தி
**எண்ணங்கள்**
🌻எண்ணங்களின் வலிமை🌻
🌲சூரிய கதிர்களை ஒருமுகப்படுத்தினால் அது தீயாக உருபெறுகின்றது
🌲எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அவை வலிமை பெறுகிறது
🌲ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது
🌲காரணம் காரியத்தில் முடிகிறது
🌲எண்ணம் ஒரு காரணம். .. பலன் காரியம்
🌲எண்ணங்கள் தான் உணர்ச்சியாக, சக்தியாக உடலில் மாறுகின்றன.
🌲எண்ணங்கள் நமது உடலின் ரசாயன அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவை
🌲மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர்விடும் போது அசாதாரண சக்தி பெறுகிறது.
🌲அந்த சக்தி எதைச் சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்கின்றது..
🌲எண்ணம்தான் நம்பிக்கையாய், சக்தியாய், உடலில் மாற்றத்தை தோற்றுவிக்கின்றது
🌲நமக்கு நாமே எண்ணங்களை சொல்லிக் கொள்வதன் மூலம்(auto suggestions ) நாம் வளர முடியும், முன்னேற முடியும்
🌲எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்க்கை மலர்கிறது
🌲நம் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் நாம் ஆகிறோம்
நாம் எப்படியோ அப்படியேயான எண்ண அலைகள் நம்மிடமிருந்து உற்பத்தி ஆகின்றன
🌲ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும் முன்
""நான் எல்லா வகையிலும் முன்னைவிட சிறந்து வருவதை உணர்கிறேன் ""
என்று நம் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்த வல்லது
🌲எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை நன்றி நினைத்ததை முடிப்பவை
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Tuesday, November 20, 2018
எண்ணங்கள் மகத்தான சக்தி
பிறப்பிற்கும்* *இறப்பிற்கும் இடையில்,* *நீ செய்யும்* *பாவம்* *புண்ணியம்* *மட்டுமே* *உனக்கு மிஞ்சும்...*
*பிறப்பிற்கும்*
*இறப்பிற்கும் இடையில்,*
*நீ செய்யும்* *பாவம்*
*புண்ணியம்* *மட்டுமே*
*உனக்கு மிஞ்சும்...*
*உன்னுடன் கடைசி*
*வரை வருவதும்*
*இதுவே...!!*
01) பெற்றோர்களை
நோகடிக்காதே...
நாளை உன் பிள்ளையும்
உனக்கு அதை தான்
செய்யும்...!!
02) பணம் பணம் என்று
அதன் பின்னால்
செல்லாதே...
வாழ்க்கை போய்
விடும்...
வாழ்க்கையையும்
ரசித்துக் கொண்டே
போ...!!
03) நேர்மையாக இருந்து
என்ன சாதித்தோம்
என்று நினைக்காதே...
நேர்மையாக இருப்பதே
ஒரு சாதனை தான்...!!
04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
சோதனை வருவது
தெரிந்ததே, அதற்காக
நேர்மையை கை விட்டு
விடாதே...
அந்த நேர்மையே
உன்னை
காப்பாற்றும். ..!!
05) வாழ்வில் சின்ன சின்ன
விஷயத்திற்கெல்லாம்
கோபப்படாதே...
சந்தோஷம்
குறைவதற்கும்,
பிரிவினைக்கும் இதுவே
முதல் காரணம்...!!
06) உன் அம்மாவிற்காக
ஒரு போதும்
மனைவியை விட்டு
கொடுக்காதே...
அவள் உனக்காக
அப்பா அம்மாவையே
விட்டு வந்தவள்...!!
07) உனக்கு உண்மையாக
இருப்பவர்களிடம்...
நீயும் உண்மையாய்
இரு...!!
08) அடுத்தவர்களுக்கு தீங்கு
செய்யும் போது
இனிமையாகத்தான்
இருக்கும்...
அதுவே உனக்கு வரும்
போது தான், அதன்
வலியும் வேதனையும்
புரியும்...!!
10) ஒருவன் துரோகி
என்று தெரிந்து
விட்டால்...
அவனை விட்டு
விலகியே இரு...!!
11) எல்லோரிடமும்
நட்பாய் இரு...
நமக்கும் நாலு
பேர் தேவை...!!
12) நீ கோவிலுக்கு
சென்று தான்
புண்ணியத்தை
சேர்க்க வேண்டும்
என்பதில்லை...
யாருக்கும் தீங்கு
செய்யாமல்
இருந்தாலே...
நீ கோவில்
சென்றதற்கு சமம்...!!
