பாகல் இலையின் சாறு எடுத்து உள்ளங்காலில் தடவி வர உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். www.siddharmedicine.in @ 9943909495
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Saturday, July 22, 2017
கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!
கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!
கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.
பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.
அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51.
மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.
சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.
பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.
பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம்.
இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.
நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும்.
கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ரெசிபி
ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் - பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.
அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.
பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்காயம் 4, தக்காளி 4, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.
நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
டயட்
அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.
அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.
அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.
கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும்.
மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.
விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.
வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.
லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.
பல் சொத்தைப் பற்றி தெரியுமா? மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்
பல் சொத்தைப் பற்றி தெரியுமா?
மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்
+919840341404
பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?
ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.
பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.
மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.
காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.
பல் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.
பல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல.. வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
ஈறு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் குறையும் போதுதான் ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
அறுவை சிகிச்சை செய்வதற்குக் கூட சொத்தைப் பல் இருப்பவர்களுக்கு சில அறுவை சிகிச்சைகளை செய்ய மாட்டார்கள். சொத்தைப் பல்லை அறுவை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.
சாப்பிடும் போது நன்கு திண்பதால் உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதேப்போல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்து அந்த நீரை துப்பிவிடக் கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.
அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை பாக்கு போடுவார்கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பிவிடக் கூடாது.
தாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை கண்டிப்பாக வரும். அதனை தவிர்க்க முடியாது. அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால் குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
பல்சொத்தைக்கு சர்வாங்காசனம், சிரசாசனம் செய்தால் பிரச்சினை குறையும். சிரசாசனம் செய்யும் போது பல் சொத்தை மாறுவது கண்கூடாகத் தெரியும். பொதுவாக பற்களை பிடுங்கக் கூடாது என்பார்கள். கீழ்ப் பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்கவேக் கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.
தற்போது சொத்தைப் பற்களின் வேர்களுக்கு சொத்தையை சரி செய்யும் முறை வந்துள்ளது. அதில்லாமல் ஒரு பல்லைப் புடுங்கிவிட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்துவதும் நல்லது. ஏன் எனில் கீழ்ப்பல்லைப் அதனால் மேல் பல் இறங்கும் நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவே செயற்கைப் பல் பொருத்தப்படுகிறது.
பற்களுக்கு பச்சைக் காய்கறிகளை அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
ஆயில் புல்லிங் பற்றி சொல்லுங்கள்...
ஆயில் புல்லிங் என்பதும் பற்களுக்கு நன்மை தரக்கூடியதுதான். வெறும் நல்லெண்ணையில் கூட செய்யலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
பற்களில் உள்ள கறைகளை அகற்ற
Sai Saravanan:
எவ்வளவு தான் நல்ல தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இருவேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்கப்படுவதில்லை. மேலும் அப்படி சேரும் மஞ்சள் கறைகள் எளிதில் நீங்கா வண்ணம் இருப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது.
வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து, வாயின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே ஒவ்வொருவரும் பற்களில் சேரும் மஞ்சள் கறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும்.
இங்கு பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வர, நிச்சயம் பற்காறைகளை விரைவில் போக்கலாம்.
தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஏராளமாக உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாயைப் பராமரிக்கும் போது, வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பற்காறைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
தினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் எண்ணெயை துப்பி, வெறும் டூத் பிரஷ் கொண்டு பற்களை சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின்பு டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும். இச்செயலை தொடர்ந்து செய்து வர, 10 நாட்களிலேயே ஓர் மாற்றத்தைக் காண்பீர்கள்.
கீழே வேறு சில இயற்கை வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பின்பற்றினால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றலாம்.
*எள்*
எள் பற்களில் உள்ள கறைகளை அகற்ற எள்ளும் உதவும். அதற்கு ஒரு கையளவு எள் விதைகளை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் துப்ப வேண்டும். பின்பு வெறும் பிரஷ் கொண்டு பற்களைத் துலக்க, பற்களில் உள்ள காறைகள் நீங்கும்.
*தக்காளி*
தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. இது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை பற்களில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ, பற்கள் வெண்மையாகும்.
vedikha
*கற்றாழை*
1 கப் நீரில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் பேக்கிங் சோடா, 10 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, தினமும் இக்கலவையைக் கொண்டு பற்களைத் துலக்க, பற்களில் இருக்கும் பற்காறைகள் விரைவில் நீங்கும்.
*அத்திப்பழம்*
அத்திப்பழம் அத்திப்பழம் ஈறுகளை வலிமையாக்கும். தினமும் 3-4 அத்திப்பழங்களை வாயில் போட்டு மெல்ல, உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, வாயில் பாக்டீரியாக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பற்கள் சுத்தமாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
🙏என்றும் மக்கள் நலனில் அக்கறையுடன்
*வேதிஹா ஆர்கானிக்ஸ் & ஹெர்பல்ஸ்*
*Follow us on Facebook:*
www.facebook.com/groups/243591169428150/
*Join with us to Create Health Revolution*
Vegetableclinic.com
Selvam:
www.vegetableclinic.com
☝☝This website contains very simple and highly valuable health information for all complicated diseases .
Never miss of watching
டெங்கு காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?*
Selvam:
Need of the hour health message 👇🏽👇🏽👇🏽
*அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?*
👉 பருவநிலை மாற்றத்தால் பலருக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. இதில் தற்போது அதிகமாக மக்களை தாக்கி வரும் நோய் தான் டெங்கு. டெங்கு காய்ச்சலானது பகலில் கடிக்கும் கொசுக்கள் மூலம் அதிகமாக பரவுகிறது.
டெங்கு என்றால் என்ன?
டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் பேச்சு வழக்கில் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் - குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (aedes aegypti ) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது.
இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது.
*டெங்கு அறிகுறிகள்*:
கொசு கடித்து நோய் வர 5 முதல் 15 நாள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து சில மணி நேரத்தில் காய்ச்சல் வரும். காய்ச்சல் 104 பாரன்ஹீட் வரை போகலாம். நாடித்துடிப்பு குறைதல், ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும்.
*டெங்கு காய்ச்சல் குணமாக*:
👉 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, நிலவேம்பு சாறு போன்றவைகளை அளித்தால், அவர்கள் மிக விரைவில் குணமடைவார்கள்.
*எவ்வாறு தயாரிப்பது?*
*பப்பாளி இலை சாறு*:
👉 புதிதாக பறித்த பப்பாளி இலைகளை காம்புகளை அகற்றிவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து அதை வடிகட்டி கொள்ளவும். இதை 10 மில்லி என்ற கணக்கில் நாளொன்றுக்கு 4-5 முறை பருகி வர வேண்டும். இதனால் டெங்கு காய்ச்சலானது கட்டுப்படுத்தப்படும்.
*மலைவேம்பு இலைச்சாறு*:
👉 மலைவேம்பு இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 10 மில்லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருக வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரஸ்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.
*நிலவேம்பு குடிநீர்*:
👉 நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும்.
இதுபோல,
டெங்கு காய்ச்சலால் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும்.
நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம்.
புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.
புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம்.
இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.
மேற்கண்ட முறைகளின் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.
நாம் போராட வேண்டியது மனிதர்களிடம் இல்லை...! கொசுக்களிடம் !
விழித்திரு மனிதா! இந்த டெங்குவில் இருந்து தப்பிக்க...!
☝🏽sharing as received
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...