*ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*
உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்களால் நன்மைகள் பல இருந்தாலும், பல்வேறு வகையில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைத் தடுக்க பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளன. ஆன்டிபயாட்டிக்குக்கு `ஆன்டிபாக்டீரியல்’ என்று ஒரு பெயரும் உண்டு. உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும்.
ஆன்டிபயாட்டிக்
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் பாதிப்பு, தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவப் பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புஉணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது.
முறையற்ற ஆன்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும். 64 சதவிகித மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்’என `உலகச் சுகாதார நிறுவனம்' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவையற்ற நேரத்தில் உட்கொள்வதாலும், அதிக அளவு இந்த மருந்தைச் சாப்பிடுவதாலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா இந்த வகையான மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுவிடும். அதாவது, அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்ளும். இதனால், மருந்து எடுத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படும். நோய்களின் வீரியம் அதிகரித்து, உடல்நலம் குன்றிவிடும். எனவே, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் தகுதி பெற்ற தொழிற் வல்லுநர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆய்வாளர்கள் கவலைENS
உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து வாழ்ந்த மூதாதையர்களைக் கொண்ட இந்தியாதான் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக 2000 ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான இந்த கால கட்டத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தேசிய அறிவியல் மையத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் 2000 முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகள் பயன்பாடு 39 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் அதே கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடு 103 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உணவே மருந்து, வரும் முன் காப்போம் என பல தாரக மந்திரங்களைக் கொண்டு வாழ்ந்த நம் முன்னோர், இயற்கை முறையில் உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், அவர்களது வழித்தோன்றல்களான நாம், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களால் அடிமையாகி, உணவே விஷம் என்ற கொள்கைக்கு உயிரை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முதலில் நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்தவன், பிறகு அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் நீரிழிவை உண்டாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, நீரிழிவு வந்த பிறகு அந்த மருந்துகளையும் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
நாம் உண்ணும் உணவாலேயே நமக்கு பல நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்ததால்தான் தற்போது செக்கு எண்ணெய் உயிர் பெற்றுள்ளது. சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரைக்கு மாறியுள்ளோம். இதைத்தானே பன்னெடுங்காலமாக நமது மூதாதையர்கள் உண்டு வந்தனர். கோமணம் கட்டிய அவர்களை கேலி செய்து இன்று நவீன நாகரீகக் கோமாளிகளாக நாமே மாறியுள்ளோம்.
வேப்பங்குச்சியில் இருக்கும் எதிர்ப்பு சக்தி வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும், வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துகிறது என்றும் வெளிநாட்டு ஆய்வகம் கண்டுபிடிப்பு.. இது போன்ற எண்ணற்ற ஆய்வுகள் நமது மூதாதையர்களின் அறிவுத் திறனை நாம் கொண்டாடுவதற்கு பதிலாக குப்பையில் போட்டுள்ளோம் என்பதை உணர்த்தி வருகிறது.