Monday, July 30, 2018

வாதவல்லி கிழங்கு!! மூட்டு வலி இனி இல்லை....

மூட்டு வலி இனி இல்லை....
====================
இந்த தகவல் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பயன்படும். மூட்டு வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல், எலும்பு தேய்மானம், குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, கழுத்து வலி என ஏதாவது ஒரு எலும்பு சம்பந்தமான வலிகளுடனே இன்று பலரும் வாழ்ந்து வருகிறோம். காரில் சென்று வருபவர்கள் முதல் சைக்கிளில் செல்பவர்கள் வரை இந்த பிரச்சனை பொதுவாகி போனது இன்று. டாக்டரிடம் போனால் எக்ஸ்ரே , ஸ்கேன் என எடுக்க சொல்லி பின்னர் வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து விடுவார். சில வருடங்கள் கழித்து வலி அதிமாகி போனால் உங்களுக்கு ஜவ்வு தேய்ந்து விட்டது. லீகுவிட் இல்லை எனவே ஒரு ஆபரேஷன் செய்தாலே தான் இதற்க்கு தீர்வு என்று நம்முடைய சேமிப்பு சில லட்சத்தை பிடுங்கி கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு கிடையாதா?
நிச்சயம் இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நமது தாத்தா பாட்டிகளுக்கு இப்படி நோய்கள் இருந்து யாராவது ஆபரேஷன் செய்ததாக தகவல் இருக்கிறதா? இதனை மருத்துவமனைகள் இருந்துள்ளதா? காரணம் அப்போது அவர்கள் சாப்பிட்ட சில உணவுகள்.. அப்படி மறைக்கப்பட்ட மருத்துவ உணவுகள் நிறைய.. எலும்பு மூட்டு நோய்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனை குணப்படுத்தக்கூடிய ஒரு சக்தி உள்ளது தான் வாத வள்ளி கிழங்கு. போகர் 12000 நூலில் இதனை கற்பமூலிகை என சொல்கிறார். ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....

வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். நூறு கிராம் அளவிற்கு கிழங்கை சூப்பாக வைத்து இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு 98430 93824 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறுங்கள்..
இந்த அரிய தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நீங்கள் உள்ள மற்ற க்ரூப்புகளுக்கும் பகிருங்கள்.

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே.

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஆனால் இதை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதே நம்மில் சிலருக்கு தெரிவதில்லை. இந்த பதிவில் கருஞ்சீரகத்தை எந்த பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தவறாமல் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெண்ணீரில் கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்த பை கற்களும் மறைந்து விடும். இதை காலை மாலை என இருவேலைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்ப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அறைத்த பூண்டுடன் சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

அதேபோல் அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கபடுபவர்கள் கருஞ்சீரகத்தை வறுத்து பின் அதை அரைத்து தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்து அதனை மூக்கில் இரண்டு அல்லது மூன்று முறை விட்டுவந்தால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். குளியளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் கருஞ்சீரகத்தை அரைத்து பயன்படுத்துவது நல்லது.

அடுத்து முக்கியமாக சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடி வயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். இதற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து தூள் செய்து கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு 10 நாட்கள் முன்பு இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேலை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு குணம் குறைந்து சிறுநீர் நன்றாக புரியும்.மேலும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மீது தடவி வர தேமல் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

இதை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...