13) நிறை குறை இரண்டும்
கலந்தது தான்
வாழ்க்கை...
அதில் நிறையை மட்டும்
நினை...
நீ வாழ்க்கையை
வென்று விடலாம்...!!
14) எவன் உனக்கு உதவி
செய்கிறானோ,
அவனுக்கு மட்டும்
ஒரு நாளும் துரோகம்
செய்யாதே...
அந்த பாவத்தை நீ
எங்கு போனாலும்
கழுவ முடியாது...!!
15) அடுத்தவர்களைப்
போல் வசதியாக
வாழ முடியவில்லை
என்று நினைக்காதே...
நம்மை விட
வசதியற்றவர்கள்
கோடி பேர்
இருக்கிறார்கள்
என்பதை மனதில்
கொள்...!!
16) பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடையில்,
நீ செய்யும் பாவம்
புண்ணியம் மட்டுமே
உனக்கு மிஞ்சும்...
உன்னுடன் கடைசி
வரை வருவதும்
இதுவே...!!
*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!
-படித்ததில் பிடித்தது 🙏🙏🙏
நல்லதை மட்டுமே நினை
எண்ணம்* என்பது ஒருவர் மனதில் எழுந்துவிட்டால் அது தனக்கோ அல்லது எங்கேயாவது.... யார் அந்த எண்ணம் செயலாவதற்குத் தகுதியானவர் என்பதை பொருத்தமாய் பார்த்து நடத்திக் கொண்டிருப்பது இறைநிலை. இதுவே இறைநீதி. இதையே Cause and effect என்றும் கூற முடியும். விதி என்றும் கூறலாம்.
ஆகவே தான் அக்காலத்தில் நல்லதை மட்டுமே நினை என்றார்கள். நல்லதை நினைத்தால் அது தனக்கும் செயலாகலாம். அதற்கு யார் உரியவர் என்று இறைநிலை தேர்ந்தெடுத்து அவருக்கும் செயல்படுத்தலாம். ஆகவே நல்ல எண்ணம் மட்டுமே சிந்திக்க வேண்டும்.
ஒருவருக்கு எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி தோன்றுகிறது? அதை எப்படி கைவிடுவது அல்லது அதை எப்படி நேர்மறையாக மாற்றுவது என்று சிந்தித்தோம் என்றால் அடிப்படையில் மனிதப்பிறப்பே ஆறறிவு உடையது தான். அதுவே சிந்திக்கும் திறன். இதை முழுத் திறனாக பயன்படுத்துவதை பயிற்சியின் மூலம் நடைமுறைப்படுத்தி ஒருவர் தன்னை மேன்மைபடுத்த முடியும்.
உடல் இயக்கத்தை, கட்டுப்பாட்டுடன் வைக்க, *ஆக்கினை* தவத்தில் நன்கு பயிற்சி பெற வேண்டும். Pituitary gland is the Master gland. It controls Several hormones of the Body.
புலன்களை இயக்குவது மூளை. அங்கே தான் பிட்யூட்டரி சுரப்பி உள்ளது. ஆகவே அதை குருவின் உதவியுடன் விழிப்புநிலையில் வைத்தால் புலன்களை உடல் இயக்கங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
உடலைக் கட்டுப்படுத்த *மனமும்* ஒத்துழைக்க வேண்டும்.
அதை கட்டுப்பாட்டில் வைப்பதற்குத் தான் *துரியம்*. துரிய தவம் உச்சந்தலையில் பீனியல் சுரப்பியை இயக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டால் மன இயக்கமும் கட்டுப்பாட்டிற்க்குள் வந்துவிடும்.
ஒருவருக்கு குண்டலினி சக்தி எழுப்புதவன் மூலம் இந்த இரண்டு சுரப்பிகளும் நன்கு செயல்பாட்டுக்கு வரும்..
யாரெல்லாம் தன்னை தனது மாண்பை உயர்த்த நினைக்கிறார்களோ, அவர்கள் எல்லாருமே சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக மாற முடியும்.
அதற்குத் தகுந்த குரு உதவி தேவை.
குருவே சரணம்🙏🙇🏻♂
மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?
👌🏼நல்லவை 50
1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?
நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது;
அதற்கு தூரம் தடை இல்லை.
காலம் கணக்கில்லை.
.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
.
39. சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
.
நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக
வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;
வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;
இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.
சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.
3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.
உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.
கிவி பழம்;
இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!
ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!
ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
தர்பூசணி;
மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.
கொய்யா& பப்பாளி
இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய். உண்டாக்கும் க்
இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால், நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் செய்வீர்களா?
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...