

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உண்மை 3

முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 - 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.

உண்மை 4

ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

உண்மை 5

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) - நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் - போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் - உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் - கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் - தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீளம், பச்சை - தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

உண்மை 6

சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை 7

சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

உண்மை 8

மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

உண்மை 9

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

உண்மை 10

டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

உண்மை 11

காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

உண்மை 12

Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

உண்மை 13

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

உண்மை 14

குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.

உண்மை 15

காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...