Tuesday, November 27, 2018

இந்தியா இனி மெல்லச் சாகும்"*

⚖📝🔨😢

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"*

ஆனோடு ஆண் இணைவதும்
பெண்ணோடு பெண் புனைவதும்
தனிப்பட்ட விருப்பமென்ற
தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு,

நாளை
உங்கள் மகன்
வந்து நிற்பான்..
எனக்கு
உங்கள் மருமகளை பிடிக்கவில்லை
நல்ல மருமகனை
பாருங்கள் என்று...

நாளை மறுநாள்
உங்கள்
மகள் வந்து நிற்பாள்..
எனக்கு உங்கள் மருமகனை
பிடிக்கவில்லை
நல்ல மருமகளை
பாருங்கள் என்று...

அதற்கு
அடுத்த நாள்..
இவர்களுக்காக
நீங்கள்
எங்கு போய்
நிற்பீர்கள்?...

தலைமை நீதிபதிகளாக
யோசித்தீர்களே!
நல்ல ஒரு தகப்பனாக
யோசித்தீர்களா?...

உங்கள் முன்
வந்து நின்று
இறைவன் வாதிட மாட்டாரென்று
எழுதி விட்டீர்கள்
தீர்ப்பொன்று
இதுதான்
இனி
நியதியென்று...

இதுதான்
"என் நியதி" என்று
ஏதேனில்
ஆண்டவர்
சொல்லியிருந்தால்?.,

ஆதாமிற்கு
ஓர் ஆதாமையும்
ஏவாளுக்கு
ஓர் ஏவாளையும்
எடுத்து அன்று
ஆண்டவர்
கொடுத்திருந்தால்?..,

திருந்தாத
இந்த கூட்டமேது?
தீர்ப்பு எழுதிய
நீங்களேது?...

சோதோம் கொமோரா என்று
சொர்க்கம் போல்
இருந்த தேசம்
ஆகாயத்து
அக்கினியால்
அழிந்த கதை
தெரியுமா?...

பெண்ணோடு
பெண் கூடி
ஆணோடு
ஆண் கூடி
பெரும் பாவம்
செய்ததினால்
அழிந்ததையா
அத்தேசம்...

ஐயோ
என் இந்தியாவே..!
இனியும் நீ
தாங்குவாயோ?...
ஹார்மோனின் குறைபாடு
கற்பனையின் மாறுபாடு
இவைகளை
கலைத்தெறியும்
கல்வி முறை
காணவில்லையோ
இந்திய தேசத்திலே...

இறையின் விதியை
மீறி விட்டாய்!
இயற்கையதை
மாற்றி விட்டாய்!.,
இனி வரும் அழிவிற்கு
பெரும் தீர்ப்பு
நீ எழுதி விட்டாய்!...

பண்பாடு
கலாச்சாரம்
பறந்து இனி
விரைந்தோடும்..
வீட்டிலொரு
பெண்ணிருந்தாள்..
இனி பெண் தேடும்
நிலையாகும்...

அடுக்குமோ
மா பாதகம்!!
இனி இந்த தேசம்
அழியாமல்
என்ன செய்யும்??!...

எதிர்த்து வாதிட
யாருமில்லை
என்றுதானே
இப்படியொரு
தீர்ப்பினை
எழுதிவிட்டீர்கள்
என் இந்தியாவிற்கு...

நம்
தேசத்து மலர்களில்
இனி
மகரந்தச் சேர்க்கையில்லை.,

இத்தேசத்தின் மாண்பைச் சொல்ல
இனி எந்த
வார்த்தையுமில்லை..

தீர்ப்பை
எழுதிவிட்டீர்கள்.,

இனி
கொஞ்சங்காலம் தான்..

உங்கள்
மீசைகளை
பிடித்திழுக்க
பேரன்கள்
பிறப்பதில்லை..

பட்டுப் பாவாடை
சட்டைகளோடு
பேத்திகள்
நடப்பதில்லை...

இனி
எந்திரத்தில்
பொம்மை வாங்கி
எங்கள்
சந்ததியென்று
சொல்லிக் கொள்ளுங்கள்...

இறையையும்
இறையன்பையும்
மறந்த தேசம்.,

நல்
இயற்கையை
துறந்த தேசம்..

பாவ
இச்சையில்
மகிழும் தேசம்..

இந்தியா
இனி
மெல்லச் சாகும்..

இந்திய
தேசத்திற்காய்
கண்ணீருடன்..

உங்களில் ஒருவன்..

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...